யோசுவா 14: 7,8 என் இருதயத்திலுள்ளபடியே அவருக்கு மறு செய்தி கொண்டு வந்தேன். ஆனாலும் என்னோடேகூட வந்த என் சகோதரர் ஜனத்தின் இருதயத்தைக் கரையப்பண்ணினார்கள்; நானோஎன் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினேன். இஸ்ரவேல் மக்கள் யோர்தானின் கரையிலே கூடியிருக்கின்றனர். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட, பாலும் தேனும் ஓடுகிற கானானுக்குள் பிரவேசிக்கும் நாள் நெருங்கி விட்டது. மோசே பன்னிரண்டு வாலிபரை தெரிந்து கொண்டு, அவர்களை கானானுக்குள் வேவு பார்த்து வரும்படி அனுப்புகிறான். அவர்களில் பத்துபேர் அழுது புலம்பி கொண்டு திரும்பினர்.… Continue reading இதழ்: 1146 பரம தகப்பனின்அளவற்ற பரந்த அன்பு!
Category: Tamil Christian Families
இதழ்: 1145 உன்னில் புதைந்திருக்கும் சிறந்தவைகளைக் காணும் தகப்பன்!
யோசுவா: 14:7 தேசத்தை வேவு பார்க்க கர்த்தரின் தாசனாகிய மோசே என்னைக் காதேஸ்பனெயாவிலிருந்து அனுப்புகிறபோது எனக்கு நாற்பது வயதாயிருந்தது; என் இருதயத்திலுள்ளபடியே அவருக்கு மறு செய்தி கொண்டு வந்தேன். இந்த யோசுவாவின் புத்தகத்தில் அடுத்தபடியாக நாம் காலேபுக்கும் அவன் மகள் அக்சாளுக்கும் இடையில் இருந்த ஒரு அருமையான உறவைப் பற்றிப்பார்க்கப்போகிறோம். யோசுவா 14 ம், 15 ம் அதிகாரங்களில், மோசேயால் இஸ்ரவேலுக்குள் வேவுகாரனாய் அனுப்பப்பட்ட காலேபைப் பற்றியும் அவன் குமாரத்தி அக்சாளைப் பற்றியும் படிக்கிறோம். ஆச்சரியப்படும் விதமாக, இதே கதை நியாதிபதிகள்… Continue reading இதழ்: 1145 உன்னில் புதைந்திருக்கும் சிறந்தவைகளைக் காணும் தகப்பன்!
இதழ்: 1144 உன் வெற்றியைக் கண்குளிரப் பார்!
யோசுவா: 8:1 நீ பயப்படாமலும், கலங்காமலும் இரு; நீ யுத்த ஜனங்கள் யாவரையும் கூட்டிக்கொண்டு எழுந்து ஆயிபட்டணத்தின்மேல் போ, இதோ, ஆயியின் ராஜாவையும், அவன் பட்டணத்தையும், அவன் நாட்டையும் உன் கையிலே ஒப்புக்கொடுத்தேன். நாங்கள் சில வருடங்களுக்கு முன்னர் ஜெர்மனி நாட்டிலுள்ள பெர்லின் நகரத்திலிருந்து மியூனிக் வழியாக இத்தாலி நாட்டில் உள்ள ரோம் நகருக்கு பிரயாணம் பண்ணினோம். ரோம் நகரத்தை நெருங்குவதற்கு ஒரு அரை மணி நேரத்துக்கு முன்னர் நான் விமானத்தின் ஜன்னல் வழியாகப் பார்த்த காட்சியை இன்றும்… Continue reading இதழ்: 1144 உன் வெற்றியைக் கண்குளிரப் பார்!
இதழ்: 1143 உம் வழிநடக்க எனக்கு பெலன் தாருமையா!
