நியாதிபதிகள்: 14:3 அப்பொழுது அவன் தாயும் அவன் தகப்பனும் அவனை நோக்கி: நீ போய் விருத்தசேதனமில்லாத பெலிஸ்தரிடத்தில் ஒரு பெண்ணைக்கொள்ளவேண்டியதென்ன? உன் சகோதரரின் குமாரத்திகளிலும், எங்கள் ஜனமனைத்திலும் பெண் இல்லையா என்றார்கள். சிம்சோன் தன் தகப்பனை நோக்கி :அவள் என் கண்ணுக்குப் பிரியமானவள், அவளையே எனக்குக் கொள்ளவேண்டும் என்றான். நாம் சிம்சோனைப் பற்றிப் படிப்பதைத் தொடருவோம். தேவனுடைய பணியாக பெலிஸ்தரின் ஊரான திம்னாத்துக்கு அனுப்பப்பட்ட சிம்சோன், அங்கு ஒரு பெண்ணைப் பார்த்துவிட்டு அவள்தான் எனக்கு வேண்டும்… Continue reading இதழ்:1951 ஜீவ அப்பத்தால் திருப்தியாகு! வழிவிலக மாட்டாய்!
Month: January 2024
இதழ்:1950 கண்களால் கண்டதை அடைய முடிவு செய்யாதே!
நியாதிபதிகள்: 14:2 (சிம்சோன்) திரும்ப வந்து தன் தாயையும் தகப்பனையும் நோக்கி; திம்னாத்திலே பெலிஸ்தரின் குமாரத்திகளில் ஒரு பெண்ணைக் கண்டேன்; அவளை எனக்குக் கொள்ள வேண்டும் என்றான். என்னுடைய வாழ்க்கையில் சிறு வயது முதல் இது வரைக்கும் ஏதாவது ஒரு பொருளைப் பார்த்து , அதன்மேல் ஆசைப்பட்டு அதை எப்படியாவது அடையவேண்டும் என்று அடம் பிடித்து அழுத ஞாபகம் எனக்கு இல்லவே இல்லை. சிறு வயதிலிருந்தே இதை’செய்யாதிருப்பாயாக’ , அதை விரும்பாதிருப்பாயாக என்ற கட்டளைகளை எனக்கு நானே… Continue reading இதழ்:1950 கண்களால் கண்டதை அடைய முடிவு செய்யாதே!
இதழ்:1949 நம்மை மயக்கும் சிற்றின்பங்கள்!
நியாதிபதிகள்: 14: 1 ” சிம்சோன் திம்னாத்துக்குப் போய் திம்னாத்திலே பெலிஸ்தரின் குமாரத்திகளில் ஒரு பெண்ணைக் கண்டு,” நாங்கள் ஆந்திராவில் உள்ள கர்நூல் என்ற பட்டணத்தில் பல வருடங்கள் வாழ்ந்தோம். எங்கள் வீட்டுக்கு பின்பாக துங்கபத்திரா ஆறு ஓடியது. மும்பையில் மழை அதிகமாக இருந்தால் துங்கபத்திராவில் தண்ணீர் மிகவும் அதிகமாக ஓடும். ஒருவருடம் ஆற்று நீர் கரைபுரண்டு ஊருக்குள் புகுந்து விட்டது. ஆற்றில் ஓடியவரை சுத்தமாக ஓடிக்கொண்டிருந்த நீர், ஊருக்குள் புகுந்த போது வழியில் உள்ள எல்லா… Continue reading இதழ்:1949 நம்மை மயக்கும் சிற்றின்பங்கள்!
இதழ்:1948 அவரே உன்னை அழைப்பவர்!
