நியாதிபதிகள்: 11:35 "அவன் அவளைக் கண்டவுடனேத் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு ; ஐயோ! என் மகளே, என்னை மிகவும் மனமடியவும் கலங்கவும் பண்ணுகிறாய்; நான் கர்த்தரை நோக்கி என் வாயைத் திறந்து சொல்லிவிட்டேன்; அதை நான் மாற்றாக்கூடாது என்றான்." என்னுடைய ஊழியத்தின் காரணமாக பல ஊர்களுக்கு நான் காரில் பிரயாணப்படுவதுண்டு. காரில் போவதால் நாங்கள் ஆங்காங்கே உள்ள எங்கள் பணித்தளங்களைப் பார்த்து வர வசதியாக இருக்கும். பத்து மணி நேரம் காரில் உட்கார்ந்துவிட்டு வீட்டுக்கு வரும்போது உடம்பு… Continue reading மலர் 2 இதழ் 210 வார்த்தைகள் ஜாக்கிரதை! உடைந்துவிட்டால் சேர்க்கமுடியாது!
Month: July 2012
மலர் 2 இதழ் 209 பலியான அன்பு மகள்!
நியாதிபதிகள்:11:34 யெப்தா மிஸ்பாவிலிருக்கிற தன் வீட்டுக்கு வருகிறபோது, இதோ அவன் குமாரத்தி தம்புரு வாசித்து நடனஞ்செய்து, அவனுக்கு எதிர்கொண்டு வந்தாள்; அவ்ள் அவனுக்கு ஒரே பிள்ளையானவள்; அவளையல்லாமல் அவனுக்குக் குமாரனும் இல்லை, குமாரத்தியும் இல்லை. ஒரு மகளின் சரிதையைப் படிக்கப்போகிறோம்! பெயர் தெரியாத ஒரு மகள்! வயது தெரியாத ஒரு மகள்! அவள் தந்தை பெயர் யெப்தா என்று மட்டும் தெரியும்! அவன் ஒரு பரஸ்திரீயின் மகன்! ஒரு முரட்டு வீரன், யுத்தத்துக்கு அழைப்பவர்களுக்கு உதவியாக சென்று… Continue reading மலர் 2 இதழ் 209 பலியான அன்பு மகள்!
மலர் 2 இதழ் 208 வாழ்க்கை என்னும் யுத்தத்தில் என் தலைக்கவசமாயிரும்!
நியாதிபதிகள் 11: 32 " யெப்தா அம்மோன் புத்திரரின்மேல் யுத்தம்பண்ண, அவர்களுக்கு விரோதமாய்ப் புறப்பட்டுப்போனான்; கர்த்தர் அவர்களை அவன் கையில் ஒப்புக்கொடுத்தார்". இன்றைக்கு உங்களிடம் நான் ஒரு கேள்வி கேட்கப்போகிறேன்! உண்மையாக மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள்! நீங்கள் வாழ்வின் உச்சியில் சுகமாய் வாழ்ந்த போது, எடுத்த ஏதோ ஒரு முடிவினால் , வெட்கப்பட்டு, தாழ்சியடைந்து, நாணிப்போனதுண்டா? அப்படிப்பட்ட தவறு செய்திருப்பீர்களானால், இன்றைய வேதாகமப்பகுதி உங்களுக்குத்தான்! நான் வேதாகமத்தில் இடம் பெற்றுள்ள பெயர்களை பார்க்கும்போது இந்தப்பெயர் இங்கு ஏன்… Continue reading மலர் 2 இதழ் 208 வாழ்க்கை என்னும் யுத்தத்தில் என் தலைக்கவசமாயிரும்!
மலர் 2 இதழ் 207 நாளையத்தினத்தைக் குறித்துப் பெருமைபாராட்டாதே!
