நியாதிபதிகள்: 13:8 "அப்பொழுது மனோவா கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி; ஆ, என் ஆண்டவரே, நீர் அனுப்பின தேவனுடைய மனுஷன் மறுபடியும் ஒருவிசை எங்களிடத்தில் வந்து பிறக்கப்போகிற பிள்ளைக்காக நாங்கள் செய்யவேண்டியதை எங்களுக்குக் கற்பிப்பாராக என்று வேண்டிக்கொண்டான்." ஒவ்வொருமுறையும் என்னைப்போல குறைந்த விசுவாசம் உள்ளவர்களின் கதையைவேதாகமத்தில் வாசிக்கும்போது கர்த்தருக்கு உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றி செலுத்துவேன். கர்த்தர் அவர்களிடம் ஒருமுறை அல்ல பலமுறை தம்முடைய வழிநடத்துதலையும், தம்முடைய வார்த்தையையும் புரியவைக்க வேண்டியிருந்தது. மலடியாயிருந்த மனோவாவின் மனைவியிடம் அவளுக்குப் பிறக்கப்போகிற பிள்ளையைப்பற்றி… Continue reading மலர் 3 இதழ் 225 யார்மேல் சந்தேகம்?
Category: To the Tamil Christian community
மலர் 3 இதழ் 223 நூலைப்போல சேலை!
நியாதிபதிகள்:13:3,4 "கர்த்தருடைய தூதனானவர் அந்த ஸ்திரீக்குத் தரிசனமாகி, அவளை நோக்கி: இதோ பிள்ளை பெறாத மலடியான நீ கர்ப்பந்தரித்து ஒரு குமாரனைப் பெறுவாய்." ஆதலால் நீ திராட்சரசமும் மதுபானமும் குடியாதபடிக்கும், தீட்டானது ஒன்றும் புசியாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு. மனோவாவின் மனைவி ஒரு உத்தமமானப் பெண். அவளுடையத் தலைமுறையினர் நாற்பது ஆண்டுகள் பெலிஸ்தருக்கு அடிமையாயிருந்தனர். நம்பிக்கையில்லாத தருணத்தில் ஒருநாள் கர்த்தருடைய தூதனானவர் இந்தப் பெண்ணுக்குத் தோன்றி மலடியாயிருந்த அவள் ஒரு பிள்ளை பெறுவாள், அவன் ஒரு விசேஷமான பிள்ளை, கர்த்தருக்கு… Continue reading மலர் 3 இதழ் 223 நூலைப்போல சேலை!
மலர் 3 இதழ் 222 வறண்ட நிலம் செழிப்பாய் மாறும்!
நியாதிபதிகள்: 13:2,3 "அப்பொழுது தாண் வம்சத்தானாகிய சோரா ஊரானான ஒரு மனுஷன் இருந்தான்; அவன் பேர் மனோவா, அவன் மனைவி பிள்ளை பெறாத மலடியாயிருந்தாள். கர்த்தருடைய தூதனானவர் அந்த ஸ்திரீக்குத் தரிசனமாகி, அவளை நோக்கி: இதோ பிள்ளை பெறாத மலடியான நீ கர்ப்பந்தரித்து ஒரு குமாரனைப் பெறுவாய்." மலடு என்ற வார்த்தைக்கு பயனின்மை, வறண்டது , தரிசுநிலம், என்ற அர்த்தங்களைப் பார்த்தேன். இந்த வார்த்தை பலருடைய வாழ்க்கையில் எவ்வளவு ரணத்தை ஏற்படுத்தியிறது என்பதை அறிவேன். வேதாகமத்தின் காலத்தில்… Continue reading மலர் 3 இதழ் 222 வறண்ட நிலம் செழிப்பாய் மாறும்!
சர்வதேச மகளியர் தினம்!
