எண்ணாகமம்: 27: 1,2 யோசேப்பின் குமாரனாகிய மனாசேயின் குடும்பங்களில் மனாசேயின் குமாரனாகிய மாகீரின் மகனாகிய கிலெயாத்துக்குப் பிறந்த ஏபேருக்கு புத்திரனாயிருந்த செலோப்பியாத்தின் குமாரத்திகளாகிய மக்லான், நோவாள், ஓக்லாள், மில்காள், திர்சாள் என்பவர்கள் வந்து, ஆசரிப்பு கூடாரவாசலிலே மோசேக்கும், ஆசாரியனாகிய எலெயாசாருக்கும், பிரபுக்களுக்கும், சபையனைத்திற்கும் முன்பாக நின்று; எண்ணாகமத்திலிருந்து நாம் அநேக காரியங்களை படித்துக் கொண்டிருக்கிறோம் அல்லவா? உங்களைப் போலத்தான் நானும் இந்த புத்தகத்தை அதிகமாக படிக்காமல் ஒதுக்கினேன். இதில் நம் பரலோகப் பிதா, நமக்காக எத்தனை பொக்கிஷங்களை… Continue reading இதழ்: 1099 நியாயத்தை எடுத்துப் பேச தைரியம்!
Category: Thought for today
இதழ்: 1098 எனக்கு ஏன் இந்த தண்டனை?
எண்ணாகமம்: 14: 30 இந்த வனாந்தரத்தில்…… உங்களில் இருபது வயதுமுதல், அதற்கு மேற்ப்பட்டவர்களாக எண்ணப்பட்டு உங்கள் தொகைக்கு உட்பட்டவர்களும், எனக்கு விரோதமாய் முறுமுறுத்தவர்களுமாகிய அனைவர்களின் பிரேதங்களும் விழும். எப்புன்னேயின் குமாரன் காலேபும், நூனின் குமாரன் யோசுவாவும் தவிர, மற்றவர்களாகிய நீங்கள், நான் உங்களை குடியேற்றுவேன் என்று ஆணையிட்டுக் கொடுத்த தேசத்தில் பிரவேசிப்பதில்லை.” இதை வாசிக்கும்போது என்னுடைய பள்ளிக்கூட நாட்கள்தான் நினைவுக்கு வந்தது. நான் ஆறாவது படிக்கும்போது என்னுடைய வகுப்பில் இருந்த ஒருசில மாணவர்கள், சின்ன இடைவேளை கிடைத்தாலும்… Continue reading இதழ்: 1098 எனக்கு ஏன் இந்த தண்டனை?
இதழ்: 1097 சந்தேகித்தால் தோல்வியே வந்தடையும்!
எண்ணா:14:42 ”நீங்கள் உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக முறியஅடிக்கப்படாதபடிக்கு ஏறிப்போகாதிருங்கள்; கர்த்தர் உங்கள் நடுவில் இரார்.” சில வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியாவிலிருந்து நியூயார்க் சென்று கொண்டிருந்தோம். நாங்கள் பிரயாணம் பண்ணியது ஒரு சின்ன விமானம்! அங்கு மழை காலமானதால் பயங்கர மேகமூட்டத்துக்குள்ளாக வர வேண்டியதிருந்தது. நாங்கள் வந்த சிறிய விமானம் தடதடவென்று கீழே விழுவதுபோல் உதறியது. உள்ளே இருந்த பயணிகள் பயத்தில் அலற ஆரம்பித்தனர். நெஞ்சு படபடவென்று இருந்தாலும்,அந்த விமானத்தின் ஓட்டுநர் பத்திரமாக அழைத்து செல்வார் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் அமர்ந்திருந்தோம்! கீழே இறங்கும்போது எனக்கு வேர்த்து விட்டது!… Continue reading இதழ்: 1097 சந்தேகித்தால் தோல்வியே வந்தடையும்!
இதழ்: 1096 கண்ணீரில் மிதக்கவிட்ட வனாந்திர வாழ்க்கை!
