Tamil Bible study

இதழ்: 2622 அலைக்கழிக்கப்பட்ட வாழ்வில் நம்மால் தேவ பிரசன்னத்தை உணர முடிகிறதா?

1 சாமுவேல் 16: 23 அப்படியே தேவனால் அனுப்பட்ட ஆவி சவுலைப் பிடிக்கும்போது, தாவீது சுரமணடலத்தை எடுத்து, தன் கையினாலே வாசிப்பான். அதினாலே பொல்லாத ஆவி அவனைவிட்டு நீங்க, சவுல் ஆறுதலடைந்து சொஸ்தமாவான். ஒருமுறை அழகான வர்ணம் தீட்டும் இருவரிடம் ஒரு அமைதியான சூழலை வரையும்படி கூறினர். ஒருவர் அமைதியை சித்தரிக்க, இரு மலைகளின் நடுவே ஓடும் ஒரு அமைதியான நீரோடையைத் தெரிந்துகொண்டார். மற்றொருவரோ மிக விரைவாக ஓடிவரும் ஒரு நீர்வீழ்ச்சியையும், அதன் அருகே காற்றினால் அலைக்கழிக்கப் பட்ட ஒரு… Continue reading இதழ்: 2622 அலைக்கழிக்கப்பட்ட வாழ்வில் நம்மால் தேவ பிரசன்னத்தை உணர முடிகிறதா?

Tamil Bible study

இதழ்: 2621 உள்ளத்தின் அழகைத் தேடும் உன் தேவன்!

1 சாமுவேல் 16:7 கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீர வளர்ச்சியையும் பார்க்கவேண்டாம். நான் இவனைப் புறக்கணித்தேன். மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன். மனுஷன் முகத்தைப் பார்ப்பான். கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றான். சரித்திரத்தில் நடக்கும்  சம்பவங்களில் பல, மீண்டும் மீண்டும் நடப்பதை நம்மில் பலர் படித்திருக்கிறோம், ஒருவேளை கண்டுமிருக்கலாம். வேறொரு நாட்டின் சரித்திரம் இன்னொரு நாட்டில் நடக்க வாய்ப்புண்டு. அதைபோல வேறொரு காலகட்டத்தில், வேறொரு இன மக்களிடம்  நடந்த  சம்பவங்கள் நாம்… Continue reading இதழ்: 2621 உள்ளத்தின் அழகைத் தேடும் உன் தேவன்!

Tamil Bible study

இதழ்:2620 இன்று உனக்கு உன்னதமான பொறுப்பு எங்கே கொடுக்கப்பட்டுள்ளது?

1 சாமுவேல் 16:1  கர்த்தர் சாமுவேலை நோக்கி: இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிராதபடிக்கு, நான் புறக்கணித்துத் தள்ளின சவுலுக்காக நீ எந்தமட்டும் துக்கித்துக்கொண்டிருப்பாய். நீ உன் கொம்பைத் தைலத்தால் நிரப்பிக்கொண்டு வா. பெத்லெகேமியனாகிய ஈசாயினிடத்துக்கு உன்னை அனுப்புவேன். அவன் குமாரரில் ஒருவனை நான் ராஜாவாகத் தெரிந்துகொண்டேன் என்றார். 1 சாமுவேல் 15 ம் அதிகாரத்தில் நாம் கடைசியாகப்  பார்த்தது மிகவும் வருந்தத்தக்க ஒன்று.  சவுல் தன்னுடைய முரட்டாட்டத்தால் தன்னுடைய தலையில் மண்ணைப் போட்டுக்கொண்டான் என்று பார்த்தோம். 35 ம் வசனம்… Continue reading இதழ்:2620 இன்று உனக்கு உன்னதமான பொறுப்பு எங்கே கொடுக்கப்பட்டுள்ளது?

Tamil Bible study

இதழ்: 2619 எதிரிடையாய் நடக்காதே!

