கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1633 உன் பிள்ளைகளை எப்படி வளர்க்கிறாய்?

ஆதி: 34:13  அப்பொழுது யாக்கோபின் குமாரர் தங்கள் சகோதரியாக தீனாளை சீகேம் என்பவன் தீட்டு படுத்தினபடியால், அவனுக்கும் அவன் தகப்பன் ஏமோருக்கும்  வஞ்சகமான மறுமொழியாக... யாராவது உங்களை வஞ்சகமாக ஏமாற்றிய கசப்பான அனுபவம் உங்களுக்கு உண்டா?  பொய்யை உண்மையைப்போல சித்தரித்து கூறி நம்ப வைத்து கழுத்தறுக்கப்பட்ட அனுபவம் உண்டா? இவர்கள் பேசுவது உண்மையா அல்லது பொய்யா என்று நம்மை திணற வைக்கக் கூடிய அளவு பேசுகிறவர்கள் பலரை நம் ஒவ்வொருவர் வாழ்விலும் கண்டிருப்போம்! நான் நிச்சயமாகப் பார்த்திருக்கிறேன்! யாக்கோபின்… Continue reading இதழ்:1633 உன் பிள்ளைகளை எப்படி வளர்க்கிறாய்?

கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1632 இரக்கம் பெற்றாலும் தண்டனை உண்டு!

ஆதி: 28: 1,2 “ ஈசாக்கு யாக்கோபை அழைத்து, அவனை ஆசீர்வதித்து, நீ கானானியருடைய குமாரத்திகளில் பெண் கொள்ளாமல், எழுந்து புறப்பட்டு பதான் அராமிலிருக்கிற உன் தாயினுடைய தகப்பனாகிய பெத்துவெலுடைய வீட்டுக்கு போய், அவ்விடத்தில் உன் தாயின் சகோதரனாகிய லாபானின் குமாரத்திகளுக்குள் பெண்கொள் என்று அவனுக்கு கட்டளையிட்டான்.” இந்த லெந்து காலத்தில் தொடர்ந்து நம்மை ஆராய்வோம்! யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கை ஏமாற்றி பொய் சொல்லி ஆசீர்வாதத்தை பெற்றவுடன் , ஏசா அவன் மீது மூர்க்கம் கொண்டிருப்பதை அறிந்து ஈசாக்கும், ரெபெக்காளும் அவனை,… Continue reading இதழ்:1632 இரக்கம் பெற்றாலும் தண்டனை உண்டு!

கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1631 பெண்களுக்கான ஒரு நாள்!

நியாதிபதிகள்: 13:2 “அப்பொழுது தாண் வம்சத்தானாகிய சோரா ஊரானான ஒரு மனுஷன் இருந்தான்; அவன் பேர் மனோவா, அவன் மனைவி பிள்ளை பெறாத மலடியாயிருந்தாள்”. சில வேதாகமப் பகுதி என்னை ஆச்சரியப்பட வைக்கும்,  சில பகுதி என்னை அழ வைக்கும், ஆனால் இன்றையப் பகுதி என்னை சிரிக்க வைத்தது!  நான் ஒரு பெண்ணாக இருப்பதால் தான் எனக்கு சிரிப்பு வந்தது என்று நினைக்கிறேன். பெண்ணுரிமைகளைப் பற்றி அதிகமாக நாம் எண்ணும் இந்த மகளியர்  தினத்தில் இந்த வேதாகமப்… Continue reading இதழ்:1631 பெண்களுக்கான ஒரு நாள்!

கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்: 1630 சற்று அனுசரித்துப் போகும் வாழ்க்கை உண்டா?

