1 இராஜாக்கள் 5:2-5 அப்பொழுது சாலொமோன் ஈராமிடத்தில் ஆட்களை அனுப்பி..... ஆகையால் நான் உன் ஸ்தானத்தில் உன் சிங்காசனத்தின்மேல் வைக்கும் உன் குமாரனே என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டுவான் என்று கர்த்தர் என் தகப்பனாகிய தாவீதினிடத்தில் சொன்னபடியே ஆலயத்தைக் கட்ட வேண்டும் என்று இருக்கிறேன். இஸ்ரவேலின் புதிய ராஜாவாகிய சாலொமோனை அண்டை நாடுகள் கவனிக்க ஆரம்பித்தன. தீருவின் ராஜாவாகிய ஈராம் முதலில் அவனுக்கு தன்னுடைய ஊழியர் மூல பரிசுகள் அனுப்பினான் என்று பார்த்தோம். இந்த நட்பு சாலொமோனுக்கு… Continue reading இதழ்:1532 ஒரே வாழ்வு! ஒரே நோக்கம்!
Month: October 2022
இதழ்:1531 கரையாத உப்பு எப்படி சுவையேற்ற முடியும்?
1 இராஜாக்கள்: 5:1 சாலொமோனை அவனுடைய பிதாவின் ஸ்தானத்தில் ராஜாவாக அபிஷேகம் பண்ணினார்கள் என்று தீருவின் ராஜாவாகிய ஈராம் கேள்விப்பட்டு, தன் ஊழியக்காரரை அவனிடத்தில் அனுப்பினான். ஈராம் தாவீதுக்குச் சகல நாளும் சிநேகிதனாயிருந்தான். இந்த வேதாகமப் பகுதியை நான் பலமுறை வாசித்து கடந்து சென்றிருக்கிறேன் ஆனால் இன்று இதை வாசித்தபோது இதில் ஒரு நல்ல நட்பை பார்த்தேன். இஸ்ரவேலின் ராஜாவாக இருந்த தாவீதுக்கும் , தீருவின் ராஜாவாகிய ஈராமுக்கும் நடுவில் இருந்த நட்பு. இன்றைய நடைமுறைப்படி சொல்லப்போனால்… Continue reading இதழ்:1531 கரையாத உப்பு எப்படி சுவையேற்ற முடியும்?
இதழ்:1530 கேள்! நீ கேட்பதற்கு மேலாகவே உனக்கு அருளப்படும்!
1 இராஜாக்கள்: 4:29,30,32 தேவன் சாலொமோனுக்கு மிகுதியான ஞானத்தையும், புத்தியையும், கடற்கரை மணலத்தனையான மனோவிருத்தியையும் கொடுத்தார். சகல கிழக்கத்திப் புத்திரரின் ஞானத்தையும் , எகிப்தியரின் சகல ஞானத்தையும் பார்க்கிலும் சாலொமோனின் ஞானம் சிறந்ததாயிருந்தது. அவன் மூவாயிரம் நீதிமொழிகளைச் சொன்னான், அவனுடைய பாட்டுக்கள் ஆயிரத்து ஐந்து. சாலொமோனுக்கு தேவன் அருளிய ஞானத்தைப் பற்றி படித்துக் கொண்டிருக்கிறோம். இன்றைய வேதாகமப் பகுதி கூறுகிறது, தேவன் அவனுக்கு மிகுதியான ஞானத்தையும் புத்தியையும் ,கொடுத்தது மட்டுமல்லாமல் மனோவிருத்தியையும் கொடுத்தார் என்று. தேவன் சாலொமோனுக்கு… Continue reading இதழ்:1530 கேள்! நீ கேட்பதற்கு மேலாகவே உனக்கு அருளப்படும்!
இதழ்:1529 என்னை கொழுந்துவிட்டு எரியப்பண்ணும்!
