1 இராஜாக்கள் 17:17 - 20 இவைகள் நடந்த பின்பு வீட்டுக்காரியாகிய அந்த ஸ்திரீயின் மகன் வியாதியில் விழுந்தான். அவனுடைய சுவாசம் போகுமட்டும் அவனுடைய வியாதி அதிகரித்துக்கொண்டே இருந்தது. அப்பொழுது அவள் எலியாவை நோக்கி, தேவனுடைய மனுஷனே எனக்கும் உமக்கும் என்ன? அதற்கு அவன்: உன் குமாரனை என்னிடத்தில் தா என்று சொல்லி அவனை அவள் மடியிலிருந்து எடுத்து, தான் தங்கியிருக்கிற மேல் வீட்டிலே அவனைக் கொண்டுபோய் தன் கட்டிலின் மேல் வைத்து; என் தேவனாகியக் கர்த்தாவே,… Continue reading இதழ்:2348 நம் உடனடித் தேவைகள் மட்டுமல்ல எதிர்காலத் தேவைகளையும் அறிந்த தேவன்!
Author: Prema Sunder Raj
இதழ்:2347 வேதத்தின் பொன்னான பொக்கிஷங்களைத் தவற விடாதே!
1 இராஜாக்கள் 17:19 அதற்கு அவன்: உன் குமாரனை என்னிடத்தில் தா என்று சொல்லி அவனை அவள் மடியிலிருந்து எடுத்து, தான் தங்கியிருக்கிற மேல் வீட்டிலே அவனைக் கொண்டுபோய் தன் கட்டிலின் மேல் வைத்து; நான் இன்று ஒரு உண்மையை சொல்லித்தான் ஆக வேண்டும். நான் என் வாழ்வில் இதைத் தவற விட்டிருப்பேன்! எனக்கு வேதத்தில் உள்ள கதைகளெல்லாம் நன்றாகத் தெரியும் என்ற எண்ணம் எனக்கு! எவ்வளவு பெரிய தவறு தெரியுமா அது! இன்று நான் வேதம்… Continue reading இதழ்:2347 வேதத்தின் பொன்னான பொக்கிஷங்களைத் தவற விடாதே!
இதழ்:2346 ஒருவரை சோர்ந்துபோக விடாமல் உற்சாகப்படுத்தும் வார்த்தைகள்!
1 இராஜாக்கள் 17: 18 அப்பொழுது அவள் எலியாவை நோக்கி, தேவனுடைய மனுஷனே எனக்கும் உமக்கும் என்ன? என் அக்கிரமத்தை நினைக்கப் பண்ணவும், என் குமாரனை சாகப்பண்ணவுமா என்னிடத்தில் வந்தீர் என்றாள், சாறிபாத் விதவையின் ஒரே மகன் இறந்துவிட்டான். அவளும் அவளுடைய குமாரனும் உணவில்லாமல் நாம் மரித்து விடுவோம் என்று நினைத்த வேளையில் அற்புதமாய்க் காப்பாற்றப்பட்டனர். நமக்கு வந்த ஆபத்து போய்விட்டது, இனி பஞ்சம் நீங்கும்வரை எந்தப் பிரச்சனையும் வராது என்று அந்தப்பெண் திருப்தியடைந்த வேளையில்,… Continue reading இதழ்:2346 ஒருவரை சோர்ந்துபோக விடாமல் உற்சாகப்படுத்தும் வார்த்தைகள்!
இதழ்:2345 வார்த்தைகளால் தாக்கப்படுகிறாயா?
