Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

மலர் 6 இதழ் : 407 சாபம் என்றால் பொருள் என்ன???

 உபாகமம்: 28:15 ”  இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் கட்டளைகளின்படியும்  நடக்க கவனமாயிருக்கிறதற்கு, அவர் சத்தத்திற்குச் செவிகொடாதேபோவாயாகில் இப்பொழுது சொல்லப்படும் சாபங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்கு பலிக்கும்.”   கதைப் புத்தகங்களில் மந்திரவாதியின் சாபத்தினால் மனிதன் பூனையாவதைப் பற்றி படித்திருக்கிறேன்! ஏழை எளிய மக்கள் ஒருவரோடொருவர் சண்டை போட்டுக் கொள்ளும்போது நீ மண்ணாய் போவாய், நீ விளங்காமல் போவாய், என்று சாபமிடுவதையும் கண்களால் பார்த்திருக்கிறேன்.  என்னுடைய சொந்த கிராமத்தில் ஒரு… Continue reading மலர் 6 இதழ் : 407 சாபம் என்றால் பொருள் என்ன???

Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

மலர் 6 இதழ்: 406 – தலைமைத்துவம் என்னும் ஆசீர்வாதம்!

உபாகமம்:28:14 “ இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி நடக்கவும், அவைகளுக்கு செவிகொடுத்து வந்தால் கர்த்தர் உன்னை வாலாக்காமல் தலையாக்குவார், நீ கீழாகாமல் மேலாவாய்.”   நான்  அலுவலகத்துக்கு போகும் வழியில் வயல்வெளிகள் உள்ளன! நீர்ப்பாய்ச்சியிருக்கும் வயல்களில் வாத்துகள் கூட்டம் கூட்டமாய் வலம் வந்துக்கொண்டிருக்கும் அழகை அடிக்கடி நான் ரசிப்பதுண்டு. அதில் எப்பொழுதுமே ஒரு வாத்து முன்னால் இருக்கும், மற்றவை அனைத்தும் அந்த தலைவர் வாத்து போகிற திசையில் தான்… Continue reading மலர் 6 இதழ்: 406 – தலைமைத்துவம் என்னும் ஆசீர்வாதம்!

Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

மலர் 6 இதழ்: 405 – ஏற்ற காலத்தில் பெய்யும் மழை!

உபாகமம்: 28:12 ஏற்றகாலத்திலே உன் தேசத்திலே மழை பெய்யும், நீ கையிட்டுச்செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும்,கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷ சாலையாகிய வானத்தை திறப்பார். இந்த வருடம் மே மாதம் கடுமையாக மழை பெய்த பொழுது நான் அமெரிக்காவில் இருந்தேன். எங்கே மழை மறுபடியும் சென்னையை வெள்ளத்தில் ஆழ்த்திவிடுமோ என்ற பயத்தில் செய்தியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் மே மாத உஷ்ணத்தை தாங்க முடியாமல் தவித்த மக்களுக்கு அந்த மழை தேவைப் பட்டதல்லவா! சில வருடங்களுக்கு முன்னர்… Continue reading மலர் 6 இதழ்: 405 – ஏற்ற காலத்தில் பெய்யும் மழை!

Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

மலர் 6 இதழ்: 404 – உன் மூலம் பரவும் சுகந்த வாசனை!

உபாகமம்: 28:10  ”அப்பொழுது கர்த்தருடைய நாமம் உனக்குத் தரிக்கப்பட்டது என்று பூமியின் ஜனங்களெல்லாம் கண்டு, உனக்குப் பயப்படுவார்கள்.” நான் கல்லூரியில் படித்த நாட்களில் நாங்கள் அனைவரும் பயந்த ஒரு பேராசிரியை இருந்தார்கள். அவர்களைக் கண்டால் பயம் என்றவுடன் அவர்களைப்பற்றி தவறாக நினைத்துவிடாதீர்கள். மரியாதையால் வந்த பயம். அழகும், நவீனமும், அறிவும், திறமையும் கொண்ட அவர்களை எங்கள் எல்லாருடைய உள்ளத்திலும் இடம் பிடித்துவிட்டார்கள். யாருடைய வகுப்பை தவற விட்டாலும் சரி, அவர்கள் வகுப்புக்கு சரியாக போய்விடுவோம், வேலையை சரியாக… Continue reading மலர் 6 இதழ்: 404 – உன் மூலம் பரவும் சுகந்த வாசனை!

Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

மலர் 6 இதழ்: 403 நாம் பரிசுத்தமாவது எப்படி?

உபா:28:9 ”நீ உன் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளைக் கைக்கொண்டு அவர் வழிகளில் நடக்கும்போது கர்த்தர் உனக்கு ஆணையிட்டபடியே உன்னைத் தமக்கு பரிசுத்த ஜனமாக நிலைப்படுத்துவார்”.  நான் வாலிப நாட்களில் தேவனை அதிகமாய் அறிகிற ஆவலில் அநேக சபைகளுக்கு சென்றிருக்கிறேன். வெண்மை வஸ்திரம் தரித்து ஆலயத்துக்கு வருபவர்களை பரிசுத்தவான்கள் என்று எண்ணியதுண்டு! பக்கத்து வீட்டுக்காரர்களுடன் பேசினால் நாம் பாவிகளாகி விடுவோம் என்று எண்ணிய பரிசுத்தவான்களையும் பார்த்திருக்கிறேன். நீண்ட ஜெபம் செய்தவர்களும், நீண்ட அங்கி தரித்தவர்களும் கூட என்னுடைய பரிசுத்தவான்கள்… Continue reading மலர் 6 இதழ்: 403 நாம் பரிசுத்தமாவது எப்படி?

Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

மலர் 6 இதழ் : 402 – தலைமுறைக்கும் தொடரும் ஆசீர்வாதம்!

உபாகமம்: 28:4  உன் கர்ப்பத்தின் கனியும், உன் நிலத்தின் கனியும், உன் மாடுகளின் பெருக்கமும், உன் ஆடுகளின் மந்தைகளுமாகிய உன் மிருகஜீவன்களின் பலனும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்.  போன வருடம் என் மகனும் சில நண்பர்களும் சேர்ந்து நேப்பாள தேசத்தில் பூகம்பத்தால் வீடு இழந்தோருக்கு வீடு கட்ட உதவி செய்ய சென்றனர். அவர்கள் சில கிராமங்களை சென்று அடைய உயிரைப் பணயம் வைத்து தான் செல்ல வேண்டியிருந்தது!   எங்கள் மகன் இவ்வாறு கர்த்தருடைய ஊழியத்தில் உபயோகப்படுத்தப்படுவது எங்களுக்கு பரிபூரண… Continue reading மலர் 6 இதழ் : 402 – தலைமுறைக்கும் தொடரும் ஆசீர்வாதம்!

Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

மலர் 6 இதழ்: 401 – ஆசீர்வாதம் என்பதின் பொருள்?

  உபாகமம்:28:3 நீ பட்டணத்திலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்; வெளியிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்!   இந்த வேதபகுதியை வாசிக்கும்போது ஓட்டப்பந்தயத்தில் வெற்றிபெரும் வீரர்கள், வெற்றி பெற்றவுடனே தங்கள் பயிற்சியாளர்களைக் கட்டித்தழுவுவது நினைவுக்கு வந்தது! ஏன் அப்படி செய்கிறார்கள்? அவர்கள் தங்கள் பெற்றோரிடம் செலவிடும் நேரத்தைவிட அதிகநேரம் பயிற்சியாளரிடம் செலவிட்டு, அவர்களுடைய கூர்மையான கண்காணிப்பின் கீழ் பயிற்சி பெறுவவதால்தான் சாதனை படைக்கமுடிந்தது!   ஒரு நல்ல பயிற்சியாளரைப் போல கர்த்தர் நம்மை ‘பட்டணத்திலும் வெளியிலும்’ தொடருகிறார். சங்கீதக்காரன் ‘நான் நடந்தாலும், படுத்திருந்தாலும் என்னை… Continue reading மலர் 6 இதழ்: 401 – ஆசீர்வாதம் என்பதின் பொருள்?

Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

மலர் 6 இதழ் 400 – சத்தத்திற்கு செவிகொடுத்தால் ஆசீர்வாதம்!

உபா: 28; 1,2 ”இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருக்கும்படிக்கு அவர் சத்தத்திற்கு உண்மையாய் செவிகொடுப்பாயானால் உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார்.  நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்குச் செவிகொடுக்கும்போது இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்கு பலிக்கும்.”   நேற்று நாம் கர்த்தர் நம்மை இருப்புக்காளவாயிலிருந்து புறப்படப்பண்ணுவார் என்ற அருமையான வாக்குத்தத்தத்தை உபா:4;20 லிருந்து வாசித்தோம். இன்னும் இருப்புக்காளவாயின்… Continue reading மலர் 6 இதழ் 400 – சத்தத்திற்கு செவிகொடுத்தால் ஆசீர்வாதம்!

Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

மலர் 6 இதழ்: 399 – முள்ளுள்ள கத்தாழையில் மலர்கள்!

 உபாகமம்: 4:20 இந்நாளில் நீங்கள் இருக்கிறது போல தமக்கு சுதந்தரமான ஜனமாயிருக்கும்படி கர்த்தர் உங்களை சேர்த்துக் கொண்டு உங்களை எகிப்து என்னும் இருப்புக்காளவாயிலிருந்து புறப்படப்பண்ணினார். இருப்புக்காளவாய் என்ற வார்த்தையை சென்னையில் வாழும் நாங்கள், எங்களுடைய கோடை வெயிலுக்கு ஒப்பிட்டுப் பழக்கம். சூரியனின் கதிர்கள் எங்களை எரித்துவிடும் எண்ணத்தில் பாய்வதுபோல் இருக்கும். அதன் கொடுமைக்கு ஒத்துழைப்பது போல கடலின் ஈரப்பதமும் சேர்ந்து கொள்ளும்! ஒருசில நாட்கள் மாலையில் சில்லென்று தென்றல் காற்று கடலிலிருந்து வீசும்போது சென்னைவாசிகளாகிய நாங்கள் அதை… Continue reading மலர் 6 இதழ்: 399 – முள்ளுள்ள கத்தாழையில் மலர்கள்!

Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

மலர் 6 இதழ்: 398 – இயேசுவின் நாமமே பலத்த துருகம்!

  உபாகமம்: 4: 41, 43 ”முற்பகையின்றிக் கைப்பிசகாய்ப் பிறனைக் கொன்றவன் அடைக்கலப்பட்டணங்களில் ஒரு பட்டணத்தில் தப்பியோடிப்போய் பிழைத்திருக்கும்படியாக,.. மூன்று பட்டணங்களை மோசே யோர்தானுக்கு இப்புறத்தில் சூரியோதய திசையில் ஏற்படுத்தினான். நான் அதிகமாக சரித்திர புத்தகங்களை விரும்பி வாசித்திருக்கிறேன். சரித்திரப்பூர்வமான இடங்களைப் பார்ப்பதும் எனக்கு மிகவும் பிடிக்கும். பள்ளிக்கூட நாட்களில் போன உல்லாசப்பயணங்களில், ராஜாக்கள் தம்முடைய நாட்டைப் பாதுகாக்கக் கட்டிய கோட்டைகள் தான் எப்பொழுதும் என் மனதில் நிற்கும். அந்தக் கோட்டைகளைப் பார்க்கும்போது அந்த நாட்டின் ஜனங்கள் எப்படியாக… Continue reading மலர் 6 இதழ்: 398 – இயேசுவின் நாமமே பலத்த துருகம்!