உபாகமம்: 28:4 உன் கர்ப்பத்தின் கனியும், உன் நிலத்தின் கனியும், உன் மாடுகளின் பெருக்கமும், உன் ஆடுகளின் மந்தைகளுமாகிய உன் மிருகஜீவன்களின் பலனும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும். போன வருடம் என் மகனும் சில நண்பர்களும் சேர்ந்து நேப்பாள தேசத்தில் பூகம்பத்தால் வீடு இழந்தோருக்கு வீடு கட்ட உதவி செய்ய சென்றனர். அவர்கள் சில கிராமங்களை சென்று அடைய உயிரைப் பணயம் வைத்து தான் செல்ல வேண்டியிருந்தது! எங்கள் மகன் இவ்வாறு கர்த்தருடைய ஊழியத்தில் உபயோகப்படுத்தப்படுவது எங்களுக்கு பரிபூரண… Continue reading மலர் 6 இதழ் : 402 – தலைமுறைக்கும் தொடரும் ஆசீர்வாதம்!
Tag: குடும்ப தியானம்
மலர் 6 இதழ்: 401 – ஆசீர்வாதம் என்பதின் பொருள்?
உபாகமம்:28:3 நீ பட்டணத்திலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்; வெளியிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்! இந்த வேதபகுதியை வாசிக்கும்போது ஓட்டப்பந்தயத்தில் வெற்றிபெரும் வீரர்கள், வெற்றி பெற்றவுடனே தங்கள் பயிற்சியாளர்களைக் கட்டித்தழுவுவது நினைவுக்கு வந்தது! ஏன் அப்படி செய்கிறார்கள்? அவர்கள் தங்கள் பெற்றோரிடம் செலவிடும் நேரத்தைவிட அதிகநேரம் பயிற்சியாளரிடம் செலவிட்டு, அவர்களுடைய கூர்மையான கண்காணிப்பின் கீழ் பயிற்சி பெறுவவதால்தான் சாதனை படைக்கமுடிந்தது! ஒரு நல்ல பயிற்சியாளரைப் போல கர்த்தர் நம்மை ‘பட்டணத்திலும் வெளியிலும்’ தொடருகிறார். சங்கீதக்காரன் ‘நான் நடந்தாலும், படுத்திருந்தாலும் என்னை… Continue reading மலர் 6 இதழ்: 401 – ஆசீர்வாதம் என்பதின் பொருள்?
மலர் 6 இதழ் 400 – சத்தத்திற்கு செவிகொடுத்தால் ஆசீர்வாதம்!
உபா: 28; 1,2 ”இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருக்கும்படிக்கு அவர் சத்தத்திற்கு உண்மையாய் செவிகொடுப்பாயானால் உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார். நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்குச் செவிகொடுக்கும்போது இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்கு பலிக்கும்.” நேற்று நாம் கர்த்தர் நம்மை இருப்புக்காளவாயிலிருந்து புறப்படப்பண்ணுவார் என்ற அருமையான வாக்குத்தத்தத்தை உபா:4;20 லிருந்து வாசித்தோம். இன்னும் இருப்புக்காளவாயின்… Continue reading மலர் 6 இதழ் 400 – சத்தத்திற்கு செவிகொடுத்தால் ஆசீர்வாதம்!
மலர் 6 இதழ்: 399 – முள்ளுள்ள கத்தாழையில் மலர்கள்!
உபாகமம்: 4:20 இந்நாளில் நீங்கள் இருக்கிறது போல தமக்கு சுதந்தரமான ஜனமாயிருக்கும்படி கர்த்தர் உங்களை சேர்த்துக் கொண்டு உங்களை எகிப்து என்னும் இருப்புக்காளவாயிலிருந்து புறப்படப்பண்ணினார். இருப்புக்காளவாய் என்ற வார்த்தையை சென்னையில் வாழும் நாங்கள், எங்களுடைய கோடை வெயிலுக்கு ஒப்பிட்டுப் பழக்கம். சூரியனின் கதிர்கள் எங்களை எரித்துவிடும் எண்ணத்தில் பாய்வதுபோல் இருக்கும். அதன் கொடுமைக்கு ஒத்துழைப்பது போல கடலின் ஈரப்பதமும் சேர்ந்து கொள்ளும்! ஒருசில நாட்கள் மாலையில் சில்லென்று தென்றல் காற்று கடலிலிருந்து வீசும்போது சென்னைவாசிகளாகிய நாங்கள் அதை… Continue reading மலர் 6 இதழ்: 399 – முள்ளுள்ள கத்தாழையில் மலர்கள்!
