1 சாமுவேல் 25:1 சாமுவேல் மரணமடைந்தான். இஸ்ரவேலர் எல்லாரும் கூடிவந்து, அவனுக்காகத் துக்கங்கொண்டாடி, ராமாவிலிருக்கிற அவனுடைய வளவிலே அவனை அடக்கம் பண்ணினார்கள். தாவீது எழுந்து பாரான் வனாந்திரத்துக்குப் புறப்பட்டுப் போனான். நாம் 1 சாமுவேல் 25 ம் அதிகாரத்தைப் படிக்க ஆரம்பிக்கும்போது இஸ்ரவேல் மக்கள் எல்லாரும் கூடி சாமுவேலுடைய மரணத்துக்காக துக்கம் கொண்டாடியதைப் பார்க்கிறோம். இஸ்ரவேல் மக்களின் நேசத்துக்குரிய தீர்க்கதரிசி, ஆசாரியன், தன்னுடைய உலகப்பிரகாரமான பணியிலிருந்து விடுபெற்று பரலோகத்தில் ஓய்வளிக்கப்பட்டார். இஸ்ரவேல் மக்கள் மேய்ப்பனில்லாத ஆடுகள்… Continue reading இதழ்:1345 வெட்டுக்கிளிகள் அரித்த நாட்கள் உனக்கு ஆசீர்வாதமாகும்!
Month: January 2022
இதழ்:1344 தீயோர்மேலும் நல்லோர்மேலும் உதிக்கும் சூரியன்!
1 சாமுவேல் 24:19 ஒருவன் தன் மாற்றானைக் கண்டுபிடித்தால், அவனைச் சுகமே போகவிடுவானோ? இன்று நீ எனக்குச் செய்த நன்மைக்காக கர்த்தர் உனக்கு நன்மை செய்வாராக. நாம் ஒவ்வொருநாளும் தாவீது வனாந்திரத்தில் சவுலினால் வேட்டையாடப் பட்டதைப் படித்துக் கொண்டு வந்தோம். தாவீதின் இந்த வனாந்திர வாழ்க்கையில் அவனுடைய இன்னொமொரு அற்புத குணாதிசயம் வெளிப்படுகிறது. கர்த்தர் அவனைத் தன் இருதயத்திற்கேற்ற ஒருவன் என்று அழைத்தது இதனால்தானோ என்னவோ! அவனைத் துன்பப்படுத்தினவர்களை நேசிக்கும் குணம்! கர்த்தராகிய இயேசுவின் குணமல்லவா… Continue reading இதழ்:1344 தீயோர்மேலும் நல்லோர்மேலும் உதிக்கும் சூரியன்!
இதழ்:1343 கேட்க செவி இல்லாவிட்டால் புறங்கூற நாவும் இருக்காது!
1 சாமுவேல் 24:9 சவுலை நோக்கி: தாவீது உமக்குப் பொல்லாப்பு செய்யப்பார்க்கிறான் என்று சொல்லுகிற மனுஷருடைய வார்த்தைகளை ஏன் கேட்கிறீர்? பொய்யான வதந்திகளைக் கேட்டிருக்கிறீர்களா? நீங்கள் உண்மை என்று ஆணித்தரமாக நம்பிய ஒரு காரியம் வெறும் வதந்திதான் என்று தெரியவரும்போது எப்படியிருந்தது? சவுல் தாவீதை விரட்டி விரட்டி வேட்டையாடியதை நாம் ஒவ்வொரு நாளும் பார்த்துக்கொண்டு வந்தோம். அவன் சவுலுக்கு பயந்து மலைகளிலும், கெபிகளிலும், வனாந்திரங்களிலும் ஓடி ஒளிந்து கொண்டிருந்தான். கடைசியில் ஒருநாள் இரண்டு பேரும் சந்தித்தபோது தாவீது… Continue reading இதழ்:1343 கேட்க செவி இல்லாவிட்டால் புறங்கூற நாவும் இருக்காது!
இதழ்:1342 உன் கனிதான் உன்னை வெளிப்படுத்தும்!
