நியாதிபதிகள்: 13:8 “அப்பொழுது மனோவா கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி; ஆ, என் ஆண்டவரே, நீர் அனுப்பின தேவனுடைய மனுஷன் மறுபடியும் ஒருவிசை எங்களிடத்தில் வந்து பிறக்கப்போகிற பிள்ளைக்காக நாங்கள் செய்யவேண்டியதை எங்களுக்குக் கற்பிப்பாராக என்று வேண்டிக்கொண்டான்.” ஒவ்வொருமுறையும் என்னைப்போல குறைந்த விசுவாசம் உள்ளவர்களின் கதையை வேதாகமத்தில் வாசிக்கும்போது கர்த்தருக்கு உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றி செலுத்துவேன். கர்த்தர் அவர்களிடம் ஒருமுறை அல்ல பலமுறை தம்முடைய வழிநடத்துதலையும், தம்முடைய வார்த்தையையும் புரியவைக்க வேண்டியிருந்தது. மலடியாயிருந்த மனோவாவின் மனைவியிடம் அவளுக்குப் பிறக்கப்போகிற… Continue reading இதழ்:1204 தேவ செய்தியை நிராகரித்து விடாதே!
Category: To the Tamil Christian community
இதழ்:1203 பிள்ளைகளிடம் இத்தனை கண்டிப்பு தேவையா?
நியாதிபதிகள்: 13:4 “ஆதலால் நீ திராட்சரசமும் மதுபானமும் குடியாதபடிக்கும், தீட்டானது ஒன்றும் புசியாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு”. இந்த புதிய மாதத்தின் முதல் நாளில் தேவனாகிய கர்த்தர் நமக்கு அளித்திருக்கும் கிருபைகளுக்காக நன்றி செலுத்துவோம்! இந்தக் கொடிய கால கட்டத்தில் நம்மைக் காத்து வழிநடத்தும் தேவனுக்கு கோடா கோடி ஸ்தோத்திரங்களை ஏறெடுப்போம். என்னுடைய அம்மா எதையும் எடுத்த இடத்தில் வைப்பார்கள், பயங்கர சுத்தம் வேறு. பாத்திரங்களை பளபளவென்று கழுவி வெயிலில் காயவைத்து எடுத்து உள்ளே வைப்பார்கள். அம்மாவுக்கு உடல்நலம் சற்று… Continue reading இதழ்:1203 பிள்ளைகளிடம் இத்தனை கண்டிப்பு தேவையா?
இதழ்:1202 கனி கொடுக்க விரும்பினால் பரிசுத்தப்படு!
நியாதிபதிகள்:13:3,4 “கர்த்தருடைய தூதனானவர் அந்த ஸ்திரீக்குத் தரிசனமாகி, அவளை நோக்கி: இதோ பிள்ளை பெறாத மலடியான நீ கர்ப்பந்தரித்து ஒரு குமாரனைப் பெறுவாய்.” ஆதலால் நீ திராட்சரசமும் மதுபானமும் குடியாதபடிக்கும், தீட்டானது ஒன்றும் புசியாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு. மனோவாவின் மனைவி ஒரு உத்தமமானப் பெண். அவளுடையத் தலைமுறையினர் நாற்பது ஆண்டுகள் பெலிஸ்தருக்கு அடிமையாயிருந்தனர். நம்பிக்கையில்லாத தருணத்தில் ஒருநாள் கர்த்தருடைய தூதனானவர் இந்தப் பெண்ணுக்குத் தோன்றி மலடியாயிருந்த அவள் ஒரு பிள்ளை பெறுவாள், அவன் ஒரு விசேஷமான பிள்ளை, கர்த்தருக்கு… Continue reading இதழ்:1202 கனி கொடுக்க விரும்பினால் பரிசுத்தப்படு!
