1 சாமுவேல்: 1: 10 அவள் போய், மனங்கசந்து, மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: அன்னாளிடமிருந்து ஒரு அந்தரங்கமான, மிகவும் அர்த்தமுள்ள ஜெபம் செய்வது எப்படி என்று கற்றுக் கொள்ளலாம் என்று சில நாட்களுக்கு முன்னர் யாராவது கூறியிருந்தால் நான் நம்பியிருக்க மாட்டேன். ஆனால் நான் இந்த தியானத்துக்காக வேதத்தைப் படித்த போது அன்னாளின் வாழ்க்கை மூலம் பரம பிதாவிடம் அந்தரங்கமாய் ஜெபிப்பது எப்படி என்று கற்றுக் கொண்டேன். அதனால் நாம் சில நாட்கள் அன்னாளின்… Continue reading இதழ்: 1273 உன் கண்ணீர்த் துளிகளில் தோன்றும் வானவில்!
Category: Thought for today
இதழ்:1272 நீ திடப்படும்படி எழுந்து தேவ சமுகம் செல்!
1 சாமுவேல் 1: 9 ” சீலோவிலே அவர்கள் புசித்துக் குடித்தபின்பு, அன்னாள் எழுந்திருந்தாள்…” போன வாரம் நம்முடைய தியானத்தில் கர்த்தருடைய ஆசாரியனான ஏலியின் பெருந்தன்மையைப் பற்றிப் படித்தோம். இன்றையிலிருந்து சில நாட்கள் நாம் அன்னாள் தேவனுடைய சமுகத்தில் ஏறெடுத்த ஜெபத்தைப் பற்றிப் பார்க்கலாம் “என் ஆத்துமாவே நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்?” (சங்:42:5) என்று கூறிய சங்கீதக்காரனைப் போல என்றாவது உன் வாழ்க்கையில் உன் ஆத்துமா கலங்கியிருக்கிறாயா? அன்னாள் பல நாட்கள் வண்டியில்… Continue reading இதழ்:1272 நீ திடப்படும்படி எழுந்து தேவ சமுகம் செல்!
இதழ்:1271 உன் மரியாதை ஒன்றும் குறைந்து விடாது!
1 சாமுவேல்: 1:17 “அதற்கு ஏலி சமாதானத்துடனே போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக என்றான்.” என்னுடைய 43 வருட ஊழிய அனுபவத்தில் அநேக கிறிஸ்தவ தலைவர்களைப் பார்த்திருக்கிறேன். தவறு செய்தவர்கள் தாங்கள் செய்த தவறை ஒப்புக் கொள்வதே இல்லை ஏனெனில் அவ்வாறு ஒப்புக்கொண்டால் அது தங்களுக்கு அவமானம் என்று நினைக்கின்றனர். அது அவமானம் இல்லை பெருந்தன்மை என்பது யாருக்கும் புரிவதே இல்லை! இந்தத் தவறான எண்ணம் ஏன் நம்மில் பலரிடம்… Continue reading இதழ்:1271 உன் மரியாதை ஒன்றும் குறைந்து விடாது!
இதழ்:1270 அநியாயமாக சுமத்தப்பட்ட குற்றம்!
1 சாமுவேல் : 1:14 ” நீ எதுவரைக்கும் வெறித்திருப்பாய்? உன் குடியை உன்னைவிட்டு விலக்கு என்றான்.” நாம் அன்னாளைப் பற்றிப் படித்துக் கொண்டிருக்கிறோம். தன்னுடைய கணவனின் அன்பைத் தாரளமாகப் பெற்றிருந்தாலும், அவள் மலடியாயிருந்த படியால் ஒவ்வொரு நாளும் பெனின்னாளில் எறியப்பட்ட சொற்களால் மமடிவுற்றிருந்தாள். ஆனாலும் நம்மில் பலரைப் போல் தன்னுடைய வேதனைக்குக் கர்த்தர் தான் காரணம் என்று பழியைப் போடாமல், அவள் தேவனுடைய சமுகத்தில் தன்னை ஒப்படைத்து முறையிடுகிறாள் என்று பார்த்தோம். ஒருநிமிடம் அன்னாளின் இடத்தில்… Continue reading இதழ்:1270 அநியாயமாக சுமத்தப்பட்ட குற்றம்!
இதழ்:1268 கண்ணீரே எந்தன் உணவாயிற்று!
1 சாமுவேல்: 1: 9,10 “சீலோவிலே அவர்கள் புசித்துக் குடித்தபின்பு அன்னாள் எழுந்திருந்தாள்; ஆசாரியனாகிய ஏலி கர்த்தருடைய ஆலயத்தின் வாசல் நிலையண்டையிலே ஒரு ஆசனத்தின்மேல் உட்கார்ந்திருந்தான். அவள் போய், மனங்கசந்து, மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: என்ன குடும்பம் இந்த எல்க்கானாவின் குடும்பம் !!!!!!! அன்பு மனைவி அன்னாள் ஒருபுறம்! பிள்ளை பெற்றுக் கொடுக்க மணந்த பெனின்னாள் ஒருபுறம்! பிள்ளைகளை பெற்றுக் கொடுத்தாலும் அவளால், எல்க்கானாவின் மனதில் இடம் பிடிக்க முடியவில்லை, அதனால் அவள் கணவனின்… Continue reading இதழ்:1268 கண்ணீரே எந்தன் உணவாயிற்று!
இதழ்:1267 அஸ்திபாரமேயின்று ஆடிய குடும்பம்!
