எண்ணா: 27:4 ”……எங்கள் தகப்பனுடைய சகோதரருக்குள்ளே எங்களுக்கு காணியாட்சி கொடுக்கவேண்டும் என்றார்கள்.” ’வாய் உள்ள பிள்ளைதான் பிழைக்கும்’ என்ற பழமொழி தெரியுமா? எத்தனை முறை நாம் வாய் திறந்து கேட்காதால், நமக்கு வந்து சேரவேண்டியவை வராமல் போய்விட்டன. இது நம் எல்லோருடைய வாழ்க்கையிலும் நடப்பது தானே! கேட்பது என்ற வார்த்தைக்கு எபிரேய மொழியில் பிரசுரித்தல் என்று அர்த்தம் உண்டு! இதைத்தான் செலோப்பியாத்தின் ஐந்து குமாரத்திகளும் செய்தனர். அவர்களுடைய வாழ்க்கையிலிருந்து கடந்த நாட்களில் சில அருமையான காரியங்களை நாம்… Continue reading இதழ்:2425 கேள்! கேள்! கேட்டதை நிச்சயம் அருளிச்செய்வார்!
Month: November 2025
இதழ்:2424 தேவசாயலுக்கு எது உன்னில் அடையாளம்?
எண்ணா: 27: 6,7 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி, செலோப்பியாத்தின் குமாரத்திகள் சொல்லுகிறது சரிதான். அவர்களுக்கு அவர்கள் தகப்பனுடைய சகோதரருக்குள்ளே சுதந்தரம் கொடுக்கவேண்டும்; அவர்கள் தகப்பன் பின்வைத்த சுதந்தரத்தை அவர்களுக்கு கிடைக்கும்படி செய்வாயாக. ஒருவேளை நீங்கள் புதிதாக ராஜாவின் மலர்களுக்கு வந்திருப்பீர்களாகில், தயவுசெய்து கடந்த இருநாட்களின் தியானங்களையும் வாசித்துப் பாருங்கள். அப்பொழுதுதான் உங்களுக்கு இதன் தொடர்ச்சித் தெரியும். நாம் மனாசே வழிவந்த செலோப்பியாத்தின் குமாரத்திகள் ஐந்து பேரைப் பற்றிப் படித்துக் கொண்டிருக்கிறோம். அவர்கள் தன் தகப்பனுக்கு ஆண்வாரிசு… Continue reading இதழ்:2424 தேவசாயலுக்கு எது உன்னில் அடையாளம்?
இதழ்:2423 கிருபையே! உம் கிருபையே போதும்!
எண்ணாகமம்: 27:4 ”எங்கள் தகப்பனுக்குக் குமாரன் இல்லாததினாலே அவருடைய பேர் அவருடைய வம்சத்தில் இல்லாமல் அற்றுப்போகலாமா?…” என்ன அநியாயம் இது என்ற வார்த்தையை நாம் அடிக்கடி உபயோகப்படுத்துகிறோம் அல்லவா? சிறு வயதில் அந்த வார்த்தையை எப்படி முதன்முதலில் உபயோகப்படுத்த ஆரம்பித்தோம் என்று யோசித்து பார்த்தேன். அம்மா பலகாரம் செய்து எனக்கும் அண்ணனுக்கும் இரண்டய் பிரித்து வைத்திருப்பார்கள். இரண்டு தனித்தனி டப்பாவில் முறுக்கு, சீடை வைக்கப்பட்டிருக்கும். அண்ணன் எங்கள் இருவர் டப்பாவையும் கையில் எடுத்துப் பார்த்துவிட்டு ‘என்ன அநியாயம்மா,… Continue reading இதழ்:2423 கிருபையே! உம் கிருபையே போதும்!
இதழ்:2422 பெலனில்லாத எனக்கு பெலன் தாரும் இன்று!
