2 சாமுவேல் 3: 7 - 8 சவுலுக்கு ஆயாவின் குமாரத்தியாகிய ரிஸ்பாள் என்ன்னும் பேருள்ள ஒரு மறுமனையாட்டி இருந்தாள். இஸ்போசேத் அப்னேரை நோக்கி: நீ என் தகப்பனாருடைய மறுமனையாட்டியினிடத்தில் பிரவேசித்தது என்ன என்றான். அப்னேர் இஸ்போசேத்தின் வார்த்தைகளுக்காக மிகவும் கோபம் கொண்டு....... என்னை நீர் இன்று ஒரு ஸ்திரீயினிமித்தம் குற்றம் பிடிக்கிறதற்கு, நான் யுதாவுக்கு உட்கையான ஒரு நாய்த்தலையா? தேர்தல் போர் என்ற தலைப்பில் அவ்வப்பொழுது செய்தி வருவதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். உண்மைக்கு தட்டுபாடு ஆகிய… Continue reading இதழ்: 666 பெயரை அழிக்கும் அவதூறு!
Category: To the Tamil Christian community
இதழ்: 665 விழித்திருந்து காத்துக்கொள்!
2 சாமுவேல் 2:2 , 11 அப்படியே தாவீது தன் இரண்டு மனைவிகளாகிய யெஸ்ரயேல் ஊராளான அகினோவாவோடும், நாபாலின் மனைவியாயிருந்த கர்மேல் ஊராளான அபிகாயிலோடும்கூட அவ்விடத்துக்குப் போனான். தாவீது எப்ரோனிலெ யூதா கோத்திரத்தின்மேல் ராஜாவாயிருந்த நாட்களின் இலக்கம் ஏழு வருஷமும் ஆறு மாதமுமாம். இன்றைய வேதாகமப் பகுதியில், தாவீது எப்ரோனில் தன் மனைவிமாரோடு சென்று ஏழுவருடம் யூதாவின் மேல் மட்டும் ராஜாவாயிருந்தான் என்று பார்க்கிறோம். முழு இஸ்ரவேலின் மேலும் ராஜாவாக அவன் இந்த ஏழு வருடங்களும் காத்திருக்க… Continue reading இதழ்: 665 விழித்திருந்து காத்துக்கொள்!
இதழ்: 663 ஒரு உயர்ந்த மனிதனின் தாழ்ந்த மரணம்!
1 சாமுவேல் 31:1-6 பெலிஸ்தர் இஸ்ரவேலரோடே யுத்தம் பண்ணினார்கள்.....சவுலுக்கு விரோதமாய் யுத்தம் பலத்தது. வில்வீரர் அவனைக் கண்டு நெருங்கினார்கள். அப்பொழுது சவுல் வில்வீரரால் மிகவும் காயப்பட்டு, தன் ஆயுததாரியை நோக்கி..... நீ உன் பட்டயத்தை உருவி என்னைக் குத்திப்போடு என்றான். அவனுடைய ஆயுததாரி மிகவும் பயப்பட்டதினால் அப்படிச் செய்யமாட்டேன் என்றான். அப்பொழுது சவுல் தன் பட்டயத்தை நட்டு அதின்மேல் விழுந்தான். சவுல் ஒரு திறமைசாலி! நேர்முகமான நோக்கம் கொண்டவன்! எல்லாவற்றுக்கும் மேலாக தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவன்! ஆனால் என்ன நடந்தது… Continue reading இதழ்: 663 ஒரு உயர்ந்த மனிதனின் தாழ்ந்த மரணம்!
இதழ்: 662 பொய்யரின் உலகம்!