1 சாமுவேல்: 1:6 கர்த்தர் அவள் கர்ப்பத்தை அடைத்தபடியினால், அவளுடைய சக்களத்தி அவள் துக்கப்படும்படியாக அவளை மிகவும் விசனப்படுத்தினாள். இன்று அதிகாலையில் நான் என்னுடைய குடும்பத்திற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்திய போது கடந்த நாட்களை சற்று திரும்பிப் பார்த்தேன். மிகச் சிறிய வருமானம் இருந்த காலங்களில் கூட மற்றவர்களைப் பார்த்து பொறாமைப் படாமல், பெரிதாக எதற்காகவும் ஆசைப்படாமல், இயேசுவின் அன்பு என்ற அஸ்திபாரத்தோடும் ஜெபம் என்ற கூரையோடும் கட்டப்பட்ட ஒரு நல்ல குடும்பத்தை தேவன் ஏற்படுத்திக் கொடுத்தற்காக என்… Continue reading இதழ்:1267 அஸ்திபாரமேயின்று ஆடிய குடும்பம்!
இதழ்:1266 உறவுக்குள் ஏற்படும் கீறல்!
1 சாமுவேல் 1: 4, 5 ” அங்கே எல்க்கானா பலியிடும் நாளிலே, அவன் தன் மனைவியாகிய பெனின்னாளுக்கும், அவளுடைய எல்லாக் குமாரருக்கும் குமாரத்திகளுக்கும், பங்கு போட்டுக் கொடுப்பான். அன்னாளைச் சிநேகித்தபடியினால், அவளுக்கு இரட்டிப்பான பங்கு கொடுப்பான்.” ஒருமுறை என்னுடைய கார் ஒன்று சர்வீஸுக்கு சென்ற போது சஸ்பென்ஷனில் ஏதாவது பிரச்சனையா என்று பார்க்க சொல்லியனுப்பினேன். காட்டிலும் மேட்டிலும் அசையாமல் ஏறும்படியாக அமைக்கப்பட்ட வண்டி அது. அப்படிப்பட்ட வண்டி சிறிது காலமாக ஒரு சிறிய பள்ளத்தில் இறங்கினாலும்… Continue reading இதழ்:1266 உறவுக்குள் ஏற்படும் கீறல்!
இதழ்:1265 வெறுமையான பாத்திரம்தானே நிரப்பப்படும்!
1 சாமுவேல் 1: 2 பெனின்னாளுக்குப் பிள்ளைகள் இருந்தார்கள்; அன்னாளுக்கோ பிள்ளை இல்லை. அன்னாளின் வாழ்க்கையின் இந்தப்பகுதியை வசிக்கும் போது, என்னுடைய வாழ்க்கையில் என்றாவது ஒருநாள் நான் ஒன்றுக்குமே உதவாதவள் என்று எண்ணியிருக்கிறேனா என்ற எண்ணம் தான் எனக்குள் வந்தது! உங்கள் வாழ்க்கையில் ஏதாவது அப்படி நடந்தது உண்டா? யாராவது உங்களை உதவாக்கரை என்று திட்டியதால் நான் ஒன்றுக்குமே உதவாதவன் என்ற எண்ணம் வந்திருக்கலாம்! எனக்கு சரியான வேலை இல்லை, எனக்கு எந்த தாலந்தும் இல்லை, நான்… Continue reading இதழ்:1265 வெறுமையான பாத்திரம்தானே நிரப்பப்படும்!
இதழ்:1264 துணியை அரிக்கும் பூச்சி போன்றதுதான் பொறாமை!
1 சாமுவேல்: 1: 2 அவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள்; ஒருத்திபேர் அன்னாள், மற்றவள்பேர் பெனின்னாள். தமிழில் ‘இக்கரைக்கு அக்கரை பச்சை’ என்னும் பழமொழி ஒன்று உண்டு. நம்மில் பலருக்கு அடுத்தவர் வாழ்க்கையைப் பார்த்து பொறாமைப் பட்டே பழக்கம் ஆகிவிட்டது. பக்கத்து வீட்டு கிணற்றில் உள்ளத் தண்ணீரைப் பார்த்ததும் நம்மில் பலருக்குத் தாகம் எடுக்கும். இங்குதான் நம்முடைய அன்னாளின் வாழ்க்கை ஆரம்பமாகிறது. ஒரு கணவனை மணந்த இரு பெண்கள் ஒரே வீட்டில் வாழ்ந்ததால் எதுவுமே சம நிலையில்… Continue reading இதழ்:1264 துணியை அரிக்கும் பூச்சி போன்றதுதான் பொறாமை!
இதழ்:1263 உன்னை அதிகமாக மதிக்கும் ஒரு தேவன்!
1 சாமுவேல்: 1: 2 அவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள்; ஒருத்தி பேர் அன்னாள் இரண்டு மனைவிமார்! ஒரு கணவன்! ஒரு குடும்பம்! நான் இதைப்பற்றி சற்று யோசித்தபோது எப்படி ஒரு பெண் தன் கணவனை இன்னொருத்தியோடு பங்கு போட்டுக் கொண்டு ஒரே வீட்டுக்குள் வாழ முடியும் என்று என்னால் சிந்தித்துப் பார்க்கவே முடியவில்லை. என்னைக் கேட்டால் இப்படி வாழ்வது என்னால் நிச்சயமாக இப்படி வாழ முடியாது. ஆனால் பல நாடுகளில், பல குடும்பங்களில் இன்றும் இப்படிப்பட்ட… Continue reading இதழ்:1263 உன்னை அதிகமாக மதிக்கும் ஒரு தேவன்!
