கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1381 கர்த்தரே ராஜரீகம் பண்ணுகிறார்! பின்னர் ஏன் இந்த பதவி வெறி?

2 சாமுவேல் 3: 9-10 நான் ராஜ்யபாரத்தை சவுலின் குடும்பத்தைவிட்டுத் தாண்டப்பண்ணி, தாவீதின் சிங்காசனத்தைத் தாண் துவக்கி பெயர்செபா மட்டுமுள்ள இஸ்ரவேலின்மேலும், யூதாவின்மேலும் நிலைநிறுத்தும்படி, கர்த்தர் தாவீதுக்கு ஆணையிட்டபடியே நான் அவனுக்கு செய்யாமற்போனால்…..

அப்னேர் சவுலின் படைத்தலைவனாக இருந்தவன். சவுலின் எதிர்பாராத மரணத்துக்கு பின், அவன் சவுலின் குடும்பத்துக்குத் தன் ஆதரவைத் தொடர்ந்து கொடுத்தான். அவன் தேவன் தாவீதுக்குக் கொடுத்திருந்த வாக்குத்தத்தத்தை நன்கு அறிந்திருந்தான் என்று இன்றைய வேதாகமப்பகுதி நமக்குத் தெரிவிக்கிறது.

ஏழறை வருடங்கள் சவுலின் குடும்பம் ராஜ்யபாரத்தைத் தொடர அவன் அவர்களுக்குப் பக்க பலமாக இருந்தான். அவன் சொற்கேட்டு எப்பிராயீம், பென்யமீன் கோத்திரங்கள் மாத்திரம் அல்ல, யூதா தவிர அனைத்து கோத்திரங்களும், சவுலின் இளைய குமாரனாகிய இஸ்போசேத்தை தங்கள் ராஜாவாக ஏற்றுக்கொண்டனர்.

ஆனால் ஒருநாள் இஸ்போசேத் தனக்கு பக்கபலமாயிருந்த தன் நண்பனாகிய அப்னேரின் பேரைக் கெடுக்கத் துணிந்தான்.. அப்னேரின் பெயர் கெட்டது, அப்னேரைப் பற்றிய கிசுகிசுப்பு ஊரெங்கும் பரவியது. ஒரு நல்ல நண்பன் இப்பொழுது எதிரியாக மாறிவிட்டான்.

வேதம் தெளிவாக சொல்கிறது, அப்னேருக்கு தேவன் தெரிந்துகொண்ட ராஜா யாரென்று நன்கு தெரியும் என்று. ஆனால் அதைத் தெரிந்ததாகவே காட்டிக் கொள்ளாமல் அவன் இஸ்போசேத்தை ராஜாவாக்கியது ஒருவேளை தனக்கு அதிகாரமும், வல்லமையும் வேண்டும்  என்பதால் இருக்கலாம். ஆனால் அவனுடைய திட்டம் அவனுக்கு எதிராகத் திரும்பியவுடந் ஒரு கணமும் காத்திராமல் சவுலின் குடும்பத்தை புறக்கணித்து விட்டு எதிரியான தாவீதின் பக்கம் வலை வீசுகிறான். தான் யார் பக்கம் இருப்பது என்பது அவனுக்கு முக்கியமில்லை! தனக்கு வல்லமையும் அதிகாரமும் வேண்டும் அவ்வளவுதான்!

சரித்திரத்தில் இது ஒன்றும் புதிது இல்லை! ஒரு நாட்டுக்கும் மற்றொரு நாட்டுக்கும் மத்தியில் நடப்பதுதான். பெரிய வியாபாரிகள் மத்தியிலும் இது காணப்படும்.  ஆனால் எனக்கு மிகவும் மன வருத்தம் கொடுக்கும் காரியம் என்னவென்றால் இது நம்முடைய சபைகளிலும் காணப்படுவதுதான். மற்றொருவருடைய பதவியை அல்லது அதிகாரத்தை எப்படியாவது தட்டிப்பறிக்க வலைவீசுகிறார்கள்! ஒவ்வொரு திருச்சபையும் தேவனாகிய கர்த்தர் உலாவும் ஸ்தலம் என்பதையும், அவரே அங்கு ஆளுகை செய்கிறார் என்பதையும் மறந்து பதவிக்காகவும், அதிகாரத்துக்காகவும் எதையும் செய்யத் துணிகிறார்கள்.

அப்னேர் அதிகாரத்தைத் தட்டிப்பறிக்க நினைத்தபோது யார் இந்த பூமியை ஆளுகிறார் என்பதை மறந்தே போய்விட்டான். நாம் அந்தத் தவறை செய்யவே வேண்டாம்.

கர்த்தர் ராஜரீகம் பண்ணுகிறார் ( சங் 97:1) அப்படியானால் நாம் ஏன் இந்தப் பதவிக்காக சண்டை போட வேண்டும்?

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

Leave a comment