1 இராஜாக்கள் 18:43 தன் ஊழியக்காரனை நோக்கி: நீ போய்ச் சமுத்திரமுகமாய்ப் பார் என்றான்; அவன் போய்ப் பார்த்து, ஒன்றும் இல்லை என்றான்; நீ இன்னும் ஏழுதரம் போய்ப் பார் என்றான். முகங்குப்புற விழுந்து ஜெபித்த எலியாவிடம் அவன் ஊழியக்காரன் வந்து ஒன்றும் இல்லை, மழைக்கு அறிகுறியே இல்லை என்றான். முதலில் இதை வாசித்த போது அந்த மலையில் எலியா தன் ஊழியக்காரனை எங்கு அனுப்பி மேகம் இருக்கிறதா என்று பார்த்து வரச் சொன்னான் என்று யோசித்தேன்.… Continue reading இதழ்:2366 அந்த சிறிய மேகம் எழும்பும் வரை ஜெபி!
இதழ்:2365 வெறும் மழை அல்ல! பெருமழை!
1 இராஜாக்கள் 18:43 தன் ஊழியக்காரனை நோக்கி: நீ போய்ச் சமுத்திரமுகமாய்ப் பார் என்றான்; அவன் போய்ப் பார்த்து, ஒன்றும் இல்லை என்றான்; நீ இன்னும் ஏழுதரம் போய்ப் பார் என்றான். எபிரேயர் 10:36 நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படிசெய்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது. கால தாமதத்தை விரும்புவோர் யாரையும் நான் இதுவரை பார்த்ததேயில்லை! என்னுடைய இத்தனை வருட பயணங்களில், சரியான நேரத்திற்குள் விமான நிலையம் போவதும், அங்கே உள்ள போர்டில் விமானம் புறப்படும் கேட்… Continue reading இதழ்:2365 வெறும் மழை அல்ல! பெருமழை!
இதழ்:2364 தேவனே நொறுங்குண்ட இருதயத்தை நீர் புறக்கணியீர்!
1 இராஜாக்கள் 18:42 ஆகாப் போஜனபானம்பண்ணப்போனான்; பின்பு எலியா கர்மேல் பர்வதத்தினுடைய சிகரத்தின்மேல் ஏறி, தரையிலே பணிந்து, தன் முகம் தன் முழங்காலில் பட குனிந்து, கர்மேல் பர்வதத்தில் நடந்த சம்பவங்களை நாம் படித்துக் கொண்டிருக்கிறோம். நான் அன்று எலியாவோடு இருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தேன். அங்கு கூடியிருந்த கூட்டம் கலைந்த பின்னர், எலியா மலையின் உச்சிக்கு ஏறுகிறான். அங்கு அவன் தரையிலே பணிந்து, தன் முகம் முழங்காலில் பட குனிந்து, தன் பிதாவாகிய… Continue reading இதழ்:2364 தேவனே நொறுங்குண்ட இருதயத்தை நீர் புறக்கணியீர்!
இதழ்:2363 அறுந்து போகாத சங்கிலி போன்ற ஜெப வாழ்க்கை!
1 இராஜாக்கள் 18:42 ஆகாப் போஜனபானம்பண்ணப்போனான்; பின்பு எலியா கர்மேல் பர்வதத்தினுடைய சிகரத்தின்மேல் ஏறி, தரையிலே பணிந்து, தன் முகம் தன் முழங்காலில் பட குனிந்து, நாம் எலியாவோடு கர்மேல் பர்வதத்தில் நின்று கொண்டிருந்தோம்! மிகவும் நீண்ட ஒரு நாளுக்குப் பின், பொழுது போகையில் கர்மேல் பர்வதத்தின் மேல் இருந்த அனைவரும் தங்கள் வீடுகளை நோக்கி சென்றனர், அந்தப் பொழுதில் எலியா ஆகாபை நோக்கி, பின்பு எலியா ஆகாபை நோக்கி: நீர் போம், போஜனபானம்பண்ணும், பெருமழையின் இரைச்சல்… Continue reading இதழ்:2363 அறுந்து போகாத சங்கிலி போன்ற ஜெப வாழ்க்கை!
இதழ்:2362 நான் உம்மையே நேசிப்பேன், உமக்காவே வாழுவேன்!
1 இராஜாக்கள் 18:38-39 அப்பொழுது: கர்த்தரிடத்தில் இருந்து அக்கினி இறங்கி, அந்தச் சர்வாங்க தகனபலியையும், விறகுகளையும், கற்களையும், மண்ணையும் பட்சித்து, வாய்க்காலிலிருந்த தண்ணீரையும் நக்கிப்போட்டது. ஜனங்களெல்லாரும் இதைக் கண்டபோது, முகங்குப்புற விழுந்து: கர்த்தரே தெய்வம், கர்த்தரே தெய்வம் என்றார்கள். இந்த புதிய மாதத்தைக் காணச் செய்த தேவனுக்கு கோடா கோடி ஸ்தோத்திரம்! கர்த்தர் தாமே இந்த மாதம் முழுவதும் நம்மைக் கரம் பிடித்து நடத்துமாறு ஒரு நொடி ஜெபிப்போம்! கர்மேல் பர்வதம் மேல் பலிபீடம் கட்டியாயிற்று! எலியா… Continue reading இதழ்:2362 நான் உம்மையே நேசிப்பேன், உமக்காவே வாழுவேன்!
இதழ்:2361 நம்மைத் தம்வசம் திருப்ப நம்மில் கிரியை செய்கிறார்!
