யாக்கோபு 5:17 எலியா என்பவன் நம்மைப் போலப் பாடுள்ள மனுஷனாயிருந்தும்.... எலியாவைப்பற்றி படிக்க ஆரம்பிக்கிறோம். நான் படித்து எழுத மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேதப்பகுதி இது. இன்றைய வேதாகமப்பகுதி எலியாவைப் பற்றி, நம்மைப்போல சாதாரணமான, பாடுகளுள்ள மனிதன் என்று கூறுகிறது. இந்த சாதாரணத்துவமே தேவன் எலியாவைத் தெரிந்து கொண்டதன் காரணமாயிருக்குமோ என்று நான் நினைப்பதுண்டு. வேதாகம வல்லுநர் மாத்யூ ஹென்ரி இதைப் பற்றி விளக்கும்போது, நாம் பூமியின் மண்ணினால் உருவாக்கப்பட்டோம், வெறுமையிலிருந்து உலகத்தை உருவாக்கிய அதே… Continue reading இதழ்:2309 மிகச் சாதாரணமான ஓர் மண்பாண்டம் நான்!
Month: June 2025
இதழ்:2308 தேவனுடைய வார்த்தைகள் ஒருக்காலும் அழியாது!
1 இராஜாக்கள் 16 :34 அவன் நாட்களில் பெத்தேல் ஊரானாகிய ஈயேல் எரிகோவைக் கட்டினான், கர்த்தர் நூனின் குமாரனாகிய யோசுவாவைக்கொண்டு சொல்லியிருந்த வார்த்தையின்படியே அவன் அதின் அஸ்திபாரத்தைப் போடுகிறபோது, அபிராம் என்னும் தன் மூத்த குமாரனையும், அதின் வாசல்களை வைக்கிறபோது செகூப் என்னும் தன் இளையகுமாரனையும் சாகக் கொடுத்தான். நான் இன்று எலியாவை பற்றி எழுத ஆரம்பிக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் இந்த அதிகாரத்தை விட்டு வெளியேறு முன்னர் தேவனாகிய கர்த்தர் ஒரு அருமையான சத்தியத்தை வெளிப்படுத்தினார்.… Continue reading இதழ்:2308 தேவனுடைய வார்த்தைகள் ஒருக்காலும் அழியாது!
இதழ்:2307 தம்முடைய புயத்தால் என்னை நடத்தும் என் தேவன்!
ஆதியாகமம் 22 :14 ஆபிரகாம் அந்த இடத்துக்கு யகோவாயீரே என்று பெயரிட்டான் அதனாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக் கொள்ளப்படும் என்று இந்நாள் வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னால் நான் எழுதிக் கொண்டிருந்த வேதபகுதிக்கு வந்திருக்கிறோம். நாம் எலியாவின் வாழ்க்கையை மறுபடியும் கண்ணோக்கி விட்டு, எலிசாவின் வாழ்க்கையைத் தொடரலாம் என்று நினைக்கிறேன். நாம் 1 இராஜாக்கள் , 2 இராஜாக்கள் புத்தகங்களைப் படிக்கும் பொழுது தேவனாகிய கர்த்தருடைய பிள்ளைகள் எவ்வாறு கீழ்ப்படியாமல் போனார்கள் என்பதைப்… Continue reading இதழ்:2307 தம்முடைய புயத்தால் என்னை நடத்தும் என் தேவன்!
இதழ்:2306 தேவனுடைய செட்டைகள் மட்டுமே கொடுக்கும் பாதுகாப்பு!