1 சாமுவேல் 24: 12,13 கர்த்தர் எனக்கும் உமக்கும் நடுநின்று நியாயம் விசாரித்து, கர்த்தர்தாமே என் காரியத்தில் உமக்கு நீதியை சரிகட்டுவாராக. உம்முடையபேரில் நான் கைபோடுவதில்லை. முதியோர் மொழிப்படியே ஆகாதவர்களிடத்திலே ஆகாமியம் பிறக்கும். ஆகையால் உம்முடையபேரில் நான் கைபோடுவதில்லை. தாவீது சவுலினால் பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சமல்ல என்று நாம் பார்த்து வருகிறோம். ஆனால் சவுலின்மேல் கைபோட தாவீதுக்குத் தருணம் கிடைத்தபோது உம்முடையபேரில் நான் கைபோடுவதில்லை என்று அவன் கூறுவதை இன்றைய வேதாகமப் பகுதியில் நாம் பார்க்கிறோம். அதுமட்டுமல்ல… Continue reading இதழ்:1342 உன் கனிதான் உன்னை வெளிப்படுத்தும்!
இதழ்:1341 நம்பிக்கையோடிரு! உனக்கும் வழி பிறக்கும்!
1 சாமுவேல் 23: 26 - 28 சவுல் மலைக்கு இந்தப்பக்கத்திலும், தாவீதும் அவன் மனுஷரும் அந்தப்பக்கத்திலும் நடந்தார்கள். சவுலுக்குத் தப்பிப்போக, தாவீது தீவிரித்தபோது, சவுலும், அவன் மனுஷரும் தாவீதையும் அவன் மனுஷரையும் பிடிக்கத்தக்கதாய் அவர்களை வளைந்து கொண்டார்கள். அந்தச் சமயத்தில் ஓரு ஆள் சவுலிடத்தில் வந்து நீர் சீக்கிரமாய் வாரும். பெலிஸ்தர் தேசத்தின்மேல் படையெடுத்து வந்திருக்கிறார்கள் என்றான். அதனால் சவுல் தாவீதைப் பின் தொடருவதைவிட்டுத் திரும்பி, பெலிஸ்தரை எதிர்க்கும்படி போனான். மூர்க்கமான சவுலால் ஈட்டியால் எறியப்பட்டவன்!… Continue reading இதழ்:1341 நம்பிக்கையோடிரு! உனக்கும் வழி பிறக்கும்!
இதழ்:1340 நலிந்தோரை நேசிக்கும் இருதயத்தை கர்த்தர் நேசிக்கிறார்!
1 சாமுவேல் 22: 1, 2 தாவீது அவ்விடத்தைவிட்டுத் தப்பி அதுல்லாம் என்னும் கெபிக்குப் போனான். அங்கே ஒடுக்கப்பட்டவர்கள், கடன்பட்டவர்கள், முறுமுறுக்கிறவர்கள் யாவரும் அவனோடே கூடிக்கொண்டார்கள். அவன் அவர்களுக்குத் தலைவனானான். தாவீது அதுல்லாம் என்ற கெபியிலே ஒளிந்து கொண்டிருந்தான். அங்கே தாவீதின் குடும்பம் அவனை சந்தித்தது என்று பார்த்தோம். இன்றைய வேத வசனம் சொல்கிறது அவனைசுற்றி ஒரு கூட்டமே இருந்தது என்று. நானூறு பேர் அந்தக் கூட்டத்தில் இருந்தனர். தாவீதின் இன்னொரு குடும்பமாக மாறிய இவர்களின் பெயர்,… Continue reading இதழ்:1340 நலிந்தோரை நேசிக்கும் இருதயத்தை கர்த்தர் நேசிக்கிறார்!
இதழ்:1339 எதிர்பாராத இடத்தில் கர்த்தரின் கரம் நம்மை நடத்தும்!
