எனது அன்பின் சகோதர சகோதரிகளே! 2009 ல் நான் முதன் முதலில் இந்த இணைய தளத்தில், ராஜாவின் மலர்கள் என்ற பெயரில், தினசரி தியானத்தை எழுத ஆரம்பித்தது முதல் இன்றுவரை அதைத்தொடர, நான் நேசிக்கும் தேவன் எனக்குக் கொடுத்த பெலத்துக்காக அவருக்குக் கோடாகோடி துதிகளை ஏறெடுக்கிறேன். இந்த இணைய தளத்துக்கு வரும் உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி! ராஜாவின் மலர்களில் ஒரு புதிய ஆரம்பத்தைக் கொண்டு வர முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்! அது வீடியோ மூலமாக வேதாகமத்தை உங்களோடு… Continue reading ஒரு முக்கிய அறிவிப்பு!!!!!
இதழ்:2552 பிதாவானவர் நம்மைப் புறக்கணிக்காமல் காட்டின பேரன்பு!
ரூத்: 1: 16 “நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம். அவள்……ஒரு புறமதத்தை சேர்ந்தவள்! அவள் ….. நம் ஜாதி ஜனமல்ல! நம்மை சார்ந்தவள் அல்ல! அவன்… நம் நாட்டை சேர்ந்தவள் இல்லை! அயல் நாடு! அவன் நம் சபையை சேர்ந்தவன் அல்ல! அப்பப்பா! கிறிஸ்தவர்களுக்குள்ளே எத்தனை பாகுபாடு!!! ரூத் மோவாபை சேர்ந்தவள், நகோமியோ இஸ்ரவேலை சேர்ந்தவள். ரூத் கர்த்தரால் புறக்கணிக்கப்பட்ட ஜனத்தை சார்ந்தவள், நகோமியோ… Continue reading இதழ்:2552 பிதாவானவர் நம்மைப் புறக்கணிக்காமல் காட்டின பேரன்பு!
இதழ்:2551 நம்மிடம் வந்தவர்களை மனதாற ஏற்றுக் கொள்ளலாமே!
ரூத்: 1:22 இப்படி நகோமி மோவாபிய ஸ்திரீயான தன் மருமகள் ரூத்தோடுங்கூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவந்தாள்; என் கணவருடைய குடும்பத்தில் எந்த நல்ல காரியங்களிலும் எங்களுக்கு அழைப்பு இருந்ததே கிடையாது. காரணம் நாங்கள் கிறிஸ்தவர்கள் என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. கிறிஸ்தவர்கள் என்றாலே தாழ்ந்த ஜாதி என்றும், மேற்கத்திய மதத்தினர் என்றும் எண்ணம் உண்டு! எனக்குத் திருமணமானபோது அவர்கள் என்னிடம் பழகியவிதம் ஏதோ ஒரு அயல்நாட்டுப் பெண்ணை நடத்துவதுபோலத் தான் எனக்கு இருக்கும். இரண்டு அயல்நாட்டு பெண்களைத் திருமணம்… Continue reading இதழ்:2551 நம்மிடம் வந்தவர்களை மனதாற ஏற்றுக் கொள்ளலாமே!
இதழ்:2550 உம்மை விட்டுப் பிரிக்க முடியா உறவைத் தாரும்!
ரூத்: 1: 14 ” ரூத்தோ அவளை (நகோமியை) விடாமல் பற்றிக் கொண்டாள். என்னுடைய தோட்டத்தில் ஒரு தாட்பூட் பழக் கொடி (Passion fruit) வளர்ந்து வருகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்னர் அநேகக் கனிகள் கூட கொடுத்தது. அது அருகில் உள்ள முருங்கை மரத்தை சுற்றி வளைத்துக் கொண்டு படர்ந்து வருகிறது. நல்ல கனி கொடுக்கும் கொடியாக இருந்தபடியால் நாங்களும் விட்டு விட்டோம். இப்பொழுது அது முருங்கையை ஒரேயடியாக சுற்றி வளைத்து விட்டது. இன்றைக்கு பார்த்தால் அந்த முருஙகை… Continue reading இதழ்:2550 உம்மை விட்டுப் பிரிக்க முடியா உறவைத் தாரும்!
