Bible Study

மலர்:1இதழ்:72 முறுமுறுப்பால் வந்த விபரீதம்!

  எண்ணா:12: 1, 2  “எத்தியோப்பியா  தேசத்து ஸ்திரீயை மோசே விவாகம்பண்ணியிருந்தபடியினால் மிரியாமும் ஆரோனும்,அவன் விவாகம் பண்ணியிருந்த எத்தியோப்பிய தேசத்து  ஸ்திரீயினிமித்தம் அவனுக்கு விரோதமாய்ப் பேசி: கர்த்தர் மோசேயைக்கொண்டு மாத்திரம் பேசினாரோ, எங்களைக் கொண்டும் அவர் பேசினதில்லையோ என்றார்கள்.  கர்த்தர் அதைக் கேட்டார்.   சில நேரங்களில் நம்மை சுற்றி நடக்கும் ஆபத்து, விபத்துகளைப் பற்றி கேள்விப்படும்போது,  “அதன் பின்னர் அவர்கள் என்றென்றும் சந்தோஷமாக வாழ்ந்தார்கள்” என்ற வாக்கியம் கதைகளுக்கு மாத்திரம் அல்ல நம் வாழ்க்கைக்கும் சொந்தமாயிருந்தால்… Continue reading மலர்:1இதழ்:72 முறுமுறுப்பால் வந்த விபரீதம்!

Call of Prayer

ஜெபக்கூடாரம்

  தனித்திருந்து எறேடுக்கும் ஜெபம்!   லூக்கா: 5:16 “அவரோ வனாந்தரத்தில் தனித்து போய் ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தார்”      ஒவ்வொரு சனிக்கிழமையும் நாம் தேவனுடைய சமுகத்தில் நம் ஜெப வேண்டுதல்களோடு வருகிற நாள். இன்றைய வேத வசனத்தில், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வனாந்திரத்தில் தனித்திருந்து ஜெபித்தார் என்று பார்க்கிறோம். நம்முடைய எல்லா வேலைகளின் மத்தியிலும், சிறிது நேரம் தனித்திருந்து நம் தேவனோடு செலவிடுவோம். நம் தேவைகளுக்காக அவரை நோக்கி விண்ணப்பம் பண்ணுவோம். அவர் நம் வேண்டுதல்களைக்… Continue reading ஜெபக்கூடாரம்

Bible Study

மலர்:1 இதழ்: 45 அல்லோன்பாகூத் …… ?

ஆதி:  35:8 “ ரெபேக்காளின் தாதியாகிய  தெபோராள் மரித்து, பெத்தேலுக்கு சமீபமாயிருந்த ஒரு கர்வாலி மரத்தின்கீழ் அடக்கம் பண்ணப் பட்டாள், அதற்கு அல்லோன்பாகூத் என்ற பேர் உண்டாயிற்று.”   நாம் நேற்று யாக்கோபை விட்ட போது, அவன் தன் குமாரரிடம் இன் வாசனையை நீங்கள் இந்த இடத்தில் கெடுத்து விட்டீர்களே என்று புலம்பக் கூடிய அளவுக்கு, லேவியும், சிமியோனும் மூர்க்கமாய் நடந்தனர் என்று பார்த்தோம். ஆனால் ஆதி: 34 லிருந்து, 35 க்குள் போகும்போது, தேவனை விட்டு… Continue reading மலர்:1 இதழ்: 45 அல்லோன்பாகூத் …… ?

Bible Study

மலர்:1 இதழ்: 43 நம்பவைத்து ஏமாற்றுவது என்றால்?

ஆதி: 34:13 “ அப்பொழுது யாக்கோபின் குமாரர் தங்கள் சகோதரியாக தீனாளை சீகேம் என்பவன் தீட்டு படுத்தினபடியால், அவனுக்கும் அவன் தகப்பன் ஏமோருக்கும்  வஞ்சகமான மறுமொழியாக:”   யாராவது உங்களை வஞ்சகமாக ஏமாற்றிய கசப்பான அனுபவம் உங்களுக்கு உண்டா?  பொய்யை உண்மையைப்போல சித்தரித்து கூறி நம்ப வைத்து கழுத்தறுக்கப்பட்ட அனுபவம் உண்டா? இவர்கள் பேசுவது உண்மையா அல்லது பொய்யா என்று நம்மை திணற வைக்கக் கூடிய அளவு பேசுகிறவர்கள் பலரை நம் ஒவ்வொருவர் வாழ்விலும் கண்டிருப்போம்! யாக்கோபின்… Continue reading மலர்:1 இதழ்: 43 நம்பவைத்து ஏமாற்றுவது என்றால்?

Bible Study

மலர்:1 இதழ்:38 பயமொன்றுமில்லை!

ஆதி:32: 9-11  “பின்பு யாக்கோபு, என் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும், என் தகப்பனாகிய ஈசாக்கின் தேவனுமாய் இருக்கிறவரே: உன் தேசத்துக்கும், உன் இனத்தாரிடத்துக்கும் திரும்பிப் போ உனக்கு நன்மை செய்வேன் என்று என்னுடனே சொல்லியிருக்கிற கர்த்தாவே , அடியேனுக்கு தேவன் காண்பித்த எல்லா தயவுக்கும், எல்லா சத்தியத்துக்கும் நான் எவ்வளவேனும் பாத்திரன் அல்ல, நான் கோலும், கையுமாய் இந்த யோர்தானைக் கடந்து போனேன், இப்பொழுது இவ்விரண்டு பரிவாரங்களையும் உடையவனானேன். என் சகோதரனாகிய ஏசாவின் கைக்கு என்னைத் தப்புவியும்;… Continue reading மலர்:1 இதழ்:38 பயமொன்றுமில்லை!