1 சாமுவேல்28: 11 - 13 அப்பொழுது அந்த ஸ்திரீ உமக்கு நான் யாரை எழும்பிவரப்பண்ணவேண்டும் என்றதற்கு, அவன்: சாமுவேலை எழும்பிவரப்பண்ணவேண்டும் என்றான்....... ......தேவர்கள் பூமிக்குள்ளிருந்து ஏறி வருகிறதைக் காண்கிறேன் என்று சவுலுக்குச் சொன்னாள். சவுல் இஸ்ரவேலை ஆளும்படியாகத் தெரிந்துகொள்ளப்பட்ட முதல் ராஜா! எல்லோரையும் விட உயரமானவன்! கண்ணைக்கவரும் ஆணழகன்! இஸ்ரவேலர் எல்லோரும் பெருமை பாராட்டக்கூடிய திறமைசாலி! ஆனால் நாட்கள் செல்ல செல்ல, சவுலின் உண்மையான ரூபம் வெளிப்பட ஆரம்பித்தது. தாழ்மையான தலைவனாக இல்லாமல், முரட்டு குணமும்,… Continue reading இதழ்: 662 பொய்யரின் உலகம்!
இதழ் : 661 உன்னை வஞ்சிப்பவன் யார்?
1 சாமுவேல்: 28: 24,25 அந்த ஸ்திரீயினிடத்தில் கொழுத்த கன்றுக்குட்டி ஒன்று வீட்டில் இருந்தது. அதைத் தீவிரமாய் அடித்து, மா எடுத்துப் பிசைந்து, அதைப் புளிப்பில்லாத அப்பங்களாகச்சுட்டு, சவுலுக்கும், அவன் ஊழியக்காரர்களுக்கும் முன்பாகக் கொண்டுவந்து வைத்தாள். அவர்கள் புசித்து எழுந்திருந்து... ஒரு பள்ளியில் ஆசிரியை ஒருவர் தன் பிள்ளைகளிடம் யாராவது ஒருவரின் முகத்தை வரையும்படி கூறினார். அந்த சிறு குழந்தைகள் வரைய ஆரம்பித்தனர். அந்த ஆசிரியை ஒவ்வொருவரும் என்ன வரைகிறார்கள் என்று சுற்றிப் பார்த்தார். ஒருசிலர் தாங்கள்… Continue reading இதழ் : 661 உன்னை வஞ்சிப்பவன் யார்?
இதழ்: 660 பொல்லாங்கை விட்டு விலகு!
1 சாமுவேல் 28:7 அப்பொழுது சவுல் தன் ஊழியக்காரரை நோக்கி: அஞ்சனம் பார்க்கிற ஒரு ஸ்திரீயைத் தேடுங்கள். நான் அவளிடத்தில் போய் விசாரிப்பேன் என்றான்.அதற்கு அவனுடைய ஊழியக்காரர்: இதோ எந்தோரில் அஞ்சனம்பார்க்கிற ஒரு ஸ்திரீ இருக்கிறாள் என்றார்கள். குறி சொல்கிறவர்கள், பில்லி சூனியம் செய்கிறவர்கள், மந்திரவாதிகள், தந்திரவாதிகள் என்று பலவிதமானவர்கள் நம்முடைய நாட்டில் நம்மை சுற்றி இருக்கிறார்கள். விக்கிரகாராதனையாலும், ஆவிகளாலும் நடத்தப்படும் இவர்களைவிட்டு விலகியிருக்க வேண்டும் என்று வேதாகமம் நமக்கு கற்றுக்கொடுத்திருக்கிறது. கர்த்தருடைய கட்டளைக்கு இணங்க, குறிசொல்லுபவர்களும்,… Continue reading இதழ்: 660 பொல்லாங்கை விட்டு விலகு!
இதழ்: 659 தீமையின் பலன் பயம்!