எண்ணா:14:35 ”கர்த்தராகிய நான் இதை சொன்னேன்; எனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடின இந்த பொல்லாத சபையார் யாவருக்கும் இப்படியே செய்வேன்; இந்த வனாந்தரத்திலே அழிவர்கள், இங்கே சாவார்கள் என்று சொல் என்றார்.” எப்பொழுதும் மரணத்தைப் பற்றி பேசுகிற சில நண்பர்களையும், உறவினர்களையும் பார்த்திருகிறேன். ”எனக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா!…… நான் செத்தால்தான் உங்களுக்கு என் அருமை தெரியும்! ……நான் செத்தாவது இந்த காரியத்தை செய்வேன்!…. இப்படிப்பட்ட வார்த்தைகளை அடிக்கடி உபயோகப்படுத்திய அவர்களின் ஆயிசு சிறியதாகவே இருந்தது. நான் முன்னமே சொன்னது… Continue reading இதழ்: 1096 கண்ணீரில் மிதக்கவிட்ட வனாந்திர வாழ்க்கை!
இதழ்: 1095 நீ எதைக் கேட்டாயோ அதைப் பெற்றுக் கொள்வாய்!
எண்ணா: 14:28 ”..நீங்கள் என் செவிகள் கேட்கச் சொன்ன பிரகாரம் உங்களுக்குச் செய்வேன் என்பதை என் ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் உரைக்கிறார். இந்தப் புதிய மாதத்தைக் காணச்செய்த தேவாதி தேவனுக்கு ஸ்தோத்திரம்! இந்த மாதம் நம் ஒவ்வொருவருக்கும் மிகுந்த ஆசீர்வாதமாக அமைய வேண்டும் என்று ஜெபிக்கிறேன்! மோசே கானானுக்குள் வேவுகாரரை அனுப்பிய பின்னர், காலேபும் யோசுவாவும் அதை பாலும் தேனும் ஓடுகிற தேசம் என்று வர்ணித்த பின்னர் இஸ்ரவேல் மக்கள் அமைதியாக, கர்த்தரால் வழிநடத்தப்பட்ட… Continue reading இதழ்: 1095 நீ எதைக் கேட்டாயோ அதைப் பெற்றுக் கொள்வாய்!
இதழ்: 1094 ஊழியக்காரரின் மாறுபட்ட இருதயம்!
எண்ணா:16:1-4 ”கோராகு என்பவன்…. இஸ்ரவேல் புத்திரரில் சபைக்குத் தலைவர்களும் சங்கத்துக்கு அழைக்கப்பட்டவர்களும் பிரபலமானவர்களுமாகிய இருநூற்று ஐம்பது பேர்களோடும் கூட மோசேக்குமுன்பாக எழும்பி, மோசேக்கும், ஆரோனுக்கும் விரோதமாக கூட்டங்கூடி, அவர்களை நோக்கி நீங்கள் மிஞ்சிப்போகிறீர்கள்; சபையார் எல்லாரும் பரிசுத்தமானவர்கள்; கர்த்தர் அவர்கள் நடுவில் இருக்கிறாரே; இப்படியிருக்க, கர்த்தருடைய சபைக்கு மேலாக உங்களை ஏன் உயர்த்துகிறீர்கள் என்றார்கள். மோசே அதைக் கேட்டபோது முகங்குப்புற விழுந்தான்.” இந்த வேதபகுதியை வாசித்தபோது, எரேமியா தீர்க்கதரிசி நம்முடைய இருதயத்தைப் பற்றி எழுதியது மனதில் பட்டது … Continue reading இதழ்: 1094 ஊழியக்காரரின் மாறுபட்ட இருதயம்!
இதழ்: 1093 உனக்காய் மரத்தில் உயர்த்தப்பட்டவரை நோக்கு!
எண்ணா:21:7 அதினால் ஜனங்கள் மோசேயிடத்தில் போய்: நாங்கள் கர்த்தருக்கும் உமக்கும் விரோதமாய்ப் பேசினதால் பாவஞ்செய்தோம்; சர்ப்பங்கள் எங்களைவிட்டு நீங்கும்படி கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணவேண்டும் என்றார்கள்; மோசே ஜனங்களுக்காக விண்ணப்பம் பண்ணினான். போன மாதம் ஒரு புதிய போன் வாங்கினேன்! என்னுடைய ஏழு வயது பேரன் தான் அந்த போனை ( iPhone) உபயோகிப்பதை எனக்கு சொல்லிக் கொடுத்தான். நான் 12 வருடங்களாக ஐ போன் உபயோகித்து வ்ருகிறேன். ஆனால் ஹோம் பட்டன் இல்லாத இந்த… Continue reading இதழ்: 1093 உனக்காய் மரத்தில் உயர்த்தப்பட்டவரை நோக்கு!
