2 சாமுவேல் 14: 17, 21 ராஜாவாகிய என் ஆண்டவனுடைய வார்த்தை எனக்கு ஆறுதலாயிருக்கும் என்று உமது அடியாளாகிய நான் எண்ணினேன். நன்மையும் தீமையும் கேட்கும்படி ராஜாவாகிய என் ஆண்டவன் தேவனுடைய தூதனைப்போல இருக்கிறார்.... அப்பொழுது ராஜா யோவாபைப் பார்த்து: இதோ இந்தக் காரியத்தைச் செய்கிறேன். நீ போய் அப்சலோம் என்னும் பிள்ளையாண்டானைத் திரும்ப அழைத்துக்கொண்டு வா என்றான். வேதத்தில் ஆபிரகாம் தேவனாகிய கர்த்தரால் , தான் இதுமுன் அறிந்திராத ஒரு தேசத்துக்கு புறப்படும்படி அழைக்கப்பட்டார். கர்த்தருடைய… Continue reading இதழ்:1811 நாம் நம்பினவைகளை காணுவதே விசுவாசத்தின் பலன்!
Month: July 2023
இதழ்:1810 சிறு குழந்தையைப் போல கர்த்தரை நம்பு!
2 சாமுவேல் 14: 15,16 இப்போதும் என் ஆண்டவனாகிய ராஜாவோடே இந்த வார்த்தையை பேச வந்த முகாந்தரம் என்னவென்றால்: ஜனங்கள் எனக்குப் பயமுண்டாகினதினால் நான் ராஜாவோடே பேசவந்தேன். ஒருவேளை ராஜா தமது அடியாளுடைய வார்த்தையின்படி செய்வார் என்று உமது அடியாளாகிய நான் நினைத்ததினாலும் வந்தேனே ஒழிய வேறில்லை. என்னையும் என் குமாரனையும் ஏகமாய்த் தேவனுடைய சுதந்திரத்திற்கு புறம்பாக்கி அழிக்க நினைக்கிற மனுஷனுடைய கைக்குத் தமது அடியாளை நீங்லாக்கிவிடும்படிக்கு ராஜா கேட்பார். தெக்கோவாவிலிருந்து வந்த பெண் புத்திசாலியானவள் என்று… Continue reading இதழ்:1810 சிறு குழந்தையைப் போல கர்த்தரை நம்பு!
இதழ்:1809 தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்!
2 சாமுவேல் 14: 12, 13 அபொழுது அந்த ஸ்திரீ ராஜாவாகிய என் ஆண்டவனோடே உமது அடியால் ஒரு வார்த்தைசொல்ல உத்தரவாக வேண்டும் என்றாள். அவன் சொல்லு என்றான். அப்பொழுது அந்த ஸ்திரீ: பின்னை ஏன் தேவனுடைய ஜனத்திற்கு விரோதமாய் இப்படிப்பட்ட நினைவை நீர் கொண்டிருக்கிறீர். துரத்துண்ட தம்முடையவனை ராஜா திரும்ப அழைக்காததினாலே ராஜா இப்பொழுது சொன்ன வார்த்தையினால் குற்றமுள்ளவரைப்போல இருக்கிறார். எனக்கு சின்ன வயதிலிருந்தே மிருக கண்காட்சிக்கு போவது மிகவும் பிடிக்கும். அங்கே உள்ள மிருகங்களில்… Continue reading இதழ்:1809 தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்!
இதழ்:1808 இரக்கத்தை மட்டுமே தேவன் உன்னில் எதிர்பார்க்கிறார்!
