Tamil Bible study

இதழ்:2405 என் தேவன் என்றென்றும் மாறாதவர்!

சங்: 51: 9 - 11  என் பாவங்களைப் பாராதபடிக்கு நீர் உமது முகத்தை மறைத்து, என் அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளும்.தேவனே சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும். உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை  என்னிடத்திலிருந்து  எடுத்துக்கொள்ளாமலும் இரும். நாம் சங்கீதங்களிலிருந்து தாவீதைப் பற்றி தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறோம்! சில வருடங்களுக்கு முன்னால் நானும் என் மகனும் பிஸினஸ் விஷயமாக வெளியூர் சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது ,… Continue reading இதழ்:2405 என் தேவன் என்றென்றும் மாறாதவர்!

Tamil Bible study

இதழ்:2404 எங்கிருந்து வந்தது இந்த துதி, ஸ்தோத்திரங்கள் நிரம்பிய வாழ்வு?

சங்: 51:8  நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படி செய்யும், அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் களிகூறும். தேவனாகிய கர்த்தர் தாவீதை ஏன் நேசித்தார்? என்ற கேள்விக்கு பதிலை தாவீது எழுதிய சங்கீதங்களின் மூலம் பார்க்கிறோம். உலகம் கொடுக்கக்கூடாத சந்தோஷம் ஒன்று உண்டு என்பது என்னைபோல நீஙகளும் அறிவீர்கள் என்று நம்புகிறேன். அதுமட்டுமல்ல இந்த சந்தோஷத்தை உலகம் நம்மிடமிருந்து பறிக்கவும் முடியாது.ஆனால் சில நேரங்களில் நம்முடைய வாழ்க்கையை நாமே ஆளுகை செய்து கொள்ளலாம் அங்கு கர்த்தர் தேவையில்லை என்று… Continue reading இதழ்:2404 எங்கிருந்து வந்தது இந்த துதி, ஸ்தோத்திரங்கள் நிரம்பிய வாழ்வு?

Tamil Bible study

இதழ்:2403 பரிசுத்தத்தை இன்று தாரும் ஆவியானவரே!

சங்:51:7  நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன். என்னைக் கழுவியருளும், அப்பொழுது  நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன். நாம் சங்கீதங்களிலிருந்து தாவீதைப் பற்றி தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறோம்! தாவீது இந்த அன்புக் கடிதத்தின் முதல் சில வசனங்களில், தான் வழிதவறிப் போன இந்த நிலையில் கர்த்தருடைய கிருபை தனக்குக் கிடைக்க வேண்டுமென்று கெஞ்சுகிறான். தேவனுடைய மிகுந்த இரக்கங்களால் தன்னை ரட்சிக்க வேண்டுமென்று வேண்டுகிறான். தன்னுடைய பாவத்திலிருந்து முற்றிலும் சுத்திகரிக்கப்பட்டு, தன்னைக் குற்றப்படுத்தும் உணர்ச்சிகளிலிருந்து வெற்றி… Continue reading இதழ்:2403 பரிசுத்தத்தை இன்று தாரும் ஆவியானவரே!

Tamil Bible study

இதழ்:2402 உண்மையாய் வாழத் தேவையான ஞானம் தாரும் தேவனே!

சங்:51:6 இதோ உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகிறீர். அந்தக்கருணத்தில் ஞானத்தை எனக்கு தெரியப்படுத்துவீர். நாம் சங்கீதங்களிலிருந்து தாவீதைப் பற்றி தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறோம்! நாம் நேற்று ஏதேன்எ ன்னும் பரிபூரண அழகானத்  தோட்டத்தைப் பற்றிப் பார்த்தோம். அந்த அழகிய சுற்றுபுறத்தில் வாழ்ந்தவர்கள் தான் ஆதாமும் ஏவாளும். தேவனாகிய கர்த்தர் அந்தத் தோட்டத்தில் உள்ள எல்லாவற்றையும் அனுபவிக்க அவர்களுக்கு சுதந்தரம் கொடுத்தாலும், ஒரே ஒரு மரத்தின் கனியை மாத்திரம் புசிக்க வேண்டாம் என்றிருந்தார். வேதம் ஆதியாகமம் 3 ல் சொல்கிறது… Continue reading இதழ்:2402 உண்மையாய் வாழத் தேவையான ஞானம் தாரும் தேவனே!

Tamil Bible study

இதழ்:2401 எந்த நன்மையையும் நான் சுமந்து வரவில்லையே!

சங்: 51:5  இதோ நான் துர்க்குணத்தில் உருவானேன், என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள். நாம் சங்கீதங்களிலிருந்து தாவீதைப் பற்றி தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறோம்! பல வருடங்களுக்கு முன்னால் ஈராக் தேசத்தில் ஏதேன் தோட்டம் இருந்தாகக் கருதப்படும் ஒரு இடம் கண்டுபிடிக்கப்பட்டது. ஒருகாலத்தில் இது பச்சையான சதுப்பு நிலமாக இருந்திருக்கக்கூடும் என்பதற்கு அடையாளமாக இந்த இடம் மிகவும் நீர் வளமோடு ஈரமாக இருந்தது. உலகத்தின் இந்த பாகத்தில் காய்ந்த பாலைவனங்கள் அதிகமான ஒரு பகுதியில் இப்படிப்பட்ட ஒரு… Continue reading இதழ்:2401 எந்த நன்மையையும் நான் சுமந்து வரவில்லையே!

