1 இராஜாக்கள் 17:21 - 23 அந்தப் பிள்ளையின்மேல் மூன்றுதரம் குப்புறவிழுந்து; என் தேவனாகியக் கர்த்தாவே, இந்தப் பிள்ளையின் ஆத்துமா அவனுக்குள் திரும்பிவரப்பண்ணும் என்று கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான். கர்த்தர் எலியாவின் சத்தத்தைக் கேட்டார், பிள்ளையினுடைய ஆத்துமா அவனுள் திரும்பி வந்தது .......... எலியா பிள்ளையை எடுத்து .......அவன் தாயினிடத்தில் கொடுத்து: பார் உன் பிள்ளை உயிரோடிருக்கிறான் என்றான். இன்றைய வேதாகமப்பகுதியை வாசிப்போமானால், அன்று அந்த சிறிய குடிசையில், அந்த விதவையின் வீட்டில் விவரிக்கமுடியாத சந்தோஷம்… Continue reading இதழ்:2351 வாக்கு மாறாத வல்ல தேவன்!
Month: August 2025
இதழ்:2350 இருளில் ஒளி வீசும் தீபம் போன்ற போதனை!
1 இராஜாக்கள் 17: 9 அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று. அவர் நீ எழுந்து சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருக்குப் போய் அங்கே தங்கியிரு, உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்குக் கட்டளையிட்டேன் என்றார். இந்த வசனத்தில்தான் நாம் முதன்முதலில் சாறிபாத் விதவையை சந்திக்கிறோம். நான் இதை முதலில் வாசித்தபோது என் மனதில் எழுந்த ஒரு கேள்வி என்னவென்றால், ஏன் தேவனாகியக் கர்த்தர், தம்முடைய ஊழியக்காரனை ஒரு தனிமையில் வாழ்ந்த விதவையினிடத்தில், அதுவும் ஒரு பைசா… Continue reading இதழ்:2350 இருளில் ஒளி வீசும் தீபம் போன்ற போதனை!
இதழ்:2349 உன் கடந்த காலம் ஆசீர்வாதத்தைத் தடை செய்ய முடியாது!
1 இராஜாக்கள் 17: 18 அப்பொழுது அவள் எலியாவை நோக்கி, தேவனுடைய மனுஷனே எனக்கும் உமக்கும் என்ன? என் அக்கிரமத்தை நினைக்கப் பண்ணவும், என் குமாரனை சாகப்பண்ணவுமா என்னிடத்தில் வந்தீர் என்றாள், வேதத்தில் நாம் காணும் மனிதர்களில் ஒருவன் தன் வாழ்வை அதிகமாக நாசம் செய்து விட்டான் என்றால் அது தாவீது என்றே நான் சொல்வேன்! இன்னொருவனின் மனைவிமேல் காமம் கொண்டது மட்டுமல்லாமல், அவள் கர்ப்பவதியானாள் என்றவுடன் அவளது கணவனைத் திட்டமிட்டுக் கொலை செய்தவன். இப்படி… Continue reading இதழ்:2349 உன் கடந்த காலம் ஆசீர்வாதத்தைத் தடை செய்ய முடியாது!
இதழ்:2348 நம் உடனடித் தேவைகள் மட்டுமல்ல எதிர்காலத் தேவைகளையும் அறிந்த தேவன்!
1 இராஜாக்கள் 17:17 - 20 இவைகள் நடந்த பின்பு வீட்டுக்காரியாகிய அந்த ஸ்திரீயின் மகன் வியாதியில் விழுந்தான். அவனுடைய சுவாசம் போகுமட்டும் அவனுடைய வியாதி அதிகரித்துக்கொண்டே இருந்தது. அப்பொழுது அவள் எலியாவை நோக்கி, தேவனுடைய மனுஷனே எனக்கும் உமக்கும் என்ன? அதற்கு அவன்: உன் குமாரனை என்னிடத்தில் தா என்று சொல்லி அவனை அவள் மடியிலிருந்து எடுத்து, தான் தங்கியிருக்கிற மேல் வீட்டிலே அவனைக் கொண்டுபோய் தன் கட்டிலின் மேல் வைத்து; என் தேவனாகியக் கர்த்தாவே,… Continue reading இதழ்:2348 நம் உடனடித் தேவைகள் மட்டுமல்ல எதிர்காலத் தேவைகளையும் அறிந்த தேவன்!
இதழ்:2347 வேதத்தின் பொன்னான பொக்கிஷங்களைத் தவற விடாதே!
1 இராஜாக்கள் 17:19 அதற்கு அவன்: உன் குமாரனை என்னிடத்தில் தா என்று சொல்லி அவனை அவள் மடியிலிருந்து எடுத்து, தான் தங்கியிருக்கிற மேல் வீட்டிலே அவனைக் கொண்டுபோய் தன் கட்டிலின் மேல் வைத்து; நான் இன்று ஒரு உண்மையை சொல்லித்தான் ஆக வேண்டும். நான் என் வாழ்வில் இதைத் தவற விட்டிருப்பேன்! எனக்கு வேதத்தில் உள்ள கதைகளெல்லாம் நன்றாகத் தெரியும் என்ற எண்ணம் எனக்கு! எவ்வளவு பெரிய தவறு தெரியுமா அது! இன்று நான் வேதம்… Continue reading இதழ்:2347 வேதத்தின் பொன்னான பொக்கிஷங்களைத் தவற விடாதே!
