Bible Study

மலர்: 1 இதழ்: 2 கைவிடாத தேவன்

ஆதி: 5:5   தயவுசெய்து வேதாகமத்தை வாசியுங்கள்!

ஏதேன் தோட்டத்தின் நிகழ்வுகளிருந்து நாம் என்ன கற்றுக் கொண்டோம்? ஏவாளின் பெண்மையின் சக்தி ஆதாமை பாவத்துக்குள்ளாகியது என்பதுதான். அதன்பின்பு ஆதாம் 930  வயதுவரை வாழ்ந்தான். ஏவாளும் சுமார் 900 வருடங்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என்று தெரிகிறது.  இந்த நீண்ட காலத்தில்  எத்தனை முறை தன்னுடைய கீழ்ப்படியததால் வந்த தண்டனையை நினைத்து குமுறியிருப்பாள். ஒரு நிமிட சோதனைக்கு இடம் கொடுத்ததால் விளைந்த பலனை தன்னுடைய பிள்ளைகள் தலைமுறை தலைமுறையாக அனுபவிப்பதைப் பார்த்து வேதனையுற்றிருப்பாள். 

கர்த்தரோடு முகமுகமாய்ப் பேசி நட்பு கொண்டிருந்த நாட்களை நினைத்து     ஏங்கியிருப்பாள். ஆண்டவரே என்னைக் கைவிட்டுவிட்டு விட்டீரோ? என்று கதறியிருப்பாள்.

ஆனால் நாம் தேவன் அவர்களைக் கைவிடவில்லை. மனிதனுக்கு பாவத்திலிருந்து விமோசனமே இல்லை என்று சபிக்கவில்லை. பாவத்திலிருந்து விடுவிக்க இரட்சகர் வருவர் என்ற நம்பிக்கையின் விதையை அவர்கள் மனதில் விதைத்தார்.

ஏறக்குறைய ஆயிரம் வருட ஆயிசு நாட்களில் எத்தனை முறை அவர்கள் ஏதேன் தோட்டம் அருகே சென்றிருப்பார்கள்? காவல் புரியும் கேருபின்களையும், சுடரொளி பட்டயத்தையும் கண்டு உள்ளம் வேதனையுற்றாலும் தேவன் கொடுத்த நம்பிக்கையின் ஒளி அவர்கள் உள்ளத்தில் தோன்றியிருக்கும் . அன்பின் தேவன் அவர்களை வெறுக்காமல் நேசித்ததினால் நாம் இன்று வரை அவர்களை நினைவுகூறும்படி செய்திருக்கிறார்.

எந்த சூழ்நிலையிலும் அவர்களைக் கைவிடாமல் நேசித்த நல்ல தேவன் இன்றும் நம்மோடு கூட இருக்கிறார். தேவனை விட்டு தூரமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் எனக்கு விமோசனம் உண்டா என்று உன் உள்ளம் கதறுகிறதா? சகோதரியே நம்பிக்கையின் தேவன் தாமே  உன் வாழ்க்கையில் ஒளி வீசுவார்.

ஜெபம்:

தேவனே நான் இருண்ட சூழ்நிலையில் வாழ்ந்தாலும் நீர் என்னைக் கைவிடீர், என்னோடு கூட இருக்கிறீர் என்ற நம்பிக்கையின் ஒளிக்காக உமக்கு ஸ்தோத்திரம்!  ஆமென்!

தொடர்ந்து மலரும்….

2 thoughts on “மலர்: 1 இதழ்: 2 கைவிடாத தேவன்”

Leave a reply to Rajavinmalargal Cancel reply