ஆதி:32: 9-11 பின்பு யாக்கோபு, என் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும், என் தகப்பனாகிய ஈசாக்கின் தேவனுமாய் இருக்கிறவரே: உன் தேசத்துக்கும், உன் இனத்தாரிடத்துக்கும் திரும்பிப் போ உனக்கு நன்மை செய்வேன் என்று என்னுடனே சொல்லியிருக்கிற கர்த்தாவே , அடியேனுக்கு தேவன் காண்பித்த எல்லா தயவுக்கும், எல்லா சத்தியத்துக்கும் நான் எவ்வளவேனும் பாத்திரன் அல்ல, நான் கோலும், கையுமாய் இந்த யோர்தானைக் கடந்து போனேன், இப்பொழுது இவ்விரண்டு பரிவாரங்களையும் உடையவனானேன்.என் சகோதரனாகிய ஏசாவின் கைக்கு என்னைத் தப்புவியும்; அவன் வந்து… Continue reading இதழ் 1021 யாக்கோபோடு ஒரு நாள் பயணம்!
Month: October 2020
இதழ்:1020 உடைந்த கண்ணாடியை ஒட்ட முடியுமா?
ஆதி:31:13 நீ தூணுக்கு அபிஷேகஜ்செய்து , எனக்கு ஒரு பொருத்தனை பண்ணின பெத்தேலிலே உனக்கு தரிசனமான தேவன் நானே, இப்பொழுது நீ எழுந்து, இந்த தேசத்தைவிட்டு புறப்பட்டு உன் இனத்தாரிருக்கிற தேசத்துக்கு திரும்பிப் போஎன்றார் என்றான். பல வருடங்களாக யாக்கோபு , பேராசைக்காரன், ஏமாற்றுக்காரனான லாபானுடைய ஆதிக்கத்துக்குக் கீழே வாழ்ந்தான் என்று பார்த்தோம். பதிநான்கு வருடங்கள் தன்னுடைய மனைவிமாருக்காக உழைத்தான். பின்னர் பிள்ளைகள் பிறந்தனர். ஆக மொத்தம் இருபது வருடங்கள் ஓடி விட்டன! தேவனாகிய கர்த்தர் யாக்கோபின்… Continue reading இதழ்:1020 உடைந்த கண்ணாடியை ஒட்ட முடியுமா?
ஜெபமே ஜெயம்!
தேவனை இரக்கம் காட்ட வைத்த ஜெபம் யோனா: 2:1,10 ”அந்த மீனின் வயிற்றிலிருந்து யோனா, தேவனாகிய கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணி ….. கர்த்தர் மீனுக்கு கட்டளையிட்டார், அது யோனாவை கரையிலே கக்கி விட்டது. ஒவ்வொரு சனிக்கிழமையும் நாம் தேவனுடைய சமுகத்தில் நம்முடைய ஜெப வேண்டுதல்களோடு வருகிற நாள். இன்று காலை ஒரு அருமையான தேவனுடைய ஊழியர் கொரானாவினால் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார் என்று கேள்விப்பட்டு மனம் உடைந்தோம். கர்த்தாவே எங்கள் ஜெபத்தைக் கேட்டு எங்கள் மேல் கிருபையாய்… Continue reading ஜெபமே ஜெயம்!
இதழ்: 1019 தற்செயலாய் நடந்ததா?
ஆதி: 29: 9-11 “ அவர்களோடே அவன் பேசிக் கொண்டிருக்கும்போதே , தன் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த ராகேல் அந்த ஆடுகளை ஒட்டிக்கொண்டு வந்தாள்.யாக்கோபு தன் தாயின் சகோதரனாகிய லாபானுடைய குமாரத்தியாகிய ராகேலையும், தன் தாயின் சகோதரனாகிய லாபானின் ஆடுகளையும் கண்டபோது, யாக்கோபு போய், கிணற்றின் வாயிலிருக்கிற கல்லைப் புரட்டி தன் தாயின் சகோதரனாகிய லாபானின் ஆடுகளுக்கு தண்ணீர் காட்டினான். பின்பு யாக்கோபு ராகேலை முத்தஞ் செய்து, சத்தமிட்டு அழுது....... நாம் சில தினங்களுக்கு முன் ரெபெக்காள் தண்ணீர் மொள்ள வந்த… Continue reading இதழ்: 1019 தற்செயலாய் நடந்ததா?