நியாதிபதிகள்:13 : 25 “அவன் சோராவுக்கும் எஸ்தாவோலுக்கும் நடுவிலுள்ள தாணின் பாளயத்தில் இருக்கையில் கர்த்தருடைய ஆவியானவர் அவனை ஏவத்துவக்கினார்.” ஒருநிமிடம் நாம் இந்த தாணின் பாளயத்தில் வாழ்வதாக நினைத்துப் பார்ப்போம். நம்மை சுற்றிலும் வாழும் பெலிஸ்தியர் எப்பொழுதும் நம் சரீர வாழ்க்கையை மட்டும் அல்ல நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையையும் தரைமட்டமாக்க காத்துக்கொண்டிருந்தால் நம்மால் சந்தோஷமாக ஒருநாளாவது வாழ முடியுமா? அப்படியாக நாம் உயிரைக் கையில் பிடித்து வாழ்ந்து கொண்டிருக்கையில், ஒருநாள் நம் பகுதியில் குழந்தையே இல்லாமல் வாழ்ந்த… Continue reading இதழ்:1948 அவரே உன்னை அழைப்பவர்!
இதழ்:1947 உன்னை உருவாக்கினவர் உனக்குத் துணை செய்கிறவர்!
நியாதிபதிகள்: 13:24 ” பின்பு அந்த ஸ்திரீ ஒரு குமாரனைப் பெற்று அவனுக்குச் சிம்சோன் என்று பேரிட்டாள்; அந்தப் பிள்ளை வளர்ந்தது, கர்த்தர் அவனை ஆசீர்வதித்தார். நேற்று இரவு எனக்குத் தூக்கமே பிடிக்கவில்லை. விடியற்காலை எங்கள் குக்கூ கடிகாரத்தில் உள்ள குருவி மூன்று முறை அடித்தவுடன் எழும்பிவிட்டேன். ஜன்னல் வழியே வெளியே சற்று நேரம் பார்த்தேன். என்னால் நம்பவே முடியவில்லை. இருண்ட மேகத்தைக் கிழித்துக்கொண்டு சந்திரனின் ஒளிக்கதிர்கள் வீசிக்கொண்டிருன்தன. இருண்ட வானமும், ஊடுருவி வீசிய ஒளியும் என் தேவனாகிய… Continue reading இதழ்:1947 உன்னை உருவாக்கினவர் உனக்குத் துணை செய்கிறவர்!
இதழ்:1946 தேவனை அறிந்த பெற்றோர் பிள்ளைகளுக்கு அளிக்கும் ஆசீர்வாதம்!
நியாதிபதிகள்: 13:24 ” பின்பு அந்த ஸ்திரீ ஒரு குமாரனைப் பெற்று அவனுக்குச் சிம்சோன் என்று பேரிட்டாள்; அந்தப் பிள்ளை வளர்ந்தது, கர்த்தர் அவனை ஆசீர்வதித்தார். இன்றைக்கு ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளுக்கு சொத்து சுகங்களை விட்டு செல்ல ஆசைப்படுகிறார்கள். நான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் சரி என் பிள்ளைகள் சுகமாக வாழ வேண்டும் என்பதே ஒவ்வொருவரின் கனவும். சொத்துப் பத்திரங்களையும், சுகபோக வாழ்க்கையையும், பொன் ஆபரணங்களையும், உலகப்பிரகாரமான ஞானத்தையும் அள்ளி அள்ளி கொடுக்கும் நம்மில் பலர் ஆவிக்குரிய… Continue reading இதழ்:1946 தேவனை அறிந்த பெற்றோர் பிள்ளைகளுக்கு அளிக்கும் ஆசீர்வாதம்!
இதழ்:1945 பிள்ளைகளை வளர்க்க ஜெபம் தேவை!
நியாதிபதிகள்: 13:8 “….பிறக்கப்போகிற பிள்ளைக்காக நாங்கள் செய்யவேண்டியதை எங்களுக்குக் கற்பிப்பாராக என்று வேண்டிக்கொண்டான்”. ஒருநாள் அமெரிச்காவில் வாழும் ஒரு இளம் பெண் என்னிடம் , ” அக்கா நீங்கள் வேலையும் செய்து கொண்டு, எப்படி உங்கள் இரண்டு பிள்ளைகளையும் நன்கு படிக்க வைத்து, கர்த்தருக்குள் வளர்த்து, இரண்டு பேருக்கும் நல்ல வாழ்க்கைத்துணையையும் கண்டுபிடித்தீர்கள் என்று கேட்டாள். நான் அதற்கு பதிலாக புன்னகைக்கத்தான் முடிந்தது. இன்றும் என்னிடம் யாராவது கேட்டால் பதிலுக்கு ஒரு புன்முறுவல்தான் வரும். ஏனெனில் எனக்கு… Continue reading இதழ்:1945 பிள்ளைகளை வளர்க்க ஜெபம் தேவை!
