1 இராஜாக்கள் 15:25 -26 ... யெரொபெயாமின் குமாரனாகிய நாதாப் இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி....கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதை செய்து... தன் தகப்பன் பாவத்திலும்...நடந்தான். 28: பாஷா யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் மூன்றாம் வருஷத்திலே அவனைக் கொன்றுபோட்டபின் அவன் ஸ்தானத்திலே ராஜாவானான். 30: அவன் ராஜாவானபின் அவன் யெரொபெயாமின் வீட்டாரையெல்லாம் வெட்டிப்போட்டான். நம்முடைய காலத்தில் ஊழியம் செய்து சில வருடங்களுக்கு முன்னர் மறைந்த சுவிசேஷகர் பில்லி கிரஹாமுக்கு அடுத்தபடியாக உலக சுவிசேஷகர் என்று அழைக்கப்படும் பாஸ்டர் சார்ல்ஸ் சுவிண்டோல் அவர்களை… Continue reading இதழ்:1564 நன்மை செய்பவருக்கு சரிக்கு சமம் செய்யலாம்! தீமை செய்பவருக்கு?
Month: November 2022
இதழ்:1563 யார் உங்கள் அறையின் மையத்தில் இருக்கிறார்?
1 இராஜாக்கள் 15:34 கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, யெரொபெயாமின் வழியிலும், அவன் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின அவனுடைய பார்வையிலும் நடந்தான். இராஜாக்களில் என்னை மிகவும் குழப்ப வைப்பது இந்த இரண்டு பெயர்கள் தான்! நீங்களும் அப்படி நினைத்ததுண்டா? யெரொபெயாம் இஸ்ரவேலின் வட பகுதியை ஆள ஆரம்பித்தபோது, சாலொமோனின் குமாரனாகிய ரெகொபெயாம் யூதா, பென்யமீன் கோத்திரங்களின் சிங்காசனத்தில் அமர்ந்தான். இந்தப் புத்தகத்தில் 14 ம் அதிகாரத்திலிருந்து மறுபடியும், மறுபடியும் வரும் ஒரு வாக்கியம் என்னவென்றால், அவர்கள் கர்த்தருடைய பார்வைக்கு பொல்லாப்பானதை… Continue reading இதழ்:1563 யார் உங்கள் அறையின் மையத்தில் இருக்கிறார்?
இதழ்: 1562 உன் பெயர் திருமதி யெரொபெயாம் என்றால்???
1 இராஜாக்கள் 14:1-3 ,5,17 அக்காலத்திலே யெரோபெயாமின் குமாரனாகிய அபியா வியாதியில் விழுந்தான். அப்பொழுது யெரொபெயாம் தன் மனைவியைப்பார்த்து; நீ எழுந்து நீ யெரொபெயாமின் மனைவி என்று ஒருவரும் அறியாதபடிக்கு வேஷம்மாறி சீலோவுக்குப் போ, இந்த ஜனத்தின்மேல் நான் ராஜாவாவேன் என்று என்னோடே சொன்ன தீர்க்கதரிசியாகிய அகியா அங்கே இருக்கிறான்...... பிள்ளைக்கு சம்பவிக்கப்போகிறது இன்னதென்று அவன் உனக்கு அறிவிப்பான் என்றான். கர்த்தர் அகியாவினிடத்தில்; இதோ யெரொபெயாமின் மனைவி வியாதியாயிருக்கிற தன் குமாரனுக்காக உன்னை ஒரு விசேஷம்கேட்க… Continue reading இதழ்: 1562 உன் பெயர் திருமதி யெரொபெயாம் என்றால்???
இதழ்:1561 தேவைக்கு மட்டும் தானே கடவுள் தேவை!
