Tamil Bible study

இதழ்:2421 உம்முடைய ஆலோசனையிலே என்னை நடத்தும்!

எண்ணாகமம்: 14: 30 இந்த வனாந்தரத்தில்…… உங்களில் இருபது வயதுமுதல், அதற்கு மேற்ப்பட்டவர்களாக எண்ணப்பட்டு உங்கள் தொகைக்கு உட்பட்டவர்களும், எனக்கு விரோதமாய் முறுமுறுத்தவர்களுமாகிய அனைவர்களின் பிரேதங்களும் விழும். எப்புன்னேயின் குமாரன் காலேபும், நூனின் குமாரன் யோசுவாவும் தவிர, மற்றவர்களாகிய நீங்கள், நான் உங்களை குடியேற்றுவேன் என்று ஆணையிட்டுக் கொடுத்த தேசத்தில் பிரவேசிப்பதில்லை.” இதை வாசிக்கும்போது என்னுடைய பள்ளிக்கூட நாட்கள்தான் நினைவுக்கு வந்தது. நான் ஆறாவது படிக்கும்போது என்னுடைய வகுப்பில் இருந்த ஒருசில மாணவர்கள், சின்ன இடைவேளை கிடைத்தாலும்… Continue reading இதழ்:2421 உம்முடைய ஆலோசனையிலே என்னை நடத்தும்!

Tamil Bible study

இதழ்:2420 விசுவாசம் ஒன்றே நம்மை உயரப் பறக்கச் செய்யும்!

எண்ணா:14:42  ”நீங்கள் உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக முறியஅடிக்கப்படாதபடிக்கு ஏறிப்போகாதிருங்கள்; கர்த்தர் உங்கள் நடுவில் இரார்.” ஒருமுறை அமெரிக்காவின் பிலடெல்பியாவிலிருந்து நியூ யார்க் வரை ஒரு சிறிய விமானத்தில் பயணம் செய்தோம். அன்று மேகமூட்டம் அதிகமாக இருந்ததால் அந்த சிறிய விமானம் பயங்கரமாக குதிக்க ஆரம்பித்து விட்டது. உள்ளே இருந்தவர்கள் அலற ஆரம்பித்து விட்டனர். எனக்கு பயத்தில் தொண்டை அடைத்து மூச்சுத் திணற ஆரம்பித்து விட்டது. சில நேரங்களில் நம் வாழ்க்கையும் மேகமூட்டத்துக்குள்ளாகப் பறக்கும் விமானத்தைப் போன்றதுதான். எல்லாமே… Continue reading இதழ்:2420 விசுவாசம் ஒன்றே நம்மை உயரப் பறக்கச் செய்யும்!

Tamil Bible study

இதழ்:2419 உன் நம்பிக்கையை விழுங்கிய வனாந்திரம்!

எண்ணா:14:35 ”கர்த்தராகிய நான் இதை சொன்னேன்; எனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடின இந்த பொல்லாத சபையார் யாவருக்கும் இப்படியே செய்வேன்; இந்த வனாந்தரத்திலே அழிவர்கள், இங்கே சாவார்கள் என்று சொல் என்றார்.” எப்பொழுதும் மரணத்தைப் பற்றி பேசுகிற சில நண்பர்களையும், உறவினர்களையும் பார்த்திருகிறேன். ”எனக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா!…… நான் செத்தால்தான் உங்களுக்கு என் அருமை தெரியும்! ……நான் செத்தாவது இந்த காரியத்தை செய்வேன்!…. இப்படிப்பட்ட வார்த்தைகளை அடிக்கடி உபயோகப்படுத்திய அவர்களின் ஆயிசு சிறியதாகவே இருந்தது.இஸ்ரவேல் மக்களை கர்த்தராகிய தேவன் எகிப்திலிருந்து… Continue reading இதழ்:2419 உன் நம்பிக்கையை விழுங்கிய வனாந்திரம்!

Tamil Bible study

இதழ்:2418 நீ அசட்டை பண்ணியதால் பிரவேசிப்பதில்லை!

