ரூத்: 1: 7 (நகோமி) தன் இரண்டு மருமக்களோடுங்கூடத் தானிருந்த ஸ்தலத்தை விட்டுப் புறப்பட்டாள். யூதாதேசத்திற்குத் திரும்பிப்போக அவர்கள் வழிநடக்கையில், “ சில நாட்களுக்கு முன்பு என்னுடைய வீட்டை சுத்தம் பண்ண ஆரம்பித்தேன். சில நேரங்களில் நாம் எதிர்பார்ப்பதை விட அதிகமாகவே வீட்டில் தேவையில்லாதவைகள் சேர்ந்துவிடுகின்றன. அடுக்கடுக்கான செய்தி தாள்கள் , அப்புறம் படிக்கலாம் என்று சேர்த்து வைத்த மாத இதழ்கள், முக்கியமானவைகள் என்று சேர்த்து வைத்த பலவிதமான விளம்பரங்கள் என்று கழித்துக்கட்ட வேண்டியவை… Continue reading இதழ்: 958 உனக்காகத் திட்டமிடப்பட்ட பாதை!
Category: Bible Study
இதழ்: 957 பொறுமையாயிரு! சந்தோஷமும் திருப்தியும் காத்திருக்கிறது!
ரூத்: 1: 6 “கர்த்தர் தம்முடைய ஜனங்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆகாரம் அருளினார் என்று அவள் (நகோமி) மோவாப்தேசத்திலே கேள்விப்பட்டு, தன் மருமக்களோடேகூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவரும்படி எழுந்து, நாம் ரூத் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறோம். அயல் நாட்டில் விதவையாக வாழ்ந்த நகோமி, தன் மருமக்களோடு கூட அப்பத்தின் வீடாகிய பெத்லேகேமுக்கு திரும்பி செல்ல முடிவு செய்தாள் என்று பார்த்தோம். பெண்களுக்கு பொதுவாகவே மனத் தைரியமும், பொறுமையும் அதிகம் என்று நினைப்பவள் நான். சில வருடங்களுக்கு முன்னர் என்னுடைய… Continue reading இதழ்: 957 பொறுமையாயிரு! சந்தோஷமும் திருப்தியும் காத்திருக்கிறது!
இதழ்: 956 உல்லாச சூழலில் வாழ்ந்து விடாதே!
ரூத்: 1 : 6, 7 “கர்த்தர் தம்முடைய ஜனங்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆகாரம் அருளினார் என்று அவள் (நகோமி) மோவாப்தேசத்திலே கேள்விப்பட்டு, தன் மருமக்களோடேகூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவரும்படி எழுந்து, தன் இரண்டு மருமக்களோடுங்கூடத் தானிருந்த ஸ்தலத்தை விட்டுப் புறப்பட்டாள். யூதாதேசத்திற்குத் திரும்பிப்போக அவர்கள் வழிநடக்கையில், “ இருபத்தொரு வருடங்களுக்கு முன்பு நாங்கள் எங்கள் வாழ்க்கையில் மாற்றத்துக்கான ஒரு முக்கியமான முடிவை எடுத்தோம். வட இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருந்த நாங்கள் இருவருமே வேலையை ராஜினாமா… Continue reading இதழ்: 956 உல்லாச சூழலில் வாழ்ந்து விடாதே!
இதழ்: 955 மலர்களைக் கேட்டேன்! கத்தாழையைக் கொடுத்தது ஏன்?
உபாகமம்: 4:20 இந்நாளில் நீங்கள் இருக்கிறது போல தமக்கு சுதந்தரமான ஜனமாயிருக்கும்படி கர்த்தர் உங்களை சேர்த்துக் கொண்டு உங்களை எகிப்து என்னும் இருப்புக்காளவாயிலிருந்து புறப்படப்பண்ணினார். ரூத் புத்தகத்தைப்படித்துக் கொண்டிருக்கும் என்னைக் கர்த்தர் திசை திருப்பி இந்தச் செய்தியைக் கொடுக்க்ச் சொன்னார். நிச்சயமாக உங்களில் யாருக்கோ இந்த செய்தி தேவை என்று உணருகிறேன். இருப்புக்காளவாய் என்ற வார்த்தையை சென்னையில் வாழும் நாங்கள், எங்களுடைய கோடை வெயிலுக்கு ஒப்பிட்டுப் பழக்கம். சூரியனின் கதிர்கள் எங்களை எரித்துவிடும் எண்ணத்தில் பாய்வதுபோல் இருக்கும்.… Continue reading இதழ்: 955 மலர்களைக் கேட்டேன்! கத்தாழையைக் கொடுத்தது ஏன்?
Under the shadow of the Almighty!
On this Sunday evening, I was looking at the life of David where he said in his heart, I shall now perish one day by the hand of Saul. There is nothing better for me than that I should escape into the land of the Philistines. Then Saul will despair of seeking me any more… Continue reading Under the shadow of the Almighty!
இதழ்: 954 புயலைக்கண்டு பதறாதே!