நியாதிபதிகள்: 13:2 "அப்பொழுது தாண் வம்சத்தானாகிய சோரா ஊரானான ஒரு மனுஷன் இருந்தான்; அவன் பேர் மனோவா, அவன் மனைவி பிள்ளை பெறாத மலடியாயிருந்தாள்". சில வேதாகமப் பகுதி என்னை ஆச்சரியப்பட்அ வைக்கும். சில பகுதி என்னை அழ வைக்கும். ஆனால் இன்றையப் பகுதி என்னை சிரிக்க வைத்தது. நான் ஒரு பெண்ணாக இருப்பதால் தான் எனக்கு சிரிப்பு வந்தது என்று நினைக்கிறேன். பெண்ணுரிமைகளைப் பற்றி அதிகமாக நாம் எண்ணும் இந்த தினத்தில் இந்த வேதாகமப் பகுதி… Continue reading சர்வதேச மகளியர் தினம்!
மலர் 3 இதழ் 220 மலர்களால் மூடப்பட்ட படுகுழி!
நியாதிபதிகள்: 13:1 இஸ்ரவேல் புத்திரர் மறுபடியும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தபடியால், கர்த்தர் அவர்களை நாற்பது வருஷமளவும் பெலிஸ்தர் கையில் ஒப்புக்கொடுத்தார். இன்று நாம் சிம்சோனின் வாழ்க்கையைப் பற்றிப் படிக்க ஆரம்பிக்கிறோம். அடுத்த சில வாரங்கள் நாம் சிம்சோனின் வாழ்க்கையில் முக்கிய இடத்தைப்பிடித்த நான்கு பெண்களைப் பற்றிப் படிக்கப்போகிறோம். ஆதியாகமம் முதல் நாம் படிக்கும்போது வேதம் நமது பார்வையில் ஒரே புத்தகம் போலத் தொடர்ச்சியாய் இருப்பதுதான் எனக்கு இந்த வேதாகமத்தில் மிகவும் பிடித்தது.வேதாகமத்தை கருத்தோடு படிக்கும் உங்கள்… Continue reading மலர் 3 இதழ் 220 மலர்களால் மூடப்பட்ட படுகுழி!
மலர் 3 இதழ் 219 கீழ்நோக்கிய சரிவு!
நியாதிபதிகள்:12: 8,9 அவனுக்குப் பின்பு பெத்லெகேம் ஊரானாகிய இப்சான் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான். அவனுக்கு முப்பது குமாரரும் முப்பது குமாரத்திகளும் இருந்தார்கள். முப்பது குமாரரையும் புறத்திலே விவாகம்பண்ணிக்கொடுத்து, தன் குமாரருக்கு முப்பது பெண்களைப் புறத்திலே கொண்டான். அவன் இஸ்ரவேலை ஏழு வருஷம் நியாயம் விசாரித்தான். மூன்று வாரங்களுக்கு முன்பு நாங்கள் வால்பாறையிலிருந்து திரும்பிய போது, ஒரு பேருந்து எங்களுக்கு வழி கொடுக்காமல் சென்று கொண்டிருந்தது. மழை பெய்ய ஆரம்பித்ததால், நாங்கள் எங்களுடைய காரின் வேகத்தை குறைத்து மெதுவாக… Continue reading மலர் 3 இதழ் 219 கீழ்நோக்கிய சரிவு!
மலர் 3 இதழ் 218 எதை நினைப்பது! எதை மறப்பது!
நியாதிபதிகள்: 11: 39,40 " இரண்டுமாதம் முடிந்தபின்பு, தன் தகப்பனிடத்திற்குத் திரும்பிவந்தாள்; அப்பொழுது அவன் பண்ணியிருந்த தன் பொருத்தனையின் படி அவளுக்குச் செய்தான்; அவள் புருஷனை அறியாதிருந்தாள். இதினிமித்தம் இஸ்ரவேலின் குமாரத்திகள் வருஷந்தோறும் போய் , நாலு நாள் கீலேயாத்தியனான யெப்தாவின் குமாரத்தியைக்குறித்துப் புலம்புவது இஸ்ரவேலிலே வழக்கமாயிற்று, நினைப்பதும் , மறப்பதும் , என்ற வார்த்தைகள் இரண்டு வல்லமையான காந்தங்களைப் போல நம் கண்ணையும் கருத்தையும் ஈர்க்கின்றன அல்லவா? இவைதான் நம் வாழ்வின் தரத்தை அமைப்பவை என்றால்… Continue reading மலர் 3 இதழ் 218 எதை நினைப்பது! எதை மறப்பது!