யோசுவா: 8:1 ”… நீ யுத்த ஜனங்கள் யாவரையும் கூட்டிக்கொண்டு எழுந்து ஆயிபட்டணத்தின்மேல் போ,..” ஒவ்வொருநாள் காலையிலும் நான் என்னுடைய எல்லா பெலவீனங்களையும் அறிந்த என் பரமபிதாவிடம் அப்பா இந்த நாளைக்குரிய பெலனைத்தாரும் என்று ஜெபிப்பதுண்டு! சரீர பெலவீனத்தை மட்டும் நான் இங்கு குறிப்பிடவில்லை! ஆவிக்குரிய பெலவீனமும்தான்! ஒவ்வொருநாளும் இன்று நான் விழுந்து விடாமல் நிற்க உதவிதாரும் என்று தான் கெஞ்சி ஜெபிப்பேன்! எரிகோவில் பெரிய வெற்றியைக் கண்ட இஸ்ரவேல் மக்கள் ஆயியில் தோல்வியைக் கண்டனர் என்று… Continue reading இதழ்: 1143 உம் வழிநடக்க எனக்கு பெலன் தாருமையா!
இதழ்: 1142 தோல்வி நிறைந்த வாழ்க்கை மாறக் கூடுமா?
யோசுவா 7:26 ..” அவன்மேல் இந்நாள் வரைக்கும் இருக்கிற பெரிய கற்குவியலைக் குவித்தார்கள்; இப்படியே கர்த்தர் தன் கோபத்தின் உக்கிரத்தை விட்டு மாறினார்; ஆகையால் அவ்விடம் இந்நாள்வரைக்கும் ஆகோர் பள்ளத்தாக்கு என்னப்படும். ஒசியா: 2:15 அவளுக்கு திராட்சத்தோட்டங்களையும், நம்பிக்கையின் வாசலாக ஆகோரின் பள்ளத்தாக்கையும் கொடுப்பேன்.” நான் முதன்முறையாக ஆகானின் கதையை என்னுடைய சன்டே ஸ்கூலில் கேட்ட ஞாபகம் இருக்கிறது! அன்று எனக்கு பழைய ஏற்பாட்டின் தேவன் மீது அதிக பயம் வந்தது. கடவுள் ஆகானுக்கு மட்டும் அல்ல,… Continue reading இதழ்: 1142 தோல்வி நிறைந்த வாழ்க்கை மாறக் கூடுமா?
இதழ்: 1141 வேதத்தின் வெளிச்சத்தில் உன்னைப் பார்!
யோசுவா: 7:21 ”கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வையையும், இருநூறு வெள்ளிச்சேக்கலையும், ஐம்பது சேக்கல் நிறையான ஒரு பொன்பாளத்தையும், நான் கண்டு அவைகளை இச்சித்து, எடுத்துக்கொண்டேன். இதோ அவைகள் என் கூடாரத்தின் மத்தியில் பூமிக்குள் புதைந்திருக்கிறது. பலநாட்களாக நாம் ஆகானைப்பற்றி படித்துக்கொண்டிருக்கிறோம். இஸ்ரவேலின் சேனையில் ஒரு போர்வீரனாக, தேவனாகிய கர்த்தரின் சித்தப்படி எரிகோவை அழிக்கப் புறப்பட்ட இந்த வீரன், பொருளாசை என்ற சலனத்துக்கு சற்று இடம் கொடுத்ததால், அவன் நோக்கம் தடுமாறி, கண்களால் கண்ட பொருட்களை இச்சித்து, தனக்கு… Continue reading இதழ்: 1141 வேதத்தின் வெளிச்சத்தில் உன்னைப் பார்!
இதழ்: 1140 உன் கண்கள் இன்று எதைக் காண்கின்றன?
யோசுவா: 7:21 ”கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வையையும், இருநூறு வெள்ளிச்சேக்கலையும், ஐம்பது சேக்கல் நிறையான ஒரு பொன்பாளத்தையும், நான் கண்டு……” ஆதி:3:6 அப்பொழுது ஸ்திரியானவள் அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியை தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு…. கர்த்தரால் மனிதனுக்காக உருவாக்கப்பட்ட ஏதேன் தோட்டத்தில் புத்தியை தெளிவிக்கும் என்று ஒரு கனியைக் காட்டி வஞ்சகம் பேசி சாத்தான் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் கண்ணி வைத்து தன் வலையில் விழ வைத்தான். நாம்கூட… Continue reading இதழ்: 1140 உன் கண்கள் இன்று எதைக் காண்கின்றன?
