1 சாமுவேல் 25: 15 -17 அந்த மனுஷரோ எங்களுக்கு மிகவும் உபகாரிகளாயிருந்தார்கள். நாங்கள் வெளியிடங்களில் இருக்கும்போது அவர்கள் எங்களிடத்தில் நடமாடின நாளெல்லாம் அவர்கள் எங்களை வருத்தப்படுத்தினதுமில்லை. நமது பொருளில் ஒன்றும் காணாமற்போனதுமில்லை. நாங்கள் ஆடுகளை மேய்த்து அவர்களிடத்தில் இருந்த நாளெல்லாம் அவர்கள் இரவும் பகலும் எங்களைச் சுற்றிலும் மதிலாயிருந்தார்கள். இப்போதும் நீர் செய்யவேண்டியதைக் கவனித்துப் பாரும். ஒருவேளை கடவுள் இந்த வேதப்புத்தகத்தை கட்டுரைகளாக எழுதியிருந்தால் எப்படி அவை மனதில் நின்றிருக்குமோ என்னவோ? ஆனால் கர்த்தர்… Continue reading இதழ்:2080 நான் கண்ட ஒரு நடைமுறை புத்திசாலித்தனம்!
Author: Prema Sunder Raj
இதழ்:2079 முள்ளுக்குள் கட்டப்பட்ட வாழ்க்கை!
1 சாமுவேல் 25: 14 அப்பொழுது வேலைக்காரரில் ஒருவன் நாபாலுடைய மனைவியாகிய அபிகாயிலை நோக்கி: இதோ நம்முடைய எஜமானுடைய சுகசெய்தி விசாரிக்கத் தாவீது வனாந்திரத்திலிருந்து ஆட்களை அனுப்பினான். அவர்கள்பேரில் அவர் சீறினார். ராஜாவின் மலர்களில் நான் அபிகாயிலைப்பற்றி சில நாட்கள் எழுதலாம் என்றிருக்கிறேன். தயவுசெய்து என்னோடுகூட மிகப்பழமையான காலத்துக்கு, அபிகாயிலும் நாபாலும் வாழ்ந்த கர்மேலுக்கு பிரயாணம் பண்ண ஆயத்தமாயிருங்கள்! அபிகாயிலைப்பற்றி அநேகர் எழுதியிருக்கிறதைப் படித்து விட்டேன். பலர் அபிகாயிலை ஒரு சந்தர்ப்பவாதியாகப் பார்க்கிறார்கள். சிலர் அவளை ஒரு… Continue reading இதழ்:2079 முள்ளுக்குள் கட்டப்பட்ட வாழ்க்கை!
இதழ்:2078 நம்மைக் கடுமையாக பாதிக்கும் கோபம்!
1 சாமுவேல் 25: 10-13 நாபால் தாவீதின் ஊழியக்காரருக்கு பிரதியுத்தமாக, தாவிது என்பவன் யார்? ஈசாயின் குமாரன் யார்?.... நான் என் அப்பத்தையும், தண்ணீரையும் என் ஆடுகளை மயிர்க்கத்தரிக்கிறவர்களுக்காக நான் அடித்து சமையல் பண்ணுவித்ததையும் எடுத்து, இன்ன இடத்தார் என்று நான் அறியாத மனுஷருக்குக் கொடுப்பேனோ என்றான். தாவீதின் வாலிபர் தங்கள் வழியேத் திரும்பி, மறுபடியும் தாவீதினிடத்தில் வந்து, இந்த வார்த்தைகளையெல்லாம் அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது தாவீது தன் மனுஷரைப்பார்த்து: நீங்கள் அவரவர் உங்கள் பட்டயத்தைக் கட்டிக்… Continue reading இதழ்:2078 நம்மைக் கடுமையாக பாதிக்கும் கோபம்!
இதழ்:2077 ஐயோ! அவர்களை மறந்து விட்டோமா?
