Today early morning unable to sleep at 3 a.m, I looked outside through my balcony. The world was quiet, other than the loud whistle of the wind all was still. The moon cast only a very small ray of light, and the stars seemed to pop out of the sky, chasing away the clouds. And… Continue reading Awesome God!
Author: Rajavinmalargal
மலர் 7 இதழ்: 590 இவற்றிற்காக கூட ஜெபிக்கலாமா?
1 சாமுவேல் 9:3,6 சவுலின் தகப்பனாகிய கீசுடைய கழுதைகள் காணாமற் போயிற்று.ஆகையால் கீச் தன் குமாரனாகிய சவுலை நோக்கி: நீ வேலைக்காரரில் ஒருவனைக் கூட்டிக் கொண்டு, கழுதைகளைத் தேட புறப்பட்டு சென்றான். அதற்கு அவன்: இந்தப் பட்டணத்திலே தேவனுடைய மனுஷன் ஒருவர் இருக்கிறார். அவர் பெரியவர். அவர் சொல்லுகிறதெல்லாம் தப்பாமல் நடக்கும். அங்கே போவோம். ஒருவேளை அவர் நாம் போகவேண்டிய நம்முடைய வழியை நமக்குத் தெரிவிப்பார் என்றான். காணவில்லை! சவுல் வீட்டுக் கழுதைகளைக் காணவில்லை! சவுலின் தகப்பனாகிய… Continue reading மலர் 7 இதழ்: 590 இவற்றிற்காக கூட ஜெபிக்கலாமா?
மலர் 7 இதழ்: 589 ஒரு எச்சரிக்கையான வாழ்க்கை!
1 சாமுவேல்: 10:9 அவன் சாமுவேலை விட்டுப் போகும்படித் திரும்பினபோது, தேவன் அவனுக்கு வேறே இருதயத்தைக் கொடுத்தார். இஸ்ரேவேலின் முதல் ராஜாவாகும்படி தெரிந்து கொள்ளப் பட்ட சவுல் தான் ஒரு பென்யமீன் கோத்திரத்தான் என்றும், மிகவும் அற்பமானக் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்றும் கூறியதைப் பார்த்தோம். தேவனுடைய உத்தம தீர்க்கதரிசியான சாமுவேல், சவுலை இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகிக்க வந்தபோது அவர் சவுலை நோக்கி, கர்த்தருடைய ஆவி உம் மேல் இறங்கும்போது நீ பழைய மனிதனைப்போல அல்ல புதியவனாவாய் என்றார்.… Continue reading மலர் 7 இதழ்: 589 ஒரு எச்சரிக்கையான வாழ்க்கை!
மலர் 7 இதழ்: 588 என்னையாத் தேடினீர் ஐயா?
1 சாமுவேல்: 9:21 அப்பொழுது சவுல் பிரதியுத்தரமாக: நான் இஸ்ரவேல் கோத்திரங்களிலே சிறிதான பென்யமீன் கோத்திரத்தான் அல்லவா? பென்யமீன் கோத்திரத்துக் குடும்பங்களிலெல்லாம் என் குடும்பம் அற்பமானது அல்லவா? நீர் இப்படிப்பட்ட வார்த்தையை என்னிடத்தில் சொல்வானேன் என்றான். ஒருமுறை கர்த்தருடைய ஊழியர் ஒருவர் எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். ஒரு வெள்ளைக் காகிதத்தில் 2 பக்கங்கள் அவர் வாங்கியிருந்த பட்டங்களையும், விருதுகளையும் பற்றி எழுதியிருந்தார். அதைப் பார்த்தவுடன் இவர் என்ன வேலைக்கா விண்ணப்பித்திருக்கிறார் என்று நினைத்தேன்! ஒரு வேலைக்கு… Continue reading மலர் 7 இதழ்: 588 என்னையாத் தேடினீர் ஐயா?
மலர் 7 இதழ்: 587 அனுதின வாழ்வில் காணும் தேவ பிரசன்னம்!
1 சாமுவேல் 9: 11,12 அவர்கள் பட்டணத்து மேட்டின்வழியாய் ஏறுகிறபோது, தண்ணீர் எடுக்கவந்த பெண்களைக் கண்டு: ஞானதிருஷ்டிக்காரன் இங்கே இருக்கிறாரா என்று அவர்களைக் கேட்டார்கள். அதற்கு அவர்கள்: இருக்கிறார். இதோ, உங்களுக்கு எதிரே இருக்கிறார். தீவிரமாய்ப் போங்கள். இன்றைக்கு ஜனங்கள் மேடையில் பலியிடுகிறபடியினால், இன்றையதினம் பட்டணத்திற்கு வந்தார். என்னுடைய சிறு வயதிலிருந்தே வேதாகமத்தின் கதைகளை நான் ஆவலோடே கேட்பேன். உண்மையில் சொல்லப்போனால் தானியேல் சிங்கக் குகையில் இருந்த கதை, எபிரேய வாலிபர் மூவர் அக்கினிச் சூளையில் இருந்து… Continue reading மலர் 7 இதழ்: 587 அனுதின வாழ்வில் காணும் தேவ பிரசன்னம்!
மலர் 7 இதழ்: 586 முக அழகா? அக அழகா?
