Bible Study

மலர்:1இதழ்: 74 குடும்பம் ஒரு பரிசு!

யோவான்:13: 34 “ நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்கு கொடுக்கிறேன்” உங்களில் யாராவது ராஜாவின் மலர்களுக்கு புதிதாக வந்திருப்பீர்களானால், ஒரு சிறு முன்னுரை கொடுக்க விரும்புகிறேன்! நாம் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆதியாகமத்திலிருந்து ஆரம்பித்தோம். நம்முடைய வேத ஆராய்ச்சியில் நாம் பெண்களைப்பற்றி மாத்திரம் படிக்கவில்லை. ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு என்று பலரைப் பற்றிப் படித்தோம். ஆனால் வேதத்தில் ஏதாவது ஒரு பெண்ணின்பெயர் வரும்போது… Continue reading மலர்:1இதழ்: 74 குடும்பம் ஒரு பரிசு!

Bible Study

மலர்:1இதழ்: 73 ஆத்துமத்தில் குஷ்டரோகம்?????

  எண்ணா:12: 13, 15 அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி; தேவனே அவளை குணமாக்கும் என்று கெஞ்சினான். அப்படியே மிரியாம் ஏழுநாள் பாளயத்துக்கு புறம்பே விலகப்பட்டிருந்தாள். மிரியாம் சேர்த்துக்கொள்ளப்படுமட்டும் ஜனங்கள் பிரயாணம் பண்ணாதிருந்தார்கள்.   தேவனுடைய சேவைக்காக தங்களை அர்ப்பணித்த அநேக மிஷனரிகளைப் பற்றி படிக்கும்போது நாம் இவர்களை சந்திக்கும் பாக்கியம் கிடைக்கவில்லையே என்று எண்ணுவதுண்டு! அப்படிப்பட்டவர்களின் பட்டியலில் இடம் பெறுபவர் டாக்டர் பால் பிராண்ட் என்ற மருத்துவரும் அவர் மனைவி மார்கரெட் அம்மையாரும்.  அவர் நம்முடைய… Continue reading மலர்:1இதழ்: 73 ஆத்துமத்தில் குஷ்டரோகம்?????

Bible Study

மலர்:1இதழ்:72 முறுமுறுப்பால் வந்த விபரீதம்!

  எண்ணா:12: 1, 2  “எத்தியோப்பியா  தேசத்து ஸ்திரீயை மோசே விவாகம்பண்ணியிருந்தபடியினால் மிரியாமும் ஆரோனும்,அவன் விவாகம் பண்ணியிருந்த எத்தியோப்பிய தேசத்து  ஸ்திரீயினிமித்தம் அவனுக்கு விரோதமாய்ப் பேசி: கர்த்தர் மோசேயைக்கொண்டு மாத்திரம் பேசினாரோ, எங்களைக் கொண்டும் அவர் பேசினதில்லையோ என்றார்கள்.  கர்த்தர் அதைக் கேட்டார்.   சில நேரங்களில் நம்மை சுற்றி நடக்கும் ஆபத்து, விபத்துகளைப் பற்றி கேள்விப்படும்போது,  “அதன் பின்னர் அவர்கள் என்றென்றும் சந்தோஷமாக வாழ்ந்தார்கள்” என்ற வாக்கியம் கதைகளுக்கு மாத்திரம் அல்ல நம் வாழ்க்கைக்கும் சொந்தமாயிருந்தால்… Continue reading மலர்:1இதழ்:72 முறுமுறுப்பால் வந்த விபரீதம்!

Bible Study

மலர்:1இதழ்: 71 அதிகாலையில் துதிசெய்!