மலர் 6 இதழ்: 398 – இயேசுவின் நாமமே பலத்த துருகம்!
உபாகமம்: 4: 41, 43 ”முற்பகையின்றிக் கைப்பிசகாய்ப் பிறனைக் கொன்றவன் அடைக்கலப்பட்டணங்களில் ஒரு பட்டணத்தில் தப்பியோடிப்போய் பிழைத்திருக்கும்படியாக,.. மூன்று பட்டணங்களை மோசே யோர்தானுக்கு இப்புறத்தில் சூரியோதய திசையில் ஏற்படுத்தினான். நான் அதிகமாக சரித்திர புத்தகங்களை விரும்பி வாசித்திருக்கிறேன். சரித்திரப்பூர்வமான இடங்களைப் பார்ப்பதும் எனக்கு மிகவும் பிடிக்கும். பள்ளிக்கூட நாட்களில் போன உல்லாசப்பயணங்களில், ராஜாக்கள் தம்முடைய நாட்டைப் பாதுகாக்கக் கட்டிய கோட்டைகள் தான் எப்பொழுதும் என் மனதில் நிற்கும். அந்தக் கோட்டைகளைப் பார்க்கும்போது அந்த நாட்டின் ஜனங்கள் எப்படியாக… Continue reading மலர் 6 இதழ்: 398 – இயேசுவின் நாமமே பலத்த துருகம்!
மலர் 6 இதழ்: 397 – உனக்காக வேறொரு திட்டமொன்று!
உபாகமம்: 3: 23 -27 ”அக்காலத்திலே நான் கர்த்தரை நோக்கி; கர்த்தராகிய ஆண்டவரே நீர் உமது அடியானுக்கு உமது மகத்துவத்தையும், உமது வல்லமையுள்ள கரத்தையும் காண்பிக்கத் தொடங்கினீர்; வானத்திலும் பூமியிலும் உம்முடைய கிரியைகளுக்கும், உம்முடைய வல்லமைகளுக்கும் ஒப்பாக செய்யத்தக்கவன் யார்? நான் கடந்துபோய் யோர்தானுக்கு அப்புறத்திலுள்ள அந்த நல்ல தேசத்தையும் அந்த நல்ல மலையையும், லீபனோனையும் பார்க்கும்படி உத்தரவு கொடுத்தருளும் என்று வேண்டிகொண்டேன். கர்த்தரோ உங்கள் நிமித்தம் என்மேல் கோபங்கொண்டு எனக்கு செவிகொடாமல் என்னை நோக்கி; போதும்… Continue reading மலர் 6 இதழ்: 397 – உனக்காக வேறொரு திட்டமொன்று!
மலர் 6 இதழ் 396 – கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்!
உபாகமம்:2:7 ”உன் தேவனாகிய கர்த்தர் உன் கைக்கிரியைகளிலெல்லாம் உன்னை ஆசிர்வதித்து வருகிறார். இந்த பெரிய வனாந்தரவழியாய் நீ நடந்து வருவதை அறிவார். இந்த நாற்பது வருஷமும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருந்தார். உனக்கு ஒன்றும் குறைவுபடவில்லை..” நேற்று நாம் உபாகமம் புத்தகத்தை ஆரம்பித்தோம். இந்த புத்தகம் இஸ்ரவேல் மக்களின் பிரயாணத்தை சரித்திரபூர்வமாக விளக்கும் புத்தகம் மாத்திரம் அல்ல, வல்லமையுள்ள தேவ மனிதனான மோசேயின் ஆவிக்குரிய பிரயாணத்தின் நாட்குறிப்பும்கூட என்று பார்த்தோம். அன்றன்று கர்த்தர் கொடுக்கும் செய்தியை… Continue reading மலர் 6 இதழ் 396 – கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்!