ரூத்: 1 : 6 ” கர்த்தர் தம்முடைய ஜனங்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆகாரம் அருளினார் என்று அவள் (நகோமி) மோவாப்தேசத்திலே கேள்விப்பட்டு, தன் மருமக்களோடேகூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவரும்படி எழுந்து” நம்முடைய வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் ஒவ்வொரு அனுபவமும் நம்மை மன அழுத்தத்துக்குள் கொண்டு செல்ல வல்லது என்று மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். விசேஷமாக நம் குடும்பத்தில் ஏற்படும் திடீர் குழப்பங்கள், திடீர் மரணம், திடீர் வியாதி போன்றவை கடலில் திடீரென்று ஏற்படும் புயலுக்கொத்தவை. நகோமி… Continue reading இதழ்: 954 புயலைக்கண்டு பதறாதே!
இதழ்: 953 இன்று மேகமும் மந்தாரமுமா? நாளைக்கு வானவில் வரும்!
ரூத்: 1: 3 – 5 ” நகோமியின் புருஷனாகிய எலிமெலேக்கு இறந்து போனான்;அவளும் அவளுடைய இரண்டு குமாரரும் மாத்திரம் இருந்தார்கள். இவர்கள் மோவாபியரில் பெண் கொண்டார்கள்; அவர்களில் ஒருத்தி பேர் ஒர்பாள், மற்றவள் பேர் ரூத்; அங்கே ஏறக்குறையப் பத்துவருஷம் வாசம் பண்ணினார்கள். பின்பு மக்லோன் கிலியோன் என்னும் அவர்கள் இருவரும் இறந்துபோனார்கள்; அந்த ஸ்திரீ தன் குமாரர் இருவரையும் தன் புருஷனையும் இழந்து தனித்தவளானாள். எலிமெலேக்கு என்னும் எப்பிராத்தான், அப்பத்தின் வீடாகிய பெத்லெகேமிலே பஞ்சம் வந்தபோது,… Continue reading இதழ்: 953 இன்று மேகமும் மந்தாரமுமா? நாளைக்கு வானவில் வரும்!
இதழ்: 952 ஏமாற்றம் பனியைப் போல பாரமாக இறங்கிய வேளை!!!!!!
ரூத்: 1 : 3 ” நகோமியின் புருஷனாகிய எலிமெலேக்கு இறந்து போனான்;அவளும் அவளுடைய இரண்டு குமாரரும் மாத்திரம் இருந்தார்கள்.” அப்பத்தின் வீடாகிய பெத்லெகேமில் பஞ்சம் ஏற்பட்டதால், எலிமெலேக்குத் தன் குடும்பத்தைக் கூட்டிக்கொண்டு மோவாபை நோக்கி சென்றான் என்று பார்த்தோம். அவன் கண்களில் அக்கரை பச்சையாகத் தோன்றியது. சில வேதாகம வல்லுநர்களின் கணிப்பில் அவர்கள் அங்கேயே குறைந்தது 10 வருடங்கள் தங்கியிருக்கக்கூடும் என்று பார்க்கிறோம். 10 வருடங்கள் என்பது ஒரு குடும்பம் அந்த ஊரில் வசதியாக வாழத்தொடங்க… Continue reading இதழ்: 952 ஏமாற்றம் பனியைப் போல பாரமாக இறங்கிய வேளை!!!!!!
இதழ்:951 தற்காலிக சூழ்நிலையைப் பார்த்து முக்கிய முடிவை எடுக்கிறோமா?
ரூத்: 1: 2 அந்த மனுஷனுடைய பேர் எலிமெலேக்கு, அவன் மனைவியின் பேர் நகோமி, அவனுடைய இரண்டு குமாரரில் ஒருவன் பேர் மக்லோன், மற்றொருவன் பேர் கிலியோன்; யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊராகிய எப்பிராத்தியராகிய அவர்கள் மோவாப்தேசத்திற்குப் போய் அங்கே இருந்துவிட்டார்கள். எங்களுடைய திருமண வாழ்க்கையின் முதல் 20 வருடங்கள் நாங்கள் பல மாகாணங்களுக்கு செல்ல வேண்டியதிருந்தது. ஒவ்வொருமுறையும் ஒரு புது ஊருக்கு செல்லும்போது, சாமான்களை பார்சல் பண்ணுவது, வீடு தேடி அலைவது, பிள்ளைகளுக்கு ஸ்கூல் தேடி அலைவது,… Continue reading இதழ்:951 தற்காலிக சூழ்நிலையைப் பார்த்து முக்கிய முடிவை எடுக்கிறோமா?
இதழ்:950 இன்று காணப்படும் இருள் சீக்கிரம் நீங்கும்!
ரூத்: 1: 1 “நியாதிபதிகள் நியாயம் விசாரித்துவரும் நாட்களில், தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று “. தேசத்திலே கொடிய பஞ்சம்! அத்தியாவசிய பொருட்களுக்குத் தட்டுப்பாடு ! ஒருவேளை நான் அந்த நாட்களில் வாழ்ந்திருந்தேனானால் , கர்த்தர் வாக்குத்தத்தம் பண்ணிய கானான் தேசத்தில் எப்படி பஞ்சம் உண்டாகலாம்? பாலும் தேனும் ஓடும் தேசத்தையல்லவா நமக்குக் கொடுத்தார்? இந்த தேசத்தில் பஞ்சம் உண்டாகும் என்று கர்த்தர் ஒருநாளும் கூறவில்லையே, ஏதோ தவறு நடந்து விட்டது போலும்! என்றுதான் எண்ணியிருப்பேன். நீங்கள் எப்படி?… Continue reading இதழ்:950 இன்று காணப்படும் இருள் சீக்கிரம் நீங்கும்!