யாத்தி:15: 20, 21 “ஆரோனின் சகோதரியாகிய மிரியாம் என்னும் தீர்க்கதரிசியானவளும், தன் கையில் தம்புருவை எடுத்துக்கொண்டாள்; சகல ஸ்திரீகளும் தம்புரோடும், நடனத்தோடும் அவளுக்கு பின்னே புறப்பட்டுப்போனார்கள்.  மிரியாம் அவர்களுக்கு  பிரதிவசனமாக; கர்த்தரைப் பாடுங்கள்; அவர் மகிமையாய் வெற்றிசிறந்தார்; குதிரையும் குதிரை வீரனையும் கடலிலே தள்ளினார் என்று பாடினாள்.”   இன்று காலையில் எப்பொழுதும் எழும்புகிற நேரத்தைவிட சிறிது அதிக நேரம் படுத்திருக்க என் சரீரம் ஆசைப்பட்டது. ஆனால் என் வீட்டுத் தோட்டத்தில் உள்ள பறவைகளின் சத்தம் என்னை… Continue reading மலர்:1இதழ்: 71 அதிகாலையில் துதிசெய்!

Call of Prayer

ஜெபக்கூடாரம்

  தனித்திருந்து எறேடுக்கும் ஜெபம்!   லூக்கா: 5:16 “அவரோ வனாந்தரத்தில் தனித்து போய் ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தார்”      ஒவ்வொரு சனிக்கிழமையும் நாம் தேவனுடைய சமுகத்தில் நம் ஜெப வேண்டுதல்களோடு வருகிற நாள். இன்றைய வேத வசனத்தில், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வனாந்திரத்தில் தனித்திருந்து ஜெபித்தார் என்று பார்க்கிறோம். நம்முடைய எல்லா வேலைகளின் மத்தியிலும், சிறிது நேரம் தனித்திருந்து நம் தேவனோடு செலவிடுவோம். நம் தேவைகளுக்காக அவரை நோக்கி விண்ணப்பம் பண்ணுவோம். அவர் நம் வேண்டுதல்களைக்… Continue reading ஜெபக்கூடாரம்

Bible Study

மலர்:1இதழ்: 70 மிரியாம் ஒரு திடநம்பிக்கையுள்ள பெண்!

நாம் நேற்று மிரியாமை ஒரு ஞானமுள்ள பெண்ணாய்ப் பார்த்தோம். பார்வோன்  குமாரத்தியிடம் ஞானமாய் பேசி குழந்தையின் தாயே குழந்தையை வளர்க்கும் திட்டத்தைக் கொடுக்கிறாள்.  ஞானமுள்ளவள்  மட்டுமல்ல, மிரியாமை ஒரு திடமான பெண்ணாகக் கூட இங்கு காண்கிறோம்.  நாணலினால் செய்த பெட்டியில் அவள் தம்பி மோசே நைல் நதிக்கரையில் வைக்கப்பட்டபோது, யார் அந்தப் பக்கம் வருகிறார்களோ,  அந்தப் பெட்டி யார் கண்ணில் படப்போகிறதோ என்று ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தாள். அந்தப் பெட்டி பார்வோனின் படை வீரர் கண்ணில் படுமானால் தன்… Continue reading மலர்:1இதழ்: 70 மிரியாம் ஒரு திடநம்பிக்கையுள்ள பெண்!

Bible Study

மலர்:1இதழ்: 69 மிரியாம் ஒரு ஞானமுள்ள பெண்!

சில நாட்கள் நாம்  மோசேயின் தாயாகிய யோகெபெத்தைப் பற்றி ஒரு பொறுப்புள்ள, பெலசாலியான, திறமைசாலியான, ஆசீர்வாதமான தாயாகப் பார்த்தோம். இன்று முதல் மோசேயின் தமக்கையாகிய மிரியாமைப் பற்றி ஒரு சில நாட்கள் படிப்போம். குழந்தை மோசேயை நாணல் பெட்டியில் வைத்து நைல் நதியோரமாய் நாணல் நிறைந்த கரையில் மிதக்க வைத்து, குழந்தையின் அக்காவாகிய மிரியாமை தூரத்தில் இருந்து காவல் காக்கும்படி செய்தாள் யோகெபெத். மிரியாமுக்கு அப்பொழுது பத்திலிருந்து பதின்மூன்று வயதிற்குள் இருக்கும். யார் அந்த நதிக்கரையோரமாக வருவார்களோ?… Continue reading மலர்:1இதழ்: 69 மிரியாம் ஒரு ஞானமுள்ள பெண்!

