1 இராஜாக்கள் 19:11 - 13 அப்பொழுது அவர்: நீ வெளியே வந்து கர்த்தருக்கு முன்பாகப் பர்வதத்தில் நில் என்றார்; அப்பொழுது, இதோ, கர்த்தர் கடந்துபோனார்; கர்த்தருக்கு முன்பாகப் பர்வதங்களைப் பிளக்கிறதும் கன்மலைகளை உடைக்கிறதுமான பலத்த பெருங்காற்று உண்டாயிற்று; ஆனாலும் அந்தக் காற்றிலே கர்த்தர் இருக்கவில்லை; காற்றிற்குபின் பூமி அதிர்ச்சி உண்டாயிற்று; பூமி அதிர்ச்சியிலும் கர்த்தர் இருக்கவில்லை. பூமி அதிர்ச்சிக்குப்பின் அக்கினி உண்டாயிற்று; அக்கினியிலும் கர்த்தர் இருக்கவில்லை; அக்கினிக்குப்பின் அமர்ந்த மெல்லிய சத்தம் உண்டாயிற்று.அதை எலியா கேட்டபோது, தன்… Continue reading இதழ்:2408 அமைதலுள்ளவர்களாய் தேவ சமுகத்தை நாடுங்கள்!
Author: Prema Sunder Raj
இதழ்:2407 நொறுங்கிப் போனேன் என்னை குணமாக்கும்!
சங்: 51: 8 நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படி செய்யும், அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் களிகூறும். நாம் தாவீது எழுதிய சங்கீதங்களின் மூலம் தாவீதைப் பற்றிப் படித்துக் கொண்டிருக்கிறோம். இன்று பன்னிரண்டாவது நாள். நேற்று நாம் கர்த்தர் நம்மோடு பண்ணின நிபந்தனையற்ற அன்பின் உடன்படிக்கையில் அவர் என்றுமே மாறாதவர் என்று பார்த்தோம். அவர் வார்த்தை மாறாது! அவர் சொன்ன யாவற்றையும் நிறைவேற்றுவார். இன்று இதை தெளிவாக நம்முடைய மனதில் கொண்டு இந்த வசனத்தை நாம் மறுபடியும்… Continue reading இதழ்:2407 நொறுங்கிப் போனேன் என்னை குணமாக்கும்!
இதழ்:2406 ஏன் இந்த தயக்கம்?
சங்: 51: 7 - 11 நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன். என்னைக் கழுவியருளும், அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன். நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படி செய்யும், அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் களிகூறும். என் பாவங்களைப் பாராதபடிக்கு நீர் உமது முகத்தை மறைத்து, என் அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளும்.தேவனே சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும். உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை… Continue reading இதழ்:2406 ஏன் இந்த தயக்கம்?
இதழ்:2405 என் தேவன் என்றென்றும் மாறாதவர்!
சங்: 51: 9 - 11 என் பாவங்களைப் பாராதபடிக்கு நீர் உமது முகத்தை மறைத்து, என் அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளும்.தேவனே சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும். உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும். நாம் சங்கீதங்களிலிருந்து தாவீதைப் பற்றி தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறோம்! சில வருடங்களுக்கு முன்னால் நானும் என் மகனும் பிஸினஸ் விஷயமாக வெளியூர் சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது ,… Continue reading இதழ்:2405 என் தேவன் என்றென்றும் மாறாதவர்!
இதழ்:2404 எங்கிருந்து வந்தது இந்த துதி, ஸ்தோத்திரங்கள் நிரம்பிய வாழ்வு?
சங்: 51:8 நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படி செய்யும், அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் களிகூறும். தேவனாகிய கர்த்தர் தாவீதை ஏன் நேசித்தார்? என்ற கேள்விக்கு பதிலை தாவீது எழுதிய சங்கீதங்களின் மூலம் பார்க்கிறோம். உலகம் கொடுக்கக்கூடாத சந்தோஷம் ஒன்று உண்டு என்பது என்னைபோல நீஙகளும் அறிவீர்கள் என்று நம்புகிறேன். அதுமட்டுமல்ல இந்த சந்தோஷத்தை உலகம் நம்மிடமிருந்து பறிக்கவும் முடியாது.ஆனால் சில நேரங்களில் நம்முடைய வாழ்க்கையை நாமே ஆளுகை செய்து கொள்ளலாம் அங்கு கர்த்தர் தேவையில்லை என்று… Continue reading இதழ்:2404 எங்கிருந்து வந்தது இந்த துதி, ஸ்தோத்திரங்கள் நிரம்பிய வாழ்வு?
இதழ்:2403 பரிசுத்தத்தை இன்று தாரும் ஆவியானவரே!