இதழ்:2549 இருளில் பிரகாசிக்கும் சிறு விளக்காய் வாழ்!
ரூத் : 1 : 15 அப்பொழுது அவள்: இதோ உன் சகோதரி தன் ஜனங்களிடத்துக்கும் தன் தேவர்களிடத்துக்கும் திரும்பிப் போய் விட்டாளே; நகோமித் தன் மருமக்களைத் திரும்பிப்போங்கள் என்றவுடன் ஏற்பட்ட அழுகை நின்றுவிட்டது!ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து முத்தம் செய்தாயிற்று! ஒர்பாள் மெதுவாகத் திரும்பி மோவாபை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்! தன் ஜனங்களிடத்துக்கும் தன் தேவர்களிடத்துக்கும் திரும்பிப் போய் விட்டாள் என்ற வார்த்தையை நான் ஆழ்ந்து படிக்க ஆவலாகி எபிரேய அகராதிக்கு சென்றேன். அதில் அந்த வார்த்தைகளுக்கு கொடுக்கப்பட்டிருந்த அர்த்தம்… Continue reading இதழ்:2549 இருளில் பிரகாசிக்கும் சிறு விளக்காய் வாழ்!
இதழ்:2548 நீ வாழும் இடத்தில் தேவசித்தம் நிறைவேற வேண்டியிருக்கிறது!
ரூத்: 1: 6 -12 “கர்த்தர் தம்முடைய ஜனங்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆகாரம் அருளினார் என்று அவள் (நகோமி) மோவாப்தேசத்திலே கேள்விப்பட்டு, தன் மருமக்களோடேகூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவரும்படி எழுந்து, தன் இரண்டு மருமக்களோடுங்கூடத் தானிருந்த ஸ்தலத்தை விட்டுப் புறப்பட்டாள். யூதாதேசத்திற்குத் திரும்பிப்போக அவர்கள் வழிநடக்கையில், “ நகோமி தன் இரண்டு மருமக்களையும் நோக்கி: நீங்கள் இருவரும் உங்கள் தாய்வீட்டுக்குத் திரும்பிப்போங்கள்; மரித்துப்போனவர்களுக்கும் எனக்கும் நீங்கள் தயைசெய்ததுபோல, கர்த்தர் உங்களுக்கும் தயை செய்வாராக. கர்த்தர் உங்கள் இருவருக்கும் வாய்க்கும்… Continue reading இதழ்:2548 நீ வாழும் இடத்தில் தேவசித்தம் நிறைவேற வேண்டியிருக்கிறது!
இதழ்:2547 உன்னை குணமாக்கும் அவருடைய தழும்புகள்!
ரூத்: 1 : 13 “… என் மக்களே கர்த்தருடைய கை எனக்கு விரோதமாயிருக்கிறதினால் உங்கள் நிமித்தம் எனக்கு மிகுந்த விசனம் இருக்கிறது என்றாள்.” நாம் நகோமியின் வாழ்க்கையைப் பற்றி படித்துக் கொண்டிருக்கிறோம். அவள் தன் மருமக்களை நோக்கித் தங்கள் குடும்பத்துக்கு திரும்பிப் போகுமாறு கூறியதைப் பார்த்தோம். பிரச்சனைகள், வியாதி, வேதனைகள், ஏமாற்றங்கள்,கடைசியில் மரணம் இவற்றை ஒன்று பின் ஒன்றாய் அனுபவித்த நகோமியின் வாழ்வில் ஏற்பட்ட துன்பங்கள் ஒரு கசப்பான மாத்திரை போல இருந்தது. கணவனையும், இரு மகன்களையும்… Continue reading இதழ்:2547 உன்னை குணமாக்கும் அவருடைய தழும்புகள்!