1 ராஜாக்கள் 16 :25 உம்ரி கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானதை செய்து தனக்கு முன்னிருந்த எல்லாரைப் பார்க்கிலும் கேடாய் நடந்து, ஒவ்வொரு நாளும் உலகத்தில் நடப்பவைகளை பார்க்கும் போதும், கேள்விப்படும் பொழுதும், செய்தித்தாள்களில் வாசிக்கும் போதும், என் மனதில் விழும் கேள்வி , இன்னும் எவ்வளவு தூரம்தான் இந்த உலகம் கீழ்நோக்கி செல்லும் என்பதுதான். இஸ்ரவேலை ஆண்ட ராஜாக்கள் ஒவ்வொருவராக 'ஒரு நன்மையும் இல்லை ' என்ற முத்திரையைப் பதித்த பின், ராஜாவாகிய உம்ரி பதவி ஏற்கிறான். அவன் தனக்கு… Continue reading இதழ்:2306 தேவனுடைய செட்டைகள் மட்டுமே கொடுக்கும் பாதுகாப்பு!
இதழ்:2305 இருளின் மத்தியில் ஓர் ஒளிக்கதிர்!
1 ராஜாக்கள் 15:11 ஆசா தன் தகப்பனாகிய தாவீதை போல கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதை செய்தான். இன்றைய வேதாகமப் பகுதி ஒரு இருண்ட வேளையில் வீசும் ஒளிக்கதிர் போல உள்ளது. ஒவ்வொரு ராஜாக்களும் தேவனைப் பின்பற்றத் தவறிக் கொண்டிருந்த வேளையில் இந்த ஒரு மனிதன் தாவீதைப் போல கர்த்தருடைய பார்வைக்கு செம்மையானத செய்தான் என்று பார்க்கிறோம். தேவனை அறியாத, மற்றும் கர்த்தருக்கு கீழ்ப்படியாத மக்கள் வாழும் ஒரு பகுதியில் நாம் வாழ்ந்து கொண்டிருந்தாலும் அந்த இடத்தில் நாம் எப்படி… Continue reading இதழ்:2305 இருளின் மத்தியில் ஓர் ஒளிக்கதிர்!
இதழ்:2304 பரலோக தேவன் யாவற்றையும் அறிவார்!
1 இராஜாக்கள் 16:1-3 பாஷாவுக்கு விரோதமாக கர்த்தருடைய வார்த்தை ஆனானியின் குமாரனாகிய யெகூவுக்கு உண்டாயிற்று, அவர்; நான் உன்னைத் தூளிலிருந்து உயர்த்தி, உன்னை என் ஜனமாகிய இஸ்ரவேலின் மேல் தலைவனாக வைத்திருக்கையில், நீ யெரொபெயாமின் வழியிலே நடந்து, என் ஜனமாகிய இஸ்ரவேல் தங்கள் பாவங்களால் எனக்குக் கோபமுண்டாக்கும்படி அவர்களைப் பாவஞ்செய்யப்பண்ணுகிறபடியினால், இதோ நான் பாஷாவின் பின்னடியாரையும் அவன் வீட்டாரின் பின்னடியாரையும் அழித்துக்போட்டு, உன் வீட்டை நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் வீட்டைப்போல ஆக்குவேன். இஸ்ரவேலை ஆண்ட ராஜாக்களை ஒரு… Continue reading இதழ்:2304 பரலோக தேவன் யாவற்றையும் அறிவார்!
இதழ்:2302 மன்னிக்கும் போது நாம் கடவுளின் குணத்தை உடையவர்களாகிறோம்!
1 இராஜாக்கள் 15:25 -26 ... யெரொபெயாமின் குமாரனாகிய நாதாப் இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி....கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதை செய்து... தன் தகப்பன் பாவத்திலும்...நடந்தான். 28: பாஷா யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் மூன்றாம் வருஷத்திலே அவனைக் கொன்றுபோட்டபின் அவன் ஸ்தானத்திலே ராஜாவானான். 30: அவன் ராஜாவானபின் அவன் யெரொபெயாமின் வீட்டாரையெல்லாம் வெட்டிப்போட்டான். நம்முடைய காலத்தில் ஊழியம் செய்து சில வருடங்களுக்கு முன்னர் மறைந்த சுவிசேஷகர் பில்லி கிரஹாமுக்கு அடுத்தபடியாக உலக சுவிசேஷகர் என்று அழைக்கப்படும் பாஸ்டர் சார்ல்ஸ் சுவிண்டோல் அவர்களை… Continue reading இதழ்:2302 மன்னிக்கும் போது நாம் கடவுளின் குணத்தை உடையவர்களாகிறோம்!