Tamil Bible study

இதழ்:2400 உம்முடைய நாமத்தை தூஷிக்காமல் என்னைக் காத்தருளும்!

சங்: 51:4  தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்து உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை நடப்பித்தேன்.  . நாம் வாசிக்கிற இந்த வேதாகமப் பகுதியில் தாவீது தன்னுடைய பாவத்தை அறிக்கையிடுவதைப் பார்க்கிறோம். இங்கு அவன் தான் கர்த்தர் ஒருவருக்கே விரோதமாக பாவஞ்செய்வதாக சொல்கிறான்! இதை வாசிக்கும்போது , என்ன இவன் பத்சேபாளுக்கு விரோதமாக பாவம் செய்யவில்லையா? இறந்து போனதே அந்தக் குழந்தை எப்படி? கொலை செய்யப்பட்டானே அந்த உரியாவுக்கு விரோதமாக ஒன்றுமே செய்யவில்லையா? அவனுடைய குடும்பத்தார் எப்படி?… Continue reading இதழ்:2400 உம்முடைய நாமத்தை தூஷிக்காமல் என்னைக் காத்தருளும்!

Tamil Bible study

இதழ்:2399 குற்றம் செய்தது நாம்தானே? அல்லது தேவனா?

சங்: 51:3 என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன், என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக இருக்கிறது. நாம் தாவீது எழுதிய சங்கீதங்கள் மூலமாக அவனைப் பற்றிப் படித்துக் கொண்டிருக்கிறோம். என்றாவது குற்ற உணர்ச்சியால் அவதிப் பட்ட அனுபவம் உண்டா? ஐயோ இதை இப்படி செய்திருக்கலாமே! இந்த இடத்தில் இப்படி பேசியிருக்கலாமே! தவறு செய்துவிட்டோமே என்று நாம் எத்தனை காரியங்களைக் குறித்து கவலைப்படுகிறோம். அப்போஸ்தலனாகிய பவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்தில் எல்லோரும் பாவம் செய்து தேவ மகிமை அற்றவர்களானார்கள்… Continue reading இதழ்:2399 குற்றம் செய்தது நாம்தானே? அல்லது தேவனா?

Tamil Bible study

இதழ்:2398 கர்த்தரிடம் கண்கட்டி விளையாடாதே!

சங்:51:2 என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும். நாம் சங்கீதங்களின் மூலம் தாவீதைப் பற்றி படித்துக் கொண்டிருக்கிறோம். நாத்தான் தாவீதின் பாவத்தை சுட்டிக் காட்டியவுடன் தாவீது தேவனாகிய கர்த்தருடைய இரக்கத்தை நாடினான் என்று பார்த்தோம். அவரோ அவனை பாதைத் தவறிப் போன ஒரு குழந்தையாகப் பார்த்தார்! தாவீது தான் செய்த மகா பயங்கர செயலை உணர்ந்தவுடன் தன்னுடைய அரண்மனையில் அவனுக்கு ஆலோசனை சொல்ல இருந்த அநேக ஞானிகளைத் தேடாமல் தன்னுடைய… Continue reading இதழ்:2398 கர்த்தரிடம் கண்கட்டி விளையாடாதே!

Tamil Bible study

இதழ்:2397 உமது மிகுந்த இரக்கத்தை எனக்கு காண்பியும்!

சங்:51: 1 தேவனே உமது கிருபையின்படி எனக்கு இரங்கும். உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னை சுத்திகரியும். தாவீது எழுதிய சங்கீதங்களின் மூலம் தாவீதின் வாழ்க்கையைப் பற்றி திரும்பிப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சங்கீதம் 51 ஐ நாம் வரி வரியாகப் படிக்கும்போது அதின் பின்னணியை நாம் மறக்கக்கூடாது. இதை எழுதிய ராஜாவாகிய தாவீது, யூதாவுக்கும், இஸ்ரவேலுக்கும் ராஜா. இந்த சங்கீதத்தில் தாவீது எழுதிய வரிகள் தேவனாகிய கர்த்தர் அவனுடைய வாழ்வில் நேரிடையாக சந்தித்ததை அவன்… Continue reading இதழ்:2397 உமது மிகுந்த இரக்கத்தை எனக்கு காண்பியும்!

Tamil Bible study

இதழ்:2396 உன்னையும் என்னையும் நேசிக்கும் தேவன்!

சங்கீதம் 51:1  தேவனே உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும். சில நாட்கள் நாம் தாவீது ராஜா எழுதிய சங்கீதங்கள் மூலமாய் தாவீதின் வாழ்க்கையை அலசிப் பார்க்கலாம் என்று நினைக்கிறேன். தேவனாகிய கர்த்தர் ஏன் ஏன் ஏன் தாவீதை நேசித்தார்? உங்களுக்கு ஏதாவது பதில் தெரியுமானால் என்னோடு தயவு செய்து பகிர்ந்து கொள்ளுங்களேன்! தாவீதின் வாழ்க்கையில் அவன் பெண்களை நடத்தியவிதம் கர்த்தரைப் பிரியப்படுத்தும் விதத்தில் இல்லவே இல்லை!… Continue reading இதழ்:2396 உன்னையும் என்னையும் நேசிக்கும் தேவன்!