2 சாமுவேல் 14;11 பின்னும் அவள்; இரத்தப்பழி வாங்குகிறவர்கள் அழிம்பு செய்து, என் குமாரனை அதம்பண்ணப் பெருகிப் போகாதபடிக்கு, ராஜாவானவர் தம்முடைய தேவனாகிய கர்த்தரை நினைப்பாராக என்றாள். அதற்கு ராஜா: உனது குமாரனுடைய மயிரில் ஒன்றாவது தரையில் விழுவதில்லை என்று கர்த்தரின்ஜீவனைக்கொண்டு சொல்கிறேன் என்றான். தாவீதுடைய நம்பிக்கைக்குரிய சேனை வீரனும் அவன் நண்பனுமாகிய யோவாப் தாவீதுக்கும் அவனுடைய குமாரனாகிய அப்சலோமுக்கும் இடையே இருந்த இடைவெளியைப் போக்க தெக்கோவாவிலிருந்து ஒரு புத்தியுள்ள ஸ்திரீயைக் கொண்டு வந்தான். அவள் தன்னுடைய… Continue reading இதழ்:1808 இரக்கத்தை மட்டுமே தேவன் உன்னில் எதிர்பார்க்கிறார்!
இதழ்:1807 என்னை மீறி உன்னை யாரும் தொட முடியாது!
2 சாமுவேல் 14: 9,10 பின்னும் அந்த தெக்கோவாவூர் திரீ ராஜாவைப் பார்த்து: ராஜாவாகிய என் ஆண்டவனே, ராஜாவின்மேலும் அவர் சிங்காசனத்தின்மேலும் குற்றமில்லாதபடிக்கு, அந்தப்பழி என்மேலும், என் தகப்பன் வீட்டின்மேலும் சுமரக்கடவது என்றாள். அதற்கு ராஜா உனக்கு விரோதமாகப் பேசுகிறவனை என்னிடத்தில் கொண்டுவா. அப்பொழுது அவன் இனி உன்னைத் தொடாதிருப்பான் என்றான். கடந்த சில நாட்களாக நாம் தெக்கோவாவூரின் புத்தியுள்ள ஸ்திரீயைப் பற்றி படித்து வருகிறோம். அவள் எல்லாவற்றையும் பகுத்தறியத் தக்க ஞானம் கொண்டவள் என்றும், அவள்… Continue reading இதழ்:1807 என்னை மீறி உன்னை யாரும் தொட முடியாது!
இதழ்:1806 நம் தேவன் மனவுருக்கமும், இரக்கமும் உள்ளவர்!
2 சாமுவேல் 14: 5 -8 ராஜா அவளைப் பார்த்து: உனக்கு என்ன வேண்டும் என்றதற்கு அவள்: நான் விதவையானவள். என் புருஷன் சென்று போனான். உமது அடியாளுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள். அவர்கள் இருவரும் வெளியிலே சண்டைபண்ணி, அவர்களை விலக்க ஒருவரும் இல்லாதபடியினால், ஒருவன் மற்றவனை அடித்துக் கொன்று போட்டான். வம்சத்தார் எல்லாரும் உம்முடைய அடியாளுக்கு விரோதமாய் எழும்பி, தன் சகோதரனைக் கொன்றுபோட்டவனை ஒப்பி, அவன் கொன்ற அவன் சகோதரனுடைய பிராணனுக்காக நாங்கள் அவனைக் கொன்றுபோடுவோம்.… Continue reading இதழ்:1806 நம் தேவன் மனவுருக்கமும், இரக்கமும் உள்ளவர்!
இதழ்:1805 என் வாய் மீட்பின் செய்தியைக் கூற ஏதுவாக்கியருளும்!
2 சாமுவேல் 14: 1- 4 ராஜாவின் இருதயம் அப்சலோமின்மேல் இன்னும் தாங்கலாயிருக்கிறதைச் செருயாவின் குமாரன் யோவாப் கண்டு, அவன் தெக்கோவாவிலிருக்கிற புத்தியுள்ள ஒரு ஸ்திரீயை அழைத்து...நீ துக்க வஸ்திரங்கள் உடுத்திக்கொண்டு.... ராஜாவினிடத்தில் போய் அவரை நோக்கி இன்ன இன்ன பிரகாரமாய் சொல்..... அப்படியே ..அந்த ஸ்திரீ ராஜாவோடே பேசப்போய் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி: ராஜாவே ரட்சியும் என்றாள். இன்றைய வேதாகமப்பகுதியில் நாம் பார்க்கும் இந்தப்பெண்ணை தாவீதுடைய சேனைத்தலைவனும், நெருங்கிய நண்பனுமாகிய , யோவாப் தெக்கோவாவிலிருக்கிற புத்தியுள்ள… Continue reading இதழ்:1805 என் வாய் மீட்பின் செய்தியைக் கூற ஏதுவாக்கியருளும்!
