சங்: 51:4 தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்து உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை நடப்பித்தேன். . தாவீதை கர்த்தர் ஏன் நேசித்தார்? ஐந்தாவது நாளாக இந்தத் தலைப்பைத் தொடருகிறோம். நாம் வாசிக்கிற இந்த வேதாகமப் பகுதியில் தாவீது தன்னுடைய பாவத்தை அறிக்கையிடுவதைப் பார்க்கிறோம். இங்கு அவன் தான் கர்த்தர் ஒருவருக்கே விரோதமாக பாவஞ்செய்வதாக சொல்கிறான்! இதை வாசிக்கும்போது , என்ன இவன் பத்சேபாளுக்கு விரோதமாக பாவம் செய்யவில்லையா? இறந்து போனதே அந்தக் குழந்தை எப்படி? கொலை செய்யப்பட்டானே… Continue reading இதழ்:1511 தேவனோடு கொண்ட உறவு கண்ணாடி போல் நொறுங்கிய தருணம்!
Month: September 2022
இதழ்:1510 நமது குற்றப் பழியை அவர் மேல் அல்லவா போடுகிறோம்!
சங்: 51:3 என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன், என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக இருக்கிறது. ஏன் கர்த்தர் தாவீதை நேசித்தார் என்று படித்துக்கொண்டிருக்கிறோம். இன்று நான்காவது நாள். ஒருவேளை நீங்கள் புதிதாக இந்த ராஜாவின் மலர்த் தோட்டத்துக்கு வந்திருப்பீர்களானால் தயவுசெய்து கடந்த நாட்களுக்குரிய தியானத்தையும் படியுங்கள்! என்றாவது குற்ற உணர்ச்சியால் அவதிப் பட்ட அனுபவம் உண்டா? ஐயோ இதை நான் ஏன் செய்தேன் ? என்று நாம் எத்தனை காரியங்களைக் குறித்து கவலைப்படுகிறோம். அப்போஸ்தலனாகிய பவுல்… Continue reading இதழ்:1510 நமது குற்றப் பழியை அவர் மேல் அல்லவா போடுகிறோம்!
இதழ்: 1509 சுண்ணாம்பு அடித்து மறைக்க வேண்டாமே!
சங்:51:2 என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும். கர்த்தர் ஏன் தாவீதை நேசித்தார்? இதுதான் நம்முடைய மூன்றாவது நாளான இன்றைய தியானம்! நாத்தான் தாவீதின் பாவத்தை சுட்டிக் காட்டியவுடன் தாவீது தேவனாகிய கர்த்தருடைய இரக்கத்தை நாடினான் என்று பார்த்தோம். அவரோ அவனை பாதைத் தவறிப் போன ஒரு குழந்தையாகப் பார்த்தார்! தாவீது தான் செய்த மகா பயங்கர செயலை உணர்ந்தவுடன் தன்னுடைய அரண்மனையில் அவனுக்கு ஆலோசனை சொல்ல இருந்த அநேக… Continue reading இதழ்: 1509 சுண்ணாம்பு அடித்து மறைக்க வேண்டாமே!
இதழ்: 1508 மனந்திருந்தி கிருபை பெற்ற ஒரு குமாரன்!
சங்:51: 1 தேவனே உமது கிருபையின்படி எனக்கு இரங்கும். உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னை சுத்திகரியும். தேவனாகிய கர்த்தர் ஏன் தாவீதை நேசித்தார்? இந்தத் தலைப்பை தாவீது எழுதிய சங்கீதங்களின் மூலம், சில வாரங்கள் படிக்கப்போகிறோம் என்று சொல்லியிருந்தேன். இன்று இரண்டாவது நாள்! சங்கீதம் 51 ஐ நாம் வரி வரியாகப் படிக்கும்போது அதின் பின்னணியை நாம் மறக்கக்கூடாது. இதை எழுதிய ராஜாவாகிய தாவீது, யூதாவுக்கும், இஸ்ரவேலுக்கும் ராஜா. இந்த சங்கீதத்தில் தாவீது… Continue reading இதழ்: 1508 மனந்திருந்தி கிருபை பெற்ற ஒரு குமாரன்!
இதழ் 1507 என்னையும் நேசிக்கும் என் தேவன்!
சங்கீதம் 51:1 தேவனே உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும். இன்றுமுதல் நாம் சில வாரங்கள் தேவனாகிய கர்த்தர் தாவீது ராஜாவை ஏன் நேசித்தார் என்று அலசிப் பார்க்கலாம் என்று நினைக்கிறேன். நாம் இதை செய்யாவிட்டால் நாம் தாவீதின் வாழ்க்கையைப் பற்றி படித்து முடித்ததற்கு அர்த்தமே இல்லாமல் போகும்! தேவனாகிய கர்த்தர் ஏன் ஏன் ஏன் தாவீதை நேசித்தார்? உங்களுக்கு ஏதாவது பதில் தெரியுமானால் என்னோடு தயவு… Continue reading இதழ் 1507 என்னையும் நேசிக்கும் என் தேவன்!
இதழ்: 1506 விசுவாசம் என்பது நாம் காணக்கூடாதவைகளை நம்புதல்!