இதழ்: 1092 இருதயத்தை ஊடுருவி வேதனையைத் தரும் மனமடிவு!
எண்ணா: 21:4 “அவர்கள் ஏதோம் தேசத்தை சுற்றிப் போகும்படிக்கு ஓர் என்னும் மலையை விட்டு சிவந்த சமுத்திரத்தின் வழியாய்ப் பிரயாணம் பண்னினார்கள்; வழியினிமித்தம் ஜனங்கள் மனமடிவடைந்தார்கள்.” என்னுடைய வாலிப வயதில் தமிழ் மொழிக் கதைகள், நாவல்கள் அதிகமாக வாசிப்பேன். விசேஷமாக சரித்திர நாவல்களில் தான் ஆர்வம் அதிகம். அந்தக் கதைகளில் எதிரிகள் பட்டயத்தை மறைத்து செல்வதும், தக்க சமயம் வரும்போது பட்டயத்தை வெளியே எடுத்து உருவக்குத்துவதும் அடிக்கடி வாசிக்கிற ஒரு காரியம். இன்றைய தியானத்தில் நாம் பட்டயத்தால்… Continue reading இதழ்: 1092 இருதயத்தை ஊடுருவி வேதனையைத் தரும் மனமடிவு!
இதழ்: 1091 தண்டனையோடு நிறைவேறிய ஆசைகள்!
எண்ணா:11:4 அவர்களுக்குள் இருந்த அந்நிய ஜனங்கள் மிகுந்த இச்சையுள்ளவர்களானார்கள். இஸ்ரவேல் புத்திரரும் திரும்ப அழுது, நமக்கு இறைச்சியைப் புசிக்கக்கொடுப்பவர் யார்? என்றாவது ஏதாவது ஒன்றின் மேல் அளவுக்கு அதிகமாய் ஆசைப்பட்ட ஞாபகம் உங்களுக்கு இருக்கிறதா? எனக்கு கூட ஆசைகள் இருந்தன! அளவுக்கு அதிகமாய் என்று சொல்ல முடியாது! சின்ன சின்ன ஆசைகள் பல இருந்தன! கனவுகள் பல இருந்தன! நமக்கெல்லோருக்குமே ஆசைகள், பாசங்கள்,ஏக்கங்கள், சில இச்சைகளும் கூடஉண்டு. எல்லா ஆசைகளும் தவறு என்று கணித்துவிட முடியுமா? ஆசைகள்… Continue reading இதழ்: 1091 தண்டனையோடு நிறைவேறிய ஆசைகள்!
இதழ்: 1090 உங்களை அழைத்தவர் பரிசுத்தர்!
எண்ணாகமம்:25:1 – 2 “ இஸ்ரவேல் சித்தீமிலே தங்கியிருக்கையில்,ஜனங்கள் மோவாபின் குமாரத்திகளோடே, வேசித்தனம் பண்ணத் தொடங்கினார்கள். அவர்கள் தங்கள் தேவர்களுக்கு இட்ட பலிகளை விருந்துண்ணும்படி ஜனங்களை அழைத்தார்கள். ஜனங்கள் போய் புசித்து, அவர்கள் தேவர்களைப் பணிந்து கொண்டார்கள்.” வீட்டில் கேக் செய்யும் பழக்கம் உள்ளவர்களுக்கு முட்டையின் வெள்ளைக் கருவையும், மஞ்ஞள் கருவையும் ஏன் பிரிக்கிறோம் என்று நன்கு தெரியும்! வெள்ளைக்கரு கேக்கை மிருதுவாகப் பண்ணும் ஆனால் மஞ்சள் கருவோ கனமாக இருப்பதால், வெள்ளைக் கருவின் தன்மையையே கெடுத்து,… Continue reading இதழ்: 1090 உங்களை அழைத்தவர் பரிசுத்தர்!
