Tamil Bible study

இதழ்:2358 நம் தேவன் முற்றிலும் நம்பப்படத்தக்கவர் என்று புரிந்து கொண்டுள்ளாயா?

1 இராஜாக்கள் 18:24  நீங்கள் உங்கள் தேவனுடைய நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுங்கள்; நான் கர்த்தருடைய நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுவேன்; அப்பொழுது அக்கினியினால் உத்தரவு அருளும் தெய்வமே தெய்வம் என்றான்; அதற்கு ஜனங்களெல்லாரும் இது நல்ல வார்த்தை என்றார்கள். இன்றைய வேதாகமப் பகுதியை நான் வாசிக்கும்போது என்னால் கர்மேல் பர்வதத்தை கண் முன்னால் கொண்டுவர முடிந்தது. நாங்கள் 2006 ல் இஸ்ரவேல் நாட்டை சுற்றிப்பார்க்க சென்றபோது கர்மேல் போகும்படியான கிருபையைக் கர்த்தர் கொடுத்தார். இரண்டாவது முறை சென்றபோது கர்மேல்… Continue reading இதழ்:2358 நம் தேவன் முற்றிலும் நம்பப்படத்தக்கவர் என்று புரிந்து கொண்டுள்ளாயா?

Tamil Bible study

இதழ்:2357 தேவன் ஒருவரே வானத்துக்கும், பூமிக்கும் கர்த்தர்!

1 இராஜாக்கள் 18:21 அப்பொழுது எலியா சகல ஜனத்தண்டைக்கும் வந்து: நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள்; கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் தெய்வமானால் அவனைப் பின்பற்றுங்கள் என்றான், ஜனங்கள் பிரதியுத்தரமாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை. ஒரு பெரிய ஜனக்கூட்டமே கர்மேல் மேல் திரண்டு விட்டது! ராஜாவாகிய ஆகாப், கர்த்தருடைய தீர்க்கதரிசியாகிய எலியா , யேசபேலின் பாகாலின் தீர்க்கதரிசிகள், மற்றும் தேவனுடைய பாதையை விட்டு விலகி சென்ற திரளான மக்கள் கூட்டம் அங்கு கூடியிருந்தனர்.… Continue reading இதழ்:2357 தேவன் ஒருவரே வானத்துக்கும், பூமிக்கும் கர்த்தர்!

Tamil Bible study

இதழ்:2356 பரலோக சந்தோஷத்தை அனுபவித்த அனுபவம் உண்டா?

1 இராஜாக்கள் 18:19 - 20  இப்போதும் கர்மேல் பர்வதத்திலே இஸ்ரவேலனைத்தையும், பாகாலின் தீர்க்கதரிசிகள் நானூற்றைம்பதுபேரையும், யேசபேலின் பந்தியிலே சாப்பிடுகிற தோப்பு விக்கிரகத்தின் தீர்க்கதரிசிகள் நானூறுபேரையும் என்னிடத்தில் கூட்டிக்கொண்டுவர ஆட்களை அனுப்பும் என்றான்.  அப்படியே ஆகாப்: இஸ்ரவேல் புத்திரர் எல்லாரிடத்திலும் ஆட்களை அனுப்பி, கர்மேல் பர்வதத்திலே அந்தத் தீர்க்கதரிசிகளைக் கூடிவரும்படி செய்தான். எழுப்புதல் என்ற வார்த்தைக்கு அர்த்தத்தைத் தேடினேன், அதற்கு மறுமலர்ச்சி, உயிர்ப்பு என்ற பொருள் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகாபுடைய ஆட்சி காலத்திலும், அவனுடைய தகப்பன் ஆண்ட காலத்திலும்… Continue reading இதழ்:2356 பரலோக சந்தோஷத்தை அனுபவித்த அனுபவம் உண்டா?

Tamil Bible study

இதழ்:2355 அவர் நம்மை விரல் நீட்டி குற்றவாளியாக்குவதில்லை!

