ஆதி: 16:2 சாராய் ஆபிராமை நோக்கி: நான் பிள்ளை பெறாதபடி கர்த்தர் என் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார் .... என்றாள். மிகுந்த ஆஸ்தியோடு எகிப்தைவிட்டு புறப்பட்டு கானானை நோக்கி சென்றார்கள் ஆபிராம், சாராய் தம்பதியினர் என்று பார்த்தோம். போகும் வழியில், எகிப்தின் சுகபோகத்தை அனுபவித்திருந்த, ஆபிராமின் சகோதரன் மகனாகிய லோத்து, எகிப்தை போல செழிப்பாயிருந்த சோதோமுக்கு அருகான சமபூமியை எடுத்துக் கொண்டான். பின்னர் லோத்து சோதோமுக்கு அருகாமையில் கூடாரம் போட்டான். அப்புறம் சோதோமிலேயே குடியேறிவிட்டான் என்று பார்க்கிறோம். எகிப்தின் சுகபோகமான… Continue reading இதழ்: 1001 ஆகா என்ன ஆசை! என்ன திட்டம்!
Category: வேதாகமப் பாடம்
இதழ்: 1000 எகிப்தில் கிடைத்த வெகுமதிகள் தேவையா?
ஆதி 16:1 எகிப்து தேசத்தாளாகிய ஆகார் என்னும் பேர்கொண்ட ஓர் அடிமைப்பெண் அவளுக்கு ( சாராய்க்கு) இருந்தாள். தேவனுடைய சித்தத்துக்கு மாறாய் எகிப்துக்கு போய், தேவனை மகிமைப்படுத்தாமல், சொந்த முயற்சியில் பிரச்சனைகளை தீர்க்க, முயன்று, பேராபத்தில் சிக்கிய ஆபிராம், சாராய் தம்பதியினரை தேவன் தம் கிருபையால் தப்புவித்தார். இந்த சம்பவத்தை திரும்பிப் படிக்கும்போது ஒரு காரியம் கண்ணைப் பறிக்கிறது. சாராயின் அழகில் மயங்கிய பார்வோன் அவளுக்கும், ஆபிராமுக்கும்,பரிசாக ஆடு மாடுகளும், கழுதைகளும், வேலைக்காரரும், வேலைக்காரிகளும், கோளிகைக் கழுதைகளும்,… Continue reading இதழ்: 1000 எகிப்தில் கிடைத்த வெகுமதிகள் தேவையா?
ஜெபமே ஜெயம்!
நம்முடைய ஜெபம் தேவனைக் கிரியை செய்ய வைக்கும்! “ எலியா என்பவன் நம்மைப் போல பாடுள்ள மனுஷனாயிருந்தும், மழை பெய்யாதப்படிக்கு கருத்தாய் ஜெபம் பண்ணினான், அப்பொழுது மூன்று வருஷமும், ஆறு மாதமும் பூமியின் மேல் மழை பெய்யவில்லை. மறுபடியும் ஜெபம் பண்ணினான் அப்பொழுது வானம் மழையைப் பொழிந்தது பூமி தன் பலனைத் தந்தது. (யாக்கோபு: 5: 17,18) நம்மைப் போல தினசரி பாடுள்ள சாதாரண ஒரு மனிதனின் ஜெபத்துக்கு கர்த்தரை கிரியை செய்ய வைக்க வல்லமையுண்டு… Continue reading ஜெபமே ஜெயம்!
இதழ்: 999 வெள்ளைப் பொய்யா? சொல்லலாமா?
நீதி:12:19 சத்திய உதடுகள் என்றும் நிலைத்திருக்கும்: பொய்நாவோ ஒரு நிமிஷமாத்திரம் இருக்கும். ஆபிராமும், சாராயும் தேவனால் அழைக்கப்பட்டார்கள், வழி நடத்தப்பட்டார்கள், ஆனால் போகும் வழியில், பஞ்சம் என்ற தடை வந்தவுடன் அவர்கள் வாழ்க்கை என்னும் பயணத்தை கானானை நோக்கி தொடராமல், எகிப்தை நோக்கி தொடர்ந்தனர். ஆபிராம் அழைக்கப் பட்டது கானானுக்குள் பிரவேசிக்கத்தான்! தங்களுக்கு இருந்த அத்தனை சொத்து சுகங்களை விட்டு விட்டுத்தான் அந்தக் குடும்பம் புறப்பட்டனர். பஞ்சம் வந்தவுடன் யார் அவர்களை வழி நடத்துகிறார் என்று மறந்தே… Continue reading இதழ்: 999 வெள்ளைப் பொய்யா? சொல்லலாமா?
இதழ்: 998 திசை மாறிய வண்டியின் சக்கரங்கள்!
ஆதி: 12:10 அத்தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று. தேசத்திலே பஞ்சம் கொடியதாயிருந்தபடியால், ஆபிராம் எகிப்து தேசத்திலே தங்கும்படி அவ்விடத்துக்குப் போனான். ஆபிராம் சாராயுடைய குடும்ப வண்டியின் சக்கரம் வேகமாய் சுழன்றன! ஆபிராம் மோரே என்ற சமபூமிக்கு வந்த போது கர்த்தர் தரிசனமாகி ‘ உன் சந்ததிக்கு இந்த தேசத்தைக் கொடுப்பேன் ’ என்றார். ஆபிராம் அங்கிருந்து புறப்பட்டு தெற்கே பிரயாணம் பண்ணினான். புழுதியான பாதையில் வண்டியின் சக்கரங்கள் கானான் தேசத்தை நோக்கி வேகமாக சேற்று கொண்டிருக்கும்போது, அந்ததேசத்தில் பஞ்சம்… Continue reading இதழ்: 998 திசை மாறிய வண்டியின் சக்கரங்கள்!
