1 சாமுவேல்: 8:9 இப்பொழுதும் அவர்கள் சொல்லைக் கேள். ஆனாலும் உன் அபிப்பிராயத்தைக் காட்டும்படி அவர்களை ஆளும் ராஜாவின் காரியம் இன்னது என்று அவர்களுக்குத் திடசாட்சியாய்த் தெரியப்படுத்து என்றார். இன்றைய வேதாகம வசனம் எனக்கு என்னுடைய அம்மாவைத் தான் ஞாபகப்படுத்தியது. என் வாலிப நாட்களில் அம்மா என்னை ஒருநாளும் தனியாக ஆண்களோடு அனுப்பியதில்லை. என் கூடப் படித்தவர்கள் வீட்டுக்குக்கூட அவர்கள் பெற்றோர் இல்லாதபோது அனுப்ப மாட்டார்கள். சென்னையில் வளர்ந்த எனக்கு, மற்ற பிள்ளைகள் ஒன்று சேர்ந்து அங்கு… Continue reading இதழ்:1293 உன்னுடைய நன்மையை மட்டுமே விரும்பும் தேவன்!
Category: Thought for today
இதழ்:1292 உன் பாரத்தை தன் தோளில் சுமக்கும் கர்த்தர்!
1 சாமுவேல் 8: 6-7 எங்களை நியாயம் விசாரிக்க ஒரு ராஜாவை ஏற்படுத்தும் என்று அவர்கள் சொன்ன வார்த்தை சாமுவேலுக்குத் தகாததாய்க் காணப்பட்டது. ஆகையால் சாமுவேல் கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான். அப்பொழுது கர்த்தர் சாமுவேலை நோக்கி, ஜனங்கள் உன்னிடத்தில் சொல்வதெல்லாவற்றிலும் அவர்கள் சொல்லைக் கேள். அவர்கள் உன்னைத் தள்ளவில்லை. நான் அவர்களை ஆளாதபடிக்கு , என்னைத்தான் தள்ளினார்கள். சாமுவேலின் பிள்ளைகள் இருவரும் தங்களை நியாயம் தீர்க்க தகுதியில்லாதவர்கள் என்று உதறித் தள்ளிவிட்டு, தங்களை சுற்றியுள்ள மற்ற ஜாதியினர்… Continue reading இதழ்:1292 உன் பாரத்தை தன் தோளில் சுமக்கும் கர்த்தர்!
இதழ்:1291 வாழ்க்கை என்னும் எதிர் நீச்சல்!
1 சாமுவேல் 8:4-5 அப்பொழுது இஸ்ரவேலின் மூப்பர் எல்லாரும் கூட்டங்கூடி, ராமாவிலிருந்த சாமுவேலிடத்தில் வந்து, இதோ நீர் முதிர்வயதுள்ளவரானீர். உம்முடைய குமாரர் உம்முடைய வழிகளில் நடக்கிறதில்லை. ஆகையால் சகல ஜாதிக்குள்ளும் இருக்கிறபடி, எங்களை நியாயம் விசாரிக்கிறதற்கு, ஒரு ராஜாவை ஏற்படுத்த வேண்டும் என்றார்கள். சமீபத்தில் நான் பலகாரத்தை ஒரே மாதிரி வெட்டுகிற ஒரு பிளாஸ்டிக் உபகரணத்தை வாங்கினேன். அதற்குள் மாவை வைத்து அழுத்தினால் அது ஒரே மாதிரி, ஒரே டிசைனில் அந்த மாவை அழுத்திக் கொடுக்கும்.… Continue reading இதழ்:1291 வாழ்க்கை என்னும் எதிர் நீச்சல்!
இதழ்:1290 பொருளாசையால் கிருபையை இழந்து போகாதே!