1 சாமுவேல் 25: 5-8 தாவீது பத்து வாலிபரை அழைத்து: நீங்கள் கர்மேலுக்குப்போய், நாபாலிடத்தில் சென்று, என் பேரைச் சொல்லி, .... இப்பொழுது ஆடுகளை மயிர்க்கத்தரிக்கிறவர்கள் உம்மிடத்தில் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். உம்முடைய மேய்ப்பர் எங்களோடேகூட இருந்தார்கள். அவர்கள் கர்மேலிலிருந்த நாளெல்லாம் நாங்கள் அவர்களை வருத்தப்படுத்தவில்லை. அவர்களுடைய பொருள் ஒன்றும் காணாமற்போனதுமில்லை. உம்முடைய வேலைக்காரரைக் கேளும் அவர்கள் உமக்குச் சொல்வார்கள். வேதம் இன்றைய வேதாகமப் பகுதியில் தெளிவாக ஒரு விளக்கத்தைக் கொடுக்கிறது. கர்மேலில் ஆடுகளுக்கு மயிர்க்கத்தரிக்கும் நேரம்… Continue reading இதழ்:2077 ஐயோ! அவர்களை மறந்து விட்டோமா?
இதழ்:2076 தேவன் இல்லையெனும் மதிகேடன்!
1 சாமுவேல்: 25 2-3 மாகோனிலே ஒரு மனுஷன் இருந்தான். அவனுடைய தொழில்துறை கர்மேலில் இருந்தது. அந்த மனுஷன் மகாபாரிக் குடித்தனக்காரனாயிருந்தான். அவனுக்கு மூவாயிரம் ஆடும், ஆயிரம் வெள்ளாடும் இருந்தது..... அந்த மனுஷனுக்கு நாபால் என்றும், அவன் மனைவிக்கு அபிகாயில் என்றும் பெயர். வேதத்தை வாசிக்க வாசிக்கத்தான் நாம் அது எத்தனை அருமையான பொக்கிஷம் என்பதை உணர முடியும்! அது இந்த வேதாகமப்பகுதியைப் படிக்கும்போது நான் மிகவும் உணர்ந்தேன். இதை ஒவ்வொருநாளும் நாம் வாசிப்போமானால் எத்தனையோ பொல்லாங்குகளிலிருந்து… Continue reading இதழ்:2076 தேவன் இல்லையெனும் மதிகேடன்!
இதழ்:2075 வனாந்திரமா? அதை உனக்கு சாதகமாக்கிக்கொள்!
1 சாமுவேல் 25:1,2 சாமுவேல் மரணமடைந்தான். இஸ்ரவேலர் எல்லாரும் கூடிவந்து, அவனுக்காகத் துக்கங்கொண்டாடி, ராமாவிலிருக்கிற அவனுடைய வளவிலே அவனை அடக்கம் பண்ணினார்கள். தாவீது எழுந்து பாரான் வனாந்திரத்துக்குப் புறப்பட்டுப் போனான். மாகோனிலே ஒரு மனுஷன் இருந்தான். அவனுடையத் தொழில்துறை கர்மேலில் இருந்தது.அந்த மனுஷன் மகாபாரிக் குடித்தனக்காரனாயிருந்தான். அவனுக்கு மூவாயிரம் ஆடும், ஆயிரம் வெள்ளாடும், இருந்தது. அவன் அப்பொழுது கர்மேலில் தன் ஆடுகளை மயிர் கத்தரித்துக்கொண்டிருந்தான். நாம் 1 சாமுவேல் 25 ம் அதிகாரத்தைப் படிக்க ஆரம்பிக்கும்போது… Continue reading இதழ்:2075 வனாந்திரமா? அதை உனக்கு சாதகமாக்கிக்கொள்!
இதழ்:2074 எதிரிகளை சிநேகித்தல் என்னும் நற்குணம்!
1 சாமுவேல் 24:19 ஒருவன் தன் மாற்றானைக் கண்டுபிடித்தால், அவனைச் சுகமே போகவிடுவானோ? இன்று நீ எனக்குச் செய்த நன்மைக்காக கர்த்தர் உனக்கு நன்மை செய்வாராக. நாம் ஒவ்வொருநாளும் தாவீது வனாந்திரத்தில் சவுலினால் வேட்டையாடப் பட்டதைப் படித்துக் கொண்டு வந்தோம். தாவீதின் இந்த வனாந்திர வாழ்க்கையில் அவனுடைய இன்னொமொரு அற்புத குணாதிசயம் வெளிப்படுகிறது. கர்த்தர் அவனைத் தன் இருதயத்திற்கேற்ற ஒருவன் என்று அழைத்தது இதனால்தானோ என்னவோ! அவனைத் துன்பப்படுத்தினவர்களை நேசிக்கும் குணம்! கர்த்தராகிய இயேசுவின் குணமல்லவா… Continue reading இதழ்:2074 எதிரிகளை சிநேகித்தல் என்னும் நற்குணம்!