ஆதி:  39:7  சிலநாள் சென்றபின், அவன் எஜமானின் மனைவி யோசேப்பின்மேல் கண்போட்டு, என்னோடே சயனி என்றாள். இந்த லெந்து நாட்களில் நாம் சற்று நம்முடைய உள்ளான மனிதனை ஆராயந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். நாம் இன்று  யோசேப்பைப் பின் தொடரலாம்! யோசேப்பை ஏற்றிக்கொண்டு இஸ்மவேலரின் வண்டி வேகமாய் பாலைவனத்தை கடந்து சென்றது! யாக்கோபு ராகேலுக்கு பிறந்த செல்ல குமாரன், 17 வயதான யோசேப்பு, இப்பொழுது அடிமையாக எகிப்து தேசத்துக்கு அழைத்து செல்லப்படுகிறான்!   என்றுமே கண்டிராத புதிய நாட்டில், புதிய… Continue reading இதழ்: 1630 சற்று அனுசரித்துப் போகும் வாழ்க்கை உண்டா?

கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1629 பிள்ளைகளுக்காக உன் வாழ்வை மாற்றிக்கொள்!

ஆதி: 5: 22  ஏனோக்கு, மெத்தூசலாவைப் பெற்ற பின்,  முந்நூறு வருஷம் தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருந்து, குமாரரையும், குமாரத்திகளையும் பெற்றான் லெந்துகால தியானத்தைத் தொடருவோம்! நாம் சென்ற வாரம் காயீனுடைய தலைமுறையினர் பாவத்தில் வாழ்ந்ததைப் பற்றி பார்த்தோம். தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் பாவம் செய்த ஆதாமுக்கும், ஏவாளுக்கும்,  கர்த்தர் ஆபேலுக்கு  பதிலாக கொடுத்த சேத்தின் பிள்ளைகளைப் பற்றி இன்று பார்ப்போம். இந்த அதிகாரம் தான் ஆதாமின் தலைமுறையை அவனுடைய குமாரனாகிய சேத்தின் தலைமுறையோடு இணைக்கும் பாலமாகும்!  முதலில்… Continue reading இதழ்:1629 பிள்ளைகளுக்காக உன் வாழ்வை மாற்றிக்கொள்!

கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1628 தேவனை சோதிக்காதே! தண்டித்தால் தாங்க மாட்டாய்!

ஆதி 4: 23 – 24  .... லாமேக்கின் மனைவிகளே என் சத்தத்துக்குச் செவி கொடுங்கள். எனக்குக் காயமுண்டாக ஒரு மனுஷனைக் கொன்றேன். எனக்குத் தழும்புண்டாக ஒரு வாலிபனைக் கொலை செய்தேன். காயீனுக்காக ஏழு பழி சுமருமானால், லாமேக்குக்காக எழுத்தேழு பழி சுமரும் என்றான்.    லெந்து கால தியானத்துக்காக காயீனின் 6வது தலைமுறையான லாமேக்கைப் பற்றி நேற்று பார்த்தோம்! காயீன் தேவனுடைய சித்தத்தை விட்டு விலகி தன்னுடைய சகோதரனைக் கொன்றவுடனே தேவன் அவனைக் கொன்றிருக்கலாம்! ஆனால்… Continue reading இதழ்:1628 தேவனை சோதிக்காதே! தண்டித்தால் தாங்க மாட்டாய்!

கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1627 நம்மைத் தொடர்ந்து பிடிக்கும் பாவம்!

ஆதி: 4:18 காயீன்  ஏனோக்கைப் பெற்றான், ஏனோக்குக்கு ஈராத் பிறந்தான் , ஈராத் மெகுயவேலைப் பெற்றான், மெகுயவேல் மெத்தூசவேலைப் பெற்றான், மெத்தூசவேல் லமேக்கைப் பெற்றான். நாம் இந்த லெந்து நாட்களில் நம்மை ஆராய்ந்து பார்க்கும்படி வேதத்தின் வெளிச்சத்தில் சிலருடைய  வாழ்க்கையைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஏவாள் இரு குமாரரைப் பெற்றாள் என்று நமக்குத் தெரியும்.  அவள் குமாரன், ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனானான், மற்றும் காயீன்  நிலத்தைப் பயிரிடுகிரவனானான். அவர்கள் கர்த்தருக்கு காணிக்கை கொடுக்க வந்த போது,  கர்த்தர் காயீனுடைய… Continue reading இதழ்:1627 நம்மைத் தொடர்ந்து பிடிக்கும் பாவம்!

கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1626 ஆவிக்குரிய வாழ்வின் பள்ளத்தாக்கு!

யோசுவா 7:26 ..” அவன்மேல் இந்நாள் வரைக்கும் இருக்கிற பெரிய கற்குவியலைக் குவித்தார்கள்; இப்படியே கர்த்தர் தன் கோபத்தின் உக்கிரத்தை விட்டு மாறினார்; ஆகையால் அவ்விடம் இந்நாள்வரைக்கும் ஆகோர் பள்ளத்தாக்கு என்னப்படும். ஒசியா: 2:15 அவளுக்கு திராட்சத்தோட்டங்களையும், நம்பிக்கையின் வாசலாக ஆகோரின் பள்ளத்தாக்கையும் கொடுப்பேன்.” இந்த புதிய மாதத்தைக் காணச்செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம்! இந்த மாதம் முழுவதும் கர்த்தர் நம்மோடிருந்து நம்மை வழி நடத்தும்படி ஜெபிப்போம். இந்த லெந்து காலத்தில் நம்மை சற்று ஆராய்ந்து பார்க்க ஆகானின்… Continue reading இதழ்:1626 ஆவிக்குரிய வாழ்வின் பள்ளத்தாக்கு!

கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1625 எந்த சிற்றின்பத்தை இன்று ஒளித்து வைத்திருக்கிறாய்?

யோசுவா: 7:21 ”கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய  சால்வையையும், இருநூறு வெள்ளிச்சேக்கலையும், ஐம்பது சேக்கல் நிறையான ஒரு பொன்பாளத்தையும், நான் கண்டு அவைகளை இச்சித்து, எடுத்துக்கொண்டேன். இதோ அவைகள் என் கூடாரத்தின் மத்தியில் பூமிக்குள் புதைந்திருக்கிறது. இந்த லெந்து காலத்தில் நம்மை சற்று ஆராய்ந்து அறிய,  நாம் நேற்று ஆகானைப்பற்றிப் படித்தோம்.  இஸ்ரவேலின் சேனையில் ஒரு போர்வீரனாக, தேவனாகிய கர்த்தரின் சித்தப்படி எரிகோவை அழிக்கப் புறப்பட்ட இந்த வீரன், கண்களால் கண்ட பொருட்களை இச்சித்து, தனக்கு சொந்தமல்லாத சாபத்தீடானவைகளை… Continue reading இதழ்:1625 எந்த சிற்றின்பத்தை இன்று ஒளித்து வைத்திருக்கிறாய்?

கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1624 கண்களால் காண்பதெல்லாம் வேண்டும் என்ற ஆசை!

யோசுவா:7:1 “………. ஆகான் என்பவன் சாபத்தீடானதிலே சிலதை எடுத்துக்கொண்டான்; நான் எலியாவைப் பற்றித் தொடரும்முன் இந்த லெந்து காலத்தில் நம்மை சற்று ஆராய்ந்து பார்க்கும்படியாக ஒருசிலருடையை வாழ்க்கையை சற்று திரும்பிப் பார்க்கலாம் என்று நினைத்தேன். நாங்கள் அடிக்கடி வால்பாறை போவது வழக்கம். அது மலைமேல் அமைந்திருக்கும் ஒரு பட்டணம்! மலைகளில் கார் ஏற ஆரம்பித்தவுடன், கண்ணாடியை இறக்கிவிட்டு, சில்லென்ற இயற்கை காற்றை அனுபவிப்போம். போகும்வழியில் குரங்குகள் ஏராளமாய் அங்கும் இங்கும் தாவி ஓடிக்கொண்டிருக்கும். அங்கே உள்ள ஒரு… Continue reading இதழ்:1624 கண்களால் காண்பதெல்லாம் வேண்டும் என்ற ஆசை!