சங்:51:7 நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன். என்னைக் கழுவியருளும், அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன். நாம் சங்கீதங்களிலிருந்து தாவீதைப் பற்றி தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறோம்! தாவீது இந்த அன்புக் கடிதத்தின் முதல் சில வசனங்களில், தான் வழிதவறிப் போன இந்த நிலையில் கர்த்தருடைய கிருபை தனக்குக் கிடைக்க வேண்டுமென்று கெஞ்சுகிறான். தேவனுடைய மிகுந்த இரக்கங்களால் தன்னை ரட்சிக்க வேண்டுமென்று வேண்டுகிறான். தன்னுடைய பாவத்திலிருந்து முற்றிலும் சுத்திகரிக்கப்பட்டு, தன்னைக் குற்றப்படுத்தும் உணர்ச்சிகளிலிருந்து வெற்றி… Continue reading இதழ்:2403 பரிசுத்தத்தை இன்று தாரும் ஆவியானவரே!
இதழ்:2402 உண்மையாய் வாழத் தேவையான ஞானம் தாரும் தேவனே!
சங்:51:6 இதோ உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகிறீர். அந்தக்கருணத்தில் ஞானத்தை எனக்கு தெரியப்படுத்துவீர். நாம் சங்கீதங்களிலிருந்து தாவீதைப் பற்றி தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறோம்! நாம் நேற்று ஏதேன்எ ன்னும் பரிபூரண அழகானத் தோட்டத்தைப் பற்றிப் பார்த்தோம். அந்த அழகிய சுற்றுபுறத்தில் வாழ்ந்தவர்கள் தான் ஆதாமும் ஏவாளும். தேவனாகிய கர்த்தர் அந்தத் தோட்டத்தில் உள்ள எல்லாவற்றையும் அனுபவிக்க அவர்களுக்கு சுதந்தரம் கொடுத்தாலும், ஒரே ஒரு மரத்தின் கனியை மாத்திரம் புசிக்க வேண்டாம் என்றிருந்தார். வேதம் ஆதியாகமம் 3 ல் சொல்கிறது… Continue reading இதழ்:2402 உண்மையாய் வாழத் தேவையான ஞானம் தாரும் தேவனே!
இதழ்:2401 எந்த நன்மையையும் நான் சுமந்து வரவில்லையே!
சங்: 51:5 இதோ நான் துர்க்குணத்தில் உருவானேன், என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள். நாம் சங்கீதங்களிலிருந்து தாவீதைப் பற்றி தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறோம்! பல வருடங்களுக்கு முன்னால் ஈராக் தேசத்தில் ஏதேன் தோட்டம் இருந்தாகக் கருதப்படும் ஒரு இடம் கண்டுபிடிக்கப்பட்டது. ஒருகாலத்தில் இது பச்சையான சதுப்பு நிலமாக இருந்திருக்கக்கூடும் என்பதற்கு அடையாளமாக இந்த இடம் மிகவும் நீர் வளமோடு ஈரமாக இருந்தது. உலகத்தின் இந்த பாகத்தில் காய்ந்த பாலைவனங்கள் அதிகமான ஒரு பகுதியில் இப்படிப்பட்ட ஒரு… Continue reading இதழ்:2401 எந்த நன்மையையும் நான் சுமந்து வரவில்லையே!
இதழ்:2400 உம்முடைய நாமத்தை தூஷிக்காமல் என்னைக் காத்தருளும்!
சங்: 51:4 தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்து உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை நடப்பித்தேன். . நாம் வாசிக்கிற இந்த வேதாகமப் பகுதியில் தாவீது தன்னுடைய பாவத்தை அறிக்கையிடுவதைப் பார்க்கிறோம். இங்கு அவன் தான் கர்த்தர் ஒருவருக்கே விரோதமாக பாவஞ்செய்வதாக சொல்கிறான்! இதை வாசிக்கும்போது , என்ன இவன் பத்சேபாளுக்கு விரோதமாக பாவம் செய்யவில்லையா? இறந்து போனதே அந்தக் குழந்தை எப்படி? கொலை செய்யப்பட்டானே அந்த உரியாவுக்கு விரோதமாக ஒன்றுமே செய்யவில்லையா? அவனுடைய குடும்பத்தார் எப்படி?… Continue reading இதழ்:2400 உம்முடைய நாமத்தை தூஷிக்காமல் என்னைக் காத்தருளும்!
இதழ்:2399 குற்றம் செய்தது நாம்தானே? அல்லது தேவனா?
சங்: 51:3 என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன், என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக இருக்கிறது. நாம் தாவீது எழுதிய சங்கீதங்கள் மூலமாக அவனைப் பற்றிப் படித்துக் கொண்டிருக்கிறோம். என்றாவது குற்ற உணர்ச்சியால் அவதிப் பட்ட அனுபவம் உண்டா? ஐயோ இதை இப்படி செய்திருக்கலாமே! இந்த இடத்தில் இப்படி பேசியிருக்கலாமே! தவறு செய்துவிட்டோமே என்று நாம் எத்தனை காரியங்களைக் குறித்து கவலைப்படுகிறோம். அப்போஸ்தலனாகிய பவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்தில் எல்லோரும் பாவம் செய்து தேவ மகிமை அற்றவர்களானார்கள்… Continue reading இதழ்:2399 குற்றம் செய்தது நாம்தானே? அல்லது தேவனா?