1 இராஜாக்கள் 18:36-37 அந்திப்பலி செலுத்தும் நேரத்திலே, தீர்க்கதரிசியாகிய எலியா வந்து; ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தேவனாகிய கர்த்தாவே, இஸ்ரவேலிலே நீர் தேவன் என்றும், நான் உம்முடைய ஊழியக்காரன் என்றும், நான் இந்தக் காரியங்களையெல்லாம் உம்முடைய வார்த்தையின்படி செய்தேன் என்றும் இன்றைக்கு விளங்கப்பண்ணும். கர்த்தாவே, நீர் தேவனாகிய கர்த்தர் என்றும், தேவரீர் தங்கள் இருதயத்தை மறுபடியும் திருப்பினீர் என்றும் இந்த ஜனங்கள் அறியும்படிக்கு, என்னைக் கேட்டருளும், என்னைக் கேட்டருளும் என்றான். சில நேரங்களில் நம்முடைய வாழ்க்கையில் நாம்… Continue reading இதழ்:2361 நம்மைத் தம்வசம் திருப்ப நம்மில் கிரியை செய்கிறார்!
இதழ்:2360 தேவனுடைய பீடத்தண்டை,தேவனிடத்திற்கு பிரவேசிப்பேன்.
1 இராஜாக்கள் 18: 30 -35 அப்பொழுது எலியா சகல ஜனங்களையும் நோக்கி: என் கிட்டே வாருங்கள் என்றான்; சகல ஜனங்களும் அவன் கிட்டே வந்தபோது, தகர்க்கப்பட்ட கர்த்தருடைய பலிபீடத்தை அவன் செப்பனிட்டு ,உனக்கு இஸ்ரவேல் என்னும் பேர் இருப்பதாக என்று சொல்லி, கர்த்தருடைய வார்த்தையைப்பெற்ற யாக்கோபுடைய குமாரரால் உண்டான கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே, பன்னிரண்டு கற்களை எடுத்து, அந்தக் கற்களாலே கர்த்தருடைய நாமத்திற்கென்று ஒரு பலிபீடத்தைக் கட்டி, பலிபீடத்தைச் சுற்றிலும் தானியம் அளக்கிற இரண்டுபடி விதை விதைக்கத்தக்க… Continue reading இதழ்:2360 தேவனுடைய பீடத்தண்டை,தேவனிடத்திற்கு பிரவேசிப்பேன்.
இதழ்:2359 தேவனுக்கு முன்னால் நாம் முழங்கால் படியிடும்போது சாத்தான்கூட நடுங்குவான்!
1 இராஜாக்கள் 18 : 26 - 29 தங்களுக்குக் கொடுக்கப்பட்ட காளையை அவர்கள் வாங்கி, அதை ஆயத்தம்பண்ணி: பாகாலே, எங்களுக்கு உத்தரவு அருளும் என்று காலைதொடங்கி மத்தியானமட்டும் பாகாலின் நாமத்தைச் சொல்லிக் கூப்பிட்டார்கள்; ஆனாலும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை, மறு உத்தரவு கொடுப்பாரும் இல்லை. அவர்கள் கட்டின பலிபீடத்திற்கு எதிரே குதித்து ஆடினார்கள். மத்தியானவேளையிலே எலியா அவர்களைப் பரியாசம்பண்ணி: உரத்த சத்தமாய்க் கூப்பிடுங்கள்; அவன் தேவனாமே, அவன் தியானத்தில் இருப்பான்; அல்லது அலுவலாயிருப்பான்; அல்லது பிரயாணம்… Continue reading இதழ்:2359 தேவனுக்கு முன்னால் நாம் முழங்கால் படியிடும்போது சாத்தான்கூட நடுங்குவான்!
இதழ்:2358 நம் தேவன் முற்றிலும் நம்பப்படத்தக்கவர் என்று புரிந்து கொண்டுள்ளாயா?
1 இராஜாக்கள் 18:24 நீங்கள் உங்கள் தேவனுடைய நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுங்கள்; நான் கர்த்தருடைய நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுவேன்; அப்பொழுது அக்கினியினால் உத்தரவு அருளும் தெய்வமே தெய்வம் என்றான்; அதற்கு ஜனங்களெல்லாரும் இது நல்ல வார்த்தை என்றார்கள். இன்றைய வேதாகமப் பகுதியை நான் வாசிக்கும்போது என்னால் கர்மேல் பர்வதத்தை கண் முன்னால் கொண்டுவர முடிந்தது. நாங்கள் 2006 ல் இஸ்ரவேல் நாட்டை சுற்றிப்பார்க்க சென்றபோது கர்மேல் போகும்படியான கிருபையைக் கர்த்தர் கொடுத்தார். இரண்டாவது முறை சென்றபோது கர்மேல்… Continue reading இதழ்:2358 நம் தேவன் முற்றிலும் நம்பப்படத்தக்கவர் என்று புரிந்து கொண்டுள்ளாயா?
இதழ்:2357 தேவன் ஒருவரே வானத்துக்கும், பூமிக்கும் கர்த்தர்!
1 இராஜாக்கள் 18:21 அப்பொழுது எலியா சகல ஜனத்தண்டைக்கும் வந்து: நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள்; கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் தெய்வமானால் அவனைப் பின்பற்றுங்கள் என்றான், ஜனங்கள் பிரதியுத்தரமாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை. ஒரு பெரிய ஜனக்கூட்டமே கர்மேல் மேல் திரண்டு விட்டது! ராஜாவாகிய ஆகாப், கர்த்தருடைய தீர்க்கதரிசியாகிய எலியா , யேசபேலின் பாகாலின் தீர்க்கதரிசிகள், மற்றும் தேவனுடைய பாதையை விட்டு விலகி சென்ற திரளான மக்கள் கூட்டம் அங்கு கூடியிருந்தனர்.… Continue reading இதழ்:2357 தேவன் ஒருவரே வானத்துக்கும், பூமிக்கும் கர்த்தர்!