1 சாமுவேல் 8: 1-3, சாமுவேல் முதிர்வயதானபோது தன் குமாரரை இஸ்ரவேலின்மேல் நியாதிபதிகளாக வைத்தான் அவனுடைய மூத்த குமாரனுக்குப் பெயர் யோவேல். இளையவனுக்கு பெயர் அபியா. அவர்கள் பெயெர்செபாவிலே நியாதிபதிகளாயிருந்தார்கள். ஆனாலும் அவனுடைய குமாரர் அவன் வழிகளில் நடவாமல்,பொருளாசைக்குச் சாய்ந்து, பரிதானம் வாங்கி நியாயத்தைப் புரட்டினார்கள். இந்தப் புதிய மாதத்தின் முதல் நாளுக்காக தேவனை நன்றியோடு ஸ்தோத்தரிப்போம். இன்று இந்த நாளைக் காணச் செய்த தேவன் நம்மோடு துணை நின்று நம்முடைய போக்கையும் வரத்தையும் இந்த மாதம்… Continue reading இதழ்:1290 பொருளாசையால் கிருபையை இழந்து போகாதே!
இதழ்:1289 உன் வீட்டில் பரலோகத்தின் சாயல் உள்ளதா?
1 சாமுவேல் : 7: 15 – 17 சாமுவேல் உயிரோடிருந்த நாளெல்லாம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான். அவன் வருஷாவருஷம் புறப்பட்டு, பெத்தேலையும் கில்காலையும் மிஸ்பாவையும் சுற்றிப் போய், அவ்விடங்களிலெல்லாம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்த பின்பு, அவன் ராமாவுக்குத் திரும்பி வருவான். அவனுடைய வீடு அங்கே இருந்தது. அங்கே இஸ்ரவேலை நியாயம் விசாரித்து, அவ்விடத்தில் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான். நாம் எவ்வளவு கடினமாக உழைத்தாலும், எவ்வளவு சோர்பாக இருந்தாலும் நம் வீட்டுக்குள் நுழைந்து விட்டால் கிடைக்கும்… Continue reading இதழ்:1289 உன் வீட்டில் பரலோகத்தின் சாயல் உள்ளதா?
இதழ் 1288 ஒரு தேவ மனிதன் ஒரு சேனைக்கு சமம்!
1 சாமுவேல் 7:12 அப்பொழுது சாமுவேல் ஒரு கல்லை எடுத்து, மிஸ்பாவுக்கும், சேணுக்கும் நடுவாக நிறுத்தி, இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவி செய்தார் என்று சொல்லி, அதற்கு எபெனேசர் என்று பேரிட்டான். இருபது வருடங்கள் கர்த்தருக்கு கீழ்ப்படியாமல் வாழ்ந்ததால் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருடைய கோபாக்கினையை அனுபவித்துதான் ஆக வேண்டும், அவர்களுக்கு கர்த்தர் எப்படி தயை செய்வார்? கர்த்தர் ஒன்றும் அவர்களை சும்மா விடப் போவதில்லை என்றுதானே நாம் எண்ணுகிறோம்? அவர்கள் சாமுவேலிடம் ஜெபிக்கும் படி வேண்டியபோது கர்த்தருடைய… Continue reading இதழ் 1288 ஒரு தேவ மனிதன் ஒரு சேனைக்கு சமம்!
இதழ்:1287 உனக்குள் எழுப்புதல் கொழுந்து விட்டு எரியட்டும்!
1 சாமுவேல் 7:8 (இஸ்ரவேல் புத்திரர்) சாமுவேலை நோக்கி: நம்முடைய தேவனாகிய கர்த்தர் எங்களைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கும்படிக்கு, எங்களுக்காக அவரை நோக்கி ஓயாமல் வேண்டிக் கொள்ளும் என்றார்கள். இருபது வருடங்கள்! கர்த்தருடைய மகிமை இஸ்ரவேலை விட்டுப் போய் இருபது வருடங்கள்! பெலிஸ்தரின் கைக்குள் அடங்கி பாடுகள் அனுபவித்து விட்டு கடைசியில், இதுவரை பட்டது போதும் என்று இஸ்ரவேல் புத்திரர் சாமுவேலைத் தேடி வருகின்றனர்! எங்களுக்காக ஜெபியுங்கள் என்று அவரிடம் மன்றாடினர்! தோல்வியுற்ற வாழ்க்கையுடன்,ஜெபிக்க பெலனற்றவர்களாய்,… Continue reading இதழ்:1287 உனக்குள் எழுப்புதல் கொழுந்து விட்டு எரியட்டும்!