1 இராஜாக்கள் 14:1-3 அக்காலத்திலே யெரோபெயாமின் குமாரனாகிய அபியா வியாதியில் விழுந்தான். அப்பொழுது யெரொபெயாம் தன் மனைவியைப்பார்த்து; நீ எழுந்து நீ யெரொபெயாமின் மனைவி என்று ஒருவரும் அறியாதபடிக்கு வேஷம்மாறி சீலோவுக்குப் போ, இந்த ஜனத்தின்மேல் நான் ராஜாவாவேன் என்று என்னோடே சொன்ன தீர்க்கதரிசியாகிய அகியா அங்கே இருக்கிறான்...... பிள்ளைக்கு சம்பவிக்கப்போகிறது இன்னதென்று அவன் உனக்கு அறிவிப்பான் என்றான். இன்று நாம் பார்க்கும் சம்பவம் ஒரு சோகமான ஒன்று! இதற்கு காரணம் யெரோபெயாம் தன்னை ராஜாவாக்கிய… Continue reading இதழ்:1561 தேவைக்கு மட்டும் தானே கடவுள் தேவை!
இதழ்: 1560 பலிபீடத்தில் என்னை முற்றிலும் ஒப்புவிக்கிறேன்!
1 இராஜாக்கள் 12: 16 ராஜா தங்களுக்குச் செவிகொடாததை இஸ்ரவேலர் எல்லாரும் கண்டபோது, ஜனங்கள் ராஜாவுக்கு மறு உத்தரவாக; தாவீதோடே எங்களுக்கு பங்கேது? ஈசாயின் குமாரனிடத்தில் எங்களுக்குச் சுதந்தரம் இல்லை, இஸ்ரவேலே, உன் கூடாரங்களுக்குப் போய்விடு, இப்போது தாவீதே, உன் சொந்த வீட்டைப் பார்த்துக்கொள் என்று சொல்லி, இஸ்ரவேலர் தங்கள் கூடாரங்களுக்குப் போய்விட்டார்கள். சாலொமோனின் குமாரனாகிய ரெகோபெயாம் தன்னுடைய சட்டத்தை சொல்லிவிட்டான்! ராஜாவாகிய அவன் சட்டம் இயக்கும் இடத்தில் இருந்தான். யெரோபெயாம் 10 இஸ்ரவேலின் கோத்திரங்களைத் தன்… Continue reading இதழ்: 1560 பலிபீடத்தில் என்னை முற்றிலும் ஒப்புவிக்கிறேன்!
இதழ்:1559 பெருமையால் உதறித் தள்ளப்படும் ஆலோசனைகள்!
1 இராஜாக்கள் 12:8 முதியோர் தனக்கு சொன்ன ஆலோசனையை அவன் தள்ளிவிட்டு, தன்னோடே வளர்ந்து தன் சமுகத்தில் நிற்கிற வாலிபரோடே ஆலோசனை பண்ணி நான் அன்று அந்த முடிவு எடுத்திராவிடில் என்ன நடந்திருக்கும் என்று நினைக்கும் என்று என்றாவது நினைத்த தருணம் உண்டா? ஒருவேளை அது ஒரு மிகச்சிறிய முடிவாக இருக்கலாம் அதனால் பெரிய பாதிப்பு இல்லாமல் போயிருந்திருக்கும். ஒரு பெரிய விஷயத்தில் நாம் எடுத்த முடிவு தவறாயிருந்திருந்தால் அது எவ்வளவுதூரம் நம்மையும் நம் குடும்பத்தையும் பாதித்திருக்கும்!… Continue reading இதழ்:1559 பெருமையால் உதறித் தள்ளப்படும் ஆலோசனைகள்!
இதழ்:1558 இன்று நான் எதை விட்டு செல்கிறேன்?
1 இராஜாக்கள் 11:41 சாலொமோனின் மற்ற நடபடிகளும், அவன் செய்தவை அனைத்தும், அவனுடைய ஞானமும், சாலொமோனுடைய நடபடிப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது. நமக்கெல்லாருக்கும் நோபெல் பரிசு என்பது இந்த உலகத்தில் அமைதிக்காக போராடும் ஒருவருக்கு வழங்கப்படுவது தெரியும். அது ஆல்பிரட் நோபெல் என்ற விஞ்ஞானியின் பெயரால் கொடுக்கப்படுகிறது. அவரைப்பற்றிய ஒரு கட்டுரையை நான் ஒருமுறை வாசிக்க நேர்ந்த போது அவர் தான் டைனமைட் என்ற கொடூரமாக வெடிக்கக்கூடிய ஒரு வெடியைக் கண்டுபிடித்தவர் என்று அறிந்து இவர் பெயரில் அல்லவா… Continue reading இதழ்:1558 இன்று நான் எதை விட்டு செல்கிறேன்?
