ஆதி: 6: 14-22 தயவு செய்து வேதாகமத்தை வாசியுங்கள்! எந்த ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்பும் ஒரு பெண் ( தாயோ அல்லது மனைவியோ ) உறுதுணையாக நிச்சயமாக இருந்திருப்பார்கள் என்பது நமக்கு நன்கு தெரிந்த உண்மை. ஒருநாள் தேவன் நோவாவை நோக்கி, 300 முழ நீழமும் , 50 முழ அகலமும் , 30 முழ உயரமும் உள்ள பேழையை ( நம்முடைய அடி அளவின் படி 450 அடி நீழம், 75… Continue reading மலர் 1 இதழ் 7: குணசாலியான ஸ்திரி
Month: August 2010
மலர் 1: இதழ் 6: கைவிடாத தேவன்!
ஆதி : 5: 27 – 7: 6 தயவு செய்து வேதாகமத்தை வாசியுங்கள்! மெத்தூசலாவைப் பெற்ற பின் தன்னுடைய பிள்ளைகளை ஆவிக்குரிய வாழ்க்கையில் நடத்தும் பெரும் பொறுப்பு ஏனோக்கை ஆவிக்குரிய வாழ்க்கையில் அக்கறை காட்ட செய்தது என்று நேற்று பார்த்தோம்! இன்று, மெத்தூசலாவின் பிறப்பை மற்றும் அல்ல, இறப்பையும் கவனியுங்கள். (ஆதி: 5:27 ). மெத்தூசலாவின் வயது 967 வருடம், அவன் 187 ம் வயதில் லாமேக்கைப் பெற்றான், லாமேக்கு 182 வயதில் நோவாவைப் பெற்றான்,… Continue reading மலர் 1: இதழ் 6: கைவிடாத தேவன்!
ராஜாவின் மலர்கள் – ஜெப நேரம்
சகோதரிகளே சனிக்கிழமை தோறும் நாம் நம் கணவருக்காகவும், பிள்ளைகளுக்காகவும், உறவினருக்காகவும் , நண்பர்களுக்காகவும் தேவனை நோக்கி மன்றாடும் நாளாய் நாம் ஆசரிப்போம். எஸ்தர் 4:14 ல் மொர்தேகாய் எஸ்தருக்கு “ நீ இந்த காலத்தில் மவுனமாயிருந்தால், யூதருக்கு சகாயமும், இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும், அப்பொழுது நீயும் உன் தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள், நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜ மேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்கு தெரியும் என்று சொல்ல சொன்னான்” என்று பார்க்கிறோம்.… Continue reading ராஜாவின் மலர்கள் – ஜெப நேரம்
மலர் 1 : இதழ்: 5 கைவிடாத தேவன்
ஆதி: 5: 1- 24 தயவுசெய்து வேதாகமத்தை வாசியுங்கள். நாம் நேற்று காயீனுடைய தலைமுறையினர் பாவத்தில் வாழ்ந்ததைப் பற்றி பார்த்தோம். தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் பாவம் செய்த ஆதாமுக்கும், ஏவாளுக்கும், கர்த்தர் ஆபேலுக்கு பதிலாக கொடுத்த சேத்தின் பிள்ளைகளைப் பற்றி இன்று பார்ப்போம். முதலில் இந்த இரு சந்ததியினருக்கும் பெயரில் உள்ள ஒற்றுமையைப் பாருங்களேன்! காயீனின் சந்ததியினரின் பெயர்கள், ஏனோக்கு, மெகுயவேல், மெத்தூசவேல், பின்னர் லாமேக்கு என்பவைகள்! சேதத்தின் தலைமுறையில் உள்ள… Continue reading மலர் 1 : இதழ்: 5 கைவிடாத தேவன்
மலர் 1 : இதழ் 4 : கைவிடாத தேவன்