மலர் 6 இதழ் 395 – சித்திரமும் கைப்பழக்கம்!
உபாகமம்: 1:4 ”நாற்பதாம் வருஷம், பதினோராம் மாதம் முதல் தேதியிலே, மோசே இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லும்படி தனக்கு கர்த்தர் விதித்த யாவையும் அவர்களுக்குச் சொன்னான்…” இன்று நாம் உபாகமம் புத்தகத்தை ஆரம்பிக்கிறோம். இந்த புத்தகத்தை நாம் படிக்கும்போது கர்த்தர் தாமே நம்மோடுகூட இருக்க ஜெபிப்போம். சித்திரமும் கைப்பழக்கம் என்ற வாசகத்தைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? எந்த ஒரு கலையும் பல நாட்கள் கடின முயற்சியோடு, பயிற்சி எடுத்தபின் தான் நமக்கு சிறப்பாக வரும். ஒரு கோடு அல்லது வட்டம்… Continue reading மலர் 6 இதழ் 395 – சித்திரமும் கைப்பழக்கம்!
மலர் 6 இதழ் 394 – இதுவரை ஒன்றுமே கேட்கவில்லையே!
எண்ணா: 27:4 ”……எங்கள் தகப்பனுடைய சகோதரருக்குள்ளே எங்களுக்கு காணியாட்சி கொடுக்கவேண்டும் என்றார்கள்.” ’வாய் உள்ள பிள்ளைதான் பிழைக்கும்’ என்ற பழமொழி தெரியுமா? எத்தனை முறை நாம் வாய் திறந்து கேட்காதால், நமக்கு வந்து சேரவேண்டியவை வராமல் போய்விட்டன. இது நம் எல்லோருடைய வாழ்க்கையிலும் நடப்பது தானே! கேட்பது என்ற வார்த்தைக்கு எபிரேய மொழியில் பிரசுரித்தல் என்று அர்த்தம் உண்டு! இதைத்தான் செலோப்பியாத்தின் ஐந்து குமாரத்திகளும் செய்தனர். அவர்களுடைய வாழ்க்கையிலிருந்து கடந்த நாட்களில் சில அருமையான காரியங்களை நாம்… Continue reading மலர் 6 இதழ் 394 – இதுவரை ஒன்றுமே கேட்கவில்லையே!
மலர் 6 இதழ் 393 – நியாயமாய் நடப்பதே தேவ சாயலின் அடையாளம்!
எண்ணா: 27: 6,7 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி, செலோப்பியாத்தின் குமாரத்திகள் சொல்லுகிறது சரிதான். அவர்களுக்கு அவர்கள் தகப்பனுடைய சகோதரருக்குள்ளே சுதந்தரம் கொடுக்கவேண்டும்; அவர்கள் தகப்பன் பின் வைத்த சுதந்தரத்தை அவர்களுக்கு கிடைக்கும்படி செய்வாயாக. ஒருவேளை நீங்கள் புதிதாக ராஜாவின் மலர்களுக்கு வந்திருப்பீர்களாகில், தயவுசெய்து கடந்த இருநாட்களின் தியானங்களையும் வாசித்துப் பாருங்கள். அப்பொழுதுதான் உங்களுக்கு இதன் தொடர்ச்சி தெரியும். நாம் மனாசே வழிவந்த செலோப்பியாத்தின் குமாரத்திகள் ஐந்து பேரைப் பற்றிப் படித்துக் கொண்டிருக்கிறோம். அவர்கள் தன் தகப்பனுக்கு… Continue reading மலர் 6 இதழ் 393 – நியாயமாய் நடப்பதே தேவ சாயலின் அடையாளம்!
