Bible Study, Call of Prayer

மலர் 2 இதழ் 203 சிறிய தவறுதானே என்று எண்ணுவது பெரிய தவறு!

நியா: 8: 31- 35 " சீகேமிலிருந்த அவனுடைய மறுமனையாட்டியும் அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள். அவனுக்கு அபிமெலேக்கு என்று பேரிட்டான். பின்பு யோவாசின் குமாரனாகிய கிதியோன் நல்ல விருந்தாப்பியத்திலே மரித்து ஒப்ராவிலே தன் தகப்பனாகிய போவாஸ் என்னும் அபியேஸ்ரியனுடைய கல்லறையில் அடக்கப்பண்ணப்பட்டான். கிதியோன் மரித்தபின் இஸ்ரவேல் புத்திரர் திரும்பவும் பாகால்களைப் பின்பற்றிச் சோரம்போய் பாகால்பேரீத்தைத் தங்களுக்கு தேவனாக வைத்துக்கொண்டார்கள். இஸ்ரவேல் புத்திரர் தங்களைச் சுற்றிலுமிருந்த தங்கள் எல்லாச் சத்துருக்களின் கையினின்றும் தங்களை இரட்சித்த தங்கள் தேவனாகிய… Continue reading மலர் 2 இதழ் 203 சிறிய தவறுதானே என்று எண்ணுவது பெரிய தவறு!

Bible Study, Call of Prayer

மலர் 2 இதழ் 202 தவறாய் எடுக்கும் ஒரு அடி!

நியா: 8: 30 " கிதியோனுக்கு அநேகம் ஸ்திரீகள் இருந்தார்கள்; அவனுடைய கர்ப்பப்பிறப்பான குமாரர் எழுபதுபேர்." என் கணவரும் நானும்  யூத் பார் க்ரைஸ்ட் (YFC) என்ற நிறுவனத்தில் இருபது ஆண்டுகள் பணி செய்தோம். இந்தியாவின் பல மாகாணங்களில் நாங்கள் வாழ்ந்திருக்கிறோம். ஆந்திராவில் கர்நூல் மாவட்டத்தில் நான்கு வருடங்கள் ஊழியம் செய்த போது, சுற்றியுள்ள அநேக கிராமங்களுக்கு செல்வதுண்டு. அவ்விதமாக நாங்கள் சென்ற போது மாட்டு வண்டிகளில் கூட பிரயாணம் செய்ய வேண்டியிருந்தது. ஒரு முறை அவ்வாறு… Continue reading மலர் 2 இதழ் 202 தவறாய் எடுக்கும் ஒரு அடி!

Bible Study, Call of Prayer

மலர் 2 இதழ் 201 நோக்கம் நல்லது தான்! ரிசல்ட் தான் மோசம்!

நியா: 8: 27  "அதினால் கிதியோன் ஒரு ஏபோத்தை உண்டாக்கி, அதைத் தன் ஊரான ஒப்ராவிலே வைத்தான். இஸ்ரவேலரெல்லாரும் அதைப் பின்பற்றிச் சோரம் போனார்கள். அது கிதியோனுக்கும் அவன் வீட்டாருக்கும் கண்ணியாயிற்று". நல்ல எண்ணத்தோடு, உதவி செய்யும் நோக்கத்தோடு குடும்பத்துக்குள் ஏதாவது ஒரு  பிரச்சனையில் தலையிட்டு அது உங்களுக்கே கெட்ட பெயரை வாங்கி கொடுத்த அனுபவம் உங்களுக்கு உண்டா? எனக்கு உண்டு! நல்ல முறையில் , பெற்றோர் பார்த்து நிச்சயித்த திருமணங்கள் ஏன் விவாகரத்தில் முடிவடைகின்றன? விவாகரத்து… Continue reading மலர் 2 இதழ் 201 நோக்கம் நல்லது தான்! ரிசல்ட் தான் மோசம்!

Bible Study, Call of Prayer

மலர் 2 இதழ் 200 யார் உன் ஹீரோ?

நியா: 8: 22 " அப்பொழுது இஸ்ரவேல் மனுஷர் கிதியோனை நோக்கி: நீர் எங்களை மீதியானியர் கைக்கு நீங்கலாக்கிவிட்டபடியினால் நீரும் உம்முடைய குமாரனும், உம்முடைய குமாரனின் குமாரனும், எங்களை ஆளக்கடவீர்கள் என்றார்கள்." என்னுடைய கல்லூரி நாட்களில், எனக்கு சரித்திர கதைப்புத்தகங்கள் வாசிப்பது மிகவும் பிடிக்கும்.  அதிலும் விசேஷமாக நம்மை ஆண்ட மன்னர்களின் கதைகள் மேல் தான் பிரியம். போரில் வெற்றி பெற்ற வீரர்கள் பிடிக்கும். கைகளில் செங்கோல் ஏந்திய மன்னர்கள் பிடிக்கும். நான் மட்டுமல்ல! நம்மில் அநேகர் இவ்விதமாக,வெற்றிவாகை… Continue reading மலர் 2 இதழ் 200 யார் உன் ஹீரோ?

Bible Study, Call of Prayer

மலர் 2 இதழ் 199 10 ம் வகுப்பு ரிசல்ட் எப்படி?

நியா: 6: 12 "கர்த்தருடைய தூதனானவர் அவனுக்குத் தரிசனமாகி: பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்."  கர்த்தரின் சித்தத்தை நிறைவேற்றக் கர்த்தரால் உபயோகப்படுத்தப்பட்ட தெபோராள், பாராக், யாகேல் என்ற மூவரைப் பற்றி நாம் படித்தோம். தெபோராளின் வாழ்க்கையிலிருந்து அநேக காரியங்களைக் கற்றுக்கொண்டோம். ராஜாவின் மலர்களில் நாம் பெண்களைப்பற்றி மாத்திரம் படிப்பதில்லை, ஆபிரகாம், லோத்து, யாக்கோபு, மோசே போன்ற அநேக ஆண்களின் சரித்திரத்தையும் நாம் அலசிப்பார்த்திருக்கிறோம் அல்லவா! இப்பொழுது நியாதிபதிகள் 6 ம் அதிகாரத்தில் நாம் கிதியோனின் வாழ்க்கைக்கு கடந்து… Continue reading மலர் 2 இதழ் 199 10 ம் வகுப்பு ரிசல்ட் எப்படி?