Bible Study

மலர்:1 இதழ்: 65 நீ ஒரு பெலமுள்ள தாயா?

யாத்தி :2:2, 9  “அந்த ஸ்திரி (யொகெபேத்) கர்ப்பவதியாகி, ஒரு ஆண் பிள்ளையைப் பெற்று, அது அழகுள்ளதென்று கண்டு அதை மூன்று மாதம் ஒளித்து வைத்தாள். பார்வோனுடைய குமாரத்தி அவளை நோக்கி, நீ இந்தப் பிள்ளையை எடுத்துக்கொண்டுபோய் அதை எனக்கு வளர்த்திடு; நான் உனக்கு சம்பளம் கொடுக்கிறேன் என்றாள். அந்த ஸ்திரி பிள்ளையை எடுத்துக்கொண்டுபோய் அதை வளர்த்தாள்” பெண்களை பெலவீனப்பாண்டமாக உலகத்தார் நினைக்கிறார்கள். அது உண்மையா??? சரீரப்பிரகாரமாய் ஒருவேளை இருக்கலாம்! ஆனால் ஆவிக்குரிய வாழ்க்கையிலும், விசுவாசத்திலும், நேர்மை,… Continue reading மலர்:1 இதழ்: 65 நீ ஒரு பெலமுள்ள தாயா?

Bible Study

மலர்:1இதழ்: 64 நீ ஒரு பொறுப்புள்ள தாயா?

யாத்தி:2:1,2  “லேவியின் குடும்பத்தாரில் ஒருவன் லேவியின் குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம் பண்ணினான். அந்த ஸ்திரி கர்ப்பவதியாகி, ஒரு ஆண் பிள்ளையைப் பெற்று, அது அழகுள்ளதென்று கண்டு அதை மூன்று மாதம் ஒளித்து வைத்தாள்.   நாம் சிப்பிராள், பூவாள் என்ற மருத்துவச்சிகளின் தேவ பயத்தினால் எகிப்தில் வாழ்ந்த இஸ்ரவேல் மக்களை காத்தார் என்று பார்த்தோம். பார்வோன் அவர்களை கடின உழைப்பினால் வாதித்தான், ஆனாலும் இஸ்ரவேல் மக்கள் பலுகிப் பெருகினார்கள். அதனால் பார்வோன், பிறந்த ஆண்பிள்ளைகளை நதியில் போட்டுவிட… Continue reading மலர்:1இதழ்: 64 நீ ஒரு பொறுப்புள்ள தாயா?

Bible Study

மலர்:1இதழ்: 63 கருச்சிதைவும், சிசு கொலையும்….?????

யாத்தி:1: 20, 21 “இதினிமித்தம் தேவன் மருத்துவச்சிகளுக்கு நன்மை செய்தார். ஜனங்கள் பெருகி மிகுதியும் பலத்துப் போனார்கள். மருத்துவச்சிகள் தேவனுக்கு பயந்ததினால் அவர்கள் குடும்பங்கள் தழைக்கும்படி செய்தார்.        சிப்பிராள் , பூவாள் என்ற இரு எபிரேய மருத்துவச்சிகள் பார்வோனுக்கு பயப்படாமல், தேவனுக்கு பயந்ததினாலே, அவர்கள் எபிரேயாருக்கு பிறந்த ஆண்பிள்ளைகளை பார்வோன் கட்டளைப்படி கொலைசெய்யாமல் காப்பாற்றினர் என்று பார்த்தோம். கர்த்தருக்கு பயந்த பயம், ஞானமுள்ள வார்த்தைகள் இவையே அவர்கள் பார்வோனுக்கு முன்னால் உபயோப்படுத்திய ஆயுதம் என்று பார்த்தோம்.… Continue reading மலர்:1இதழ்: 63 கருச்சிதைவும், சிசு கொலையும்….?????

Bible Study

மலர்:1இதழ்: 62 வெள்ளித்தட்டில் பொற்ப்பழங்கள் போல…..

