1 சாமுவேல்:2:26 சாமுவேல் என்னும் பிள்ளையாண்டானோ பெரியவனாக வளர்ந்து கர்த்தருக்கும் மனுஷருக்கும் பிரியமாக நடந்து கொண்டான்.1 சாமுவேல் 3:10 அப்பொழுது கர்த்தர் வந்து நின்று, முன்போல: சாமுவேலே சாமுவேலே என்று கூப்பிட்டார்; அதற்கு சாமுவேல்: சொல்லும்; அடியேன் கேட்கிறேன் என்றான். ஒருநாள் நான் ஒரு அமைதியான புல் வெளியில் அமர்ந்து சிறு பிள்ளைகள் விளையடுவதைக் கவனித்துக் கொண்டிருந்தேன். இளம் தாய்மார்கள் தங்கள் சிறு குழந்தைகளைக் கைகளில் பிடித்துக் கொண்டு நடந்தனர். என் மனக்கண்களில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு அழகிய புல்வெளியில்… Continue reading இதழ்:2591 தமக்கு உகந்த தாசனாய் கர்த்தர் தேர்ந்தெடுத்த சிறுவன்!
இதழ்:2590 புயல் வீசுமுன்னர் அஸ்திபாரத்தைப் போடு!
சாமுவேல்: 2: 11, 12 ” பின்பு எல்க்கானா ராமாவிலிருக்கிற தன் வீட்டுக்குப் போனான்; அந்தப் பிள்ளையோ ஆசாரியனாகிய ஏலிக்கு முன்பாகக் கர்த்தருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தான். ஏலியின் குமாரர் பேலியாளின் மக்களாயிருந்தார்கள்; அவர்கள் கர்த்தரை அறியவில்லை.” நாம் பிறக்கும்போதே எல்லாவற்றையும் அறிந்தவராய்ப் பிறப்பதில்லை! இந்த உலகத்தில் நாம் வாழும் ஒவ்வொரு நாளும் நமக்கு ஏதாவது ஒரு கல்வி பயலும் நாள் தான்! நம்முடைய வாழ்வின் அனுபவங்கள் ஒவ்வொன்றும் நமக்கு எதையாவது போதிக்கின்றன! சில பாடங்களை நாம் கடந்து வரும்… Continue reading இதழ்:2590 புயல் வீசுமுன்னர் அஸ்திபாரத்தைப் போடு!
இதழ்: 2589 நீங்கள் அனுபவித்ததை பிள்ளைகளுக்கும் கொடுங்கள்!
1 சாமுவேல் 2: 19 “அவனுடைய தாய் வருஷந்தோறும் செலுத்தும் பலியைச் செலுத்துகிறதற்காக, தன் புருஷனோடேகூட வருகிறபோதெல்லாம், அவனுக்கு ஒரு சின்னச் சட்டையைத் தைத்துக் கொண்டு வருவாள்”. ஒரு ஐம்பது வருடங்களுக்கு முன்னால் என்னுடைய அம்மாவின் கையால் செய்து எனக்குக் கொடுத்த ஒரு மணி பொம்மையை நான் மிகவும் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருந்தேன். 2015 ல் சென்னையில் வந்த வெள்ளத்தில் எங்கள் வீட்டுக்குள் நீர் புகுந்தபோது அழிந்து போன பொருட்களில் அந்த பொம்மையும் ஒன்று. அந்த பொம்மையை எனக்காக செய்த… Continue reading இதழ்: 2589 நீங்கள் அனுபவித்ததை பிள்ளைகளுக்கும் கொடுங்கள்!
Pergamum the seat of Satan!
சாத்தானின் சிங்காசனம் என்று ஏன் பெர்கமு அழைக்கப்பட்டது என்று அறிந்து கொள்ள ஆவலா? DO YOU WANT TO KNOW WHY PERGAMUM WAS CALLED THE SEAT OF SATAN? Watch now! https://www.youtube.com/@rajavinmalargal
இதழ்: 2588 இன்று தவறினால் நாளை கண்ணீர் தான்!
1சாமுவேல்: 2: 1 “அப்பொழுது அன்னாள் ஜெபம் பண்ணி” அன்னாளின் குடும்ப வாழ்க்கையைப் பற்றியும், ஆவிக்குரிய வாழ்க்கையைப் பற்றியும் சில வாரங்கள் நாம் படித்துக் கொண்டிருக்கிறோம். அன்னாளின் வாழ்க்கையை ஆழமாக படிக்க ஆரம்பித்த எனக்கு அவள் ஆசீர்வாதமாக இருந்தது போல் உங்களுக்கும் இருந்திருப்பாள் என்று நினைக்கிறேன். இன்றிலிருந்து நாம் அன்னாள் என்ற தாயின் குணநலன்களைப் பற்றி படிக்கலாம். அன்னாளின் வாழ்க்கையை ஆராய்ந்து பார்க்கும்போது ஜெபமே அவளுடைய வாழ்க்கையில் ஒரு ஆயுதமாக இருந்தது. ஜெபத்துக்கு எவ்வளவு வல்லமை… Continue reading இதழ்: 2588 இன்று தவறினால் நாளை கண்ணீர் தான்!