இராஜாக்கள் 17:17 - 18 இவைகள் நடந்த பின்பு வீட்டுக்காரியாகிய அந்த ஸ்திரீயின் மகன் வியாதியில் விழுந்தான். அவனுடைய சுவாசம் போகுமட்டும் அவனுடைய வியாதி அதிகரித்துக்கொண்டே இருந்தது. அப்பொழுது அவள் எலியாவை நோக்கி, தேவனுடைய மனுஷனே எனக்கும் உமக்கும் என்ன? சில நேரங்களில் நான் வேதத்தைப் படிக்கும்போது, சிலருடைய வாழ்வில் நடந்த சம்பவங்களைப் பார்த்து ஏன் இப்படி நடந்தது, இந்த மனுஷனுக்கு ஏன் இவ்வளவு கஷ்டங்கள் கொடுக்கப்பட்டது என்று எனக்குள் கேட்பதுண்டு. அந்த மாதிரியானத் தருணம்தான் இதுவும்.… Continue reading இதழ்:2345 வார்த்தைகளால் தாக்கப்படுகிறாயா?
இதழ்:2344 துக்கிப்போருக்கு ஆறுதலைக் கொடுக்கிறோமா?
1 இராஜாக்கள் 17:17 இவைகள் நடந்த பின்பு வீட்டுக்காரியாகிய அந்த ஸ்திரீயின் மகன் வியாதியில் விழுந்தான். அவனுடைய சுவாசம் போகுமட்டும் அவனுடைய வியாதி அதிகரித்துக்கொண்டே இருந்தது. எலியாவும், சாறிபாத்தின் விதவையும் கொஞ்ச நாட்கள் தங்களுடைய தினசரி வாழ்வைத் தொடர்ந்த பின்னர், வேதம் கூறுகிறது, அந்தப் பெண்ணின் ஒரே மகன் நோய்வாய்ப்படுகிறான். அவனுடைய சுவாசம் போகுமட்டும் என்கிற வார்த்தை அவன் மரித்துப் போனதைக் காட்டுகிறது. அவனுடைய தாயைப் பிள்ளையில்லாதவளாகத் தவிக்கவிட்டு அவன் மரித்துப் போகிறான். அந்த விதவை இதுவரை… Continue reading இதழ்:2344 துக்கிப்போருக்கு ஆறுதலைக் கொடுக்கிறோமா?
இதழ்:2343 உயரச் செல்ல வேண்டியதில்லை! தாழ இறங்கு!
1 இராஜாக்கள் 17:17 இவைகள் நடந்த பின்பு வீட்டுக்காரியாகிய அந்த ஸ்திரீயின் மகன் வியாதியில் விழுந்தான். அவனுடைய சுவாசம் போகுமட்டும் அவனுடைய வியாதி அதிகரித்துக்கொண்டே இருந்தது. இந்த மாதத்தின் முதல் நாளைக் காணச்செய்த தேவனுக்கு கோடான கோடிஸ்தோத்திரம்! இந்த மாதம் முவதும் அவர் நம்மோடிருந்து, காத்து , வழிநடத்துமாறு ஜெபிப்போம். எலியாவைப் பற்றி எழுதுவதற்காக நான் அதிகமாகப் படித்துக் கொண்டிருந்தபோது, வேதாகம வால்லுநர்கள் எலியாவைப் பற்றி சிந்தித்து அவருடைய வாழ்வின் உண்மையை எழுதிய விதம் என்னை ஆச்சரியப்பட… Continue reading இதழ்:2343 உயரச் செல்ல வேண்டியதில்லை! தாழ இறங்கு!
இதழ்:2342 தினசரி தேவைகளை சந்திக்கும் தேவன்!
1 இராஜாக்கள் 17:15 அவள் போய் எலியாவின் சொற்படி செய்தா:; அவளும், இவனும், அவள் வீட்டாரும் அநேக நாள் சாப்பிட்டார்கள். சாறிபாத்தின் விதவைக்கு கர்த்தர் ஒரு விசேஷமானத் தருணத்தைக் கொடுத்தார். தீர்க்கதரிசியான எலியா அவளிடம் கொஞ்சம் அப்பம் கொண்டுவா என்று கட்டளையிட்டபோது, அவள் தன்னுடைய நிலையை அவனுக்கு விளக்குகிறாள். அதைகேட்ட பின்னரும் எலியா அவளிடம் தனக்கு முதலில் தனக்கு ஒரு அடையைப் பண்ணுமாறு கூறியது மட்டுமல்லாமல், அவளுக்கும் அவள் குமாரனுக்கும் கூட பண்ணும்படியாக உத்தரவிடுகிறான். நான் ஒருவேளை… Continue reading இதழ்:2342 தினசரி தேவைகளை சந்திக்கும் தேவன்!
