1 சாமுவேல்: 10:9 அவன் சாமுவேலை விட்டுப் போகும்படித் திரும்பினபோது, தேவன் அவனுக்கு வேறே இருதயத்தைக் கொடுத்தார். இஸ்ரேவேலின் முதல் ராஜாவாகும்படி தெரிந்து கொள்ளப் பட்ட சவுல், தன்னை ஒரு பென்யமீன் கோத்திரத்தான் என்றும், மிகவும் அற்பமானக் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்றும் கூறியதைப் பார்த்தோம். தேவனுடைய உத்தம தீர்க்கதரிசியான சாமுவேல், சவுலை இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகிக்க வந்தபோது அவர் சவுலை நோக்கி, கர்த்தருடைய ஆவி உம் மேல் இறங்கும்போது நீ பழைய மனிதனைப்போல அல்ல புதியவனாவாய் என்றார்.… Continue reading இதழ்:1297 உன்னை முற்றிலும் மாற்ற வல்லவர்!
Tag: சவுல்
இதழ்:995 ஆதித்திருச்சபையில் நோவாவின் சந்ததி!
அப்போஸ்தலர்: 17:26 மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின் மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார். தேவன் நோவாவோடு செய்த உடன்படிக்கையை நிறைவேற்ற நோவாவின் மனைவி உறுதுணை யாக இருந்ததை கடந்த வா பார்த்தோம்! பாவம் நிறைந்த இந்த உலகில் பரிசுத்தமாய் வாழ்ந்த சில தனிப்பட்ட மனிதர் மூலமாய் தேவன் தம்முடைய சித்தத்தை நிறைவேற்றினார். அவர்களை தமக்கு சொந்தமான ஜனமக்கினார். ஏனெனில் அவர்கள் தேவனை நோக்கிப் பார்த்தார்கள்,… Continue reading இதழ்:995 ஆதித்திருச்சபையில் நோவாவின் சந்ததி!
இதழ்:935 எங்கே வாழ்கிறோமோ அங்கேயே வரும் அழைப்பு!
நியாதிபதிகள்:13 : 25 “அவன் சோராவுக்கும் எஸ்தாவோலுக்கும் நடுவிலுள்ள தாணின் பாளயத்தில் இருக்கையில் கர்த்தருடைய ஆவியானவர் அவனை ஏவத்துவக்கினார்.” ஒருநிமிடம் நாம் இந்த தாணின் பாளயத்தில் வாழ்வதாக நினைத்துப் பார்ப்போம். நம்மை சுற்றிலும் வாழும் பெலிஸ்தர் எப்பொழுதும் நம் சரீர வாழ்க்கையை மட்டும் அல்ல நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையையும் தரைமட்டமாக்கக் காத்துக்கொண்டிருந்தால் நம்மால் சந்தோஷமாக ஒருநாளாவது வாழ முடியுமா? அப்படி நாம் உயிரைக் கையில் பிடித்து வாழ்ந்து கொண்டிருக்கையில், ஒருநாள் நம் பகுதியில் குழந்தையே இல்லாமல் வாழ்ந்த… Continue reading இதழ்:935 எங்கே வாழ்கிறோமோ அங்கேயே வரும் அழைப்பு!
இதழ்: 779 நீண்ட நன்மையான வாழ்வு வேண்டுமா?
சங்: 34:11,12 பிள்ளைகளே வந்து எனக்குச் செவிகொடுங்கள், கர்த்தருக்குப் பயப்படுதலை உங்களுக்குப் போதிப்பேன். நன்மையைக் காணும்படி, ஜீவனை விரும்பி, நீடித்த நாட்களை அபேட்சிக்கிற மனிதன் யார்? கொஞ்ச நாட்களுக்கு முன்பு ஆமைகளில் கலபகோஸ் என்ற ஒருவகையான ஆமை 100 - 170 வருடங்கள் வரை வாழும் என்று படித்தேன். நான் ஒருவேளை 150 வருடங்கள் வாழ முடிந்தால் எப்படியிருக்கும்?என நினைத்தேன். ஆனால் இந்த பூமியில் அத்தனை வருஷம் வாழ்ந்தால் நான் என்ன செய்வேன் என்ற எண்ணமும் வந்தது!… Continue reading இதழ்: 779 நீண்ட நன்மையான வாழ்வு வேண்டுமா?