இதழ்:1201 வெறுமையான பாத்திரம் நான்……
நியாதிபதிகள்: 13:2,3 “அப்பொழுது தாண் வம்சத்தானாகிய சோரா ஊரானான ஒரு மனுஷன் இருந்தான்; அவன் பேர் மனோவா, அவன் மனைவி பிள்ளை பெறாத மலடியாயிருந்தாள். கர்த்தருடைய தூதனானவர் அந்த ஸ்திரீக்குத் தரிசனமாகி, அவளை நோக்கி: இதோ பிள்ளை பெறாத மலடியான நீ கர்ப்பந்தரித்து ஒரு குமாரனைப் பெறுவாய்.” இன்றைய வேதாகமப் பகுதியில் வரும் மலடு என்ற வார்த்தைக்கு பயனின்மை, வறண்டது , தரிசுநிலம், என்ற அர்த்தங்களைப் பார்த்தேன். இந்த வார்த்தை பலருடைய வாழ்க்கையில் எவ்வளவு ரணத்தை ஏற்படுத்தியிறது… Continue reading இதழ்:1201 வெறுமையான பாத்திரம் நான்……
இதழ்:1200 பெயர் அறியப்படாத ஒரு அரிய தாய்!
நியாதிபதிகள்: 13:2 “அப்பொழுது தாண் வம்சத்தானாகிய சோரா ஊரானான ஒரு மனுஷன் இருந்தான்; அவன் பேர் மனோவா, அவன் மனைவி பிள்ளை பெறாத மலடியாயிருந்தாள்”. சில வேதாகமப் பகுதி என்னை ஆச்சரியப்பட்அ வைக்கும். சில பகுதி என்னை அழ வைக்கும். ஆனால் இன்றையப் பகுதி என்னை சிரிக்க வைத்தது. நான் ஒரு பெண்ணாக இருப்பதால் தான் எனக்கு சிரிப்பு வந்தது என்று நினைக்கிறேன். இதில் எனக்கு என்ன ஆச்சரியம் என்றால், சிம்சோனின் தகப்பனாகிய மனோவாவின் ஊர் பெயர்,… Continue reading இதழ்:1200 பெயர் அறியப்படாத ஒரு அரிய தாய்!
இதழ்:1199 சிம்சோன் விழுந்த மலர்களால் நிறைந்த குழி!
நியாதிபதிகள்: 13:1 இஸ்ரவேல் புத்திரர் மறுபடியும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தபடியால், கர்த்தர் அவர்களை நாற்பது வருஷமளவும் பெலிஸ்தர் கையில் ஒப்புக்கொடுத்தார். இன்று நாம் சிம்சோனின் வாழ்க்கையைப் பற்றிப் படிக்க ஆரம்பிக்கிறோம். அடுத்த சில வாரங்கள் நாம் சிம்சோனின் வாழ்க்கையில் முக்கிய இடத்தைப்பிடித்த நான்கு பெண்களைப் பற்றிப் படிக்கப்போகிறோம். ஆதியாகமம் முதல் நாம் படிக்கும்போது வேதம் நமது பார்வையில் ஒரே புத்தகம் போலத் தொடர்ச்சியாய் இருப்பதுதான் எனக்கு இந்த வேதாகமத்தில் மிகவும் பிடித்தது.வேதாகமத்தை கருத்தோடு படிக்கும் உங்கள்… Continue reading இதழ்:1199 சிம்சோன் விழுந்த மலர்களால் நிறைந்த குழி!
1198 நீ விளைவை உணருமுன் உன் வாழ்வு சறுக்கி விடும்!
நியாதிபதிகள்:12: 8,9 அவனுக்குப் பின்பு பெத்லெகேம் ஊரானாகிய இப்சான் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான். அவனுக்கு முப்பது குமாரரும் முப்பது குமாரத்திகளும் இருந்தார்கள். முப்பது குமாரரையும் புறத்திலே விவாகம்பண்ணிக்கொடுத்து, தன் குமாரருக்கு முப்பது பெண்களைப் புறத்திலே கொண்டான். அவன் இஸ்ரவேலை ஏழு வருஷம் நியாயம் விசாரித்தான். ஒருமுறை நாங்கள் காரில் பயணித்தபோது போது, ஒரு பேருந்து எங்களுக்கு வழி கொடுக்காமல் சென்று கொண்டிருந்தது. எங்களுடைய BMW க்கு இணையாக அந்த பஸ் டிரைவர் போட்டி போட்டுக் கொண்டு ஓட்டினார்.… Continue reading 1198 நீ விளைவை உணருமுன் உன் வாழ்வு சறுக்கி விடும்!
