கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1263 உன்னை அதிகமாக மதிக்கும் ஒரு தேவன்!

இரண்டு மனைவிமார்! ஒரு கணவன்!  ஒரு குடும்பம்!

நான் இதைப்பற்றி சற்று யோசித்தபோது எப்படி ஒரு பெண் தன் கணவனை இன்னொருத்தியோடு பங்கு போட்டுக் கொண்டு ஒரே வீட்டுக்குள் வாழ முடியும் என்று என்னால் சிந்தித்துப் பார்க்கவே முடியவில்லை. என்னைக் கேட்டால் இப்படி வாழ்வது என்னால் நிச்சயமாக இப்படி வாழ முடியாது. ஆனால் பல நாடுகளில், பல குடும்பங்களில் இன்றும் இப்படிப்பட்ட காரியங்கள் நடக்கின்றன.

இந்தக் குடும்பத்தை பார்த்த முதல் பார்வையில் இப்படிப்பட்ட பிரச்சனை எனக்கு இல்லை என்றுதான் எண்ண நமக்குத் தோன்றும்! ஆனால் நம் வாழ்க்கையில் கணவனை பங்கு போடும் இன்னொரு பெண்தான் நமக்கு போட்டியாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. சில நேரங்களில் நாம்  வேலை செய்யும் நிறுவனத்தின் பெண் அதிகாரியாக  இருக்கலாம்,   அல்லது நம்மை அடியோடு வெறுக்கும் அக்கா அல்லது தங்கையாக இருக்கலாம், நம்முடைய அம்மாவின் இடத்தை பிடித்த அப்பாவின் மறுமனையாட்டியாக இருக்கலாம்! எல்லோருமே  யாராவது இன்னொரு பெண்ணாலோ அல்லது ஆணாலோ கஷ்டங்களை அனுபவித்து இருக்கிறோம் என்றுதான் எனக்குத் தோன்றிற்று.

அன்னாளைப் பற்றி படிக்கும் சில வசனங்களிலேயே அவள் அந்தக் குடும்பத்தில் ஒரு பரிதாபமான நிலையில் இருப்பதை நம்மால் உணர முடிகிறது. அன்னாளின் பெயர் முதலில் இடம் பெற்றிருப்பதால், அவளுக்கு  குழந்தையில்லாததால் அவள் கணவன் இன்னொரு பெண்ணை மணந்திருந்தான் என்று எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால் அன்னாள் என்ற அவளுடைய பெயருக்கு அர்த்தம் என்னத் தெரியுமா? கிருபையும் இரக்கமும் பெற்றவள் என்றுதான். கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் ஒவ்வொருவரும் இந்த உலகத்தில் பல பிரச்சனைகளை, போட்டிகளை சந்திக்க நேர்ந்தாலும், நம்முடைய கர்த்தரின் கிருபையும் , இரக்கமும்  நம்மை அன்றாடு வழிநடத்துகின்றது அல்லவா? கர்த்தருடைய கிருபை ஒவ்வொரு நாள் காலையிலும் புதியதாக இருப்பதை நம்மில் எத்தனை பேர் உணர்ந்திருக்கிறோம்.

அன்னாளின் வாழ்க்கை இன்று நமக்கு ஆசீர்வாதம் இல்லாத மலட்டுத் தன்மையோடுத் தெரியலாம். ஆனால் நாளை நாம்  நம் வாழ்வில் நடைபெறும் சில சுவையற்ற, வேதனையுள்ள சம்பவங்கள் கூட  எவ்வாறு கர்த்தருடைய கிருபையால் கனி கொடுக்கும் சம்பவங்களாக மாற முடியும் என்று காணப் போகிறோம்.

அன்னாள் – கிருபையும் இரக்கமும் பெற்றவள்!

நீயும் நானும் கூடத் தான்!

இன்று நாம் எந்த சூழலில் வாழ்ந்தாலும் சரி, நாம் எப்படிப்பட்ட கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டிருந்தாலும் சரி கர்த்தருடைய பார்வையில் நாம் விசேஷித்த கிருபை பெற்றவர்கள் தான்!  நாம் நம்மை மதிப்பதே இல்லையென்றாலும் கர்த்தர் நம்மை உயர்த்தி மதிப்பிடுகிறார்.

இந்த உலகத்தார் உங்களைப்பற்றி எப்படி மதிப்பிட்டு இருந்தாலும் சரி, நீங்கள் தேவனின் பார்வையில் மிகவும் விலையேறப் பெற்றவர்கள்! உங்களுடைய தகுதி அவருக்குத் தெரியும்! நீங்கள் அவருடைய இரக்கத்தைப் பெற்றவர்கள்!

உன்னுடைய மதிப்பை கூட்டி எழுதிய தேவனாகிய கர்த்தரை விட உன்னை மதிப்பவர் இந்த உலகில் யாரும் இருக்கவே முடியாது!

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

 

Leave a comment