1 இராஜாக்கள் 18: 15-18   அதற்கு எலியா: இன்றைக்கு என்னை அவனுக்குக் காண்பிப்பேன் என்று சேனைகளின் கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் என்றான். அப்பொழுது ஒபதியா போய், ஆகாபைச் சந்தித்து அவனுக்கு அதை அறிவித்தவுடனே, ஆகாப் எலியாவைச் சந்திக்கப்போனான். ஆகாப் எலியாவைக் கண்டபோது, ஆகாப் அவனை நோக்கி: இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நீயல்லவா என்றான்.அதற்கு அவன்: இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நான் அல்ல; கர்த்தரின் கட்டளைகளை விட்டு பாகால்களைப் பின்பற்றினதினால் நீரும் உம்முடைய தகப்பன்… Continue reading இதழ்:2355 அவர் நம்மை விரல் நீட்டி குற்றவாளியாக்குவதில்லை!

Tamil Bible study

இதழ்:2354 நீ எங்கே வேலை செய்கிறாயோ அங்கே தேவனை மகிமைப் படுத்து!

1 இராஜாக்கள் 18: 3-8 ..ஆகாப் அரமனை விசாரிப்புக்காரனாகிய ஒபதியாவை அழைப்பித்தான்; ஒபதியா கர்த்தருக்கு மிகவும் பயந்து நடக்கிறவனாயிருந்தான். யேசபேல் கர்த்தரின் தீர்க்கதரிசிகளை சங்கரிக்கிறபோது, ஒபதியா நூறு தீர்க்கதரிசிகளச் சேர்த்து, அவர்களை கெபிக்கு ஐம்பது ஐம்பதுபேராக ஒளித்துவைத்து , அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடுத்து அவர்களைப் பராமரித்து வந்தான். ஆகாப் ஒபதியாவைப் பார்த்து: நீ தேசத்திலிருக்கிற எல்லா நீரூற்றுகளிடத்திலும், எல்லா ஆறுகளிடத்திலும் போ; நாம் சகல மிருகஜீவன்களையும் சாகக்கொடாமல், குதிரைகளையும் கோவேறு கழுதைகளையுமாவது உயிரோடே காப்பாற்றும்படிக்கு நமக்குப்… Continue reading இதழ்:2354 நீ எங்கே வேலை செய்கிறாயோ அங்கே தேவனை மகிமைப் படுத்து!

Tamil Bible study

இதழ்:2353 தேவனின் நினைவுகளை நாம் அறியோம்!

1 இராஜாக்கள் 18: 1-2 அநேகநாள் சென்று, மூன்றாம் வருஷமாகையில், கர்த்தருடைய வார்த்தை எலியாவுக்கு உண்டாகி: நீ போய் ஆகாபுக்கு உன்னைக் காண்பி, நான் தேசத்தின் மேல் மழையைக் கட்டளையிடுவேன் என்றார்.  அப்பொழுது எலியா ஆகாபுக்குத் தன்னைக் காண்பிக்கப்போனான்.. அப்போஸ்தலனாகிய பவுலுக்கு வாலிபனான தீமோத்தேயு ஒரு மகனைப் போல என்று சொல்லலாம். புதிய ஏற்பாட்டில் தீமோத்தேயு 1, 2 புத்தகங்கள் இந்த கர்த்தருடைய பிள்ளைகள் இருவருக்கும் இடையே நடந்த உரையாடலை பதிவிட்டுளது, 2 தீமோத்தேய் 1:2 ல்… Continue reading இதழ்:2353 தேவனின் நினைவுகளை நாம் அறியோம்!

Tamil Bible study

இதழ்:2352 தேவன் நம்மை பல தலைமுறைகளுக்கு ஆசீர்வாதமாக்குவார்!