இதழ்:1018 ஏமாற்றினவன் நிச்சயமாக ஏமாற்றப்படுவான்!
ஆதி: 28: 1,2 “ ஈசாக்கு யாக்கோபை அழைத்து, அவனை ஆசிர்வதித்து, நீ கானானியருடைய குமாரத்திகளில் பெண் கொள்ளாமல், எழுந்து புறப்பட்டு பதான் அராமிலிருக்கிற உன் தாயினுடைய தகப்பனாகிய பெத்துவெலுடைய வீட்டுக்கு போய், அவ்விடத்தில் உன் தாயின் சகோதரனாகிய லாபானின் குமாரத்திகளுக்குள் பெண்கொள் என்று அவனுக்கு கட்டளையிட்டான்.” யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கை ஏமாற்றி பொய் சொல்லி ஆசீர்வாதத்தை பெற்றவுடன் , ஏசா அவன் மீது மூர்க்கம் கொண்டிருப்பதை அறிந்து ஈசாக்கும், ரெபெக்காளும் அவனை, ரெபேக்களின் குடும்பம் வசித்து வந்த ஆரானுக்கு அனுப்புகிறார்கள்.… Continue reading இதழ்:1018 ஏமாற்றினவன் நிச்சயமாக ஏமாற்றப்படுவான்!
இதழ் 1017 பிள்ளைகளை வளர்ப்பதில் தவறிய ஒரு தேவனை அறிந்த குடும்பம்!
ஆதி: 27:13 “அதற்கு அவன் தாய், என் மகனே, உன்மேல் வரும் சாபம் என்மேல் வரட்டும்; என் சொல்லை மாத்திரம் கேட்டு , நீ போய், அவைகளை என்னிடத்தில் கொண்டுவா என்றாள்.” யாக்கோபு தன் தாயின் நேசத்தை பெற்றான். ஈசாக்கு வயதான போது குடும்பத்தின் ஆசீர்வாதத்தை மூத்த குமாரனுக்கு வழங்கும் நேரம் வந்த போது, ரெபெக்காள் தன் இளைய குமாரனுக்கு அந்த ஆசீர்வாதம் கிடைக்க வேண்டுமென்று எண்ணுகிறாள். ஆண்டவர் வாக்குத்தத்தம் பண்ணிய பிள்ளையை பெற்றுக்கொள்ள சாராள் அவசரப்பட்டு ஆகாரை… Continue reading இதழ் 1017 பிள்ளைகளை வளர்ப்பதில் தவறிய ஒரு தேவனை அறிந்த குடும்பம்!
இதழ்: 1016 பிள்ளைகளால் மன நோவா? யார் காரணம்?
ஆதி: 26 :27 “ஏசா நாற்பது வயதானபோது, ஏத்தியனான பெயேரியினுடைய குமாரத்தியாகிய யூதீத்தையும் ஏத்தியனான ஏலோனுடைய குமாரத்தியாகிய பஸ்மாத்தையும், விவாகம் பண்ணினான். அவர்கள் ஈசாக்குக்கும், ரேபெக்காளுக்கும் மனநோவாயிருந்தார்கள்.” ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்று சொல்லுவார்கள் அல்லவா? அதற்கு சிறு பிராயத்தில் நாம் எப்படி வளர்க்கப்படுகிறோமோ அப்படித்தான் நாம் முதிர்வயதில் இருப்போம் என்றுதானே அர்த்தம்! சிறுவயதில் சரியான பாதையில் நடத்தி, பிள்ளைகளை உருவாக்குவது ஒரு தாயின் கடமையல்லவா? பல ஆசிரியர்கள் ஒரு மனிதன் உருவாவதற்கு காரணமாயிருந்தாலும், எல்லாரையும் விட… Continue reading இதழ்: 1016 பிள்ளைகளால் மன நோவா? யார் காரணம்?