யாத்தி:1: 18, 19 “அதினாலே எகிப்தின் ராஜா மருத்துவச்சிகளை அழைப்பித்து,; நீங்கள் ஆண்பிள்ளைகளை உயிரோடே காப்பாற்றுகிற காரியம் என்ன என்று கேட்டான். அதற்கு மருத்துவச்சிகள் பார்வோனி நோக்கி; எபிரேய ஸ்திரிகள், எகிப்திய ஸ்திரிகளைப் போல அல்ல, அவர்கள் நல்ல பலமுள்ளவர்கள்; மருத்துவச்சி அவர்களிடத்துக்கு போகுமுன்னமே அவர்கள் பிரசவித்தாகும் என்றார்கள்” "கடந்த இரு மாதங்களாக நாம் ஆதியாகமத்தை ஆராய்ந்து படித்தோம். ஆதாமிலிருந்து, யோசேப்பு வரை பலருடைய வாழ்க்கை நம்மை சிந்திக்க தூண்டியது. இன்று நாம் வேதத்தின் இரண்டாவது புஸ்தகமாகிய… Continue reading மலர்:1இதழ்: 62 வெள்ளித்தட்டில் பொற்ப்பழங்கள் போல…..

Bible Study

மலர்:1இதழ்: 61 நீ என்னைக் குத்திய புண் இன்னும் ஆறவில்லை!

ஆதி:44: 18 “ அப்பொழுது யூதா அவனண்டையிலே சேர்ந்து, ஆ என் ஆண்டவனே , உமது அடியேன் உமது செவிகள் கேட்க ஒரு வார்த்தை சொல்லுகிறேன் கேட்பீராக;  அடியேன் மேல் உமது கோபம் மூளாதிருப்பதாக; நீர் பார்வோனுக்கு ஒப்பாயிருக்கிறீர்” யோசேப்புக்கு இழைக்கப்பட்ட தீங்கை பரலோக தேவன் எப்படி நன்மையாய், ஆசீர்வாதமாய் மாற்றியமைத்தார் என்று நாம் பார்த்தோம். இன்று நாம் யோசேப்பின் வாழ்விலிருந்து இன்னுமொரு காரியத்தை கற்று கொள்ளப் போகிறோம்! அதற்கு முன்னால் ஒரே ஒரு கேள்வி! உங்கள்… Continue reading மலர்:1இதழ்: 61 நீ என்னைக் குத்திய புண் இன்னும் ஆறவில்லை!

Call of Prayer

ஜெபக்கூடாரம்!

                                இரண்டத்தனையான ஆசிர்வாதத்தை கொடுத்த ஜெபம்!      ஆதி:42:10 “யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார்; யோபுக்கு முன்னிருந்த எல்லாவற்றைப் பார்க்கிலும், இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்கு தந்தருளினார்”         யோபு தனக்காக அல்ல, தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்த போது, கர்த்தர் அவனுடைய தேவையை இரண்டத்தனையாய் சந்தித்தார். நம்மையே பற்றி சிந்திக்காமல், தேவனுடைய சமுகத்தில் நாம்,  நம்மை சுற்றயுயுள்ளவர்களுக்காக ஜெபிக்கும்போது, கர்த்தர் நம்முடைய தேவைகளை அற்புதமாய்… Continue reading ஜெபக்கூடாரம்!

Bible Study

மலர்:1இதழ்: 60 தீங்கு நன்மையாய் மாறும்!

