Call of Prayer

ராஜாவின் மலர்கள் – ஜெப நேரம்

                                 
சகோதரிகளே சனிக்கிழமை தோறும் நாம் நம் கணவருக்காகவும், பிள்ளைகளுக்காகவும், உறவினருக்காகவும் , நண்பர்களுக்காகவும் தேவனை நோக்கி மன்றாடும் நாளாய் நாம் ஆசரிப்போம்.

எஸ்தர் 4:14 ல்  மொர்தேகாய் எஸ்தருக்கு “ நீ இந்த காலத்தில் மவுனமாயிருந்தால், யூதருக்கு சகாயமும், இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும், அப்பொழுது நீயும் உன் தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள், நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜ மேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்கு தெரியும் என்று சொல்ல சொன்னான்” என்று பார்க்கிறோம்.

நாம் இன்று ஜெபிக்காமல் போவோமானாலும் தேவன் யாரையாவது உபயோகப்படுத்தி தம் சித்தத்தை நிறைவேற்றுவார். ஆனால் நாமும், நம் குடும்பத்தாரும் ஆசிர்வாதத்தை இழந்து போவோம் என்று வேதம் எச்சரிக்கிறது. இந்த வாரம் நம்முடைய குடும்பத்துக்காக விசேஷமாய் ஜெபிப்போம். நம்முடைய பிள்ளைகளை தேவனுடைய சமுகத்தில் ஒப்படைத்து ஜெபிப்போம்.

உங்களுடைய ஜெபக்குறிப்புகளை, கிறிஸ்தவ அனுபவங்களை  அனுப்புங்கள்! மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்!

1 thought on “ராஜாவின் மலர்கள் – ஜெப நேரம்”

Leave a reply to R.Vasanthi Cancel reply