1 சாமுவேல்: 23  இரண்டகம்பண்ணுதல் பில்லிசூனியப்பாவத்துக்கும், முரட்டாட்டம்பண்ணுதல் அவபக்திக்கும், விக்ரகாராதனைக்கும் சரியாய் இருக்கிறது. நீர் கர்த்தருடைய வார்த்தையைப் பறக்கணித்தபடியினாலே, அவர் உம்மை ராஜாவாயிராதபடிக்குப் புறக்கணித்துத் தள்ளினான் என்றான். இந்த புதிய மாதத்தை ஒரு புதிய அத்திதாயத்தோடு நாங்கள் தொடங்கக் கர்த்தர் கொடுத்த கிருபைக்காய் அவரை ஸ்தோத்தரிக்கிறேன்! இந்த மாதம் முழுவதும் அவருடைய கிருபை நம்மைத் தாங்கும்படியாய் ஜெபிப்போம்! ஒருநாள் நாங்கள் வால்பாறையிலிருந்து திரும்பும்போது ஒரு ஆண் யானை தனியாக நின்றுகொண்டிருந்தது. காரை சற்று ஓரம் நிறுத்தி அதனைப்… Continue reading இதழ்: 2619 எதிரிடையாய் நடக்காதே!

Tamil Bible study

இதழ்: 2618 பெரிய ஊழியக்காரன் என்ற வரிசையில் நீ இல்லையா?

1 சாமுவேல் 15:17 அப்பொழுது சாமுவேல்: நீர் உம்முடையப் பார்வைக்குச் சிறியவராயிருந்தபோது அல்லவோ இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவரானீர். நாம் நாமாக இல்லாமல் வேறொருவரக  மாறத்தூண்டுகிறது இன்றைய சினிமா உலகம். அநேக வாலிபர் இந்த சிலந்தி வலையில் சிக்கித் தங்களை வேறொருவராக மாற்ற முயல்கின்றதைப் பார்க்கிறோம். நடை, உடை, தலைமுடி எல்லாமே தங்களுடைய சினிமா ஸ்டார் போல் மாற்றிக்கொள்கின்றனர். இந்த ஸ்டார் என்ற வார்த்தை இன்றைய ஊழியக்காரருக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன். சிலர் பெரிய மேடையை அலங்கரிக்கின்றனர். அவர்களுடய வாழ்க்கை பெரிய… Continue reading இதழ்: 2618 பெரிய ஊழியக்காரன் என்ற வரிசையில் நீ இல்லையா?

Tamil Bible study

இதழ்:2617 சின்னஞ்சிறு ஆசைகள்தானே என்று நாம் எண்ணும் சிறுநரிகள்!

1 சாமுவேல் 15: 13,14  சாமுவேல் சவுலினிடத்தில் போனான்.சவுல் அவனை நோக்கி நீர் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர். கர்த்தருடைய வார்த்தையை நிறைவேற்றினேன் என்றான். அதற்குச் சாமுவேல்: அப்படியானால் என் காதுகளில் விழுகிற ஆடுகளின் சத்தமும், எனக்குக் கேட்கிற மாடுகளின் சத்தமும் என்ன என்றான். தான் செய்த தவறை மறைக்கும் ஒருவர் நாவில் தேன் ஒழுகும் வார்த்தைகளை பேசுவதைப்பார்த்து இப்படியும் ஒருவர் போலியாக இருக்கமுடியுமா என்று வியந்த அனுபவம் உங்களுக்கு உண்டா? இஸ்ரவேலின் முதல் ராஜாவாகிய சவுல் இங்கு அப்படித்தான்… Continue reading இதழ்:2617 சின்னஞ்சிறு ஆசைகள்தானே என்று நாம் எண்ணும் சிறுநரிகள்!

Tamil Bible study

இதழ்: 2616 நம்மை நேசிக்கும் தேவன் மிகப்பெரியவர்!

1 சாமுவேல் 15: 10,11  அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை சாமுவேலுக்கு உண்டாகி, அவர் சொன்னது: நான் சவுலை ராஜாவாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது. இன்றைய வேத பகுதியை வாசிக்கும்போது  நாம் என்றைக்காவது நம்முடையப் பிள்ளைகளைப் பார்த்து இவனை அல்லது இவளை ஏன் பெற்றோமோ என்று மனஸ்தாபப் பட்டதுண்டோ என்று சிந்தித்தேன்! அவர்கள் தவறு பண்ணியபோதுகூட ஒருநாளும் அந்த எண்ணம் தலைதூக்கியதேயில்லை. பிள்ளைகள் தவறு பண்ணும்போது மனவேதனை உண்டு ஆனால் மனஸ்தாபம் இல்லை என்றுதானே நீங்களும் நினைக்கிறீர்கள்! இந்த மனவேதனை என்ற அர்த்தத்தைத்தான்… Continue reading இதழ்: 2616 நம்மை நேசிக்கும் தேவன் மிகப்பெரியவர்!

