Bible Study

மலர்:1 இதழ்: 49 உன்னைக் காண்கிற கண்கள்!

ஆதி:  38:6,7  “யூதா தன் மூத்த மகனாகிய ஏர் என்பவனுக்கு தாமார் என்னும் பேருள்ள ஒரு பெண்ணைக் கொண்டான். யூதாவின் மூத்த மகனாகிய ஏர் என்பவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாதவனாயிருந்ததினால் கர்த்தர் அவனை அழித்து போட்டார்.”  நேற்று நாம் யோசேப்பை அவன் சகோதரர் இஸ்மவேலருக்கு விற்று போட்டதைப் பற்றி பார்த்தோம். யோசேப்பின் வாழ்வை நாம் தொடரு முன் வேதத்தில் தாமார் என்ற பெண்ணின் கதையை வாசிக்கிறோம். நம்முடைய இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாற்றில்  (மத்: 1:3)  இடம்… Continue reading மலர்:1 இதழ்: 49 உன்னைக் காண்கிற கண்கள்!

Bible Study

மலர்:1 இதழ்: 48 தம்பி ஒரு முள்!

  ஆதி:  37:3 “ இஸ்ரவேலின் முதிர்வயதிலே யோசேப்பு தனக்கு பிறந்ததினால் இஸ்ரவேல் தன் குமாரர் எல்லாரிலும் அவனை அதிகமாய் நேசித்து, அவனுக்கு பலவருணமான அங்கியை செய்வித்தான்”   அப்பாவுக்கு தம்பியை தான் மிகவும் பிடிக்கும், அவனுக்கு தான் எல்லாம் செய்வார்கள், அம்மாவுக்கு அக்கா தான் உயிர், அவளுக்குத்தான் எல்லாம் கிடைக்கும், நான் என்றால் ஆகாது... என்றெல்லாம் பிள்ளைகள் குறை கூறுவதை கேட்கிறோம். இந்த பிள்ளைகள் தாய் தகப்பனை நேசித்தாலும், அந்த பாசத்தின் நுனியில் ஒரு சிறிய… Continue reading மலர்:1 இதழ்: 48 தம்பி ஒரு முள்!

Bible Study

மலர்:1 இதழ்: 47 துக்கம் சந்தோஷமாய் மாறும்!

ஆதி:  35: 19 – 20 “ ராகேல் மரித்து பெத்லேகேம் என்னும் எப்பிராத்தா ஊருக்கு போகிற வழியில் அடக்கம் பண்ணப் பட்டாள். அவள் கல்லறையின் மேல் யாக்கோபு ஒரு தூணை நிறுத்தினான்; அதுவே இந்நாள் வரைக்கும் இருக்கிற ராகேலுடைய கல்லறையின் தூண்.   ராகேலுக்கு பிரசவ வேதனை கடுமையாக இருந்ததையும், அவள் பிறந்த குழந்தைக்கு பெனோனி என்று பேரிட்டதை யாக்கோபு மாற்றி பென்யமீன் என்று பேரிட்டான் என்று பார்த்தோம். ராகேல் தான் மறுபடியும் கர்ப்பவதியாய் இருப்பதை… Continue reading மலர்:1 இதழ்: 47 துக்கம் சந்தோஷமாய் மாறும்!

Bible Study

மலர்:1 இதழ்: 46 எனக்கு ஏன் இந்த வேதனை?

ஆதி:  35:16 – 19 “ பின்பு பெத்தேலை விட்டு பிரயாணம் புறப்பட்டார்கள். எப்பிராத்தாவுக்கு வர இன்னுங்கொஞ்சம் தூரம் இருக்கும்போது ராகேல் பிள்ளை பெற்றாள். பிரசவத்தில் அவளுக்கு கடும்வேதனை உண்டாயிற்று. பிரசவிக்கும்போது அவளுக்கு கடும் வேதனையாயிருக்கையில் மருத்தவச்சி அவளைப் பார்த்து , பயப்படாதே, இந்த முறையும் புத்திரனைப் பெறுவாய் என்றார். மரணகாலத்தில் அவள் ஆத்துமா பிரியும்போது அவள் அவனுக்கு பெனோனி என்று பேரிட்டாள் . அவன் தகப்பனோ அவனுக்கு பென்யமீன் என்று பேரிட்டான்.” கடந்த வாரம் நாம்… Continue reading மலர்:1 இதழ்: 46 எனக்கு ஏன் இந்த வேதனை?

Call of Prayer

ஜெபக்கூடாரம்!

                                                குழந்தையை அருளிய ஜெபம்!       I சாமு:1: 10,11 அவள் (அன்னாள்) போய் மனங்கசந்து மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணி,, சேனைகளின் கர்த்தாவே தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையை கண்ணோக்கி பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண் பிள்ளையை கொடுத்தால் .......என்று ஒரு பொருத்தனை பண்ணினாள்.”   ஒவ்வொரு சனிக்கிழமையும் நாம் தேவனுடைய சமுகத்தில் நம் ஜெப வேண்டுதல்களோடு வருகிற நாள்.… Continue reading ஜெபக்கூடாரம்!

Bible Study

மலர்:1 இதழ்: 44 கோபமும், மூர்க்கமும் பட்ட காயத்தை ஆற்றுமா?

ஆதி: 34:30,31 “அப்பொழுது யாக்கோபு,  சிமியோனையும், லேவியையும் பார்த்து: இந்த தேசத்தில் குடியிருக்கிற கானானியரிடத்திலும், பெரிசியரிடத்திலும் என் வாசனையை நீங்கள் கெடுத்ததினாலே என்னைக் கலங்கப் பண்ணினீர்கள்; நான் கொஞ்ச ஜனமுள்ளவன், அவர்கள் எனக்கு எதிராக கூட்டங்கூடி, நானும் என் குடும்பமும் அழியும்படி என்னை வெட்டிப்போடுவார்களே என்றான். அதற்கு அவர்கள்: எங்கள் சகோதரியை அவர்கள்  ஒரு வேசியைப்போல நடத்தலாமோ என்றார்கள்.   நேற்று நாம், தீனாளை பெண் கேட்டு சீகேமின் தகப்பன் ஏமோரும், பின்னர் சீகேமும் யாக்கோபின் வீட்டுக்கு… Continue reading மலர்:1 இதழ்: 44 கோபமும், மூர்க்கமும் பட்ட காயத்தை ஆற்றுமா?

Call of Prayer

ஜெபக்கூடாரம்!

                                 வாதையை நிறுத்திய ஜெபம்!    2 சாமு: 24:25   “அங்கே தாவீது கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, சர்வாங்க தகனபலிகளையும், சமாதான பலிகளையும் செலுத்தினான். அப்பொழுது கர்த்தர் தேசத்துக்காக செய்யப்பட்ட வேண்டுதலைக் கேட்டருளினார்; இஸ்ரவேலின் மேலிருந்த அந்த வாதை நிறுத்தப்பட்டது." ஒவ்வொரு சனிக்கிழமையும் நாம் தேவனுடைய சமுகத்தில் நம் ஜெப வேண்டுதல்களோடு வருகிற நாள். இன்றைய வேத வசனத்தில், தாவீது செய்த ஜெபத்துக்கு தேவன் பதிலளித்து இஸ்ரவேலின் மேலிருந்த வாதையை நீக்கிப்போட்டார் என்று வாசிக்கிறோம்.… Continue reading ஜெபக்கூடாரம்!