Bible Study

மலர்:1இதழ்: 68 நீ ஒரு ஆசீர்வாதமான தாயா?

எண்ணா: 26: 59 “ அம்ராமுடைய மனைவிக்கு யொகெபெத் என்று பேர்; அவள் எகிப்திலே லேவிக்கு பிறந்த குமாரத்தி; அவள் அம்ராமுக்கு ஆரோனையும், மோசேயையும், அவன் சகோதரியான மிரியாமையும் பெற்றாள்”  யோகெபெத்தை நாம் பொறுப்புள்ள ஒரு தாயாகவும், பெலசாலியான ஒரு தாயாகவும், திறமைசாலியான ஒரு தாயாகவும் பார்த்தோம். இந்த தாய் தன்னுடைய  பிள்ளைகளுக்கு மட்டும் அல்ல, இஸ்ரவேல் மக்களுக்கு எவ்விதமாய் ஒரு ஆசீர்வாதமாக இருந்தாள் என்று பார்க்கலாம்.  யோகெபெத் வாழ்ந்த சமயம் இஸ்ரவேல் மக்கள் அடிமைத்தனத்தில் இருந்தனர்.… Continue reading மலர்:1இதழ்: 68 நீ ஒரு ஆசீர்வாதமான தாயா?

Bible Study

மலர்:1இதழ்: 67 ஒரு திறமைசாலியான தாய்!

   யாத்தி: 2: 3 அவள் அதை அப்புறம் ஒளித்துவைக்கக் கூடாமல், ஒரு நாணற்ப்பெட்டியை எடுத்து, அதற்கு பிசினும், கீலும் பூசி , அதிலே பிள்ளையை வளர்த்தி, நதியோரமாய் நாணலுக்குள்ளே வைத்தாள். மோசே அழிவிலிருந்து மீட்கப்பட்ட இந்த கதையை மறுபடியும் வாசிக்கும்போது, கண்ணில் பட்ட இன்னுமொரு அருமையான காரியம், யோகெபெத்தின் கைவிரல்களின் சிருஷ்டிப்பு திறமை!  பத்து விரல்களால் திறமையாக, அங்கே நைல் நதியண்டை கிடைக்கிற சாதாரண நாணல் என்னும் புல்லைக் கொண்டு, ஒரு பேழையை செய்தாள். அதில்… Continue reading மலர்:1இதழ்: 67 ஒரு திறமைசாலியான தாய்!

Bible Study

மலர்:1இதழ்: 66 பார்வோன் குமாரத்தி முதுகெலும்பு உள்ள பெண்!

  " யாத்தி:2: 5,6 அப்பொழுது பார்வோனுடைய குமாரத்தி நதியில் ஸ்நானம் பண்ண வந்தாள்.அவளுடைய தாதிகள் நதியோரத்தில் உலாவினார்கள்; அவள் நாணலுக்குள்ளே இருக்கிற பெட்டியைக் கண்டு, தன் தாதியை அனுப்பி அதைக் கொண்டுவரும்படி செய்தாள். அதைத் திறந்தபோது பிள்ளையைக் கண்டாள்; பிள்ளை அழுதது; அவள் அதின்மேல் இரக்கமுற்று இது எபிரேயர் பிள்ளைகளில் ஒன்று என்றாள்.”   ஒருவரை  முதுகெலிம்பில்லாதவர்  என்று யாராவது சொல்லக் கேட்டால் அவரைப்  பற்றி நாம் என்ன நினைக்கிறோம்? ஒரு முடிவில்  நிலைத்து நிற்பவர்… Continue reading மலர்:1இதழ்: 66 பார்வோன் குமாரத்தி முதுகெலும்பு உள்ள பெண்!