இதழ்:1557 சோதனையினின்று தப்பிக்க விழித்திருந்து ஜெபி!
மத்தேயு 26:41 நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள், ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார். நாங்கள் இப்பொழுது பெங்களூரு பட்டணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எங்கள் வீட்டிலிருந்து ஒரு 20 நிமிடங்களில் தேசிய நெடுஞ்சாலையை அடைந்து விடலாம். ஆனால் அதற்கு போகிற வழிதான் பயங்கரமானது. சற்று கண்கள் அசதியானால் போதும், வண்டி ஏதாவது குழியில் இறங்கி ஏறிவிடும். இந்த ஆண்டு பெய்த மழை அந்த சாலையை முற்றிலும் சேதப்படுத்திவிட்டது. இன்று நாம் நான்காவது நாளாக சாலொமோனின் வாழ்க்கையிலிருந்து… Continue reading இதழ்:1557 சோதனையினின்று தப்பிக்க விழித்திருந்து ஜெபி!
இதழ்:1556 நம்மை முற்றிலும் ஆளுகை செய்பவர் தேவனே!
1 இராஜாக்கள் 11:14,23, கர்த்தர் ஏதோமியனான ஆதாத் என்னும் ஒரு விரோதியை சாலொமோனுக்கு எழுப்பினார். எலியாதாவின் குமாரனாகிய ரேசோன் என்னும் வேறொரு விரோதியை தேவன் எழுப்பினார் ...யெரோபெயாம் என்ற சாலொமோனின் ஊழியக்காரனும் ராஜாவுக்கு விரோதமாக கையெடுத்தான். தேவன் நமமை ஆளுகை செய்கிறார் என்ற உண்மை எத்தனை பேருக்கு பிடிக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. நாம் செய்யும் வேலையாயிருக்கட்டும், நாம் சந்திக்கும் மனிதராயிருக்கட்டும் எல்லாமே தேவனுடைய ஆளுகைக்கு உட்பட்டதே. தேவன் நம்மை பரலோகத்திலிருந்து கொண்டு நூல் கட்டி ஆட்டும்… Continue reading இதழ்:1556 நம்மை முற்றிலும் ஆளுகை செய்பவர் தேவனே!
இதழ்:1555 உன்னுடைய நேரம் யாருக்கு அதிகமாக கொடுக்கப்படுகிறது?
1 இராஜாக்கள் 11:3,4 அவனுக்கு பிரபுக்கள் குலமான எழுநூறு மனையாட்டிகளும், முந்நூறுமறு மனையாட்டிகளும் இருந்தார்கள் ... சாலொமோன் வயதுசென்றபோது, அவனுடைய மனைவிகள் அவன் இருதயத்தை அந்நிய தேவர்களைப் பின்பற்றும்படி சாயப்பண்ணினார்கள். இன்று சாலொமோனுடைய வாழ்விலிருந்து நாம் நேரிடையாகல் லற்றுக் கொள்ளும் இன்னொரு காரியம், தேவன் நமக்கு கிருபையாய் அளித்திருக்கும் நேரம் என்பது. அவனுடைய ராஜ்யபாரத்தின் ஆரம்பத்தில் சாலொமோனுடைய வாழ்க்கையின் நோக்கம் தேவனுடைய நாமத்தை மகிமைப் படுத்துவதாக இருந்தது. ஆனால் காலம்கடந்தபோது அவனுடைய இருதயத்தில் மாறுதல் ஏற்பட்டது. பிளவு பட்ட இருதயம்… Continue reading இதழ்:1555 உன்னுடைய நேரம் யாருக்கு அதிகமாக கொடுக்கப்படுகிறது?
