எண்ணா: 14:28 ”..நீங்கள் என் செவிகள் கேட்கச் சொன்னபிரகாரம் உங்களுக்குச் செய்வேன் என்பதை என் ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் உரைக்கிறார். நாம் நேற்றோடு எலியாவின் வாழ்வைப் பற்றி படித்து முடித்து விட்டோம். நாம் எலிசாவைப் பற்றி தொடர்ந்து படிக்கும் முன்னர் அதற்காக ஆயத்தப்பட சில நாட்கள் எனக்குத் தேவைப்படுகிறது. ஆதலால் நாம் சில நாட்கள் இஸ்ரவேல் மக்களோடு வனாந்திரம் செல்வோம்! மோசே கானானுக்குள் வேவுகாரரை அனுப்பிய பின்னர், காலேபும் யோசுவாவும் அதை பாலும் தேனும்… Continue reading இதழ்:2418 நீ அசட்டை பண்ணியதால் பிரவேசிப்பதில்லை!
Author: Prema Sunder Raj
இதழ்:2417 தேவ பணி ஒருநாளும் தடை படாது!
2 இராஜாக்கள் 2:12 - 15அதை எலிசா கண்டு: என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரைவீரருமாய் இருந்தவரே என்று புலம்பினான்; அவனை அப்புறம் காணாமல், தன் வஸ்திரத்தைப் பிடித்து இரண்டு துண்டாகக் கிழித்தான். பின்பு அவன் எலியாவின்மேலிருந்து கீழே விழுந்த சால்வையை எடுத்துத் திரும்பிப்போய், யோர்தானின் கரையிலே நின்று, எலியாவின்மேலிருந்து கீழே விழுந்த சால்வையைப் பிடித்து: எலியாவின் தேவனாகியக் கர்த்தர் எங்கே என்று சொல்லித் தண்ணீரை அடித்தான்; தன்ணீரை அடித்தவுடனே அது இருபக்கமாகப் பிரிந்ததினால்… Continue reading இதழ்:2417 தேவ பணி ஒருநாளும் தடை படாது!
இதழ்:2416 இரட்டிப்பான ஆசீர்வாதத்தைத் தாரும் தேவனே!
என் ஆத்துமா கர்த்தருடைய ஆலயப்பிராகாரங்களின்மேல் வாஞ்சையும் தவனமுமாயிருக்கிறது; என் இருதயமும் என் மாம்சமும் ஜீவனுள்ள தேவனை நோக்கிக் கெம்பீர சத்தமிடுகிறது.சங்கீதம் 84 : 2 அவர்கள் அக்கரைப்பட்டபின்பு, எலியா எலிசாவை நோக்கி: நான் உன்னைவிட்டு எடுத்துக்கொள்ளப்படுமுன்னே நான் உனக்குச் செய்யவேண்டியது என்ன, கேள் என்றான். அதற்கு எலிசா: உம்மிடத்திலுள்ள ஆவியின்வரம் எனக்கு இரட்டிப்பாய்க் கிடைக்கும்படி வேண்டுகிறேன் என்றான்.2 இராஜாக்கள் 2 : 9 எலியா, எலிசா இருவரும் நடந்து யோர்தானின் கரைக்கு வந்தனர். யோர்தானின் தண்ணீர் இரண்டாய்… Continue reading இதழ்:2416 இரட்டிப்பான ஆசீர்வாதத்தைத் தாரும் தேவனே!
இதழ்:2415 தடைகளைத் தகர்த்து வெற்றி நடி போடு!
2 இராஜாக்கள் 2 : 6, 7 பின்பு எலியா அவனை நோக்கி: நீ இங்கே இரு; கர்த்தர் என்னை யோர்தானுக்கு அனுப்புகிறார் என்றான். அதற்கு அவன்: நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தருடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றான்; தீர்க்கதரிசிகளின் புத்திரரில் ஐம்பதுபேர் போய், தூரத்திலே பார்த்துக்கொண்டு நின்றார்கள்; அவர்கள் இருவரும் யோர்தான் கரையிலே நின்றார்கள். இந்த நாள்!!!!! அவர்களுடைய நட்பின் கடைசி நாள்!!!! நான் எலியாவின் இடத்தில் இருந்திருப்பேனாகில் நான் எவ்வளவு மெதுவாக… Continue reading இதழ்:2415 தடைகளைத் தகர்த்து வெற்றி நடி போடு!
இதழ்:2414 ஒரு உன்னதமான நட்பு!
2 இராஜாக்கள் 2 : 1 - 1.கர்த்தர் எலியாவைச் சுழல்காற்றிலே பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப் போகிறபோது, எலியா எலிசாவோடேகூடக் கில்காலிலிருந்து புறப்பட்டுப்போனான். எலியா எலிசாவை நோக்கி: நீ இங்கே இரு; கர்த்தர் என்னைப் பெத்தேல்மட்டும் போக அனுப்புகிறார் என்றான். அதற்கு எலிசா: நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தரின் ஜீவனையும் உம்முடைய ஜீவனையும்கொண்டு சொல்லுகிறேன் என்றான்; அப்படியே இருவரும் பெத்தேலுக்குப் போனார்கள்.அப்பொழுது பெத்தேலிலிருந்த தீர்க்கதரிசிகளின் புத்திரர் எலிசாவினிடத்தில் வந்து: இன்றைக்குக் கர்த்தர் உனக்குத் தலைமையாயிருக்கிற உன் எஜமானை… Continue reading இதழ்:2414 ஒரு உன்னதமான நட்பு!
இதழ்:2413 சிறு முயற்சி உறவுகளை பலப்படுத்தும்!