இதழ்:1804 நன்மை தீமையை பகுத்தறியும் ஞானம்!
2 சாமுவேல் 14: 1- 2 ராஜாவின் இருதயம் அப்சலோமின்மேல் இன்னும் தாங்கலாயிருக்கிறதைச் செருயாவின் குமாரன் யோவாப் கண்டு, அவன் தெக்கோவாவிலிருக்கிற புத்தியுள்ள ஒரு ஸ்திரீயை அழைத்து.. இன்றைய வேதாகமப் பகுதியில் நாம் படிக்கும் தெக்கோவாவிலிருக்கிற புத்தியுள்ள ஒரு ஸ்திரீயைப் இதுவரை வேதத்தில் படித்ததாக ஞாபகமே இல்லை! உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? இந்தப் பெண்ணைப் பற்றி பிரசங்கம் கேட்டிருக்கிறோமா? நான் கேட்டதே இல்லைங்க! வேதத்தை வாசிக்கும்போது அல்லது வேதாகமக் கல்லூரியில் படிக்கும்போது இந்தப் பெண்ணைப் பற்றி ஒருவேளை படித்திருந்தாலும் இவள்… Continue reading இதழ்:1804 நன்மை தீமையை பகுத்தறியும் ஞானம்!
இதழ்:1803 பயத்திலிருந்து விடுதலை கொடுக்கும் தேவன்!
2 சாமுவேல் 17: 6-10 ஆகிலும் அப்சலோம் அற்கியனாகிய ஊசாயைக் கூப்பிட்டு அவன் வாய்மொழியையும் கேட்போம் என்றான். ஊசாய் அப்சலோமிடத்தில் வந்தபோது, அப்சலோம் அவனைப்பார்த்து: இந்தப் பிரகாரமாக அகித்தோப்பேல் சொன்னான். அவன் வார்த்தையின்படி செய்வோமா? அல்லவென்றால் நீ சொல் என்றான். அப்பொழுது ஊசாய் அப்சலோமை நோக்கி: அக்கிதோப்பேல் இந்தவிசை சொன்ன ஆலோசனை நல்லதல்ல என்றான். ... உம்முடைய தகப்பனும் அவன் மனுஷரும் பலசாலிகள் ... உம்முடைய தகப்பன் யுத்தவீரனுமாயிருக்கிறார்... உம்முடைய தகப்பன் சவுரியவான் என்றும் அவனோடிருக்கிறவர்கள் பலசாலிகள்… Continue reading இதழ்:1803 பயத்திலிருந்து விடுதலை கொடுக்கும் தேவன்!
இதழ்:1802 நாம் பெலனற்று போகும் வேளை கன்மலையை நெருங்குவோம்!
2 சாமுவேல் 17: 1-4 பின்பு அகித்தோப்பேல் அப்சலோமை நோக்கி, நான் பன்னீராயிரம் பேரைத் தெரிந்து கொண்டு, எழுந்து இன்று இராத்திரி தாவீதைப் பின் தொடர்ந்து போகட்டும். அவன் விடாய்த்தவனும் கைதளர்ந்தவனுமாயிருக்கையில் நான் அவனிடத்தில் போய் அவனைத் திடுக்கிடப் பண்ணுவேன். அப்போது அவனோடிருக்கும் ஜனங்களெல்லாரும் ஓடிப்போவதினால் நான் ராஜா ஒருவனைமாத்திரம் வெட்டி, ஜனங்களையெல்லாம் உம்முடைய வசமாக திரும்பப்பண்ணுவேன். இப்படி செய்ய நீர் வகைதேடினால் எல்லாரும் திரும்பின பின் ஜனங்கள் சமாதானத்தோடு இருப்பார்கள் என்றான். இந்த வார்த்தை அப்சலோமின்… Continue reading இதழ்:1802 நாம் பெலனற்று போகும் வேளை கன்மலையை நெருங்குவோம்!