இதழ்: 709 ஆற்றல் மிக்க ஆறு அழிக்கும் சக்தியாய் மாறுவது போல!
2 சாமுவேல் 11: அப்பொழுது தாவீது, அந்த ஸ்திரீ யார் என்று விசாரிக்க ஆள் அனுப்பினான். இரண்டு வருடங்களுக்கு முன்பு இமாலய மலையில் உள்ள தரம்சாலா என்ற மலை நகருக்கு சென்றிருந்தோம். அங்கே எங்கள் விமானம் இறங்கியவுடன் என்னுடைய செல் போனில் ஒரு மெசேஜ் வந்தது. அங்கு உள்ள நதிகளின் ஒரங்களில் நடக்க வேண்டாம் என்ற எச்சரிக்கை அது. அங்கே நதிக் கரையோரம் சென்ற போதுதான் அந்த எச்சரிக்கையின் அர்த்தம் புரிந்தது. நதிகளின் ஓரங்களில் பெரிய பெரிய… Continue reading இதழ்: 709 ஆற்றல் மிக்க ஆறு அழிக்கும் சக்தியாய் மாறுவது போல!
இதழ்: 666 பெயரை அழிக்கும் அவதூறு!
2 சாமுவேல் 3: 7 - 8 சவுலுக்கு ஆயாவின் குமாரத்தியாகிய ரிஸ்பாள் என்ன்னும் பேருள்ள ஒரு மறுமனையாட்டி இருந்தாள். இஸ்போசேத் அப்னேரை நோக்கி: நீ என் தகப்பனாருடைய மறுமனையாட்டியினிடத்தில் பிரவேசித்தது என்ன என்றான். அப்னேர் இஸ்போசேத்தின் வார்த்தைகளுக்காக மிகவும் கோபம் கொண்டு....... என்னை நீர் இன்று ஒரு ஸ்திரீயினிமித்தம் குற்றம் பிடிக்கிறதற்கு, நான் யுதாவுக்கு உட்கையான ஒரு நாய்த்தலையா? தேர்தல் போர் என்ற தலைப்பில் அவ்வப்பொழுது செய்தி வருவதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். உண்மைக்கு தட்டுபாடு ஆகிய… Continue reading இதழ்: 666 பெயரை அழிக்கும் அவதூறு!
இதழ்: 663 ஒரு உயர்ந்த மனிதனின் தாழ்ந்த மரணம்!
1 சாமுவேல் 31:1-6 பெலிஸ்தர் இஸ்ரவேலரோடே யுத்தம் பண்ணினார்கள்.....சவுலுக்கு விரோதமாய் யுத்தம் பலத்தது. வில்வீரர் அவனைக் கண்டு நெருங்கினார்கள். அப்பொழுது சவுல் வில்வீரரால் மிகவும் காயப்பட்டு, தன் ஆயுததாரியை நோக்கி..... நீ உன் பட்டயத்தை உருவி என்னைக் குத்திப்போடு என்றான். அவனுடைய ஆயுததாரி மிகவும் பயப்பட்டதினால் அப்படிச் செய்யமாட்டேன் என்றான். அப்பொழுது சவுல் தன் பட்டயத்தை நட்டு அதின்மேல் விழுந்தான். சவுல் ஒரு திறமைசாலி! நேர்முகமான நோக்கம் கொண்டவன்! எல்லாவற்றுக்கும் மேலாக தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவன்! ஆனால் என்ன நடந்தது… Continue reading இதழ்: 663 ஒரு உயர்ந்த மனிதனின் தாழ்ந்த மரணம்!