இதழ்: 2587 ஆகாயத்துப் பறவைகள் துக்கத்தை மறப்பது போல்!
1 சாமுவேல் 1:18 ” அப்பொழுது அவள்: உம்முடைய அடியாளுக்கு உம்முடைய கண்களிலே தயை கிடைக்கக்கடவது என்றாள்; பின்பு அந்த ஸ்திரீ புறப்பட்டுப்போய், போஜனஞ்செய்தாள்; அப்புறம் அவள் துக்கமுகமாயிருக்கவில்லை. ஒருநாள் நான் மேகம் இருட்டிக் கொண்டு வருவதைக் கண்டேன். அந்தக் கரு மேகத்துடன் வந்தது புயல் போன்ற காற்று! மரங்கள் ஒடிந்து விழுவது போல ஆடிக்கொண்டிருந்தபோது வந்தது பெருமழை! அந்த மழையில் நனைந்து கொண்டு சில பறவைகள் மரத்தின் மேல் அமர்ந்திருந்து என் கவனத்தை ஈர்த்தது. சில மணிநேரம் அடித்த… Continue reading இதழ்: 2587 ஆகாயத்துப் பறவைகள் துக்கத்தை மறப்பது போல்!
இதழ்: 2586 என் கண்ணீரைத் தம்முடைய கணக்கில் எழுதுகிறவர்!
1 சாமுவேல்: 1: 13 ” அன்னாள் தன் இருதயத்திலே பேசினாள்; அவளுடைய உதடுகள் மாத்திரம் அசைந்தது, அவள் சத்தமோ கேட்கப்படவில்லை;” அன்னாளின் ஜெபத்தைப் பற்றி நாம் படித்துக் கொண்டிருக்கிறோம்! அன்னாள் தன் இருதயத்திலே கர்த்தரிடம் பேசினாள் என்று இங்கு நாம் பார்க்கிறோம். அன்னாள் யாரோ எழுதி வைத்த ஜெப புத்தகத்தைத் தேடவில்லை, யாரோ ஜெபித்த ஜெபத்தை வாசிக்கவில்லை! தன் இருதயத்தின் நினைவுகளைக் காண வல்லவரான தேவனை நோக்கி உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஜெபித்தாள். அன்னாள் தன்னுடைய கனவுகள் நொறுங்கிப் போனவளாய்,… Continue reading இதழ்: 2586 என் கண்ணீரைத் தம்முடைய கணக்கில் எழுதுகிறவர்!
இதழ்: 2585 உம்மை என்றுமே நேசிப்பேன் கர்த்தரே!
1 சாமுவேல் 1: 11 “…. ஒரு பொருத்தனை பண்ணினாள்” பொருத்தனை என்ற வார்த்தையைக் கேட்ட வுடன் என் நினைவுக்கு வருவது முரட்டுத்தனமான யெப்தாவின் பொருத்தனைதான் (நியா:11;30 ). நாம் அவனைப் பற்றியும், அவனுடைய பொருத்தனைக்கு பலியான அவன் குமாரத்தியைப் பற்றியும் பல நாட்கள் படித்தோம். பொருத்தனை என்ற வார்த்தை என்னைப் பொருத்தவரையில் சற்று பயமூட்டும் வார்த்தையே. அநேக நேரங்களில் உணர்ச்சிவசமாக நான் இதை செய்ய மாட்டேன், அதை செய்ய மாட்டேன் என்று நாம் கர்த்தரிடம் பொருத்தனை செய்துவிட்டு, ஒருசில… Continue reading இதழ்: 2585 உம்மை என்றுமே நேசிப்பேன் கர்த்தரே!
இதழ் 2584 என்னை மறவா இயேசுநாதா!
1 சாமுவேல்: 1: 11 “சேனைகளின் கர்த்தாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளி,..” மறதி! மறதி! இப்பொழுதெல்லாம் அநேக காரியங்கள் மறந்து போய் விடுகின்றன என்று நான் அடிக்கடி புலம்புவதுண்டு! எதையோ சொல்ல வேண்டும் என்று நினைத்தேனே மறந்து போய் விட்டதே அல்லது எதையோ வாங்க வேண்டும் என்று நினைத்தேனே மறந்து போய் விட்டதே, ஐயோ, அவரை நன்றாகத் தெரியும் பெயர் தான் மறந்து போய் விட்டது! இப்படிபட்ட வாசகங்கள் என்… Continue reading இதழ் 2584 என்னை மறவா இயேசுநாதா!
STUDY THE BOOK OF REVELATION WITH ME!
Kindly follow the link and study the hardest book in the Bible that reveals the mysteries of God! நீன்கள் படிப்பது மட்டுமன்றி வெளிப்படுத்தின விசேஷத்தைப் படிக்க விரும்பும் அனைவருக்கும் இதைப் பகிருங்கள்! https://www.youtube.com/@rajavinmalargal God bless you!