நியாதிபதிகள்: 11:30,31 அப்பொழுது யெப்தா ஒரு பொருத்தனையைப் பண்ணி: தேவரீர் அம்மோன் புத்திரரை என் கையில் ஒப்புக்கொடுக்கவே ஒப்புக்கொடுத்தால் , நான் அம்மோன் புத்திரரிடத்திலிருந்து சமாதானத்தோடே திரும்பி வரும்போது,என் வீட்டு வாசற்படியிலிருந்து எனக்கு எதிர்கொண்டு வருவது எதுவோ அது கர்த்தருக்கு உரியதாகும். அதைச்சர்வாங்க தகனபலியாகச் செலுத்துவேன் என்றான். நீதிமொழிகளின் புத்தகத்தில் சாலொமோன் ராஜா மிகவும் ஞானமுள்ள ," நாளையத்தினத்தைக் குறித்துப் பெருமைபாராட்டாதே; ஒருநாள் பிறப்பிப்பதை அறியாயே." (நீதி: 27:1) என்ற இந்த வார்த்தைகளை நமக்காகத்தான் கூறியிருப்பார் போலும் என்று… Continue reading மலர் 2 இதழ் 207 நாளையத்தினத்தைக் குறித்துப் பெருமைபாராட்டாதே!
மலர் 2 இதழ் 206 கடந்து வந்த பாதையை திரும்பிப்பார்!
நியாதிபதிகள் 11: 4 - 6 "சில நாளைக்குப்பின்பு, அம்மோன் புத்திரர் இஸ்ரவேலின் மேல் யுத்தம் பண்ணினார்கள். அவர்கள் இஸ்ரவேலின்மேல் யுத்தம் பண்ணும்போது கீலேயாத்தின்மூப்பர் யெப்தாவை தோப்தேசத்திலிருந்து அழைத்துவரப்போய், யெப்தாவை நோக்கி, நீ வந்து, நாங்கள் அம்மோன் புத்திரரோடு யுத்தம் பண்ண எங்கள் சேனாதிபதியாயிருக்க வேண்டும் என்றார்கள்." தன்னுடைய பழைய காலத்தை அறவே மறந்துவிட்டு, இன்றைக்கு தனக்குக் கிடைத்திருக்கிற பதவியை அல்லது வசதியை கையில் வைத்துக் கொண்டு தன்னையே மறந்து ஆட்டம் போடுபவர்களைப் பார்த்திருக்கிறீகளா? யெப்தா என்பவன்… Continue reading மலர் 2 இதழ் 206 கடந்து வந்த பாதையை திரும்பிப்பார்!
மலர் 2 இதழ் 205 கடந்த காலம் கசப்பானதா??
நியாதிபதிகள்: 11: 1 "கீலேயாத்தியனான யெப்தா பலத்த பராக்கிரமசாலியாயிருந்தான். அவன் பரஸ்திரீயின் குமாரன்; கிலெயாத் அவனைப் பெற்றான்." கடந்த 2010 ல் என்னுடைய அப்பாவை இருதய சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் வைத்திருந்த போது, ஒரு நர்ஸ் வந்து அப்பாவின் கடந்த காலத்தைப் பற்றி எழுதினார்கள். அவர் எப்படி வாழ்ந்தார், என்னென்ன பழக்கங்கள் இருந்தன? என்று அடுக்கடுக்காக கேள்விகள் கேட்டார். அப்பாவின் கடந்த காலத்துக்கும் அவருடைய இருதயத்துக்கும் என்ன சம்பந்தம் என்று என்னை சிந்திக்க வைத்தன அந்த நர்ஸின் கேள்விகள்.… Continue reading மலர் 2 இதழ் 205 கடந்த காலம் கசப்பானதா??
மலர் 2 இதழ் 204 என் வழியில் தான் நான் நடப்பேன்!
நியா: 21:25 "அந்நாட்களிலே இஸ்ரவேலில் ராஜா இல்லை. அவனவன் தன்தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான்". கடந்த சில மாதங்களாக நாம் நியாதிபதிகளின் புத்தகத்தை படிக்கிறோம். இஸ்ரவேல் மக்களின் நடத்தையானது அவர்களுடைய தலைவர்கள் எப்படி இருந்தார்களோ அப்படி அசைவாடிக்கொண்டிருந்ததைப் பார்த்தோம். மோசேயால் இஸ்ரவேலுக்குள் வேவுக்காரனாய் அனுப்பப்பட்ட காலேபின் மருமகன் ஒத்னியேல் என்பவன், காலேபைப் போலவே ஒரு தேவனுடைய மனிதனாய் இஸ்ரவேலை நல்வழியில் நடத்தியதைப் பார்த்தோம். கர்த்தரின் வழியில் நடத்திய ஒத்னியேல் மரித்தபின் மறுபடியும் மக்கள் தேவனை விட்டு பின்வாங்கிப்போனார்கள்.… Continue reading மலர் 2 இதழ் 204 என் வழியில் தான் நான் நடப்பேன்!