Bible Study

மலர்:1இதழ்:37 உன் கடந்த காலமும் அவர் கையில்….

“நீ தூணுக்கு அபிஷேகஜ்செய்து , எனக்கு ஒரு பொருத்தனை பண்ணின பெத்தேலிலே உனக்கு தரிசனமான தேவன் நானே, இப்பொழுது நீ எழுந்து, இந்த தேசத்தைவிட்டு புறப்பட்டு உன் இனத்தாரிருக்கிற தேசத்துக்கு திரும்பிப் போ என்றார் என்றான்”  ( ஆதி:31:13)     பல வருடங்களாக யாக்கோபு , பேராசைக்காரன், லாபானுடைய ஆதிக்கத்துக்கு, கீழே வாழ்ந்தான் என்று பார்த்தோம். கர்த்தர் யாக்கோபின் வாழ்வில் பெரிய திட்டம் வைத்திருந்தார், அவனோ வஞ்சனையும், பொறாமையும், பேராசையும் நிறைந்த சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தான்.… Continue reading மலர்:1இதழ்:37 உன் கடந்த காலமும் அவர் கையில்….

Bible Study

ஜெபக்கூடாரம்!

       தேவ தூதன் மூலமாய் பதிலை வரவழைத்த ஜெபம்!   தானியேல்: 9: 21 – 23  அப்படி நான் ஜெபம் பண்ணிக்கொண்டிருக்கும்போதே, முதல் தரிசனத்திலே நான் கண்ட புருஷனாகிய காபிரியேல், வேகமாய்ப் பறந்து வந்து, அந்திப்பலியின் நேரமாகிய வேளையிலே என்னைத் தொட்டான்............ ஆதலால் நீ வேண்டிக் கொள்ளத் தொடங்கின போதே கட்டளை வெளிப்பட்டது, நான் அதை அறிவிக்க வந்தேன்.....”     தானியேல் ஒரு சாதாரண மனிதன் தான். அவன்  ஜெபித்துக்  கொண்டிருந்த  போது… Continue reading ஜெபக்கூடாரம்!

Bible Study

மலர்:1 இதழ்:34 தற்செயலாக நடந்ததா?

  ஆதி: 29: 9-11 “ அவர்களோடே அவன் பேசிக் கொண்டிருக்கும்போதே , தன் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த ராகேல் அந்த ஆடுகளை ஒட்டிக்கொண்டு வந்தாள். யாக்கோபு தன் தாயின் சகோதரனாகிய லாபானுடைய குமாரத்தியாகிய ராகேலையும், தன் தாயின் சகோதரனாகிய லாபானின் ஆடுகளையும் கண்டபோது, யாக்கோபு போய், கிணற்றின் வாயிலிருக்கிற கல்லைப் புரட்டி தன் தாயின் சகோதரனாகிய லாபானின் ஆடுகளுக்கு தண்ணீர் காட்டினான். பின்பு யாக்கோபு ராகேலை முத்தஞ் செய்து, சத்தமிட்டு அழுது..”   நாம் சில… Continue reading மலர்:1 இதழ்:34 தற்செயலாக நடந்ததா?

Bible Study

மலர்:1 இதழ்:33 எதை விதைத்தாயோ அதை அறுப்பாய்!

   ஆதி: 28: 1,2  “ ஈசாக்கு யாக்கோபை அழைத்து, அவனை ஆசிர்வதித்து, நீ கானானியருடைய குமாரத்திகளில் பெண் கொள்ளாமல், எழுந்து புறப்பட்டு பதான் அராமிலிருக்கிற உன் தாயினுடைய தகப்பனாகிய பெத்துவெலுடைய வீட்டுக்கு போய், அவ்விடத்தில் உன் தாயின் சகோதரனாகிய லாபானின் குமாரத்திகளுக்குள் பெண்கொள் என்று அவனுக்கு கட்டளையிட்டான்.”   யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கை ஏமாற்றி பொய் சொல்லி ஆசிர்வாதத்தை பெற்றவுடன் , ஏசா அவன் மீது மூர்க்கம் கொண்டிருப்பதை அறிந்து ஈசாக்கும், ரெபெக்காளும் அவனை,… Continue reading மலர்:1 இதழ்:33 எதை விதைத்தாயோ அதை அறுப்பாய்!

Bible Study

மலர்:1 இதழ்:32 தேவனை அறிந்த ஒரு தாய் ஏமாற்றுகிறாள்! விளைவு?

  ஆதி:  27:13 “அதற்கு அவன் தாய், என் மகனே, உன்மேல் வரும் சாபம் என்மேல் வரட்டும்; என் சொல்லை மாத்திரம் கேட்டு , நீ போய், அவைகளை என்னிடத்தில் கொண்டுவா என்றாள்.”   யாக்கோபு தன் தாயின் நேசத்தை பெற்றான். ஈசாக்கு வயதான போது குடும்பத்தின் ஆசிர்வாதத்தை மூத்த குமாரனுக்கு வழங்கும் நேரம் வந்த போது, ரெபெக்காள் தன் இளைய குமாரனுக்கு அந்த ஆசீர்வாதம் கிடைக்க வேண்டுமென்று எண்ணுகிறாள்.  ஆண்டவர் வாக்குத்தத்தம் பண்ணிய பிள்ளையை பெற்றுக்கொள்ள… Continue reading மலர்:1 இதழ்:32 தேவனை அறிந்த ஒரு தாய் ஏமாற்றுகிறாள்! விளைவு?