எண்ணாகமம்: 27: 1,2 யோசேப்பின் குமாரனாகிய மனாசேயின் குடும்பங்களில் மனாசேயின் குமாரனாகிய மாகீரின் மகனாகிய கிலெயாத்துக்குப் பிறந்த ஏபேருக்கு புத்திரனாயிருந்த செலோப்பியாத்தின் குமாரத்திகளாகிய மக்லான், நோவாள், ஓக்லாள், மில்காள், திர்சாள் என்பவர்கள் வந்து, ஆசரிப்பு கூடாரவாசலிலே மோசேக்கும், ஆசாரியனாகிய எலெயாசாருக்கும், பிரபுக்களுக்கும், சபையனைத்திற்கும் முன்பாக நின்று; நாம் எண்ணாகமத்திலிருந்து அநேக காரியங்களை படித்துக் கொண்டிருக்கிறோம். இஸ்ரவேல் மக்களின் வனாந்திர வாழ்க்கையைப் பார்த்தோம். உங்களைப் போலத்தான் நானும் இந்த புத்தகத்தை அதிகமாக படிக்காமல் ஒதுக்கினேன். இதில் நம் பரலோகப்… Continue reading இதழ்:2422 பெலனில்லாத எனக்கு பெலன் தாரும் இன்று!
இதழ்:2421 உம்முடைய ஆலோசனையிலே என்னை நடத்தும்!
எண்ணாகமம்: 14: 30 இந்த வனாந்தரத்தில்…… உங்களில் இருபது வயதுமுதல், அதற்கு மேற்ப்பட்டவர்களாக எண்ணப்பட்டு உங்கள் தொகைக்கு உட்பட்டவர்களும், எனக்கு விரோதமாய் முறுமுறுத்தவர்களுமாகிய அனைவர்களின் பிரேதங்களும் விழும். எப்புன்னேயின் குமாரன் காலேபும், நூனின் குமாரன் யோசுவாவும் தவிர, மற்றவர்களாகிய நீங்கள், நான் உங்களை குடியேற்றுவேன் என்று ஆணையிட்டுக் கொடுத்த தேசத்தில் பிரவேசிப்பதில்லை.” இதை வாசிக்கும்போது என்னுடைய பள்ளிக்கூட நாட்கள்தான் நினைவுக்கு வந்தது. நான் ஆறாவது படிக்கும்போது என்னுடைய வகுப்பில் இருந்த ஒருசில மாணவர்கள், சின்ன இடைவேளை கிடைத்தாலும்… Continue reading இதழ்:2421 உம்முடைய ஆலோசனையிலே என்னை நடத்தும்!
இதழ்:2420 விசுவாசம் ஒன்றே நம்மை உயரப் பறக்கச் செய்யும்!
எண்ணா:14:42 ”நீங்கள் உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக முறியஅடிக்கப்படாதபடிக்கு ஏறிப்போகாதிருங்கள்; கர்த்தர் உங்கள் நடுவில் இரார்.” ஒருமுறை அமெரிக்காவின் பிலடெல்பியாவிலிருந்து நியூ யார்க் வரை ஒரு சிறிய விமானத்தில் பயணம் செய்தோம். அன்று மேகமூட்டம் அதிகமாக இருந்ததால் அந்த சிறிய விமானம் பயங்கரமாக குதிக்க ஆரம்பித்து விட்டது. உள்ளே இருந்தவர்கள் அலற ஆரம்பித்து விட்டனர். எனக்கு பயத்தில் தொண்டை அடைத்து மூச்சுத் திணற ஆரம்பித்து விட்டது. சில நேரங்களில் நம் வாழ்க்கையும் மேகமூட்டத்துக்குள்ளாகப் பறக்கும் விமானத்தைப் போன்றதுதான். எல்லாமே… Continue reading இதழ்:2420 விசுவாசம் ஒன்றே நம்மை உயரப் பறக்கச் செய்யும்!
இதழ்:2419 உன் நம்பிக்கையை விழுங்கிய வனாந்திரம்!