இதழ்: 997 விசுவாசத்தோடு புறப்படு! இலகுவாய் முடியும்!
ஆதி: 12:1 கர்த்தர் ஆபிராமை நோக்கி : நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டு புறப்பட்டு, நான் உனக்கு காண்பிக்கும் தேசத்துக்கு போ நேற்று நாம் 'ஆபிராமின் மனைவியும், மலடியுமான’ என்று கருதப்பட்ட சாராயைப் பற்றிப் பார்த்தோம். சாராயின் தகப்பன் தேராகு திடிரென்று தன் குடும்பத்தாரோடு தாங்கள் வாழ்ந்த ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்தை விட்டு கானான் என்கிற தேசத்துக்கு புறப்பட்டான். வேதத்தை கூர்ந்து படித்திருப்பேர்களானால், தேராகு சாராயின் தகப்பனா? அவன்… Continue reading இதழ்: 997 விசுவாசத்தோடு புறப்படு! இலகுவாய் முடியும்!
இதழ்:996 தேவனுடைய திட்டத்தில் நீ ஒரு உன்னத பாத்திரம்!
ஆதி 11:30 சாராய்க்கு பிள்ளையில்லை. மலடியாயிருந்தாள் என் வாழ்க்கையில் குழந்தை பாக்கியம் இல்லாத பல பெண்களின் மன வேதனையை கண்கூடாக கண்டிருக்கிறேன். நான் பார்த்து வளர்ந்த ஒரு இளம் பெண், திருமணமாகி பலமுறை கருவுற்றும் குழந்தை பெரும் பாக்கியம் இல்லாததால் தற்கொலை செய்து கொண்டதை கேள்விப்பட்டு மனதுடைந்தேன். இது உலகம் முழுவதும் நடக்கும் ஒரு சம்பவம் தான் அல்லவா? இன்று நாம் வாசிக்கிற இந்த வேதாகமப் பகுதியில், ஏபேருடைய வம்சத்தில் வந்த ஆபிராம், சாராய் என்ற பெண்ணை மணக்கிறான்… Continue reading இதழ்:996 தேவனுடைய திட்டத்தில் நீ ஒரு உன்னத பாத்திரம்!
இதழ்:995 ஆதித்திருச்சபையில் நோவாவின் சந்ததி!
அப்போஸ்தலர்: 17:26 மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின் மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார். தேவன் நோவாவோடு செய்த உடன்படிக்கையை நிறைவேற்ற நோவாவின் மனைவி உறுதுணை யாக இருந்ததை கடந்த வா பார்த்தோம்! பாவம் நிறைந்த இந்த உலகில் பரிசுத்தமாய் வாழ்ந்த சில தனிப்பட்ட மனிதர் மூலமாய் தேவன் தம்முடைய சித்தத்தை நிறைவேற்றினார். அவர்களை தமக்கு சொந்தமான ஜனமக்கினார். ஏனெனில் அவர்கள் தேவனை நோக்கிப் பார்த்தார்கள்,… Continue reading இதழ்:995 ஆதித்திருச்சபையில் நோவாவின் சந்ததி!
ஜெபமே ஜெயம்!
வானத்திலிருந்து அக்கினியை வரவழைத்த ஜெபம்! “சாலொமோன் ஜெபம் பண்ணி முடிக்கிறபோது, அக்கினி வானத்திலிருந்து இறங்கி , சர்வாங்க தகன பலியையும் மற்ற பலிகளையும் பட்சித்தது ; கர்த்தருடைய மகிமையும் ஆலயத்தை நிரப்பிற்று.” ( II நாளாகமம் : 7:1) ஒரு சாதாரண மனிதனின் ஜெபத்திற்கு கர்த்தர் எவ்விதமாக பதிலளிக்கிறார் பாருங்கள்! வாருங்கள் நாமும் நம் தேவைகளை தேவனிடம் ஒப்புக் கொடுத்து ஜெபிப்போம். அக்கினியால் பதிலளிக்க வல்ல தேவனை விசுவாசித்து ஜெபிப்போம். தேவனுடைய வல்லமையான மகிமையின் பிரசன்னம்… Continue reading ஜெபமே ஜெயம்!
இதழ்: 994 தேவனுடைய உடன்படிக்கையின் பங்காளி!
ஆதி: 6:18 ஆனாலும் உன்னுடனே என் உடன்படிக்கையை ஏற்படுத்துவேன். நீயும் உன்னோடே கூட உன் குமாரரும், உன் மனைவியும், உன் குமாரரின் மனைவிகளும், பேழைக்குள் பிரவேசியுங்கள். எந்த ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்பும் ஒரு பெண் ( தாயோ அல்லது மனைவியோ ) உறுதுணையாக நிச்சயமாக இருந்திருப்பார்கள் என்பது நமக்கு நன்கு தெரிந்த உண்மை. அவர்களுடைய பெயர் வெளியே வருவதேயில்லை! அப்படிப்பட்ட பெயர் எழுதப்படாத ஒரு காவியத்தலைவி தான் நோவாவின் மனைவி! ஒருநாள் தேவன் நோவாவை நோக்கி,… Continue reading இதழ்: 994 தேவனுடைய உடன்படிக்கையின் பங்காளி!
