2 சாமுவேல் 11:9 ஆனாலும் உரியா தன் வீட்டுக்கு போகாமல், ராஜ அரமனையின் வாசலிலே தன் ஆண்டவனுடைய எல்லாச்சேவகரோடுங்கூடப் படுத்துக் கொண்டிருந்தான். மீன்கள் கண்ணுக்கு படாத வரைக்கும் கொக்கு பரிசுத்தமாய் இருக்கும் என்று ஒரு வங்காள பழமொழி உண்டு. ஒருவேளை உங்களுக்கு ஐஸ்கிரீம் பிடிக்காமல் இருக்குமானால் ஒரு பெரிய கிண்ணத்தில் ஐஸ்கிரீம் உங்கள் பக்கத்தில் இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் ஐஸ்கிரீம் என்றாலே நாக்கில் தண்ணீர் வருபவராக இருந்து ஏதோ ஒரு காரணத்தால் நீங்கள் அதை சாப்பிடக்கூடாது என்று… Continue reading இதழ்: 1432 நீரில் காணும் மீன் கொக்குக்கு ஒரு சோதனை தானே!
Category: Bible Study
இதழ்: 1431 சிறியவராயிருந்தபோதே உன்னை தெரிந்து கொண்டதை மறந்து போகாதே!
2 சாமுவேல் 11:8 பின்பு தாவீது உரியாவை நோக்கி: நீ உன் வீட்டுக்குப்போய் பாதசுத்தி செய் என்றான். உரியா ராஜ அரமனையிலிருந்து புறப்பட்டபோது ராஜாவினிடத்திலிருந்து உச்சிதமான பதார்த்தங்களவன் பின்னாலே அனுப்பப்பட்டது. நாம் 1 சாமுவேல் 15:17 ல் சாமுவேல் சவுலைப் பார்த்து நீர் உம்முடைய பார்வைக்கு சிறியவராயிருந்தபோது அல்லவோ ...... கர்த்தர் உம்மை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணுவித்தாரே என்பதைப் பார்க்கிறோம். அடிக்கடி யாராவது நம் ஒவ்வொருவருக்கும் இதை ஞாபகப்படுத்தினால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.… Continue reading இதழ்: 1431 சிறியவராயிருந்தபோதே உன்னை தெரிந்து கொண்டதை மறந்து போகாதே!
இதழ்: 1430 வாயின் இனிய வார்த்தைகளால் செய்யும் வஞ்சகம்!
2 சாமுவேல் 11:7 உரியா அவனிடத்தில் வந்தபோது, தாவீது அவனைப் பார்த்து: யோவாப் சுகமாயிருக்கிறானா, ஜனங்கள் சுகமாயிருக்கிறார்களா யுத்தத்தின் செய்தி நற்செய்தியா என்று விசாரித்தான். இந்த மாய வித்தைகள் செய்பவரைப் பார்த்திருப்பீர்கள். நான் ஹை ஸ்கூலில் படித்துக் கொண்டிருந்த போது ஒருவர் வந்து அநேக வித்தைகள் செய்தார். நான் அதில் சற்றும் ஈடுபாடு காட்டாமல் உட்கார்திருந்தேன். அவர் என்னிடம் வந்து தன் கைகளில் இருந்த சீட்டுக் கட்டுகளில் ஒன்றை எடுத்து அதில் ஒரு குறியைப் போட வைத்தார்.… Continue reading இதழ்: 1430 வாயின் இனிய வார்த்தைகளால் செய்யும் வஞ்சகம்!
இதழ்:1429 குள்ளநரியோடு சேர்ந்தால் என்ன சிந்தனை வரும்?
