லேவி:20:26 ”கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியினாலே, நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாயிருப்பீர்களாக; நீங்கள் என்னுடையவர்களாயிருக்கும்படிக்கு உங்களை மற்ற ஜனங்களை விட்டு பிரித்தெடுத்தேன்.” லேவியராகமத்தின் மூலம் நாம் தேவனாகிய கர்த்தருடைய குணநலன்களை அல்லது தன்மைகளைப் பற்றி படித்து வருகிறோம். தம்முடைய வார்த்தைகள் மூலமாய் அவர் நம்மை நிலைப்படுத்துகிறார் என்று பார்த்தோம், அவரை உண்மையின் அல்லது சத்தியத்தின் தேவனாகப் பார்த்தோம், அவரை தூய்மையின் தேவனாகப் பார்த்தோம், இன்று அவரை பரிசுத்தராக இந்த புத்தகத்தின் மூலம் காணப்போகிறோம். லேவியராகமத்தில் பரிசுத்தர் என்ற வார்த்தை 90… Continue reading மலர் 6 இதழ் 372 ஒலி அல்ல ஒளி போதும்!
Tag: குடும்ப தியானம்
மலர் 6 இதழ் 371 சரீர தூய்மைக்கான கற்பனைகள்!
சங்கீதம்: 19:8 “ கர்த்தருடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தை சந்தோஷிப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாயிருக்கிறது.” தூய்மை என்ற வார்த்தை உங்களுக்கு எதை ஞாபகப்படுத்துகிறது என்று தெரியவில்லை, ஆனால் எனக்கு சிறு வயதில் பிடித்தமான Pears சோப்பு தான் வரும். அதில் கண்ணை வைத்து பார்த்தால் பளிச்சென்று தெளிவாக இருப்பதால், அதுதான் தூய்மையை கொடுக்கும் என்ற எண்ணம் எனக்கு. உங்கள் ஒவ்வொருவருக்கும் தூய்மை என்றவுடன் ஏதாவது ஒன்று ஞாபகத்துக்கு வரும்! மின்ன ல டி… Continue reading மலர் 6 இதழ் 371 சரீர தூய்மைக்கான கற்பனைகள்!
மலர் 6 இதழ் 370 சத்திய வார்த்தை!
சங்கீதம்: 25:4,5 “ கர்த்தாவே உம்முடைய வழிகளை எனக்கு தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்கு போதித்தருளும். உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி போதித்தருளும்; நீரே என் இரட்சிப்பின் தேவன், உம்மை நோக்கி நாள் முழுதும் காத்திருக்கிறேன். நாம் லேவியராகமத்தின் மூலமாய் தம்மை வெளிப்படுத்தும் தேவனாகிய கர்த்தரின் தன்மைகளைப் பற்றி படித்து வருகிறோம். அவரைப் பற்றியும், அவருடைய கிரியைகள் பற்றியும் முழுவதும் அறிந்து கொள்ள நமக்கு இந்த லேவியராகம புத்தகம் உதவுகிறது. இந்த புத்தகத்தில் நாம் சில… Continue reading மலர் 6 இதழ் 370 சத்திய வார்த்தை!
மலர் 6 இதழ் 369 தொட்டால் சிணுங்கி போலவா?
சங்கீதம்: 119:133 “ உம்முடைய வார்த்தையிலே என் காலடிகளை நிலைப்படுத்தி, ஒரு அநியாயமும் என்னை ஆளவொட்டாதேயும்.” நாம் இன்று வேதத்தில் லேவியராகமத்தை படிக்க ஆரம்பிக்கிறோம். அநேகர் இதை வாசிக்க கஷ்டப் படுகிறதை பார்த்திருக்கிறேன். புரியவில்லை, சொன்னதையே திருப்பி சொல்வது போல உள்ளது என்று பலர் கூறுவார்கள். அடுத்த சில வாரங்கள் நாம் லேவியராகமத்தின் மூலமாய் தம்மை வெளிப்படுத்தும் தேவனாகிய கர்த்தரின் தன்மைகளைப் பற்றி படிப்போம். அவரைப் பற்றியும், அவருடைய கிரியைகள் பற்றியும் முழுவதும் அறிந்து கொள்ள… Continue reading மலர் 6 இதழ் 369 தொட்டால் சிணுங்கி போலவா?
மலர் 6 இதழ் 368 கர்த்தருக்கு கொடுப்பதில் வியாபார எண்ணமா?
யாத்தி: 35:22 “மனப்பூர்வமுள்ள ஸ்திரீ, புருஷர் யாவரும், அஸ்தகடங்கள், காதணிகள், மோதிரங்கள், ஆரங்கள் முதலான சகலவித பொன்னாபரணங்களையும் கொண்டு வந்தார்கள்.” நேற்று நாம் தேவனை ஆராதிப்பதைப் பற்றி பார்த்தோம். இன்று நாம் வாசிக்கிற பகுதி, இஸ்ரவேல் மக்கள், தேவன் வாசம் பண்ணும் பரிசுத்த ஸ்தலத்தின் கட்டுமானப் பணிக்கு, காணிக்கைகளை மனமுவந்து கொண்டு வந்ததைப் பார்க்கிறோம். இதில் மனப்பூர்வமுள்ள என்ற ஒரு வார்த்தை இருக்கிறது. அதின் அர்த்தம் என்ன? யாராலும் உந்தப்படாமல் தானாக முன் வந்து கொடுத்தல், அல்லது எதையும்… Continue reading மலர் 6 இதழ் 368 கர்த்தருக்கு கொடுப்பதில் வியாபார எண்ணமா?
