நமக்காக ஜெபிக்கும் ஒரு இரட்சகர்!
ரோமர் : 8 : 34 “…கிறிஸ்துவே மரித்தவர்: அவரே எழுந்துமிருக்கிறவர்: அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர்: நமக்காக வேண்டுதல்செய்கிறவரும் அவரே.”
நம்முடைய கிறிஸ்துவானவர் நமக்காக 2000 வருடங்களுக்கும் மேலாக வேண்டுதல் செய்து கொண்டிருக்கிறார்!
நாமே நமக்காக ஜெபிக்கத் தவறும்போதும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவானவர் நமக்காக வேண்டுதல் செய்கிறார். நம்முடைய இன்றைய யுத்தம் அவருக்குத் தெரியும்! நம்மை சுற்றியிருக்கும் சோதனைகளை அவர் அறிவார்! உன் கண்ணீரையும், கவலையையும் அறிந்தவர் உனக்காக வேண்டுதல் செய்கிறார்.
இதை வாசிக்கும் நமக்கு எத்தனை ஆறுதல் கிடைக்கிறது! எனக்காக யாராவது ஜெபிக்க மாட்டார்களா என்று ஏங்கும் உனக்காக கர்த்தராகிய இயேசுவே ஜெபிக்கிறார்!
இன்று நீ அவரோடு ஒருமனப்பட்டு அவருடன் இணைந்து உன்னுடைய தேவைகளுக்காக ஜெபி. உன் ஜெபம் கேட்கப்படும்!
விசேஷ ஜெபக்குறிப்புகள் இருக்குமானால் premac2c@gmail.com என்ற விலாசத்துக்கு அனுப்புங்கள்!
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிரசன்னம் நம்முடைய ஜெப வாழ்க்கையை நிரப்புவதாக!
கிறிஸ்துவே நமக்காக மரித்தார், உயிரோடும் எழுந்தார், அவரே திரும்ப வரப்போகிறார். ஆமென்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்.