2 சாமுவேல் 11:6 அப்பொழுது தாவீது, ஏத்தியனாகிய உரியாவை என்னிடத்தில் அனுப்பு என்று யோவாபினண்டைக்கு ஆள் அனுப்பினான். சில நேரங்களில் நாம் லேசாக தொடும் சிறிய பொருட்களில் நம்முடைய கை ரேகை அச்சு அதிகமாக பதிந்து விடும் அல்லவா? இதன் அர்த்தம் புரிகிறதா? நான் இன்றைய வசனத்தில் ஒரு எச்சரிக்கை மணி அடிப்பதைப் பார்க்கிறேன். நாம் யாரோடு சேருகிறோம், யாரோடு அதிகமாக இருக்கிறோம் என்பது நமக்கு எவ்வளவு முக்கியம் என்று காட்டுகிறது. கள்ளத்தனத்துக்கு கூட்டாளியாகக் கூடாது. பத்சேபாள்… Continue reading இதழ்:1429 குள்ளநரியோடு சேர்ந்தால் என்ன சிந்தனை வரும்?
இதழ்:1428 நம் உள்ளத்தில் ஒளிந்து கொண்டிருக்கும் அக்கிரமம்!
2 சாமுவேல் 11: 4 அவள் அவனிடத்தில் வந்தபோது அவளோடே சயனித்தான். அக்கிரமம் என்ற வார்த்தை நமக்கு பிடிக்காத ஒன்று என்பது எனக்குத் தெரியும். ஆனால் இந்த வார்த்தை வேதத்தில் பல இடங்களில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. ஆதியாகமம்: 6:5 ல் மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்று சொல்கிறது. இந்த வார்த்தை தாவீது பத்சேபாளுடைய வாழ்க்கைக்கு மிகவும் பொருந்தும் என்று நினைக்கிறேன். அக்கிரமம் பெருகின இடத்தை நன்மை இல்லாத இடம் என்று சொல்லாமல், நன்மையே தீமையாக மாறின இடம்… Continue reading இதழ்:1428 நம் உள்ளத்தில் ஒளிந்து கொண்டிருக்கும் அக்கிரமம்!
இதழ்:1427 உன் பதவியை உபயோகப்படுத்தி எதை வேண்டுமானாலும் செய்யலாமா?
2 சாமுவேல்: 11:4 அவள் அவனிடத்தில் வந்தபோது அவளோடே சயனித்தான். இன்றைய வேதாகமப்பகுதியை வாசித்தபோது, சக்திவாய்ந்த பதவி மனிதரை ஊழல் செய்விக்காது. மனிதர் தான் சக்திவாய்ந்த பதவியை ஊழல் பண்ணுகிறார்கள் என்று யாரோ எழுதியது கவனத்துக்கு வந்தது. ஒருகாலத்தில் பக்கத்து வீட்டு நண்பராக இருந்தவர் கூட, பிசினஸ் ஆகட்டும் அல்லது அரசியல் ஆகட்டும் ஏதோ ஒரு இடத்தில் உயர்ந்த பதவியைப் பிடித்தவுடன் ஆளே மாறிப்போவதில்லையா? கிறிஸ்தவ ஊழியக்காரர் கூட சிலரைப் பார்த்திருக்கிறேன். ஞாயிற்றுக் கிழமைகளில் அவர்கள் ஊழியத்துக்காக… Continue reading இதழ்:1427 உன் பதவியை உபயோகப்படுத்தி எதை வேண்டுமானாலும் செய்யலாமா?
இதழ்:1426 மற்ற பறவைகளின் கூட்டில் முட்டையிடும் கவுதாரியைப் போல!
2 சாமுவேல் 11: 4 அப்பொழுது தாவீது ஆள் அனுப்பி அவளை அழைத்துவரச் சொன்னான். கவுதாரி என்ற பறவையைப் பற்றி அறிந்திருப்பீர்கள். எரேமியா தீர்க்கதரிசி இதைப்பற்றி 17 ம் அதிகாரத்தில் எழுதுகிறார். நானும் சற்று ஆர்வத்தோடு இதைப்பற்றி படித்தேன். மற்ற பறவைகளைப் போல இது மரங்கள் மேல் கூடு கட்டுவதில்லை. அது தரையிலேயே முட்டையிட்டு அடைகாக்கும். சில நேரங்களில் மற்ற பறவைகளின் கூடுகளில் தன் முட்டையை இடும். எது எப்படியோ சுலபமான வழியில் காரியத்தை சாதித்துக் கொள்ளும்… Continue reading இதழ்:1426 மற்ற பறவைகளின் கூட்டில் முட்டையிடும் கவுதாரியைப் போல!