2 சாமுவேல் 14: 17, 21 ராஜாவாகிய என் ஆண்டவனுடைய வார்த்தை எனக்கு ஆறுதலாயிருக்கும் என்று உமது அடியாளாகிய நான் எண்ணினேன். நன்மையும் தீமையும் கேட்கும்படி ராஜாவாகிய என் ஆண்டவன் தேவனுடைய தூதனைப்போல இருக்கிறார்.... அப்பொழுது ராஜா யோவாபைப் பார்த்து: இதோ இந்தக் காரியத்தைச் செய்கிறேன். நீ போய் அப்சலோம் என்னும் பிள்ளையாண்டானைத் திரும்ப அழைத்துக்கொண்டு வா என்றான். வேதத்தில் ஆபிரகாம் தேவனாகிய கர்த்தரால் , தான் இதுமுன் அறிந்திராத ஒரு தேசத்துக்கு புறப்படும்படி அழைக்கப்பட்டார். கர்த்தருடைய… Continue reading இதழ்: 1506 விசுவாசம் என்பது நாம் காணக்கூடாதவைகளை நம்புதல்!
இதழ்: 1505 உன்னை அரவணைக்கக் காத்திருக்கும் கரம்!
2 சாமுவேல் 14: 15,16 இப்போதும் என் ஆண்டவனாகிய ராஜாவோடே இந்த வார்த்தையை பேச வந்த முகாந்தரம் என்னவென்றால்: ஜனங்கள் எனக்குப் பயமுண்டாகினதினால் நான் ராஜாவோடே பேசவந்தேன். ஒருவேளை ராஜா தமது அடியாளுடைய வார்த்தையின்படி செய்வார் என்று உமது அடியாளாகிய நான் நினைத்ததினாலும் வந்தேனே ஒழிய வேறில்லை. என்னையும் என் குமாரனையும் ஏகமாய்த் தேவனுடைய சுதந்திரத்திற்கு புறம்பாக்கி அழிக்க நினைக்கிற மனுஷனுடைய கைக்குத் தமது அடியாளை நீங்லாக்கிவிடும்படிக்கு ராஜா கேட்பார். தெக்கோவாவிலிருந்து வந்த பெண் புத்திசாலியானவள் என்று… Continue reading இதழ்: 1505 உன்னை அரவணைக்கக் காத்திருக்கும் கரம்!
இதழ்:1504 கிருபாசனத்தை தைரியமாய் நெருங்கும் வேளை!
2 சாமுவேல் 14: 12, 13 அபொழுது அந்த ஸ்திரீ ராஜாவாகிய என் ஆண்டவனோடே உமது அடியால் ஒரு வார்த்தைசொல்ல உத்தரவாக வேண்டும் என்றாள். அவன் சொல்லு என்றான். அப்பொழுது அந்த ஸ்திரீ: பின்னை ஏன் தேவனுடைய ஜனத்திற்கு விரோதமாய் இப்படிப்பட்ட நினைவை நீர் கொண்டிருக்கிறீர். துரத்துண்ட தம்முடையவனை ராஜா திரும்ப அழைக்காததினாலே ராஜா இப்பொழுது சொன்ன வார்த்தையினால் குற்றமுள்ளவரைப்போல இருக்கிறார். எனக்கு சின்ன வயதிலிருந்தே மிருக கண்காட்சிக்கு போவது மிகவும் பிடிக்கும். அங்கே உள்ள மிருகங்களில்… Continue reading இதழ்:1504 கிருபாசனத்தை தைரியமாய் நெருங்கும் வேளை!
இதழ்:1503 இதையன்றி வேறே எதை உன்னிடம் கேட்கிறார்?
2 சாமுவேல் 14:11 பின்னும் அவள்; இரத்தப்பழி வாங்குகிறவர்கள் அழிம்பு செய்து, என் குமாரனை அதம்பண்ணப் பெருகிப் போகாதபடிக்கு, ராஜாவானவர் தம்முடைய தேவனாகிய கர்த்தரை நினைப்பாராக என்றாள். அதற்கு ராஜா: உனது குமாரனுடைய மயிரில் ஒன்றாவது தரையில் விழுவதில்லை என்று கர்த்தரின்ஜீவனைக்கொண்டு சொல்கிறேன் என்றான். தாவீதுடைய நம்பிக்கைக்குரிய சேனை வீரனும் அவன் நண்பனுமாகிய யோவாப் தாவீதுக்கும் அவனுடைய குமாரனாகிய அப்சலோமுக்கும் இடையே இருந்த இடைவெளியைப் போக்க தெக்கோவாவிலிருந்து ஒரு புத்தியுள்ள ஸ்திரீயைக் கொண்டு வந்தான். அவள் தன்னுடைய… Continue reading இதழ்:1503 இதையன்றி வேறே எதை உன்னிடம் கேட்கிறார்?
இதழ் 1502 உன்னைத் தொடுபவன் கர்த்தரின் கண்மணியைத் தொடுகிறான்!
2 சாமுவேல் 14: 9,10 பின்னும் அந்த தெக்கோவாவூர் திரீ ராஜாவைப் பார்த்து: ராஜாவாகிய என் ஆண்டவனே, ராஜாவின்மேலும் அவர் சிங்காசனத்தின்மேலும் குற்றமில்லாதபடிக்கு, அந்தப்பழி என்மேலும், என் தகப்பன் வீட்டின்மேலும் சுமரக்கடவது என்றாள். அதற்கு ராஜா உனக்கு விரோதமாகப் பேசுகிறவனை என்னிடத்தில் கொண்டுவா. அப்பொழுது அவன் இனி உன்னைத் தொடாதிருப்பான் என்றான். கடந்த சில நாட்களாக நாம் தெக்கோவாவூரின் புத்தியுள்ள ஸ்திரீயைப் பற்றி படித்து வருகிறோம். அவள் எல்லாவற்றையும் பகுத்தறியத் தக்க ஞானம் கொண்டவள் என்றும், அவள்… Continue reading இதழ் 1502 உன்னைத் தொடுபவன் கர்த்தரின் கண்மணியைத் தொடுகிறான்!