1 இராஜாக்கள்: 3:27 அப்பொழுது ராஜா உயிரோடிருக்கிற பிள்ளையைக்கொல்லாமல் அவளுக்குக் கொடுத்து விடுங்கள், அவளே அதின் தாய் என்றான். இந்த வேதாகமப் பகுதியை இன்று நான் வாசித்த போது, சாலொமோனின் அரங்கத்தில் கூடியிருந்த மக்களின் முகத்தில் காணப்பட்ட ஆச்சரியத்தை என்னால் காண முடிந்தது. அங்கிருந்த மக்கள் அப்படியே வாயடைத்து நிற்கும்படியாக சாலொமோன் கொடுத்த நியாயத்தீர்ப்பு இருந்தது மட்டும் அல்லாமல், இது மனிதனுடைய ஞானத்தினால் அல்ல, தேவனுடைய ஞானத்தினால் மட்டுமே ஆகும் என்று இஸ்ரவேல் முழுவதும் உள்ள மக்கள்… Continue reading இதழ்:1529 என்னை கொழுந்துவிட்டு எரியப்பண்ணும்!
இதழ்:1528 தன் பிள்ளைக்காக மன்றாடிய தாய்!
1 இராஜாக்கள்3: 24-27 ஒரு பட்டயத்தை கொண்டுவாருங்கள் என்றான், அவர்கள் ஒரு பட்டயத்தை ராஜாவினிடத்தில் கொண்டுவந்தார்கள். ராஜா உயிரோடிருக்கிற பிள்ளையை இரண்டாகப் பிளந்து, பாதியை இவளுக்கும் பாதையை அவளுக்கும் கொடுங்கள் என்றான். அப்பொழுது உயிரோடிருக்கிற பிள்ளையின் தாய், தன் பிள்ளைக்காக அவள் குடல் துடித்ததினால், ராஜாவை நோக்கி; ஐயோ என் ஆண்டவனே, உயிரோடிருக்கிற பிள்ளையைக் கொல்ல வேண்டாம், அதை அவளுக்கே கொடுத்து விடும் என்றாள். மற்றவள் அது எனக்கும் வேண்டாம், உனக்கும் வேண்டாம் என்றாள். அப்பொழுது… Continue reading இதழ்:1528 தன் பிள்ளைக்காக மன்றாடிய தாய்!
இதழ்:1527 ஒரு பட்டயத்தால் உருவப்பட்ட உண்மை!
1 இராஜாக்கள்3: 24,25 ஒரு பட்டயத்தை கொண்டுவாருங்கள் என்றான், அவர்கள் ஒரு பட்டயத்தை ராஜாவினிடத்தில் கொண்டுவந்தார்கள். ராஜா உயிரோடிருக்கிற பிள்ளையை இரண்டாகப் பிளந்து, பாதியை இவளுக்கும் பாதையை அவளுக்கும் கொடுங்கள் என்றான். உண்மை பெலவீனமாகத் தோன்றினாலும் உண்மை எப்பொழுதுமே மிகவும் பெலமுள்ளது என்று சொல்வார்கள். இரண்டு தாய்மார்! ஒரு குழந்தை! இருவரும் சொந்தம் கொண்டாடுகிறார்கள்! யாரிடம் உண்மை உள்ளது? யார் பொய் சொல்கிறார்கள்? தேவனாகிய கர்த்தர் வாலிபனாகிய சாலொமொன் கேட்ட ஞானத்தை அவனுக்கு கொடுத்தது மட்டுமல்லாமல், அவனுடைய… Continue reading இதழ்:1527 ஒரு பட்டயத்தால் உருவப்பட்ட உண்மை!
இதழ்:1526 ஒரு தறியில் நெய்யப்பட்ட பொய்!