இதழ்:1425 நம் நடத்தையே நம்மை பிரதிபலிக்கும் கண்ணாடி!
2 சாமுவேல் 11:3 ... அவள் எலியாமின் குமாரத்தியும், ஏத்தியனான உரியாவின் மனைவியுமான பத்சேபாள் என்றார்கள். உனக்கு இஷ்டப்படி நீ செய்யலாம் என்ற சுதந்தரம் என்னுடைய இளவயதில் கொடுக்கப்படவில்லை. அம்மா, அப்பா, டீச்சர்ஸ், போதகர்மார், என்ற பலருடைய அட்வைஸ் கேட்டுதான் நடந்தோம். ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி தங்களுடைய சொந்த வழியில் நடந்தவர்கள் பல விளைவுகளை சந்திக்க வேண்டியிருந்தது. அவர்களால் அவர்களுடைய குடும்பம் தலைகுனிந்து நிற்க வேண்டியிருந்தது! எல்லா செயல்களுக்கும் பக்க விளைவுகள் உண்டு! அதுவும் யாரையும்பற்றி யோசிக்காமல்… Continue reading இதழ்:1425 நம் நடத்தையே நம்மை பிரதிபலிக்கும் கண்ணாடி!
இதழ்:1424 நம் இருதயம் ஒரு விலங்கியல் பூங்கா போன்றது!
2 சாமுவேல் 11:3 ... அவள் எலியாமின் குமாரத்தியும், ஏத்தியனான உரியாவின் மனைவியுமாகிய பத்சேபாள் என்றார்கள். ராஜாக்கள் யுத்தத்துக்கு போகும் காலத்தில் தாவீது தன்னுடைய வீட்டின் உப்பாரிகையின் மேல் உலாவிக்கொண்டிருந்தபோது ஸ்நானம் செய்து கொண்டிருந்த ஒரு பெண்ணைக் கண்டு, அவள் யார் என்று விசாரிக்க ஆள் அனுப்பினான் என்று பார்த்தோம். அவன் அனுப்பிய ஆட்கள் அவளைப் பற்றிய தகவலுடன் திரும்பி வந்தனர். அவள் பெயர் பத்சேபாள் என்றும் அவள் திருமணமானவள் என்றும் அறிந்து கொண்டான் தாவீது. இந்த… Continue reading இதழ்:1424 நம் இருதயம் ஒரு விலங்கியல் பூங்கா போன்றது!
இதழ்: 1423 நீ விரும்பியதை தேடி கட்டுக்கடங்காமல் ஓடும்போது….
2 சாமுவேல் 11:3 அப்பொழுது தாவீது, அந்த ஸ்திரீ யார் என்று விசாரிக்க ஆள் அனுப்பினான். இரண்டு வருடங்களுக்கு முன்பு இமாலய மலையில் உள்ள தரம்சாலா என்ற மலை நகருக்கு சென்றிருந்தோம். அங்கே எங்கள் விமானம் இறங்கியவுடன் என்னுடைய செல் போனில் ஒரு மெசேஜ் வந்தது. அங்கு உள்ள நதிகளின் ஒரங்களில் நடக்க வேண்டாம் என்ற எச்சரிக்கை அது. அங்கே நதிக் கரையோரம் சென்ற போதுதான் அந்த எச்சரிக்கையின் அர்த்தம் புரிந்தது. நதிகளின் ஓரங்களில் பெரிய பெரிய… Continue reading இதழ்: 1423 நீ விரும்பியதை தேடி கட்டுக்கடங்காமல் ஓடும்போது….