மலர் 2 இதழ் 217 அழ ஒரு காலமுண்டு! நகைக்க ஒரு காலமுண்டு!
நியாதிபதிகள்: 11:38 "அவள் தன் தோழிமார்களோடும் கூடப்போய், தன் கன்னிமையினிமித்தம் மலைகளின்மேல் துக்கங்கொண்டாடி," என்னுடைய பள்ளிப்படிப்பின் கடைசி ஆண்டில் நானும் என்னுடைய நெருங்கிய தோழிகளும் ஒருநாள் முழுவதும் சென்னையை சுற்றிபார்க்கப் புறப்பட்டோம். அந்த நாள் முழுவதும் நாங்கள் சிரித்த சிரிப்பை வாழ்க்கையில் மறக்கவே முடியாது. எல்லாவற்றுக்கும் சிரித்தோம், அர்த்தமே இல்லாமல் கூட சிரித்தோம். நாங்கள் ஒன்றாகப்படித்த பல வருடங்களில், எத்தனையோ முறை ஒருவருக்காக ஒருவர் அழுதிருக்கிறோம். பிரசங்கியில், சாலொமோன் ராஜா கூறுவதைப்போல, சந்தோஷமும் துக்கமும் ஒரு நாணயத்தின்… Continue reading மலர் 2 இதழ் 217 அழ ஒரு காலமுண்டு! நகைக்க ஒரு காலமுண்டு!
மலர் 2 இதழ் 216 நட்புக்கு நாம் கொடுக்கும் நேரம்??
நியாதிபதிகள்: 11:38 "அவள் தன் தோழிமார்களோடும் கூடப்போய், தன் கன்னிமையினிமித்தம் மலைகளின்மேல் துக்கங்கொண்டாடி," யெப்தாவின் மகளைப் பற்றிப் படித்துக்கொண்டிருக்கிறோம். அவள் தகப்பன் செய்த முட்டாள்த்தனமான பொருத்தனையால் , அவள் தலையில் இடி விழுந்தமாதிரி ஒரு செய்தியை அவள் தகப்பன் வாயிலிருந்து கேட்டபோது, அவள் தன் உறவினரை நாடவில்லை, தன் தோழிகளை நாடினாள் என்று பார்த்தோம். அவள் துக்கப்பட்ட நேரத்தில் அவளுக்கு ஆறுதலையும் தேறுதலையும் அளித்தவர்கள் அவளுடைய தோழிகளே என்றும் பார்த்தோம். அவளுடைய தகப்பன் செய்த தவறால் அவளுடைய எதிர்காலமே… Continue reading மலர் 2 இதழ் 216 நட்புக்கு நாம் கொடுக்கும் நேரம்??
மலர் 2 இதழ் 215 விலைமதிப்பற்ற நட்பு!
நியாதிபதிகள்: 11: 37 " பின்னும் அவள் தன் தகப்பனை நோக்கி, நீர் எனக்கு ஒரு காரியம் செய்ய வேண்டும்; நானும் என் தோழிமார்களும் என் கன்னிமையினிமித்தம் துக்கங்கொண்டாட எனக்கு இரண்டுமாதம் தவணைகொடும் என்றாள்." சில நாட்களுக்கு முன்னர்தான் நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டது! இன்னும் அநேகருடைய கைகளில் நட்புக்கு அடையாளமாக நண்பர்கள் கட்டிய வண்ணக்கயிறு காணப்படுகிறது அல்லவா! எப்பொழுதோ ஒருமுறை ஒரு காட்டில் வாழ்ந்த ஒரு யானையும், ஒரு நாய்க்குட்டியும் நண்பர்களைப்போல சுற்றி வந்ததைப் பற்றி கேட்டிருக்கிறேன்.… Continue reading மலர் 2 இதழ் 215 விலைமதிப்பற்ற நட்பு!
