யாத்தி:1: 20, 21 “இதினிமித்தம் தேவன் மருத்துவச்சிகளுக்கு நன்மை செய்தார். ஜனங்கள் பெருகி மிகுதியும் பலத்துப் போனார்கள். மருத்துவச்சிகள் தேவனுக்கு பயந்ததினால் அவர்கள் குடும்பங்கள் தழைக்கும்படி செய்தார். சிப்பிராள் , பூவாள் என்ற இரு எபிரேய மருத்துவச்சிகள் பார்வோனுக்கு பயப்படாமல், தேவனுக்கு பயந்ததினாலே, அவர்கள் எபிரேயாருக்கு பிறந்த ஆண்பிள்ளைகளை பார்வோன் கட்டளைப்படி கொலைசெய்யாமல் காப்பாற்றினர் என்று பார்த்தோம். கர்த்தருக்கு பயந்த பயம், ஞானமுள்ள வார்த்தைகள் இவையே அவர்கள் பார்வோனுக்கு முன்னால் உபயோப்படுத்திய ஆயுதம் என்று பார்த்தோம். இந்த… Continue reading இதழ்: 825 கருச்சிதைவு செய்வது தவறா?
Month: January 2020
இதழ்: 824 பேசுவதில் ஞானம் என்றால் என்ன?
யாத்தி:1: 18, 19 “அதினாலே எகிப்தின் ராஜா மருத்துவச்சிகளை அழைப்பித்து,; நீங்கள் ஆண்பிள்ளைகளை உயிரோடே காப்பாற்றுகிற காரியம் என்ன என்று கேட்டான். அதற்கு மருத்துவச்சிகள் பார்வோனி நோக்கி; எபிரேய ஸ்திரிகள், எகிப்திய ஸ்திரிகளைப் போல அல்ல, அவர்கள் நல்ல பலமுள்ளவர்கள்; மருத்துவச்சி அவர்களிடத்துக்கு போகுமுன்னமே அவர்கள் பிரசவித்தாகும் என்றார்கள்” யோசேப்பின் மன்னிப்பையும், ஆதரவையும் பெற்ற யாக்கோபின் மிகப்பெரிய குடும்பம் எகிப்திலே, கோசேன் நாட்டிலே குடியிருந்தார்கள். அங்கே அவர்கள் பலுகிப் பெருகினார்கள். யாத்தி:1: 7, 8 கூறுகிறது, யோசேப்பும்,… Continue reading இதழ்: 824 பேசுவதில் ஞானம் என்றால் என்ன?
இதழ்: 823 உன்னைப் புண்படுத்திய ஒருவரை மன்னிக்க முடியுமா?
ஆதி:44: 18 “ அப்பொழுது யூதா அவனண்டையிலே சேர்ந்து, ஆ என் ஆண்டவனே , உமது அடியேன் உமது செவிகள் கேட்க ஒரு வார்த்தை சொல்லுகிறேன் கேட்பீராக; அடியேன் மேல் உமது கோபம் மூளாதிருப்பதாக; நீர் பார்வோனுக்கு ஒப்பாயிருக்கிறீர்” நாம் கடந்த ஆண்டின் கடைசி நாளில், யோசேப்புக்கு இழைக்கப்பட்ட தீங்கை பரலோக தேவன் எப்படி நன்மையாய், ஆசீர்வாதமாய் மாற்றியமைத்தார் என்று பார்த்தோம். இன்று நாம் யோசேப்பின் வாழ்விலிருந்து இன்னுமொரு காரியத்தை கற்று கொள்ளப் போகிறோம்! அதற்கு முன்னால்… Continue reading இதழ்: 823 உன்னைப் புண்படுத்திய ஒருவரை மன்னிக்க முடியுமா?
புத்தாண்டு 2020 மகிழ்வுடன் மலர வாழ்த்துக்கள்!
யோவான்: 14: 6 “அதற்கு இயேசு; நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” சில வருடங்களுக்கு முன்னர் நானும் என் மகனும், தென்னிந்தியாவில் உள்ள பல மாகாணங்களில் உள்ள எங்கள் ஊழிய மையங்களுக்கு, கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள , காரில் பிரயாணப்பட்டோம். எங்களுடைய காரில் GPS என்ற வழி காட்டும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. ஒருநாள் நாங்கள் தேசிய நெடுஞ்சாலை ஒன்றில், நான்கு வழி சாலையில் வந்து கொண்டிருந்த போது எங்களுடைய வழிகாட்டும்… Continue reading புத்தாண்டு 2020 மகிழ்வுடன் மலர வாழ்த்துக்கள்!