எண்ணா: 14:28 ”..நீங்கள் என் செவிகள் கேட்கச் சொன்னபிரகாரம் உங்களுக்குச் செய்வேன் என்பதை என் ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் உரைக்கிறார். நாம் நேற்றோடு எலியாவின் வாழ்வைப் பற்றி படித்து முடித்து விட்டோம். நாம் எலிசாவைப் பற்றி தொடர்ந்து படிக்கும் முன்னர் அதற்காக ஆயத்தப்பட சில நாட்கள் எனக்குத் தேவைப்படுகிறது. ஆதலால் நாம் சில நாட்கள் இஸ்ரவேல் மக்களோடு வனாந்திரம் செல்வோம்! மோசே கானானுக்குள் வேவுகாரரை அனுப்பிய பின்னர், காலேபும் யோசுவாவும் அதை பாலும் தேனும்… Continue reading இதழ்:2418 நீ அசட்டை பண்ணியதால் பிரவேசிப்பதில்லை!

Tamil Bible study

இதழ்:2417 தேவ பணி ஒருநாளும் தடை படாது!

2 இராஜாக்கள் 2:12 - 15அதை எலிசா கண்டு: என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரைவீரருமாய் இருந்தவரே என்று புலம்பினான்; அவனை அப்புறம் காணாமல், தன் வஸ்திரத்தைப் பிடித்து இரண்டு துண்டாகக் கிழித்தான். பின்பு அவன் எலியாவின்மேலிருந்து கீழே விழுந்த சால்வையை எடுத்துத் திரும்பிப்போய், யோர்தானின் கரையிலே நின்று, எலியாவின்மேலிருந்து கீழே விழுந்த சால்வையைப் பிடித்து: எலியாவின் தேவனாகியக் கர்த்தர் எங்கே என்று சொல்லித் தண்ணீரை அடித்தான்; தன்ணீரை அடித்தவுடனே அது இருபக்கமாகப் பிரிந்ததினால்… Continue reading இதழ்:2417 தேவ பணி ஒருநாளும் தடை படாது!

Tamil Bible study

இதழ்:2416 இரட்டிப்பான ஆசீர்வாதத்தைத் தாரும் தேவனே!

என் ஆத்துமா கர்த்தருடைய ஆலயப்பிராகாரங்களின்மேல் வாஞ்சையும் தவனமுமாயிருக்கிறது; என் இருதயமும் என் மாம்சமும் ஜீவனுள்ள தேவனை நோக்கிக் கெம்பீர சத்தமிடுகிறது.சங்கீதம் 84 : 2 அவர்கள் அக்கரைப்பட்டபின்பு, எலியா எலிசாவை நோக்கி: நான் உன்னைவிட்டு எடுத்துக்கொள்ளப்படுமுன்னே நான் உனக்குச் செய்யவேண்டியது என்ன, கேள் என்றான். அதற்கு எலிசா: உம்மிடத்திலுள்ள ஆவியின்வரம் எனக்கு இரட்டிப்பாய்க் கிடைக்கும்படி வேண்டுகிறேன் என்றான்.2 இராஜாக்கள் 2 : 9 எலியா, எலிசா இருவரும் நடந்து யோர்தானின் கரைக்கு வந்தனர். யோர்தானின் தண்ணீர் இரண்டாய்… Continue reading இதழ்:2416 இரட்டிப்பான ஆசீர்வாதத்தைத் தாரும் தேவனே!

Tamil Bible study

இதழ்:2415 தடைகளைத் தகர்த்து வெற்றி நடி போடு!

2 இராஜாக்கள் 2 : 6, 7 பின்பு எலியா அவனை நோக்கி: நீ இங்கே இரு; கர்த்தர் என்னை யோர்தானுக்கு அனுப்புகிறார் என்றான். அதற்கு அவன்: நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தருடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றான்;  தீர்க்கதரிசிகளின் புத்திரரில் ஐம்பதுபேர் போய், தூரத்திலே பார்த்துக்கொண்டு நின்றார்கள்; அவர்கள் இருவரும் யோர்தான் கரையிலே நின்றார்கள். இந்த நாள்!!!!! அவர்களுடைய நட்பின் கடைசி நாள்!!!! நான் எலியாவின் இடத்தில் இருந்திருப்பேனாகில் நான் எவ்வளவு மெதுவாக… Continue reading இதழ்:2415 தடைகளைத் தகர்த்து வெற்றி நடி போடு!