எண்ணா:14:35 ”கர்த்தராகிய நான் இதை சொன்னேன்; எனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடின இந்த பொல்லாத சபையார் யாவருக்கும் இப்படியே செய்வேன்; இந்த வனாந்தரத்திலே அழிவர்கள், இங்கே சாவார்கள் என்று சொல் என்றார்.” எப்பொழுதும் மரணத்தைப் பற்றி பேசுகிற சில நண்பர்களையும், உறவினர்களையும் பார்த்திருகிறேன். ”எனக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா!…… நான் செத்தால்தான் உங்களுக்கு என் அருமை தெரியும்! ……நான் செத்தாவது இந்த காரியத்தை செய்வேன்!…. இப்படிப்பட்ட வார்த்தைகளை அடிக்கடி உபயோகப்படுத்திய அவர்களின் ஆயிசு சிறியதாகவே இருந்தது.இஸ்ரவேல் மக்களை கர்த்தராகிய தேவன் எகிப்திலிருந்து… Continue reading இதழ்:2419 உன் நம்பிக்கையை விழுங்கிய வனாந்திரம்!
இதழ்:2418 நீ அசட்டை பண்ணியதால் பிரவேசிப்பதில்லை!
எண்ணா: 14:28 ”..நீங்கள் என் செவிகள் கேட்கச் சொன்னபிரகாரம் உங்களுக்குச் செய்வேன் என்பதை என் ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் உரைக்கிறார். நாம் நேற்றோடு எலியாவின் வாழ்வைப் பற்றி படித்து முடித்து விட்டோம். நாம் எலிசாவைப் பற்றி தொடர்ந்து படிக்கும் முன்னர் அதற்காக ஆயத்தப்பட சில நாட்கள் எனக்குத் தேவைப்படுகிறது. ஆதலால் நாம் சில நாட்கள் இஸ்ரவேல் மக்களோடு வனாந்திரம் செல்வோம்! மோசே கானானுக்குள் வேவுகாரரை அனுப்பிய பின்னர், காலேபும் யோசுவாவும் அதை பாலும் தேனும்… Continue reading இதழ்:2418 நீ அசட்டை பண்ணியதால் பிரவேசிப்பதில்லை!
இதழ்:2417 தேவ பணி ஒருநாளும் தடை படாது!
2 இராஜாக்கள் 2:12 - 15அதை எலிசா கண்டு: என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரைவீரருமாய் இருந்தவரே என்று புலம்பினான்; அவனை அப்புறம் காணாமல், தன் வஸ்திரத்தைப் பிடித்து இரண்டு துண்டாகக் கிழித்தான். பின்பு அவன் எலியாவின்மேலிருந்து கீழே விழுந்த சால்வையை எடுத்துத் திரும்பிப்போய், யோர்தானின் கரையிலே நின்று, எலியாவின்மேலிருந்து கீழே விழுந்த சால்வையைப் பிடித்து: எலியாவின் தேவனாகியக் கர்த்தர் எங்கே என்று சொல்லித் தண்ணீரை அடித்தான்; தன்ணீரை அடித்தவுடனே அது இருபக்கமாகப் பிரிந்ததினால்… Continue reading இதழ்:2417 தேவ பணி ஒருநாளும் தடை படாது!
இதழ்:2416 இரட்டிப்பான ஆசீர்வாதத்தைத் தாரும் தேவனே!
என் ஆத்துமா கர்த்தருடைய ஆலயப்பிராகாரங்களின்மேல் வாஞ்சையும் தவனமுமாயிருக்கிறது; என் இருதயமும் என் மாம்சமும் ஜீவனுள்ள தேவனை நோக்கிக் கெம்பீர சத்தமிடுகிறது.சங்கீதம் 84 : 2 அவர்கள் அக்கரைப்பட்டபின்பு, எலியா எலிசாவை நோக்கி: நான் உன்னைவிட்டு எடுத்துக்கொள்ளப்படுமுன்னே நான் உனக்குச் செய்யவேண்டியது என்ன, கேள் என்றான். அதற்கு எலிசா: உம்மிடத்திலுள்ள ஆவியின்வரம் எனக்கு இரட்டிப்பாய்க் கிடைக்கும்படி வேண்டுகிறேன் என்றான்.2 இராஜாக்கள் 2 : 9 எலியா, எலிசா இருவரும் நடந்து யோர்தானின் கரைக்கு வந்தனர். யோர்தானின் தண்ணீர் இரண்டாய்… Continue reading இதழ்:2416 இரட்டிப்பான ஆசீர்வாதத்தைத் தாரும் தேவனே!