இதழ்:1944 கடினமான காத்திருத்தல் ஆசீர்வாதமாய் மாறும்!
நியாதிபதிகள்: 13:8 ” அப்பொழுது மனோவா கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி; ஆ, என் ஆண்டவரே, நீர் அனுப்பின தேவனுடைய மனுஷன் மறுபடியும் ஒருவிசை எங்களிடத்தில் வந்து, பிறக்கப்போகிற பிள்ளைக்காக நாங்கள் செய்யவேண்டியதை எங்களுக்குக் கற்பிப்பாராக என்று வேண்டிக்கொண்டான்”. எங்கள் வீட்டில் என் கணவர் ஒரு கடிகாரம் போல. விடியற்காலத்தில் , நான் வைத்த அலாரம் அடித்தவுடன் பக்கத்தில் தடவிப்பார்ப்பேன். வெறும் தலையணைதான் இருக்கும். அலாரம் அடிக்குமுன்னரே எழும்பி விடுவார்கள். நாங்கள் எங்காவது புறப்பட்டால் போதும், தான் அரை… Continue reading இதழ்:1944 கடினமான காத்திருத்தல் ஆசீர்வாதமாய் மாறும்!
இதழ்:1943 கர்த்தரை பரீட்சை பார்க்காமல் விசுவாசி!
நியாதிபதிகள்: 13: 11 ” அப்பொழுது மனோவா எழுந்திருந்து , தன் மனைவியின் பின்னாலே போய் , அவரிடத்துக்கு வந்து: இந்த ஸ்திரீயோடே பேசினவர் நீர்தானா என்று அவரிடத்தில் கேட்டான்; அவர் நான் தான் என்றார். ஆண்டவரே நீர் என்னை வழிநடத்துவது உண்மையானால் எனக்கு ஒரு அடையாளத்தைக் காண்பியும்! எங்கோ இந்த வாசகத்தை கேட்டமாதிரி இல்லையா? எத்தனைமுறை நீங்களும் நானும் இப்படியாக கர்த்தரை பரீட்சை பார்த்திருக்கிறோம். இதைப் படிக்கும்போது கர்த்தரை பரீட்சை பார்த்த ஒருவனுடைய கதை மனதில்… Continue reading இதழ்:1943 கர்த்தரை பரீட்சை பார்க்காமல் விசுவாசி!
இதழ்:1942 குறைவுள்ள விசுவாசத்திற்கு காரணம் உன் சந்தேகமா?
நியாதிபதிகள்: 13:8 “அப்பொழுது மனோவா கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி; ஆ, என் ஆண்டவரே, நீர் அனுப்பின தேவனுடைய மனுஷன் மறுபடியும் ஒருவிசை எங்களிடத்தில் வந்து பிறக்கப்போகிற பிள்ளைக்காக நாங்கள் செய்யவேண்டியதை எங்களுக்குக் கற்பிப்பாராக என்று வேண்டிக்கொண்டான்.” ஒவ்வொருமுறையும் என்னைப்போல குறைந்த விசுவாசம் உள்ளவர்களின் கதையைவேதாகமத்தில் வாசிக்கும்போது கர்த்தருக்கு உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றி செலுத்துவேன். கர்த்தர் அவர்களிடம் ஒருமுறை அல்ல பலமுறை தம்முடைய வழிநடத்துதலையும், தம்முடைய வார்த்தையையும் புரியவைக்க வேண்டியிருந்தது. மலடியாயிருந்த மனோவாவின் மனைவியிடம் அவளுக்குப் பிறக்கப்போகிற பிள்ளையைப்பற்றி… Continue reading இதழ்:1942 குறைவுள்ள விசுவாசத்திற்கு காரணம் உன் சந்தேகமா?