சங்கீதம் 19: 14 என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக. இன்று நாம் 1 இராஜாக்கள் 3: 17-22 ல் நடந்த சம்பவத்தை நாம் இன்று படிக்கிறோம். வேதாகமத்தை திறந்து ஒருமுறை வாசித்து விடுங்கள். என்னுடைய கற்பனையின்படி அன்றைய எருசலேம் செய்தித் தாள் இருந்திருக்குமானால், இந்தத் தலைப்போடு தான் வந்திருக்கும்; இரண்டு வேசிகள் ஒரு பிள்ளையின் உரிமைக்காக சண்டை: மன்னர் சாலொமோனின் தீர்ப்பு இன்று. … Continue reading இதழ்:1526 ஒரு தறியில் நெய்யப்பட்ட பொய்!
இதழ்:1525 ருசித்தால் மட்டுமே உணவின் சுவை தெரியும்!
1 இராஜாக்கள் 3: 16 அப்பொழுது வேசிகளான இரண்டு ஸ்திரீகள் ராஜாவினிடத்தில் வந்து, அவனுக்கு முன்பாக நின்றார்கள். சாலொமோன் புதிதாக சிங்காசனம் ஏறியிருக்கிற ராஜா என்று பார்த்தோம். கிபியோனில் கர்த்தர் அவனுக்கு தரிசனமாகி உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டபோது, அவன் உம்முடைய ஜனத்தை நியாயம் தீர்க்க ஞானம் வேண்டும் என்று கேட்டான். அந்த விண்ணப்பம் கர்த்தருக்கு மிகவும் பிரியமாயிருந்தது. இன்று ஒருவேளை கர்த்தர் நமக்கு தரிசனமாகி நாம் வேண்டிய ஞானத்தை அருளினால், அவர் நமக்கு ஞானம்… Continue reading இதழ்:1525 ருசித்தால் மட்டுமே உணவின் சுவை தெரியும்!
இதழ்:1524 கர்த்தருக்கு உகந்த விண்ணப்பம் செய்கிறேனா?
1 இராஜாக்கள் 3: 5 - 10 ........சாலொமோன் இந்தக் காரியத்தைக் கேட்டது ஆண்டவருடைய பார்வைக்கு உகந்த விண்ணப்பமாயிருந்தது. இன்று நான் ஜெபித்து முடித்தவுடனே கர்த்தர் என்னைப் பார்த்து, உன் விண்ணப்பம் எனக்கு உகந்ததாயிருந்தது என்றால் நான் எப்படி துள்ளிக் குதிப்பேன் என்று சற்று யோசித்து பார்த்தேன். என் வார்த்தைகள் அவருக்கு பிரியமாயிருந்தன என்று நினைக்கும்போதே சந்தோஷம் பொங்கும். இன்றைய வேதாகமப் பகுதியின் உண்மை என்னவென்றால் சாலொமோனின் விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டது. தேவனாகிய கர்த்தர் சாலொமோனுடைய விண்ணப்பத்தின் மேல்… Continue reading இதழ்:1524 கர்த்தருக்கு உகந்த விண்ணப்பம் செய்கிறேனா?
இதழ்:1523 உம்முடைய பாதைகளை எனக்கு போதியும்!
1 இராஜாக்கள்: 2:1-4 தாவீது தன்னுடைய மரண காலம் சமீபித்தபோது, அவன் தன் குமாரனாகிய சாலொமோனுக்குக் கட்டளையிட்டு சொன்னது: நான் பூலோகத்தார் யாவரும் போகிற வழியே போகிறேன், நீ திடன்கொண்டு புருஷனாயிரு....... மோசேயின் நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி, நீ உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளையும், கற்பனைகளையும், நியாயங்களையும், சாட்சிகளையும் கைக்கொள்ள, அவர் வழிகளில் நடக்கும்படிக்கு அவருடைய காவலைக் காப்பாயாக. இன்று தொடர்ந்து தாவீது தன்னுடைய மரணப் படுக்கையில் சாலொமோனுக்கு விட்டு சென்ற அறிவுரையைப் படிக்கிறோம். முதலில் நான் இதைப்… Continue reading இதழ்:1523 உம்முடைய பாதைகளை எனக்கு போதியும்!