1 இராஜாக்கள் : 17: 4  அந்த ஆற்றின் தண்ணீரைக் குடிப்பாய், அங்கே உன்னைப் போஷிக்க, காகங்களுக்குக் கட்டளையிடுவேன் என்றார். 1 இராஜாக்கள் 17:19 - 21 அதற்கு அவன்: உன் குமாரனை என்னிடத்தில் தா என்று சொல்லி அவனை அவள் மடியிலிருந்து எடுத்து, தான் தங்கியிருக்கிற மேல் வீட்டிலே அவனைக் கொண்டுபோய் தன் கட்டிலின் மேல் வைத்து; ........அந்தப் பிள்ளையின்மேல் மூன்றுதரம் குப்புறவிழுந்து; என் தேவனாகியக் கர்த்தாவே, இந்தப் பிள்ளையின் ஆத்துமா அவனுக்குள் திரும்பிவரப்பண்ணும் என்று… Continue reading இதழ்:2352 தேவன் நம்மை பல தலைமுறைகளுக்கு ஆசீர்வாதமாக்குவார்!

Tamil Bible study

இதழ்:2351 வாக்கு மாறாத வல்ல தேவன்!

1 இராஜாக்கள் 17:21 - 23  அந்தப் பிள்ளையின்மேல் மூன்றுதரம் குப்புறவிழுந்து; என் தேவனாகியக் கர்த்தாவே, இந்தப் பிள்ளையின் ஆத்துமா அவனுக்குள் திரும்பிவரப்பண்ணும் என்று கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான். கர்த்தர் எலியாவின் சத்தத்தைக் கேட்டார், பிள்ளையினுடைய ஆத்துமா அவனுள் திரும்பி வந்தது .......... எலியா பிள்ளையை எடுத்து .......அவன் தாயினிடத்தில் கொடுத்து: பார் உன் பிள்ளை உயிரோடிருக்கிறான் என்றான். இன்றைய வேதாகமப்பகுதியை வாசிப்போமானால், அன்று அந்த சிறிய குடிசையில், அந்த விதவையின் வீட்டில் விவரிக்கமுடியாத சந்தோஷம்… Continue reading இதழ்:2351 வாக்கு மாறாத வல்ல தேவன்!

Tamil Bible study

இதழ்:2350 இருளில் ஒளி வீசும் தீபம் போன்ற போதனை!

1 இராஜாக்கள் 17: 9  அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று. அவர் நீ எழுந்து சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருக்குப் போய் அங்கே தங்கியிரு, உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்குக் கட்டளையிட்டேன் என்றார். இந்த வசனத்தில்தான் நாம் முதன்முதலில் சாறிபாத் விதவையை சந்திக்கிறோம்.  நான் இதை முதலில் வாசித்தபோது என் மனதில் எழுந்த ஒரு கேள்வி என்னவென்றால், ஏன் தேவனாகியக் கர்த்தர், தம்முடைய ஊழியக்காரனை ஒரு தனிமையில் வாழ்ந்த விதவையினிடத்தில், அதுவும் ஒரு பைசா… Continue reading இதழ்:2350 இருளில் ஒளி வீசும் தீபம் போன்ற போதனை!

Tamil Bible study

இதழ்:2349 உன் கடந்த காலம் ஆசீர்வாதத்தைத் தடை செய்ய முடியாது!

1 இராஜாக்கள் 17: 18   அப்பொழுது அவள் எலியாவை நோக்கி, தேவனுடைய மனுஷனே எனக்கும் உமக்கும் என்ன? என் அக்கிரமத்தை நினைக்கப் பண்ணவும், என் குமாரனை சாகப்பண்ணவுமா என்னிடத்தில் வந்தீர் என்றாள், வேதத்தில் நாம் காணும் மனிதர்களில் ஒருவன் தன் வாழ்வை அதிகமாக நாசம் செய்து விட்டான் என்றால் அது தாவீது என்றே நான் சொல்வேன்! இன்னொருவனின் மனைவிமேல் காமம் கொண்டது மட்டுமல்லாமல், அவள் கர்ப்பவதியானாள் என்றவுடன் அவளது கணவனைத் திட்டமிட்டுக் கொலை செய்தவன். இப்படி… Continue reading இதழ்:2349 உன் கடந்த காலம் ஆசீர்வாதத்தைத் தடை செய்ய முடியாது!