இதழ்:2341 உடன்படிக்கையின் பங்காளியாக கொடுக்கப்படும் தருணம்!
1 இராஜாக்கள் 17:13,14 அப்பொழுது எலியா அவளைப் பார்த்து: பயப்படாதே, நீ போய் உன் வார்த்தையின்படி ஆயத்தப்படுத்து.... கர்த்தர் தேசத்தின் மேல் மழையைக் கட்டளையிடும் நாள்மட்டும் பானையின் மா செலவழிந்து போவதும் இல்லை, கலசத்தின் எண்ணெய் குறைந்து போவதுமில்லை என்று இஸ்ரவேலின் தேவனாகியக் கர்த்தர் சொல்லுகிறார் என்றான். 20 ம் நூற்றாண்டில் பிரபலமான சுவிசேஷகர் பால் ராடர் அவர்களின் சரித்திரத்தைப் பற்றிப் படித்தேன். அவர் தனுடைய சிறு வயதிலேயே அவர் தகப்பனாருடன் அமெரிக்காவின் பல மாகாணங்களுக்கு ஊழியத்துக்கு… Continue reading இதழ்:2341 உடன்படிக்கையின் பங்காளியாக கொடுக்கப்படும் தருணம்!
இதழ்:2340 என்றென்றும் ஜீவிக்கிற தேவன்!
1 இராஜாக்கள் 17:12 அதற்கு அவள் பானையில் ஒரு பிடி மாவும், கலயத்தில் கொஞ்சம் எண்ணெயுமே அல்லாமல், என்னிடத்தில் ஒரு அடையும் இல்லையெண்ரு உம்முடைய தேவனாகியக் கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன். இதோ நானும் என் குமாரனும் சாப்பிட்டுச் செத்துபோக, அதை எனக்கும் அவனுக்கும் ஆயத்தப்படுத்துகிறதற்கு இரண்டு விறகு பொறுக்குகிறேன் என்றாள். இதுவரை நாம் திஸ்பியனாகிய எலியா கேரீத்தண்டை பெற்ற அனுபவத்தைப் படித்தோம், பின்னர் எலியா அந்நிய தேசத்திலுள்ள சாறிபாத்துக்கு ஒரு முன்பின் தெரியாத விதவையண்டை அனுப்பப்பட்டதைப் பார்த்தோம்.… Continue reading இதழ்:2340 என்றென்றும் ஜீவிக்கிற தேவன்!
இதழ்:2339 கர்த்தர் அற்புதங்களை செய்யத் தூண்டும் நம் கீழ்ப்படிதல்!
1 இராஜாக்கள் 17:10-11 அப்படியே அவன் எழுந்து சாறிபாத்துக்கு போனான், அந்தப் பட்டணத்தின் ஒலிமுகவாசலுக்கு அவன் வந்தபோது, அங்கே ஒரு விதவை விறகு பொறுக்கிக்கொண்டிருந்தாள்.அவன் அவளைப் பார்த்துக் கூப்பிட்டு, நான் குடிக்கிறதற்குக் கொஞ்சம் தண்ணீர் ஒரு பாத்திரத்தில் எனக்குக் கொண்டுவா என்றான். கொண்டுவர அவள் போகிறபோதுஅவன் அவளை நோக்கிக் கூப்பிட்டு, கொஞ்சம் அப்பமும் உன் கையிலே எனக்குக் கொண்டுவா என்றான். நாம் இன்றைய வேதாகமப் பகுதியில் எலியாவுக்கும் , இந்த அந்நிய நாட்டு விதவைக்கும் முதல் சந்திப்பிலே… Continue reading இதழ்:2339 கர்த்தர் அற்புதங்களை செய்யத் தூண்டும் நம் கீழ்ப்படிதல்!