1 சாமுவேல் 28:3 - 5 சாமுவேல் இதற்கு முன்னமே மரித்துப் போனான்..... பெலிஸ்தர் கூடிவந்து சூநேமிலே பாளயமிறங்கினார்கள். சவுலும் இஸ்ரவேலர் எல்லாரையும் கூட்டினான். அவர்கள் கில்போவாவிலே பாளயமிறங்கினார்கள். சவுல் பெலிஸ்தரின் பாளயத்தைக் கண்ட போது பயந்தான். அவன் இருதயம் மிகவும் தத்தளித்த்துக் கொண்டிருந்தது. தாவீதின் வாழ்க்கைப் பயணத்தை நாம் தொடரும் முன், நான் சற்றுப் பின் 28 ம் அதிகாரத்துக்கு சென்று, சவுலின் வாழ்க்கையின் கடைசி பாகத்தைத் பற்றி சற்றுப் பார்க்கலாம் என்று யோசித்தேன். பெலிஸ்தர்… Continue reading இதழ்: 659 தீமையின் பலன் பயம்!
இதழ்: 658 இழந்ததை திருப்பிக்கொள்!
1 சாமுவேல்: 30 : 8,18 தாவீது கர்த்தரை நோக்கி: நான் அந்தத் தண்டைப் பின் தொடரவேண்டுமா? அதைப் பிடிப்பேனா என்று கேட்டான். அதற்கு அவர்: அதைப் பின் தொடர். அதை நீ பிடித்து சகலத்தையும் திருப்பிக் கொள்வாய் என்றார். அமலேக்கியர் பிடித்துக்கொண்டுபோன எல்லாவற்றையும், தன்னுடைய இரண்டு மனைவிகளையும், தாவீது விடுவித்தான். போன வாரம் நான் ஒரு வெப்சைட்பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் நம் வீட்டில் நாம் வேண்டாம் என்று தூக்கி எறிகிற நிலையில் இருக்கும் மேஜை, நாற்காலி போன்ற… Continue reading இதழ்: 658 இழந்ததை திருப்பிக்கொள்!
இதழ்: 657 கர்த்தரில் திடப்படு! பயம் வேண்டாம்!
1 சாமுவேல் 30:6 தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான். தாவீதுடைய உண்மையான நண்பர்கள் அவனைக் கல்லெறியத் துணிந்த நேரத்தில், தன் குடும்பமே சிறைப்படுத்தப் பட்டு காணாமற்போன வேளையில், அவன் எப்படி இருந்திருப்பான்? மனம் தளர்ந்து, சோர்ந்து, வேதனையில் துடித்துக் கொண்டிருந்திருப்பான் அல்லவா? ஆம்! சிக்லாகில் தாவீதுக்கு அப்படித்தான் நடந்தது. தாவீது அமலேக்கியரை கொள்ளையடித்தபோது அங்கு ஒரு ஆணையும், ஒரு பெண்ணையும் விட்டு வைக்கவில்லை. எல்லோரையும் கொன்றான். இன்று அவனுடைய குடும்பம் அமலேக்கியரால் சிறைப்பிடிக்கப் பட்டிருக்கிறது.… Continue reading இதழ்: 657 கர்த்தரில் திடப்படு! பயம் வேண்டாம்!
இதழ்: 656 கர்த்தரை நோக்கிப் பார்! உதவி வரும்!
1 சாமுவேல் 30: 3, 6 தாவீதும் அவன் மனுஷரும் அந்தப் பட்டணத்துக்கு வந்தபோது, இதோ அது அக்கினியினால் சுட்டெரிக்கப்பட்டது என்றும், தங்கள் மனைவிகளும், தங்கள் குமாரரும் தங்கள் குமாரத்திகளும் சிறைப்பிடித்துக் கொண்டுபோகப்பட்டார்கள் என்றும் கண்டார்கள். தாவீதும் மிகவும் நெருக்கப்பட்டான். சகல ஜனங்களும் தங்கள் குமாரர் குமாரத்திகளினிமித்தம் மனக்கிலேசமானதினால், அவனைக் கல்லெறிய வேண்டும் என்று சொல்லிக்கொண்டார்கள். தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான்.… Continue reading இதழ்: 656 கர்த்தரை நோக்கிப் பார்! உதவி வரும்!