இதழ்:2073 பொல்லாத நாவும், அதைக் கூர்ந்து கேட்கும் செவியும்!
1 சாமுவேல் 24:9 சவுலை நோக்கி: தாவீது உமக்குப் பொல்லாப்பு செய்யப்பார்க்கிறான் என்று சொல்லுகிற மனுஷருடைய வார்த்தைகளை ஏன் கேட்கிறீர்? பொய்யான வதந்திகளைக் கேட்டிருக்கிறீர்களா? நீங்கள் உண்மை என்று ஆணித்தரமாக நம்பிய ஒரு காரியம் வெறும் வதந்திதான் என்று தெரியவரும்போது எப்படியிருந்தது? சவுல் தாவீதை விரட்டி விரட்டி வேட்டையாடியதை நாம் ஒவ்வொரு நாளும் பார்த்துக்கொண்டு வந்தோம். அவன் சவுலுக்கு பயந்து மலைகளிலும், கெபிகளிலும், வனாந்திரங்களிலும் ஓடி ஒளிந்து கொண்டிருந்தான். கடைசியில் ஒருநாள் இரண்டு பேரும் சந்தித்தபோது தாவீது… Continue reading இதழ்:2073 பொல்லாத நாவும், அதைக் கூர்ந்து கேட்கும் செவியும்!
இதழ்:2072 கனிகளாலே அறியப்படுவீர்கள்!
1 சாமுவேல் 24: 12,13 கர்த்தர் எனக்கும் உமக்கும் நடுநின்று நியாயம் விசாரித்து, கர்த்தர்தாமே என் காரியத்தில் உமக்கு நீதியை சரிகட்டுவாராக. உம்முடையபேரில் நான் கைபோடுவதில்லை. முதியோர் மொழிப்படியே ஆகாதவர்களிடத்திலே ஆகாமியம் பிறக்கும். ஆகையால் உம்முடையபேரில் நான் கைபோடுவதில்லை. தாவீது சவுலினால் பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சமல்ல என்று நாம் பார்த்து வருகிறோம். ஆனால் சவுலின்மேல் கைபோட தாவீதுக்குத் தருணம் கிடைத்தபோது உம்முடையபேரில் நான் கைபோடுவதில்லை என்று அவன் கூறுவதை இன்றைய வேதாகமப் பகுதியில் நாம் பார்க்கிறோம். அதுமட்டுமல்ல… Continue reading இதழ்:2072 கனிகளாலே அறியப்படுவீர்கள்!
இதழ்:2071 கண்ணிமைக்கும் நேரத்தில் வந்த உதவி!
1 சாமுவேல் 23: 26 - 28 சவுல் மலைக்கு இந்தப்பக்கத்திலும், தாவீதும் அவன் மனுஷரும் அந்தப்பக்கத்திலும் நடந்தார்கள். சவுலுக்குத் தப்பிப்போக, தாவீது தீவிரித்தபோது, சவுலும், அவன் மனுஷரும் தாவீதையும் அவன் மனுஷரையும் பிடிக்கத்தக்கதாய் அவர்களை வளைந்து கொண்டார்கள். அந்தச் சமயத்தில் ஓரு ஆள் சவுலிடத்தில் வந்து நீர் சீக்கிரமாய் வாரும். பெலிஸ்தர் தேசத்தின்மேல் படையெடுத்து வந்திருக்கிறார்கள் என்றான். அதனால் சவுல் தாவீதைப் பின் தொடருவதைவிட்டுத் திரும்பி, பெலிஸ்தரை எதிர்க்கும்படி போனான். மூர்க்கமான சவுலால் ஈட்டியால் எறியப்பட்டவன்!… Continue reading இதழ்:2071 கண்ணிமைக்கும் நேரத்தில் வந்த உதவி!