ஆதி:50: 20 நீங்கள் எனக்கு தீமை செய்ய நினைத்தீர்கள், தேவனோ இப்படி நடந்து வருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு அதை நன்மையாக முடியப்பண்ணினார்.      யோசேப்பு எகிப்துக்கு  அதிகாரியான பின்னர், கர்த்தர் பார்வோனுக்கு சொப்பனத்தின் மூலமாய் உரைத்தது போலவே, மிகப் பெரிய பஞ்சம் உண்டாயிற்று. கானான் தேசமும்,எகிப்தும்தேசமும் பஞ்சத்தினாலே மெலிந்து போயிற்று. கானானிலே யாக்கோபும், அவன் குடும்பத்தாரும் பஞ்சத்தினாலே வாட ஆரம்பித்தனர். கானானில் மட்டும் அல்ல, எங்குமே உணவுப் பொருள் இல்லாததால், யாக்கோபு தன் குடும்பம்… Continue reading மலர்:1இதழ்: 60 தீங்கு நன்மையாய் மாறும்!

Bible Study

மலர்:1இதழ்: 59 உப்பில்லாத பண்டம் குப்பையிலே!

ஆதி:41: 44, 45 பின்னும் பார்வோன் யோசேப்பை நோக்கி; நான் பார்வோன்; ஆகிலும் எகிப்து தேசத்திலுள்ளவர்களில் ஒருவனும் உன் உத்தரவில்லாமல் தன் கையையாவது, தான் காலையாவது அசைக்கக் கூடாது என்றான்.  மேலும் பார்வோன் யோசேப்புக்கு, சாப்நாத்பன்னேயா என்ற பெயரையிட்டு, ஒன் பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத்தை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான். யோசேப்பு எகிப்து தேசத்தை சுற்றிப்பார்க்கும்படி புறப்பட்டான்.   கடந்த மே மாதம் அமெரிக்காவில், எங்களுடைய  நண்பர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்த போது, அவர் மனைவி… Continue reading மலர்:1இதழ்: 59 உப்பில்லாத பண்டம் குப்பையிலே!

Bible Study

மலர்:1இதழ்: 58 உன்னோடிருப்பது யார்?

ஆதி:41: 39” பின்பு பார்வோன் யோசேப்பை நோக்கி; தேவன் இவையெல்லாவற்றையும் உனக்கு வெளிப்படுத்தியிருக்கிறபடியால்,உன்னைப் போல விவேகமும், ஞானமும் உள்ளவன் வேறோருவனும் இல்லை” யோசேப்பின் வாழ்க்கையைப் பற்றி அதிக நாட்கள் நாம் தியானிக்கிறோம் என்று நினைக்கிறேன். அவனுடைய வாழ்க்கையைப்பற்றி வாசிக்கும் போது, இன்னும் ஒரு பாடத்தை கர்த்தர் எனக்கு கற்றுக் கொடுத்தார். அதை இன்று உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். ஆதி 29:3 ல், வேதம் கூறுகிறது, யோசேப்பு தன் சகோதர்களால் விற்கப் பட்ட பின், எகிப்தை வந்து அடைகிறான்.… Continue reading மலர்:1இதழ்: 58 உன்னோடிருப்பது யார்?

Bible Study

மலர்:1இதழ்: 57 யாவற்றையும் நமக்கு சாதகமாக்குவார்!

  சங்கீ: 31: 3 என் கன்மலையும் என் கோட்டையும் நீரே; உமது நாமத்தினிமித்தம் எனக்கு வழிகாட்டி என்னை நடத்தியருளும். இன்று காலை மனதை அழுத்திய பாரத்தோடு எழும்பினேன். ‘ராஜாவின் மலர்கள்’ வாசித்துவிட்டு ஆசிர்வாதம் பெற்ற ஒரு சகோதரன் எழுதிய சாட்சி எனக்கு ஆறுதலாய் இருந்தது. ஆண்டவரே இந்த நாளில்  நான் எதை   செய்தாலும், உம்முடைய நாமம் மகிமைப்படட்டும் என்று ஜெபித்தேன்.  பல நாட்களுக்கு முன்பு மார்டின் லூதெருடைய மனைவி Katherine அம்மையார் எழுதிய சில வரிகளைப்… Continue reading மலர்:1இதழ்: 57 யாவற்றையும் நமக்கு சாதகமாக்குவார்!