எலியா அவன் இருக்கும் இடமட்டும் போய், அவன்மேல் தன் சால்வையைப் போட்டான்.1 இராஜாக்கள் 19 : 19 எனக்கு கதைகள் கேட்க மிகவும் பிடிக்கும், விசேஷமாக நன்றாக கதைகள் கூறுவோர் சொன்ன கதைகள் மனதில் எப்பொழுதுமே நிற்கின்றன! அதுமட்டுமல்ல வேதாகமத்தில் நான் படித்த ஒவ்வொரு கதைகளும் என் மனதில் ஆணித்தரமாக பதிந்து உள்ளன! விசேஷமாக டாக்டர் லூக்கா அவர்கள் இயேசு கிறிஸ்து சொன்ன கதைகளை அழகாக, விளக்கமாக கூறியிருப்பது எனக்கு மிகவும் பிடித்தவை. லூக்கா இயேசுவின் கதைகளை… Continue reading இதழ்:2413 சிறு முயற்சி உறவுகளை பலப்படுத்தும்!
இதழ்:2412 முதன் முதலில் தேவன் நல்லதல்ல என்று கண்ட தனிமை!
இராஜாக்கள் 19:10 அதற்கு அவன்: சேனைகளின் தேவனாகிய கர்த்தருக்காக வெகு பக்திவைராக்கியமாயிருந்தேன்; இஸ்ரவேல் புத்திரர் உமது உடன்படிக்கையைத் தள்ளிவிட்டார்கள்; உம்முடைய பலிபீடங்களை இடித்து, உம்முடைய தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தினால் கொன்றுபோட்டார்கள்; நான் ஒருவன் மாத்திரம் மீதியாயிருக்கிறேன்; என் பிராணனையும் வாங்கத் தேடுகிறார்கள் என்றான். நான் ஒருவன் மாத்திரம் மீதியாயிருக்கிறேன் என்ற எலியாவின் வார்த்தைகள் என்னை இன்றைய தியானத்தை எழுத வைத்தன. திருமணம் ஆனவர்களோ அல்லது திருமணம் ஆகதவர்களோ, கூட்டத்தில் இருப்பவர்களோ அல்லது இருளான தனி அறியில் இருப்பவர்களோ எல்லோரையுமே… Continue reading இதழ்:2412 முதன் முதலில் தேவன் நல்லதல்ல என்று கண்ட தனிமை!
இதழ்:2411 தேவன் பலப்படுத்தும் பந்தம்!
1 இராஜாக்கள் 19 : 19 - 21 அப்படியே அவன் அவ்விடம் விட்டுப் புறப்பட்டுப்போய், பன்னிரண்டு ஏர்பூட்டி உழுத சாப்பாத்தின் குமாரனாகிய எலிசாவைக் கண்டான்; அவன் பன்னிரண்டாம் ஏரை ஓட்டிக்கொண்டிருந்தான்; எலியா அவன் இருக்கும் இடமட்டும் போய், அவன்மேல் தன் சால்வையைப் போட்டான்.அப்பொழுது அவன் மாடுகளைவிட்டு, எலியாவின் பிறகே ஓடி: நான் என் தகப்பனையும் என் தாயையும் முத்தஞ்செய்ய உத்தரவு கொடும், அதற்குப்பின் உம்மைப் பின்தொடர்வேன் என்றான். அதற்கு அவன்: போய்த் திரும்பிவா; நான் உனக்குச்… Continue reading இதழ்:2411 தேவன் பலப்படுத்தும் பந்தம்!
இதழ்:2410 எந்த வேலை செய்து கொண்டிருக்கிறாயோ அதையே நீ தொடரு!
1 இராஜாக்கள் 19 : 13, 15, 16 அதை எலியா கேட்டபோது, தன் சால்வையினால் தன் முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்து, கெபியின் வாசலில் நின்றான். அப்பொழுது, இதோ, எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம் என்கிற சத்தம் அவனுக்கு உண்டாயிற்று....அப்பொழுது கர்த்தர் அவனைப் பார்த்து: நீ தமஸ்குவின் வழியாய் வனாந்தரத்திற்குத் திரும்பிப்போய், ஆசகேலைச் சீரியாவின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி,பின்பு நிம்சியின் குமாரனாகிய யெகூவை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, ஆபேல்மேகொலா ஊரானான சாப்பாத்தின் குமாரனாகிய எலிசாவை உன்… Continue reading இதழ்:2410 எந்த வேலை செய்து கொண்டிருக்கிறாயோ அதையே நீ தொடரு!
இதழ்:2409 பின்னானவைகளை மறந்து முன்னானவைகளை நாடு!
1 பேதுரு 2 : 11பிரியமானவர்களே, அந்நியர்களும் பரதேசிகளுமாயிருக்கிற நீங்கள் ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் போர்செய்கிற மாம்ச இச்சைகளை விட்டு விலகி, நாம் எலியாவின் வாழ்க்கையைப் பற்றியும் அவனுடைய வாழ்வில் ஏற்பட்ட மிகபெரிய சவால்களையும் பற்றி படித்துக் கொண்டிருக்கும்போது, எலியா எவ்வளவுதூரம் தேவனுடைய சித்தத்தை தன்னுடைய வாழ்வில் நிறைவேற்றினான் என்ற உண்மை என்னை திகைக்க வைத்தது. கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு வந்தபோது உடனே அவன் புறப்படுவதையும், அதன்படி செயல்படுவதையும் பார்க்கும் போது அவன் இந்த உலகத்தை தனக்கு சொந்தமாக… Continue reading இதழ்:2409 பின்னானவைகளை மறந்து முன்னானவைகளை நாடு!
