கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்: 1402 நம் குடும்பத்தாரோடு பேசும் வார்த்தைகள்!

2 சாமுவேல் 6:20  தாவீது தன் வீட்டாரை ஆசீர்வதிக்கிறதற்குத் திரும்பும்போது

நாம் வீட்டுக்கு வரும்போதும், வீட்டை விட்டு போகும்போதும் கர்த்தருடைய ஆசீர்வாதத்தை உச்சரித்து செல்வோமானால் எவ்வளவு ஆசீர்வாதமாயிருக்கும் என்று இன்றைய வேதாகமப் பகுதி என்னை சிந்திக்கத் தூண்டியது.

2 சாமுவேல் 6 ல் கடைசி வசனங்களை வாசிக்கும்போது, தாவீது தன் வீட்டாரை சந்திக்க ஆவலாயிருப்பது தெரிய வருகிறது.

தாவீது தன் குடும்பத்தை விட்டு 3 மாதங்கள் பிரிந்திருந்ததை மறந்து விடாதீர்கள். தாவீது கர்த்தருடைய உடன்படிக்கை பெட்டியை எடுத்து வர சென்றபோது என்ன நடந்தது என்று அறிவோம். தாவீதின் அலட்சியத்தால் ஊசா உயிரை இழந்து விட்டான். தாவீதுக்கு பயம் பிடித்து விட்டதால் அந்தப் பெட்டியை அவன் லேவியனான  ஓபெத்ஏதோமின் வீட்டில் வைத்து ஏதுமறியாமல் காத்திருந்தான். மூன்று மாதங்கள் அந்தப் பெட்டி அங்கேயே தங்கியிருந்தது. அந்த நாட்களில் கர்த்தர் ஒபேத்ஏதோமையும் அவன் குடும்பத்தையும் ஆசீர்வதித்ததை மக்கள் கண்கூடாகக் கண்டதால், தாவீது கர்த்தருடைய பெட்டியை எருசலேமுக்கு கொண்டுவர முடிவு செய்தான். ஆனால் இந்தமுறை எந்த தவறும் செய்யாமல் கர்த்தர் மோசேக்கு கூறிய முறைமையின் படியே பயபக்தியோடு அந்தப்பெட்டியை எடுத்து வந்தான்.

வேதம் கூறுகிறது மக்கள் மகிழ்சியால் நிரம்பினர் என்று. தாவீதின் உள்ளம் மகிழ்சியால் நிரம்பியதால் ஆடிப்பாடி அந்தப் பெட்டியை கொண்டுவந்தான். சந்தோஷத்தோடு வந்த அவன் தன்னுடைய குடும்பத்தை சந்தோஷத்தோடு வாழ்த்த ஆசையோடு வந்தான். அது எத்தனை மகிழ்சியான தருனம் அந்தக் குடும்பத்துக்கு என்று பாருங்கள்!

இந்த அதிகாரத்தின் கடைசி வசனங்களை நாம் ஆராய்ந்து படிப்போமானால் அவைகள் நம்முடைய வார்த்தைகள் எவ்வளவு முக்கியம் என்று நமக்குக் காட்டும்.  விசேஷமாக நாம் நம்முடைய குடும்பத்தினரிடம் நான்கு சுவருக்குள் உபயோகப்படுத்தும்  வார்த்தைகள்!

நம்முடைய குடும்பத்தினருடன் கடும் சொற்களை உபயோகித்து நாம் பேசுவோமானால் அதே மாதிரிதான் நான் வெளி உலகத்தினருடனும் பேசுவோம்.

நாம் தாவீதைப்போல நம்முடைய குடும்பத்தை ஆசீர்வதித்து பேசுவோமானால் அந்த ஆசீர்வாதம் நம்முடைய குடும்பத்துக்கு அப்பாலும் தொடரும்!

நாம் கடந்து போனபின்னரும் நாம் நம்முடைய குடும்பத்தில் பேசிய வார்த்தைகள் நம் குடும்பத்தினரை விட்டு கடந்து போகாது.

நாம் நம்முடைய குடும்பத்தில் எப்படிப்பட்ட வார்த்தைகளை உபயோகப்படுத்துகிறோம்? கடும் சொற்களா? ஆசீர்வதிக்கும் சொற்களா? சிந்தித்து பாருங்கள்! தாவீதைப் போல ஆசீர்வாதமான சொற்களையே நம்முடைய குடும்பத்தாரிடம் பேச முயற்சி செய்யுங்கள்!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

Leave a comment