மலர் 6 இதழ் 367 யாரை ஆராதிக்கிறாய்?
யாத்தி: 35: 21 பின்பு எவர்களை அவர்கள் இருதயம் எழுப்பி, எவர்களை அவர்கள் ஆவி உற்சாகப்படுத்தினதோ….” நாம் சில நாட்களாக, கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுக்கு கொடுத்த கட்டளைகளைப் பற்றி தியானித்துக் கொண்டிருந்தோம். இப்பொழுது இஸ்ரவேல் மக்களின் வாழ்க்கை பிரயாணத்தை யாத்திராகம் புத்தகத்தின் மூலம் தொடருவோம். யாத்திராகமம் 31ம் அதிகாரம் 18ம் வசனத்தில், கர்த்தர் சீனாய் மலையிலே மோசேயோடே பேசி, அவருடைய விரலினால் எழுதப்பட்ட கற்பலகைகளாகிய சாட்சியின் இரண்டு பலகைகளை அவனிடத்தில் கொடுத்தார். மோசே மலையிலிருந்து வரத் தாமதித்தபோது… Continue reading மலர் 6 இதழ் 367 யாரை ஆராதிக்கிறாய்?
மலர் 6 இதழ் 366 பட்டுப் போன ஒற்றை மரம்!
யாத்தி:22:22,23 ”விதவையையும், திக்கற்ற பிள்ளையையும் ஒடுக்காமல் இருப்பீர்களாக; அவர்களை எவ்வளவாகிலும் ஒடுக்கும்போது, அவர்கள் என்னை நோக்கி முறையிட்டால், அவர்கள் முறையிடுதலை நான் நிச்சயமாய்க் கேட்டு..” நாம் சில நாட்களாக, கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுக்கு கொடுத்த கட்டளைகளைப் பற்றி தியானித்துக் கொண்டிருக்கிறோம். என்னுடைய வால்பாறை வீட்டில் ஒரு அழகிய சில்வர் ஓக் மரம் நின்றது. அது இலைகளை பரப்பியவிதமாக நின்றபோது அநேக பறவைகள் அதன் மேல் வந்து உட்காரும். மயில் தோகை விரித்து ஆடுவது போல அதன்… Continue reading மலர் 6 இதழ் 366 பட்டுப் போன ஒற்றை மரம்!
மலர் 6 இதழ் 365 நாமும் அந்நியராயிருந்தோம்!
யாத்தி: 22:21 “அந்நியனை சிறுமைப் படுத்தாமலும், ஒடுக்காமலும் இருப்பீர்களாக! நீங்களும் எகிப்து தேசத்தில் அந்நியர்களாயிருந்தீர்களே.” நாம் சில நாட்களாக, கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுக்கு கொடுத்த கட்டளைகளைப் பற்றி தியானித்துக் கொண்டிருக்கிறோம். இதை எழுத ஆரம்பிக்கும் போது பல அனுபவங்கள் மனக்கண் முன் வருகின்றன! பல மாகாணங்களுக்கு வேலையின் காரணமாக சென்றிருக்கிறோம். எத்தனை பேர் எங்களை அன்புடன் உபசரித்தனர்! எல்லாவற்றுக்கும் மேலான அனுபவம் ஒரு அந்நிய தேசத்து குடும்பம் முன்பின் அறியாத எங்களுக்கு தங்க இடம் கொடுத்து… Continue reading மலர் 6 இதழ் 365 நாமும் அந்நியராயிருந்தோம்!
மலர் 6 இதழ் 364 ஆசை வார்த்தைகளால் நயங்காட்டாதே!
யாத்தி:22:16 நியமிக்கப் படாத ஒரு கன்னிகையை ஒருவன் மோசம் போக்கி அவளோடே சயனித்தால், அவன் அவளுக்காக பரிசம் கொடுத்து அவளை விவாகம் பண்ணக் கடவன். யாத்திராகமத்தில் உள்ள தேவனுடைய கட்டளைகளை சில நாட்கள் தியானிக்கலாம் என்று நினைத்தோம். இன்றைய வேதாகம பகுதியில் “மோசம் போகுதல்” என்ற வார்த்தையைப் பார்க்கிறோம். அப்படியானால் என்ன? சில நேரங்களில் நாம் எதையாவது செய்யக்கூடாது என்று உறுதியாய் வாழும்போது சோதனைகள் குறுக்கிட்டு நம்மை நயங்காட்டி மோசம் போக்குகின்றன அல்லவா? இன்றைய வேதாகம… Continue reading மலர் 6 இதழ் 364 ஆசை வார்த்தைகளால் நயங்காட்டாதே!
மலர் 6 இதழ் 363 மலைப் பாதையில் போடப்பட்ட இரும்புத்தடை போல!
யாத்தி: 20:12 …உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக. தேவன் இஸ்ரவேல் மக்கள் மூலமாய் நமக்கு அளித்த ஒரு சில பிரமாணங்களை படித்தபின்னர் நாம் யாத்திராகமத்தை விட்டு கடந்து செல்லலாம் என்று நாம் பார்த்தோம். இன்று நாம் தியானிக்கிற முதல் பிரமாணம் யாத்தி 20: 12 உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக என்பது. நான் அடிக்கடி வால்பாறை என்ற மலையின் மேல் அமைந்துள்ள நகருக்கு பிரயாணம்… Continue reading மலர் 6 இதழ் 363 மலைப் பாதையில் போடப்பட்ட இரும்புத்தடை போல!