இதழ் 1015 பிள்ளைகளின் குணத்தின் அழகு இல்லத்தில் பிறக்கும்!
ஆதி: 25:23 அதற்கு கர்த்தர்; இரண்டு ஜாதிகள் உன் கர்ப்பத்தில் உண்டாயிருக்கிறது ; இரண்டுவித ஜனங்கள் உன் வயிற்றிலிருந்து பிரியும்: அவர்களில் ஒரு ஜனத்தார் மற்ற ஜனத்தாரைப் பார்க்கிலும் பலத்திருப்பார்கள்; மூத்தவன் இளையவனை சேவிப்பான் என்றார். ஒரு குடும்பத்தில் அநேக பிள்ளைகளோடு வளர்ந்த சிலர், முதல் பிள்ளைக்குத்தான் அம்மாவிடம் பாசம் கிடைக்கும் கடைசி பிள்ளைக்கும் அதில் பங்குண்டு, ஆனால் நடுவில் உள்ள பிள்ளைகளுக்கு எதுவும் கிடைக்காது என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன். சொத்து விஷயங்களில் கூட சில பெற்றோர்… Continue reading இதழ் 1015 பிள்ளைகளின் குணத்தின் அழகு இல்லத்தில் பிறக்கும்!
இதழ்: 1014 என் காலம் கர்த்தருடைய கரத்தில் உள்ள கடிகாரத்தில்!
ஆதி: 25: 20 மலடியாயிருந்த தன் மனைவிக்காக ஈசாக்கு கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்தான்; கர்த்தர் அவன் வேண்டுதலைக் கேட்டருளினார். அவன் மனைவி ரெபெக்காள் கர்ப்பந்தரித்தாள். மறுபடியும் சரித்திரத்தின் சக்கரங்கள் அதே பாதையில் சுழன்றன! சாராளின் மருமகளாகிய ரெபெக்காள் மலடியாயிருந்தாள். சாராள் எத்தனை வருடங்கள் வேதனையிலும், கண்ணீரிலும், நிந்தனையிலும் காத்திருந்து தன் வாழ்க்கையின் பெரும் பாகத்தை வெறுமையாகவே கழித்தாள் அல்லவா? அதே வேதனை இந்த குடும்பத்தில் மறுபடியும் நேரிட்டது. ஒரே ஒரு வித்தியாசம் என்னவெனில், ஆபிரகாம் தம்பதியினர்… Continue reading இதழ்: 1014 என் காலம் கர்த்தருடைய கரத்தில் உள்ள கடிகாரத்தில்!
இதழ் 1013 ஆபிரகாம் எப்படித் தேர்ச்சி பெற்றார்???
ஆதி:25:1 “ ஆபிரகாம் கேத்தூராள் என்னும் பேர்கொண்ட ஒரு ஸ்திரீயையும் விவாகம்பண்ணியிருந்தான்” நான் தற்போது கர்த்தர் கொடுத்த அதிக நேரத்தைப்பயன்படுத்தி டாலஸ் தியாலாஜிக்கல் கல்லூரியில் சேர்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன். ஆதியாகம புத்தகத்தைப் படிக்கும்போது அதின் பேராசிரியர், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு இவர்களில் விசுவாசத்தில் சிறந்தவர் யாராக இருக்க முடியும் என்ற கேள்வியை எழுப்பினார். வேதாகமத்தைப் படித்தால் எப்பொழுதும் எல்லா சூழ்நிலைகளிலும் விசுவாசத்தில் சிறந்திருந்தவன் யோசேப்பே என்று கூற முடியும். ஆனால் ஆபிரகாம் அல்லவா விசுவாசத்தின் தந்தை… Continue reading இதழ் 1013 ஆபிரகாம் எப்படித் தேர்ச்சி பெற்றார்???