இதழ்:2301 இன்று எது உன்னை ஆளுகை செய்து கொண்டிருக்கிறது?
1 இராஜாக்கள் 15:34 கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, யெரொபெயாமின் வழியிலும், அவன் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின அவனுடைய பார்வையிலும் நடந்தான். இராஜாக்களில் என்னை மிகவும் குழப்ப வைப்பது இந்த இரண்டு பெயர்கள் தான்! நீங்களும் அப்படி நினைத்ததுண்டா? யெரொபெயாம் இஸ்ரவேலின் வட பகுதியை ஆள ஆரம்பித்தபோது, சாலொமோனின் குமாரனாகிய ரெகொபெயாம் யூதா, பென்யமீன் கோத்திரங்களின் சிங்காசனத்தில் அமர்ந்தான். இந்தப் புத்தகத்தில் 14 ம் அதிகாரத்திலிருந்து மறுபடியும், மறுபடியும் வரும் ஒரு வாக்கியம் என்னவென்றால், அவர்கள் கர்த்தருடைய பார்வைக்கு பொல்லாப்பானதை… Continue reading இதழ்:2301 இன்று எது உன்னை ஆளுகை செய்து கொண்டிருக்கிறது?
இதழ்:2300 உன் நடத்தைக்கு நீயே பொறுப்பாளி!
1 இராஜாக்கள் 14:1-3 ,5,17 அக்காலத்திலே யெரோபெயாமின் குமாரனாகிய அபியா வியாதியில் விழுந்தான். அப்பொழுது யெரொபெயாம் தன் மனைவியைப்பார்த்து; நீ எழுந்து நீ யெரொபெயாமின் மனைவி என்று ஒருவரும் அறியாதபடிக்கு வேஷம்மாறி சீலோவுக்குப் போ, இந்த ஜனத்தின்மேல் நான் ராஜாவாவேன் என்று என்னோடே சொன்ன தீர்க்கதரிசியாகிய அகியா அங்கே இருக்கிறான்...... பிள்ளைக்கு சம்பவிக்கப்போகிறது இன்னதென்று அவன் உனக்கு அறிவிப்பான் என்றான். கர்த்தர் அகியாவினிடத்தில்; இதோ யெரொபெயாமின் மனைவி வியாதியாயிருக்கிற தன் குமாரனுக்காக உன்னை ஒரு விசேஷம்கேட்க… Continue reading இதழ்:2300 உன் நடத்தைக்கு நீயே பொறுப்பாளி!
இதழ்:2299 தேவ பிரசன்னத்தை இழந்து போகாதே!
1 இராஜாக்கள் 14:1-3 அக்காலத்திலே யெரோபெயாமின் குமாரனாகிய அபியா வியாதியில் விழுந்தான். அப்பொழுது யெரொபெயாம் தன் மனைவியைப்பார்த்து; நீ எழுந்து நீ யெரொபெயாமின் மனைவி என்று ஒருவரும் அறியாதபடிக்கு வேஷம்மாறி சீலோவுக்குப் போ, இந்த ஜனத்தின்மேல் நான் ராஜாவாவேன் என்று என்னோடே சொன்ன தீர்க்கதரிசியாகிய அகியா அங்கே இருக்கிறான்...... பிள்ளைக்கு சம்பவிக்கப்போகிறது இன்னதென்று அவன் உனக்கு அறிவிப்பான் என்றான். இன்று நாம் பார்க்கும் சம்பவம் ஒரு சோகமான ஒன்று! இதற்கு காரணம் யெரோபெயாம் தன்னை ராஜாவாக்கிய… Continue reading இதழ்:2299 தேவ பிரசன்னத்தை இழந்து போகாதே!