ஆதி 4: 16 - 24 தயவுசெய்து வேதாகமத்தை வாசியுங்கள்! தேவன் ஆதாமுக்கு ஏற்படுத்திக் கொடுத்தது ஒரு மனைவி, ஆனால் லாமேக்கு தேவனுக்கு கீழ்ப்படியாமல் இரண்டு பெண்களை மணந்து, தேவன் அமைத்த திருமணம் என்கிற புனித அமைப்பை அவமதித்தான் என்று நேற்று பார்த்தோம். லாமேக்கின் முதல் மனைவி ஆதாள், யாபாலை பெற்றாள். அவன் கூடாரங்களில் வாசம் பண்ணுகிறவர்களுக்கும், மந்தை மேய்ப்பவர்களுக்கும் தகப்பனானான். அவன் சகோதரன் யூபால் கின்னரக்காரருக்கும், நாதசுரக்காரருக்கும் தகப்பன் என்று வாசிக்கிறோம்.… Continue reading மலர் 1 : இதழ் 4 : கைவிடாத தேவன்
மலர்: 1 இதழ்: 3 கைவிடாத தேவன்
ஆதி: 4: 1 - 25 வேதம் கூறுகிறது ஏவாள் இரு குமாரரைப் பெற்றாள் என்று. அவள் குமாரன், ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனானான், மற்றும் காயீன் நிலத்தைப் பயிரிடுகிரவனானான். அவர்கள் கர்த்தருக்கு காணிக்கை கொடுக்க வந்த போது, கர்த்தர் காயீனுடைய காணிக்கையை அங்கீகரிக்காமல் போனதால் அவன் உள்ளம் ஆபேலின் மேல் பொறாமை கொண்டது. பொறாமையின் விளைவால் ஆத்திரமடைந்த காயீன், தன் சகோதரனைக் கொன்றான். வேதத்தை ஆராய்ந்து பார்க்கும் போது காயீன் தன் குற்றத்துக்காக வருந்தவில்லை, தன் தண்டனைக்காக… Continue reading மலர்: 1 இதழ்: 3 கைவிடாத தேவன்
மலர்: 1 இதழ்: 2 கைவிடாத தேவன்
ஆதி: 5:5 தயவுசெய்து வேதாகமத்தை வாசியுங்கள்! ஏதேன் தோட்டத்தின் நிகழ்வுகளிருந்து நாம் என்ன கற்றுக் கொண்டோம்? ஏவாளின் பெண்மையின் சக்தி ஆதாமை பாவத்துக்குள்ளாகியது என்பதுதான். அதன்பின்பு ஆதாம் 930 வயதுவரை வாழ்ந்தான். ஏவாளும் சுமார் 900 வருடங்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என்று தெரிகிறது. இந்த நீண்ட காலத்தில் எத்தனை முறை தன்னுடைய கீழ்ப்படியததால் வந்த தண்டனையை நினைத்து குமுறியிருப்பாள். ஒரு நிமிட சோதனைக்கு இடம் கொடுத்ததால் விளைந்த பலனை தன்னுடைய பிள்ளைகள் தலைமுறை தலைமுறையாக அனுபவிப்பதைப் பார்த்து வேதனையுற்றிருப்பாள். … Continue reading மலர்: 1 இதழ்: 2 கைவிடாத தேவன்
மலர் 1 இதழ் 1 கைவிடாத தேவன்
ஆதி: 3:17 தயவுசெய்து வேதாகமத்தை வாசியுங்கள். தேவனால் ஆண்களுக்கு துணையாக படைக்கப்பட்ட பெண்களாகிய நாம் அன்பையும், ஆதரவையும், பாசத்தையும் அள்ளி வழங்கும் ஆற்றலோடு உருவாக்கப்பட்ட நாம் எவ்வள்ளவு ஜாக்கிரதையுள்ளவர்களாய் தேவன் நமக்கு கொடுத்திருக்கிற தாலந்துகளை ஆக்கும் சக்தியாக பயன்படுத்த வேண்டும். அந்த சக்தியை அழிவிற்கு பயன்படுத்தக்கூடாது என்பதற்கு இந்த வேதாகமப் பகுதியே பாடமாக அமைகிறது. ஒரே ஒரு நிமிடம் ஏதேன் தோட்டத்துக்குள் வாருங்களேன்! ஏவாள் தன கையில் ‘ புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியை தெளிவிக்கிறதற்கு… Continue reading மலர் 1 இதழ் 1 கைவிடாத தேவன்
