2 சாமுவேல் 13: 21,22 தாவீதுராஜா இந்த செய்திகளையெல்லாம் கேள்விப்பட்ட போது, வெகு கோபமாயெரிந்தான். அப்சலோம் அம்னோனிடம் நன்மையாகிலும் தீமையாகிலும் பேசவில்லை. தன் சகோதரியாகிய தாமாரை அம்னோன் கற்பழித்த காரியத்தினிமித்தம் அப்சலோம் அவனைப் பகைத்தான். எலியா தீர்க்கதரிசியைப் பற்றித் தொடரும் முன் ஒரு சிறிய இடைவேளை தேவைப்படுகிறது. ஒருநாள் ஒரு டிவி நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்தேன். எதிர்மாறான கட்சிக்காரர் இருவர் பேச ஆரம்பித்தபோது அங்கிருந்த நடுவரால் அவர்களை அடக்கவே முடியவில்லை. அவர்கள் சத்தமாக ஒருவரையொருவர் பேசவிடாமல் தடுத்து கூச்சலிட… Continue reading இதழ்:1796 நாவினால் அல்ல கிரியையினால் அன்பு கூறுவோம்!
Category: Tamil Christian Families
இதழ்:1795 நீ கைவிடப்பட்டு தனித்து நிற்கையில்!
1 இராஜாக்கள் 19:10 நான் ஒருவன் மாத்திரம் மீதியாயிருக்கிறேன்; என் பிராணனையும் வாங்கத் தேடுகிறார்கள் என்றான். எலியா கர்மேல் பர்வதத்தில் தேவனுக்காக தனித்து நின்றான்! பாகாலின் தீர்க்கதரிசிகளை தனிமையாக எதிர்கொண்டான்! ஆனால் இப்பொழுதோ அவன் ஓரேப் பர்வதத்தில் ஒரு குகையில் தனிமையாக வாடி நின்றான். என்னை புரிந்து கொள்ள யாரும் இல்லை! என்னுடைய வலி யாருக்கும் புரியாது! இந்த எண்ணங்கள் நாம் கைவிடப்பட்ட நிலையில் நிற்கும் போதுதான் நமக்கு வரும். விசேஷமாக நாம் நம்மை சுற்றியிருப்பவர்களுக்காக நம்முடைய… Continue reading இதழ்:1795 நீ கைவிடப்பட்டு தனித்து நிற்கையில்!
இதழ்:1794 பார சுமை அதிகரிக்கும்போது அன்பின் கரம் உன்னை அரவணைக்கும்!
1 இராஜாக்கள் 19: 9,10 இதோ, கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி, அவர்: எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம் என்றார். அதற்கு அவன்: சேனைகளின் தேவனாகிய கர்த்தருக்காக வெகு பக்திவைராக்கியமாயிருந்தேன்; இஸ்ரவேல் புத்திரர் உமது உடன்படிக்கையைத் தள்ளிவிட்டார்கள்; உம்முடைய பலிபீடங்களை இடித்து, உம்முடைய தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தினால் கொன்றுபோட்டார்கள்; நான் ஒருவன் மாத்திரம் மீதியாயிருக்கிறேன்; என் பிராணனையும் வாங்கத் தேடுகிறார்கள் என்றான். எலியா மிகுந்த களைப்போடு பெயர்செபாவை நோக்கி ஓடியது நமக்குத் தெரியும்! அங்கே கர்த்தர் தன்… Continue reading இதழ்:1794 பார சுமை அதிகரிக்கும்போது அன்பின் கரம் உன்னை அரவணைக்கும்!
இதழ்:1793 இருண்ட கெபியிலும் உன்னோடிருக்கிறவர்!
1 இராஜாக்கள் 19:9 அங்கே அவன் ஒரு கெபிக்குள் போய்த் தங்கினான்; இதோ, கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி, அவர்: எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம் என்றார். எலியாவுக்கு ஒரு நீண்ட பிரயாணம் இது! நாற்பது நாட்கள் இராப்பகலாய் நடந்தான்! ஓரேப் பர்வதத்தில் ஏறிய அவனுக்கு ஒரு குகை கண்களில் பட்டது! அங்கே தங்க அவன் முடிவு செய்தான்! எபிரேய மொழியில் இந்த வார்த்தை தங்கினான் என்பதின் அர்த்தத்தை இன்று பார்க்கலாம் என்று நினைக்கிறேன், ஏனெனில்… Continue reading இதழ்:1793 இருண்ட கெபியிலும் உன்னோடிருக்கிறவர்!
இதழ்:1792 தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனுமானவர்!
1 இராஜாக்கள் 19:8 அப்பொழுது அவன் எழுந்திருந்து புசித்துக் குடித்து, அந்த போஜனத்தின் பலத்தினால் நாற்பது நாள் இரவு பகல் ஓரேப் என்னும் தேவனுடைய பர்வதமட்டும் நடந்து போனான். சங்கீதம் 46:1 தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமானவர். இந்த சஙீதம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று! பூமியே அதிர்ந்தாலும், தண்ணீர் புரண்டு வந்தாலும், நம்முடைய தேவன் நமக்கு அளிக்கும் பெலன் அற்புதமானது! புயலடிக்கும் வாழ்விலும் எதிர்த்து போராட அவர் பெலன் தருவார் என்ற… Continue reading இதழ்:1792 தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனுமானவர்!
இதழ்:1791 என்னிடம் வா! இளைப்பாறுதல் தருவேன்!