Tamil Bible study

இதழ்:2414 ஒரு உன்னதமான நட்பு!

2 இராஜாக்கள் 2 : 1 - 1.கர்த்தர் எலியாவைச் சுழல்காற்றிலே பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப் போகிறபோது, எலியா எலிசாவோடேகூடக் கில்காலிலிருந்து புறப்பட்டுப்போனான். எலியா எலிசாவை நோக்கி: நீ இங்கே இரு; கர்த்தர் என்னைப் பெத்தேல்மட்டும் போக அனுப்புகிறார் என்றான். அதற்கு எலிசா: நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தரின் ஜீவனையும் உம்முடைய ஜீவனையும்கொண்டு சொல்லுகிறேன் என்றான்; அப்படியே இருவரும் பெத்தேலுக்குப் போனார்கள்.அப்பொழுது பெத்தேலிலிருந்த தீர்க்கதரிசிகளின் புத்திரர் எலிசாவினிடத்தில் வந்து: இன்றைக்குக் கர்த்தர் உனக்குத் தலைமையாயிருக்கிற உன் எஜமானை… Continue reading இதழ்:2414 ஒரு உன்னதமான நட்பு!

Tamil Bible study

இதழ்:2413 சிறு முயற்சி உறவுகளை பலப்படுத்தும்!

எலியா அவன் இருக்கும் இடமட்டும் போய், அவன்மேல் தன் சால்வையைப் போட்டான்.1 இராஜாக்கள் 19 : 19 எனக்கு கதைகள் கேட்க மிகவும் பிடிக்கும், விசேஷமாக நன்றாக  கதைகள் கூறுவோர் சொன்ன கதைகள் மனதில் எப்பொழுதுமே நிற்கின்றன! அதுமட்டுமல்ல வேதாகமத்தில் நான் படித்த ஒவ்வொரு கதைகளும் என் மனதில் ஆணித்தரமாக பதிந்து உள்ளன! விசேஷமாக டாக்டர் லூக்கா அவர்கள் இயேசு கிறிஸ்து சொன்ன கதைகளை அழகாக, விளக்கமாக கூறியிருப்பது எனக்கு மிகவும் பிடித்தவை. லூக்கா இயேசுவின் கதைகளை… Continue reading இதழ்:2413 சிறு முயற்சி உறவுகளை பலப்படுத்தும்!

Tamil Bible study

இதழ்:2412 முதன் முதலில் தேவன் நல்லதல்ல என்று கண்ட தனிமை!

இராஜாக்கள் 19:10  அதற்கு அவன்: சேனைகளின் தேவனாகிய கர்த்தருக்காக வெகு பக்திவைராக்கியமாயிருந்தேன்; இஸ்ரவேல் புத்திரர் உமது உடன்படிக்கையைத் தள்ளிவிட்டார்கள்; உம்முடைய பலிபீடங்களை இடித்து, உம்முடைய தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தினால் கொன்றுபோட்டார்கள்; நான் ஒருவன் மாத்திரம் மீதியாயிருக்கிறேன்; என் பிராணனையும் வாங்கத் தேடுகிறார்கள் என்றான். நான் ஒருவன் மாத்திரம் மீதியாயிருக்கிறேன் என்ற எலியாவின் வார்த்தைகள் என்னை இன்றைய தியானத்தை எழுத வைத்தன. திருமணம் ஆனவர்களோ அல்லது திருமணம் ஆகதவர்களோ, கூட்டத்தில் இருப்பவர்களோ அல்லது இருளான தனி அறியில் இருப்பவர்களோ எல்லோரையுமே… Continue reading இதழ்:2412 முதன் முதலில் தேவன் நல்லதல்ல என்று கண்ட தனிமை!