Tamil Bible study

இதழ்:2615 ஆனால் ஒன்றில் மட்டும் தவறிவிட்டேன் என்ற குறை உண்டா?

1 சாமுவேல் 15: 1,3, 9  பின்பு சாமுவேல்  சவுலை நோக்கி: ....இப்போதும் கர்த்தருடைய  வார்த்தைகளின் சத்தத்தைக் கேளும். .... இப்பொழுதும்  நீ போய் , அமலேக்கை மடங்கடித்து, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரித்து, அவன்மேல் இரக்கம் வைக்காமல், புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், கழுதைகளையும், கொன்றுபோடக்கடவாய் என்கிறார் என்று சொன்னான். சவுலும், ஜனங்களும் ஆகாகையும்,ஆடுமாடுகளில் முதல்தரமானவைகளையும், இரண்டாந்தரமானவைகளையும், ஆட்டுக்குட்டிகளையும், நலமான எல்லாவற்றையும் அழித்துபோட மனதில்லாமல் தப்ப வைத்து, அற்பமானவைகளும், உதவாதவைகளுமான சகல வஸ்துக்களையும் முற்றிலும் அழித்துப்… Continue reading இதழ்:2615 ஆனால் ஒன்றில் மட்டும் தவறிவிட்டேன் என்ற குறை உண்டா?

Tamil Bible study

இதழ்:2614 எனக்காக யாவற்றையும் செய்ய அவருக்கு எந்தத் தடையும் இல்லை!

1 சாமுவேல் 14:6 யோனத்தான் தன் ஆயுததாரியாகிய வாலிபனை நோக்கி: விருத்தசேதனம் இல்லாதவர்களுடைய அந்தத் தாணையத்துக்குப் போவோம் வா. ஒருவேளை கர்த்தர் நமக்காக ஒரு காரியம் செய்வார். அநேகம்பேரைக் கொண்டாகிலும்,கொஞ்சம்பேரைக் கொண்டாகிலும், ரட்சிக்கக் கர்த்தருக்குத் தடையில்லை என்றான். கடவுள் எப்படி என் தேவைகளை அறிந்து எனக்காக யாவையும் செய்ய முடியும்! அவர் என்ன நம் அருகில் இருக்கிறாரா?  என்னைப்போல் எத்தனை கோடி மக்கள் தங்களை அவருடைய பிள்ளைகள் என்கிறார்கள்! அத்தனைபேரின் சத்தமும்  அவர் காதில் விழுமா? என்று… Continue reading இதழ்:2614 எனக்காக யாவற்றையும் செய்ய அவருக்கு எந்தத் தடையும் இல்லை!

Tamil Bible study

இதழ்:2613 எத்தனை உயர்வு தாழ்வு உள்ள வாழ்க்கை!

1 சாமுவேல் 13:14 இப்போதோ உம்முடைய ராஜ்யபாரம் நிலைநிற்காது.கர்த்தர் தம்முடைய இருதயத்திற்கேற்ற ஒரு மனுஷனைத் தமக்குத் தேடி அவனைக் கர்த்தர் தம்முடைய ஜனங்களின்மேல் தலைவனாயிருக்கக் கட்டளையிட்டார். கர்த்தர் உமக்கு விதித்த கட்டளையை நீர் கைக்கொள்ளவில்லையே என்று சொன்னான். நான் என்று வேதத்தை படிக்க ஆரம்பித்தேனோ அன்றிலிருந்து தாவீதைப் பற்றி அதிகமாக படிப்பேன். முதலில் தாவீது கோலியாத்!  பின்னர் தாவீது  பத்சேபாள்!!!! உண்மையிலேயே இந்த ஹீரோவின் வாழ்க்கையில் எவ்வளவு உயர்வு தாழ்வுகள் இருந்தன! தாவீதின் வாழ்க்கை கிறிஸ்தவர்கள் கையில் பந்தைப்போல அடி… Continue reading இதழ்:2613 எத்தனை உயர்வு தாழ்வு உள்ள வாழ்க்கை!