இதழ்: 1197 ஒரு சிறைக்கைதியை விடுவிப்பது போன்றது மன்னிப்பு!
நியாதிபதிகள்: 11: 39,40 ” இரண்டுமாதம் முடிந்தபின்பு, தன் தகப்பனிடத்திற்குத் திரும்பிவந்தாள்; அப்பொழுது அவன் பண்ணியிருந்த தன் பொருத்தனையின் படி அவளுக்குச் செய்தான்; அவள் புருஷனை அறியாதிருந்தாள். இதினிமித்தம் இஸ்ரவேலின் குமாரத்திகள் வருஷந்தோறும் போய் , நாலு நாள் கீலேயாத்தியனான யெப்தாவின் குமாரத்தியைக்குறித்துப் புலம்புவது இஸ்ரவேலிலே வழக்கமாயிற்று, நினைப்பதும் , மறப்பதும் என்ற வார்த்தைகள் இரண்டு வல்லமையான காந்தங்களைப் போல நம் கண்ணையும் கருத்தையும் ஈர்க்கின்றன அல்லவா? இவைதான் நம் வாழ்வின் தரத்தை அமைப்பவை என்றால் மிகையாது.… Continue reading இதழ்: 1197 ஒரு சிறைக்கைதியை விடுவிப்பது போன்றது மன்னிப்பு!
இதழ்:1196 கண்ணீர் இருதயங்களை இணைத்த நேரம்!
நியாதிபதிகள்: 11:38 “அவள் தன் தோழிமார்களோடும் கூடப்போய், தன் கன்னிமையினிமித்தம் மலைகளின்மேல் துக்கங்கொண்டாடி,” என்னுடைய கல்லூரி காலத்தில் நானும் என்னுடைய நெருங்கிய தோழிகளும் ஒருநாள் முழுவதும் சென்னையை சுற்றிபார்க்கப் புறப்பட்டோம். அந்த நாள் முழுவதும் நாங்கள் சிரித்த சிரிப்பை வாழ்க்கையில் மறக்கவே முடியாது. எல்லாவற்றுக்கும் சிரித்தோம், அர்த்தமே இல்லாமல் கூட சிரித்தோம். நாங்கள் ஒன்றாகப்படித்த பல வருடங்களில், எத்தனையோ முறை ஒருவருக்காக ஒருவர் அழுதிருக்கிறோம். பிரசங்கியில், சாலொமோன் ராஜா கூறுவதைப்போல, சந்தோஷமும் துக்கமும் ஒரு நாணயத்தின் இரு… Continue reading இதழ்:1196 கண்ணீர் இருதயங்களை இணைத்த நேரம்!
இதழ்:1195 ஆறுதலை அளித்த ஒரு நட்பு!
நியாதிபதிகள்: 11:38 “அவள் தன் தோழிமார்களோடும் கூடப்போய், தன் கன்னிமையினிமித்தம் மலைகளின்மேல் துக்கங்கொண்டாடி,” யெப்தாவின் மகளைப் பற்றிப் படித்துக்கொண்டிருக்கிறோம். அவள் தகப்பன் செய்த முட்டாள்த்தனமான பொருத்தனையால் , அவள் தலையில் இடி விழுந்தமாதிரி ஒரு செய்தியை அவள் தகப்பன் வாயிலிருந்து கேட்டபோது, அவள் தன் உறவினரை நாடவில்லை, தன் தோழிகளை நாடினாள் என்று பார்த்தோம். அவள் துக்கப்பட்ட நேரத்தில் அவளுக்கு ஆறுதலையும் தேறுதலையும் அளித்தவர்கள் அவளுடைய தோழிகளே என்றும் பார்த்தோம். அவளுடைய தகப்பன் செய்த தவறால் அவளுடைய எதிர்காலமே இருண்டு… Continue reading இதழ்:1195 ஆறுதலை அளித்த ஒரு நட்பு!