1 இராஜாக்கள் 19:5-7 ஒரு சூரைச்செடியின்கீழ்ப் படுத்துக்கொண்டு நித்திரைபண்ணினான்; அப்பொழுது ஒரு தூதன் அவனைத் தட்டியெழுப்பி: எழுந்திருந்து போஜனம்பண்ணு என்றான். அவன் விழித்துப் பார்க்கிறபோது, இதோ, தழலில் சுடப்பட்ட அடையும், ஒரு பாத்திரத்தில் தண்ணீரும் அவன் தலைமாட்டில் இருந்தது; அப்பொழுது அவன், புசித்துக் குடித்துத் திரும்பப் படுத்துக்கொண்டான். கர்த்தருடைய தூதன் திரும்ப இரண்டாந்தரம் வந்து அவனைத் தட்டியெழுப்பி: எழுந்திருந்து போஜனம்பண்ணு; நீ பண்ணவேண்டிய பிரயாணம் வெகுதூரம் என்றான். தசை நாரெல்லாம் வலிக்கிறது என்று சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன். சில… Continue reading இதழ்:1791 என்னிடம் வா! இளைப்பாறுதல் தருவேன்!
இதழ்:1790 மரியாளைப் போல நல்ல பங்கைத் தேடு!
1 இராஜாக்கள் 19:4 அவன் வனாந்தரத்தில் ஒருநாள் பிரயாணம் போய், ஒரு சூரைச்செடியின் கீழ் உட்கார்ந்து, தான் சாகவேண்டும் என்று கோரி: போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்; நான் என் பிதாக்களைப்பார்க்கிலும் நல்லவன் அல்ல என்று சொல்லி, கர்மேல் பர்வதத்தில் நடந்ததேவனுடைய பெரிய மகத்துவமான, வல்லமையான செயலால், பாகாலின் தீர்க்கதரிசிகளின் பட்டாளத்தையே அழித்து விட்டு அந்த மலையை விட்டு இறங்கி இன்னும் 24 மணி நேரம் கூட ஆகவில்லை. கர்த்தர் வானத்து அக்கினி மூலம் எலியாவுடைய… Continue reading இதழ்:1790 மரியாளைப் போல நல்ல பங்கைத் தேடு!
இதழ்:1789 தேவனுடைய கரத்தை கிரியை செய்ய வைக்கும் ஜெபம்!
1 இராஜாக்கள் 18:41 தன் ஊழியக்காரனை நோக்கி: நீ போய்ச் சமுத்திரமுகமாய்ப் பார் என்றான்; அவன் போய்ப் பார்த்து, ஒன்றும் இல்லை என்றான்; நீ இன்னும் ஏழுதரம் போய்ப் பார் என்றான். யாக்கோபு 5:17,18 எலியா என்பவன் நம்மைப்போலப் பாடுள்ள மனுஷனாயிருந்தும், மழைபெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம்பண்ணினான், அப்பொழுது மூன்று வருஷமும் ஆறு மாதமும் பூமியின்மேல் மழை பெய்யவில்லை.மறுபடியும் ஜெபம்பண்ணினான், அப்பொழுது வானம் மழையைப் பொழிந்தது, பூமி தன் பலனைத் தந்தது. கர்த்தராகிய இயேசுவின் அப்போஸ்தலனாகிய யாக்கோபுக்காக இந்த… Continue reading இதழ்:1789 தேவனுடைய கரத்தை கிரியை செய்ய வைக்கும் ஜெபம்!
இதழ்:1788 அகந்தை உன்னை அழித்து விடும்!
2 இராஜாக்கள் 9:30 - 35 யெகூ யெஸ்ரயேலுக்கு வந்தான்; அதை யேசபேல் கேட்டபோது, தன் கண்களுக்கு மையிட்டு, தன் தலையைச் சிங்காரித்துக்கொண்டு, ஜன்னல் வழியாய் எட்டிப்பார்த்து, யெகூ ஒலிமுகவாசலில் வந்தபோது, அவள்: தன் ஆண்டவனைக் கொன்ற சிம்ரி ஷேமம் அடைந்தானா என்றாள். அப்பொழுது அவன் தன் முகத்தை அந்த ஜன்னலுக்கு நேராக ஏறெடுத்து: என் பட்சத்தில் இருக்கிறது யார்? யார்? என்று கேட்டதற்கு, இரண்டு மூன்று பிரதானிகள் அவனை எட்டிப்பார்த்தார்கள். அப்பொழுது அவன்: அவளைக் கீழே… Continue reading இதழ்:1788 அகந்தை உன்னை அழித்து விடும்!
இதழ்:1786 யேசபேலுக்கு துணை போகாதே! எதிர்த்து நில்!
1 இராஜாக்கள் 21: 8 - 15 நீ அவனைப் பார்த்து: நீ கொலை செய்ததும் எடுத்துக்கொண்டதும் இல்லையோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; நாய்கள் நாபோத்தின் இரத்தத்தை நக்கின ஸ்தலத்திலே உன்னுடைய இரத்தத்தையும் நாய்கள் நக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார். நீ அவனைப் பார்த்து: நீ கொலை செய்ததும் எடுத்துக்கொண்டதும் இல்லையோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; நாய்கள் நாபோத்தின் இரத்தத்தை நக்கின ஸ்தலத்திலே உன்னுடைய இரத்தத்தையும் நாய்கள் நக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்… Continue reading இதழ்:1786 யேசபேலுக்கு துணை போகாதே! எதிர்த்து நில்!