இதழ்: 1139 நம்மை விரோதியாக்கும் சிற்றின்பங்கள்!
யோசுவா: 7:20 அப்பொழுது ஆகான் யோசுவாவுக்கு பிரதியுத்தரமாக: மெய்யாகவே நான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன்; இன்னின்ன பிரகாரமாக செய்தேன். இந்த ராஜாவின் மலர்களில் ஒருமுறை ஒரே ஒரு கணம் சிற்றின்பம் தவறா? என்ற தலைப்பில் யோசேப்பின் வாழ்க்கையிலிருந்து எழுதியிருந்தேன். எனக்கு ஆச்சரியமூட்டும் உண்மை என்னவெனில், ஒவ்வொரு வருடமும் மிகவும் அதிகமாக என்னுடைய வாசகர்களால் வாசிக்கப்படுகிற இதழ் அதுவேயாகும். நாம் பாவம் செய்வது தவறு என்று நமக்கு தெரிந்திருந்தாலும், ஒரே ஒரு கணம் சிற்றின்பத்தை அனுபவித்தால் கூடத்… Continue reading இதழ்: 1139 நம்மை விரோதியாக்கும் சிற்றின்பங்கள்!
இதழ்: 1138 எங்கே பத்திரப்படுத்தி விட்டாய்?
யோசுவா: 6:27 இவ்விதமாகக் கர்த்தர் யோசுவாவோடேகூட இருந்தார்; அவன் கீர்த்தி தேசமெங்கும் பரம்பிற்று. இந்த வருடத்தின் நான்காம் மாதத்தைக் காணச் செய்த தேவாதி தேவனுக்கு ஸ்தோத்திரம்! எங்கள் வீட்டில் கிறிஸ்மஸ் காலத்தில் வைக்கும் ஒரு அழகிய மெழுகுவர்த்தி ஸ்டாண்ட் உள்ளது. அதில் ஆறு மெழுகுவர்த்திகளோடு மூன்று அடுக்குகள் சிவப்பும் வெள்ளையுமான கிறிஸ்மஸ் மலர்கள் சுற்றி வளைந்து இருப்பதால், பார்க்க மிகவும் அழகாக இருக்கும்.போனவருடத்திற்கு முந்தின வருடம் கிறிஸ்மஸ் முடிந்தவுடன் எல்லா அலங்காரப் பொருட்களையும் எடுத்து வைக்கும்போது நான்… Continue reading இதழ்: 1138 எங்கே பத்திரப்படுத்தி விட்டாய்?
இதழ்: 1137 மாற்றான் தோட்டத்து மல்லிகை மேல் ஆசைப்படலாமா?
யோசுவா:7:1 “………. ஆகான் என்பவன் சாபத்தீடானதிலே சிலதை எடுத்துக்கொண்டான்; நாங்கள் அடிக்கடி வால்ப்பாறை போவது வழக்கம். அது மலைமேல் அமைந்திருக்கும் ஒரு பட்டணம்! மலைகளில் கார் ஏற ஆரம்பித்தவுடன், கண்ணாடியை இறக்கிவிட்டு, சில்லென்ற இயற்கை காற்றை அனுபவிப்போம். போகும்வழியில் குரங்குகள் ஏராளமாய் அங்கும் இங்கும் தாவி ஓடிக்கொண்டிருக்கும். அங்கே உள்ள ஒரு அருவியில் குளிக்க ஏராளமான மக்கள் வருவார்கள். அவர்கள் குரங்குகளுக்கு ஏதாவது கொடுப்பது வழக்கம். ஒருநாள் நான் அவ்வழியாகச் சென்று கொண்டிருந்தபோது ஒரு குரங்கு கையில்… Continue reading இதழ்: 1137 மாற்றான் தோட்டத்து மல்லிகை மேல் ஆசைப்படலாமா?