இதழ் : 661 உன்னை வஞ்சிப்பவன் யார்?
1 சாமுவேல்: 28: 24,25 அந்த ஸ்திரீயினிடத்தில் கொழுத்த கன்றுக்குட்டி ஒன்று வீட்டில் இருந்தது. அதைத் தீவிரமாய் அடித்து, மா எடுத்துப் பிசைந்து, அதைப் புளிப்பில்லாத அப்பங்களாகச்சுட்டு, சவுலுக்கும், அவன் ஊழியக்காரர்களுக்கும் முன்பாகக் கொண்டுவந்து வைத்தாள். அவர்கள் புசித்து எழுந்திருந்து... ஒரு பள்ளியில் ஆசிரியை ஒருவர் தன் பிள்ளைகளிடம் யாராவது ஒருவரின் முகத்தை வரையும்படி கூறினார். அந்த சிறு குழந்தைகள் வரைய ஆரம்பித்தனர். அந்த ஆசிரியை ஒவ்வொருவரும் என்ன வரைகிறார்கள் என்று சுற்றிப் பார்த்தார். ஒருசிலர் தாங்கள்… Continue reading இதழ் : 661 உன்னை வஞ்சிப்பவன் யார்?
இதழ்: 660 பொல்லாங்கை விட்டு விலகு!
1 சாமுவேல் 28:7 அப்பொழுது சவுல் தன் ஊழியக்காரரை நோக்கி: அஞ்சனம் பார்க்கிற ஒரு ஸ்திரீயைத் தேடுங்கள். நான் அவளிடத்தில் போய் விசாரிப்பேன் என்றான்.அதற்கு அவனுடைய ஊழியக்காரர்: இதோ எந்தோரில் அஞ்சனம்பார்க்கிற ஒரு ஸ்திரீ இருக்கிறாள் என்றார்கள். குறி சொல்கிறவர்கள், பில்லி சூனியம் செய்கிறவர்கள், மந்திரவாதிகள், தந்திரவாதிகள் என்று பலவிதமானவர்கள் நம்முடைய நாட்டில் நம்மை சுற்றி இருக்கிறார்கள். விக்கிரகாராதனையாலும், ஆவிகளாலும் நடத்தப்படும் இவர்களைவிட்டு விலகியிருக்க வேண்டும் என்று வேதாகமம் நமக்கு கற்றுக்கொடுத்திருக்கிறது. கர்த்தருடைய கட்டளைக்கு இணங்க, குறிசொல்லுபவர்களும்,… Continue reading இதழ்: 660 பொல்லாங்கை விட்டு விலகு!
இதழ்: 659 தீமையின் பலன் பயம்!
1 சாமுவேல் 28:3 - 5 சாமுவேல் இதற்கு முன்னமே மரித்துப் போனான்..... பெலிஸ்தர் கூடிவந்து சூநேமிலே பாளயமிறங்கினார்கள். சவுலும் இஸ்ரவேலர் எல்லாரையும் கூட்டினான். அவர்கள் கில்போவாவிலே பாளயமிறங்கினார்கள். சவுல் பெலிஸ்தரின் பாளயத்தைக் கண்ட போது பயந்தான். அவன் இருதயம் மிகவும் தத்தளித்த்துக் கொண்டிருந்தது. தாவீதின் வாழ்க்கைப் பயணத்தை நாம் தொடரும் முன், நான் சற்றுப் பின் 28 ம் அதிகாரத்துக்கு சென்று, சவுலின் வாழ்க்கையின் கடைசி பாகத்தைத் பற்றி சற்றுப் பார்க்கலாம் என்று யோசித்தேன். பெலிஸ்தர்… Continue reading இதழ்: 659 தீமையின் பலன் பயம்!