இதழ்:2546 இருதயத்திற்கு வலிமை கொடுக்கும் பயிற்சி அன்பு மட்டுமே!
ரூத்: 1: 8 – 10 நகோமி தன் இரண்டு மருமக்களையும் நோக்கி: நீங்கள் இருவரும் உங்கள் தாய்வீட்டுக்குத் திரும்பிப்போங்கள்; மரித்துப்போனவர்களுக்கும் எனக்கும் நீங்கள் தயைசெய்ததுபோல, கர்த்தர் உங்களுக்கும் தயை செய்வாராக. கர்த்தர் உங்கள் இருவருக்கும் வாய்க்கும் புருஷனுடைய வீட்டிலே நீங்கள் சுகமாய் வாழ்ந்திருக்கச் செய்வாராக என்று சொல்லி அவர்களை முத்தமிட்டாள். அப்பொழுது அவர்கள் சத்தமிட்டு அழுது அவளைப் பார்த்து; உம்முடைய ஜனத்தண்டைக்கே உம்முடன் கூட வருவோம் என்றார்கள். என்னுடைய வாழ்வில் நான் இளம் வயதிலேயே ஒன்றுக்கு… Continue reading இதழ்:2546 இருதயத்திற்கு வலிமை கொடுக்கும் பயிற்சி அன்பு மட்டுமே!
இதழ்:2545 குடும்பத்தில் விதைக்கப்படும் விதைகள்!
ரூத்: 1: 7 (நகோமி) தன் இரண்டு மருமக்களோடுங்கூடத் தானிருந்த ஸ்தலத்தை விட்டுப் புறப்பட்டாள். யூதாதேசத்திற்குத் திரும்பிப்போக அவர்கள் வழிநடக்கையில், “ இன்று நான் நகோமியின் வாழ்க்கையைப் பற்றி சிந்தித்தபோது பின்வரும் வாசகங்கள் தான் நினைவுக்கு வந்தன! “நாம் வாழும் வாழ்க்கை நாம் பிரசிங்கிக்கிற சிறந்த பிரசங்கம் போன்றது! நம்முடைய வாழ்க்கையின் மூலமாக நாம் என்ன செய்தியை பரப்புகிறோம்! நாம் வார்த்தைகளால் பிரசிங்கிப்பதை ஒருவேளை நம்மை சுற்றியுள்ள மக்கள் விசுவாசியாமல் போகலாம், ஆனால் வாழ்க்கையினால்… Continue reading இதழ்:2545 குடும்பத்தில் விதைக்கப்படும் விதைகள்!
இதழ்:2544 இது உனக்காகவே திட்டமிடப்பட்ட பாதை!
ரூத்: 1: 7 (நகோமி) தன் இரண்டு மருமக்களோடுங்கூடத் தானிருந்த ஸ்தலத்தை விட்டுப் புறப்பட்டாள். யூதாதேசத்திற்குத் திரும்பிப்போக அவர்கள் வழிநடக்கையில், சில நாட்களுக்கு முன்பு என்னுடைய வீட்டை சுத்தம் பண்ண ஆரம்பித்தேன். சில நேரங்களில் நாம் எதிர்பார்ப்பதை விட அதிகமாகவே வீட்டில் தேவையில்லாதவைகள் சேர்ந்துவிடுகின்றன. அடுக்கடுக்கான செய்தி தாள்கள் , அப்புறம் படிக்கலாம் என்று சேர்த்து வைத்த மாத இதழ்கள், முக்கியமானவைகள் என்று சேர்த்து வைத்த பலவிதமான விளம்பரங்கள் என்று கழித்துக்கட்ட வேண்டியவை… Continue reading இதழ்:2544 இது உனக்காகவே திட்டமிடப்பட்ட பாதை!