1 சாமுவேல்: 9:2 அவனுக்கு சவுல் என்னும் பேருள்ள சவுந்தரியமான வாலிபனாகிய ஒரு குமாரன் இருந்தான். இஸ்ரவேல் புத்திரரில் அவனைப்பார்க்கிலும் சவுந்தரியவான் இல்லை. எல்லா ஜனங்களும் அவன் தோளுக்குக் கீழாயிருக்கத்தக்க உயரமுள்ளவனாயிருந்தான். இஸ்ரவேல் மக்கள் ராஜா தான் வேண்டும் என்று கேட்டனர்! கர்த்தர் அவர்கள் கேட்டதற்கு அதிகமாகவே அவர்களுக்கு அருளிச் செய்தார்! ஆம்! அதிகமாகவே என்பதற்கு அர்த்தம் அவர்களுக்கு கர்த்தர் ஏற்படுத்திக் கொடுத்த முதல் ராஜாவான சவுலைக் குறித்துதான் சொல்கிறேன்!. கர்த்தர் சாமுவேலை அனுப்பி மகா சவுந்தரியவனாகிய… Continue reading மலர் 7 இதழ்: 586 முக அழகா? அக அழகா?
மலர் 7 இதழ்: 585 என் இஷ்டம் போல என் வாழ்க்கை!
1 சாமுவேல்: 8:9 இப்பொழுதும் அவர்கள் சொல்லைக் கேள். ஆனாலும் உன் அபிப்பிராயத்தைக் காட்டும்படி அவர்களை ஆளும் ராஜாவின் காரியம் இன்னது என்று அவர்களுக்குத் திடசாட்சியாய்த் தெரியப்படுத்து என்றார். இன்றைய வேதாகம வசனம் எனக்கு என்னுடைய அம்மாவைத் தான் ஞாபகப்படுத்தியது. என் வாலிப நாட்களில் அம்மா என்னை ஒருநாளும் தனியாக ஆண்களோடு அனுப்பியதில்லை. என் கூடப் படித்தவர்கள் வீட்டுக்குக்கூட அவர்கள் பெற்றோர் இல்லாதபோது அனுப்ப மாட்டார்கள். மற்ற பிள்ளைகள் ஒன்று சேர்ந்து அங்கு இங்கு சுற்றும்போது எனக்கு… Continue reading மலர் 7 இதழ்: 585 என் இஷ்டம் போல என் வாழ்க்கை!
மலர் 7 இதழ்: 584 செத்த மீன் தான் எதிர் நீச்சல் அடிக்காது!
1 சாமுவேல் 8:4-5 அப்பொழுது இஸ்ரவேலின் மூப்பர் எல்லாரும் கூட்டங்கூடி, ராமாவிலிருந்த சாமுவேலிடத்தில் வந்து,இதோ நீர் முதிர்வயதுள்ளவரானீர். உம்முடைய குமாரர் உம்முடைய வழிகளில் நடக்கிறதில்லை. ஆகையால் சகல ஜாதிக்குள்ளும் இருக்கிறபடி, எங்களை நியாயம் விசாரிக்கிறதற்கு, ஒரு ராஜாவை ஏற்படுத்த வேண்டும் என்றார்கள். சமீபத்தில் நான் பலகாரத்தை ஒரே மாதிரி வெட்டுகிற ஒரு பிளாஸ்டிக் உபகரணத்தை வாங்கினேன். அதற்குள் மாவை வைத்து அழுத்தினால் அது ஒரே மாதிரி, ஒரே டிசைனில் அந்த மாவை அழுத்திக் கொடுக்கும். இது… Continue reading மலர் 7 இதழ்: 584 செத்த மீன் தான் எதிர் நீச்சல் அடிக்காது!
மலர் 7 இதழ்: 585 தள்ளப்பட்டது நீயல்ல நானே!
1 சாமுவேல் 8: 6-7 எங்களை நியாயம் விசாரிக்க ஒரு ராஜாவை ஏற்படுத்தும் என்று அவர்கள் சொன்ன வார்த்தை சாமுவேலுக்குத் தகாததாய்க் காணப்பட்டது. ஆகையால் சாமுவேல் கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான்.அப்பொழுது கர்த்தர் சாமுவேலை நோக்கி, ஜனங்கள் உன்னிடத்தில் சொல்வதெல்லாவற்றிலும் அவர்கள் சொல்லைக் கேள். அவர்கள் உன்னைத் தள்ளவில்லை. நான் அவர்களை ஆளாதபடிக்கு , என்னைத்தான் தள்ளினார்கள். சாமுவேலின் பிள்ளைகள் இருவரும் தங்களை நியாயம் தீர்க்க தகுதியில்லாதவர்கள் என்று உதறித் தள்ளிவிட்டு, தங்களை சுற்றியுள்ள மற்ற ஜாதியினர் போலத்… Continue reading மலர் 7 இதழ்: 585 தள்ளப்பட்டது நீயல்ல நானே!
மலர் 7 இதழ்: 583 நியாயம் விலை போயிற்று!
1 சாமுவேல் 8: 1-3, சாமுவேல் முதிர்வயதானபோது தன் குமாரரை இஸ்ரவேலின்மேல் நியாதிபதிகளாக வைத்தான் அவனுடைய மூத்த குமாரனுக்குப் பெயர் யோவேல். இளையவனுக்கு பெயர் அபியா. அவர்கள் பெயெர்செபாவிலே நியாதிபதிகளாயிருந்தார்கள். ஆனாலும் அவனுடைய குமாரர் அவன் வழிகளில் நடவாமல்,பொருளாசைக்குச் சாய்ந்து, பரிதானம் வாங்கி நியாயத்தைப் புரட்டினார்கள். இந்த வேதாகமப் பகுதியில் சாமுவேல் முதிர் வயதாகிப் பார்க்கிறோம். தன் வாழ்நாள் முழுவதும் அசைக்க முடியாத கற்பாறை போன்று கர்த்தருக்காக வாழ்ந்த ஒரு மனிதன் அவர். இஸ்ரவேல் மக்கள் தேவையில்… Continue reading மலர் 7 இதழ்: 583 நியாயம் விலை போயிற்று!