1 சாமுவேல் 22: 3 தாவீது அவ்விடத்தைவிட்டு மோவாபியரைச் சேர்ந்த மிஸ்பேக்குப் போய் மேவாபின் ராஜாவைப் பார்த்து; தேவன் என்னை எப்படி நடத்துவார் என்று நான் அறியுமட்டும் என் தகப்பனும் என் தாயும் உங்களிடத்திலே தங்கியிருக்கும்படி தயவு செய்யும் என்று சொல்லி, நம்முடைய தேவனாகிய கர்த்தர் நாம் செல்லும் எல்லா கரடு முரடான பாதையிலும் நம்மோடு இருப்பார், நாம் எதிர்பார்க்காத இடத்தில் எதிர்பாராத வேளையில் நம்மோடு இருந்து அவருடைய நோக்கத்தை நிறைவேற்ற அவரால் கூடும் என்பதை இன்றைய… Continue reading இதழ்:1339 எதிர்பாராத இடத்தில் கர்த்தரின் கரம் நம்மை நடத்தும்!
இதழ்:1338 பறவைக்கு கூடு எப்படியோ அப்படிப்பட்டது மனிதனுக்கு நட்பு!
1 சாமுவேல் 20:42 அப்பொழுது யோனத்தான் தாவீதை நோக்கி: நீர் சமாதானத்தோடே போம். கர்த்தர் என்றைக்கும் எனக்கும் உமக்கும், என் சந்ததிக்கும், உமது சந்ததிக்கும் நடு நிற்கும் சாட்சி என்று சொல்லி, கர்த்தருடைய் நாமத்தைக் கொண்டு நாம் இருவரும் ஆணையிட்டுக் கொண்டதை நினைத்துக் கொள்ளும் என்றான். நல்ல நண்பர்கள் இல்லாதவர்களுக்கு இந்த உலகத்தில் யாருமே இல்லாதது போலத்தான்! இன்பத்தையும் துக்கத்தையும் பகிர நல்ல நண்பர்கள் தேவை என்பது நம்மில் அனைவருக்குத் தெரியும். தாவீதின் மனைவியாகிய மீகாள் அவன்… Continue reading இதழ்:1338 பறவைக்கு கூடு எப்படியோ அப்படிப்பட்டது மனிதனுக்கு நட்பு!
இதழ்:1337 தேவனுடைய பிரசன்னத்தில் தீமை உன்னை நெருங்காது!
1 சாமுவேல் 19: 19,20 தாவீது ராமாவுக்கடுத்த நாயோதிலே இருக்கிறான் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது சவுல் தாவீதைக் கொண்டுவரச் சேவகரை அனுப்பினான். அப்பொழுது அவரகள் தீர்க்கதரிசனம் சொல்கிற தீர்க்கதரிசிகளின் கூட்டத்தையும், சாமுவேல் அவர்களின் தலைவனாக நிற்கிறதையும் கண்டார்கள். அப்பொழுது சவுலினுடைய சேவகரின்மேல்; தேவனுடைய ஆவி இறங்கினதினால் அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள். வேதத்தில் உள்ள சில கதைகள் நம் எல்லோருடைய மனதிலும் நின்றுவிடுகிறது. தானியேல் சிங்கத்தின் கெபியில் இருந்ததை மறப்போமா? அல்லது எஸ்தர் ராஜாத்தியின் கதையை மறப்போமா?… Continue reading இதழ்:1337 தேவனுடைய பிரசன்னத்தில் தீமை உன்னை நெருங்காது!
இதழ்:1336 உனக்காக நீ பின்னும் சிலந்தி வலை!
1 சாமுவேல்: 19: 17 அப்பொழுது சவுல்: நீ இப்படி என்னை ஏய்த்து, என் பகைஞனைத் தப்ப அனுப்பினது என்ன என்று மீகாளிடத்தில் கேட்டான். மீகாள் சவுலை நோக்கி; என்னைப் போகவிடு, நான் உன்னை ஏன் கொல்ல வேண்டும் என்று அவர் என்னிடத்தில் சொன்னார் என்றாள். எனக்கு மீகாளை ரொம்ப பிடிக்குங்க! அவள் தன் கணவனாகிய தாவீதை நேசித்தாள்! அவனுடடைய உயிருக்கு ஆபத்து வந்தபோது தன் உயிரை பணயம் வைத்துக் காப்பாற்றினாள்! தைரியமாக, துணிகரமாக முடிவு எடுத்தவள்!… Continue reading இதழ்:1336 உனக்காக நீ பின்னும் சிலந்தி வலை!