இதழ்:2346 ஒருவரை சோர்ந்துபோக விடாமல் உற்சாகப்படுத்தும் வார்த்தைகள்!
1 இராஜாக்கள் 17: 18 அப்பொழுது அவள் எலியாவை நோக்கி, தேவனுடைய மனுஷனே எனக்கும் உமக்கும் என்ன? என் அக்கிரமத்தை நினைக்கப் பண்ணவும், என் குமாரனை சாகப்பண்ணவுமா என்னிடத்தில் வந்தீர் என்றாள், சாறிபாத் விதவையின் ஒரே மகன் இறந்துவிட்டான். அவளும் அவளுடைய குமாரனும் உணவில்லாமல் நாம் மரித்து விடுவோம் என்று நினைத்த வேளையில் அற்புதமாய்க் காப்பாற்றப்பட்டனர். நமக்கு வந்த ஆபத்து போய்விட்டது, இனி பஞ்சம் நீங்கும்வரை எந்தப் பிரச்சனையும் வராது என்று அந்தப்பெண் திருப்தியடைந்த வேளையில்,… Continue reading இதழ்:2346 ஒருவரை சோர்ந்துபோக விடாமல் உற்சாகப்படுத்தும் வார்த்தைகள்!
இதழ்:2345 வார்த்தைகளால் தாக்கப்படுகிறாயா?
இராஜாக்கள் 17:17 - 18 இவைகள் நடந்த பின்பு வீட்டுக்காரியாகிய அந்த ஸ்திரீயின் மகன் வியாதியில் விழுந்தான். அவனுடைய சுவாசம் போகுமட்டும் அவனுடைய வியாதி அதிகரித்துக்கொண்டே இருந்தது. அப்பொழுது அவள் எலியாவை நோக்கி, தேவனுடைய மனுஷனே எனக்கும் உமக்கும் என்ன? சில நேரங்களில் நான் வேதத்தைப் படிக்கும்போது, சிலருடைய வாழ்வில் நடந்த சம்பவங்களைப் பார்த்து ஏன் இப்படி நடந்தது, இந்த மனுஷனுக்கு ஏன் இவ்வளவு கஷ்டங்கள் கொடுக்கப்பட்டது என்று எனக்குள் கேட்பதுண்டு. அந்த மாதிரியானத் தருணம்தான் இதுவும்.… Continue reading இதழ்:2345 வார்த்தைகளால் தாக்கப்படுகிறாயா?
இதழ்:2344 துக்கிப்போருக்கு ஆறுதலைக் கொடுக்கிறோமா?
1 இராஜாக்கள் 17:17 இவைகள் நடந்த பின்பு வீட்டுக்காரியாகிய அந்த ஸ்திரீயின் மகன் வியாதியில் விழுந்தான். அவனுடைய சுவாசம் போகுமட்டும் அவனுடைய வியாதி அதிகரித்துக்கொண்டே இருந்தது. எலியாவும், சாறிபாத்தின் விதவையும் கொஞ்ச நாட்கள் தங்களுடைய தினசரி வாழ்வைத் தொடர்ந்த பின்னர், வேதம் கூறுகிறது, அந்தப் பெண்ணின் ஒரே மகன் நோய்வாய்ப்படுகிறான். அவனுடைய சுவாசம் போகுமட்டும் என்கிற வார்த்தை அவன் மரித்துப் போனதைக் காட்டுகிறது. அவனுடைய தாயைப் பிள்ளையில்லாதவளாகத் தவிக்கவிட்டு அவன் மரித்துப் போகிறான். அந்த விதவை இதுவரை… Continue reading இதழ்:2344 துக்கிப்போருக்கு ஆறுதலைக் கொடுக்கிறோமா?
இதழ்:2343 உயரச் செல்ல வேண்டியதில்லை! தாழ இறங்கு!
1 இராஜாக்கள் 17:17 இவைகள் நடந்த பின்பு வீட்டுக்காரியாகிய அந்த ஸ்திரீயின் மகன் வியாதியில் விழுந்தான். அவனுடைய சுவாசம் போகுமட்டும் அவனுடைய வியாதி அதிகரித்துக்கொண்டே இருந்தது. இந்த மாதத்தின் முதல் நாளைக் காணச்செய்த தேவனுக்கு கோடான கோடிஸ்தோத்திரம்! இந்த மாதம் முவதும் அவர் நம்மோடிருந்து, காத்து , வழிநடத்துமாறு ஜெபிப்போம். எலியாவைப் பற்றி எழுதுவதற்காக நான் அதிகமாகப் படித்துக் கொண்டிருந்தபோது, வேதாகம வால்லுநர்கள் எலியாவைப் பற்றி சிந்தித்து அவருடைய வாழ்வின் உண்மையை எழுதிய விதம் என்னை ஆச்சரியப்பட… Continue reading இதழ்:2343 உயரச் செல்ல வேண்டியதில்லை! தாழ இறங்கு!