இதழ்:1286 உன்னில் தேவை அந்த எழுப்புதல்!
1 சாமுவேல்: 6:1 கர்த்தருடைய பெட்டி பெலிஸ்தரின் தேசத்தில் ஏழுமாதம் இருந்தது. 1 சாமுவேல்: 7:2 பெட்டி கீரியாத்யாரீமிலே அநேக நாள் தங்கியிருந்தது; இருபது வருஷம் அங்கேயே இருந்தது; இஸ்ரவேல் குடும்பத்தாரெல்லாம் கர்த்தரை நினைத்து, புலம்பிக்கொண்டிருந்தார்கள். பெலிஸ்தர் யுத்தத்தில் இஸ்ரவேலரை வென்றது மட்டுமல்லாமல் வீட்டுக்குத் திரும்பும்போது பெரிய பதக்கம் போல கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை சுமந்து சென்றனர் என்று நாம் நேற்று பார்த்தோம். அவர்கள் அதை தாகோனின் கோவிலிலே வைத்தார்கள். ஆனால் இரண்டே நாளின் தாகோனுக்குத் தலையும்… Continue reading இதழ்:1286 உன்னில் தேவை அந்த எழுப்புதல்!
இதழ்:1285 கர்த்தரே தேவன்! கர்த்தரே தேவன்!
1 சாமுவேல் 5: 4 அவர்கள் மறுநாள் காலமே எழுந்திருந்து வந்த போது, இதோ தாகோன் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்துக்கிடந்ததுமல்லாமல், தாகோனின் தலையும் அதின் இரண்டு கைகளும் வாசற்படியின்மேல் உடைபட்டுக் கிடந்தது; தாகோனுக்கு உடல் மாத்திரம் மீதியாயிருந்தது. பெலிஸ்தர் மிகுந்த ஆர்ப்பரிப்போடு இருந்தனர். இஸ்ரவேல் மக்களை யுத்தத்தில் தோற்கடித்தது மட்டுமல்ல, திரும்பும்போது ஒரு பெரிய பதக்கம் கிடைத்தது போல கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியும் கிடைத்தது. அதைக் கொண்டு போய் தாகோனின் கோவிலிலே, தாகோனண்டையிலே… Continue reading இதழ்:1285 கர்த்தரே தேவன்! கர்த்தரே தேவன்!
இதழ்:1284 மனம் மாற கர்த்தர் ஒரு மனிதன் அல்ல!
1 சாமுவேல் 3: 19 “சாமுவேல் வளர்ந்தான்; கர்த்தர் அவனுடனேகூட இருந்தார்; அவர் தம்முடைய எல்லா வார்த்தைகளிலும் ஒன்றையாகிலும் தரையிலே விழுந்து போகவில்லை. இன்று நாம் இந்த வசனத்தைப் பார்க்கும் முன்னர், ” …உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காகச் சொன்ன நல் வார்த்தைகளிலெல்லாம் ஒருவார்த்தையும் தவறிப்போகவில்லை என்பதை உங்கள் முழு இருதயத்தாலும், உங்கள் முழு ஆத்துமாவாலும் அறிந்திருக்கிறீர்கள். அவைகளெல்லாம் உங்களுக்கு நிறைவேறிற்று; அவைகளில் ஒருவார்த்தையும் தவறிப்போகவில்லை” (யோசுவா 23:14 ) என்ற யோசுவாவின் வார்த்தைகளை சற்றுத் திரும்பிப்… Continue reading இதழ்:1284 மனம் மாற கர்த்தர் ஒரு மனிதன் அல்ல!
